புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
81 Posts - 67%
heezulia
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
273 Posts - 45%
heezulia
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
18 Posts - 3%
prajai
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_m10பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed May 22, 2013 10:59 pm

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைநிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்றபெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான்கச்சா எண்ணையை உலகில் முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.
அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைபேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள்மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன்சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.
இந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (FoundationWall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).
கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீதுசாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.
எல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சாஎண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.
http://www.tamilkathir.com/uploads/images/2013/03/08/petrol_air_002.jpg
இதனை தொடர்ந்து அரபுநாடுகள்முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல்ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில்எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டைசேர்ந்த சில ரசவாதிகள் (alchemist) கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene)கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic) என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சியராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும்இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம்நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed May 22, 2013 11:27 pm

இந்த ஆலை கிட்டத்தட்ட இபின்ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 1846 ஆம் ஆண்டுஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றியோசிக்கப்பட்டது..
கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில்பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.
உலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல்என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டுருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரதுகண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரதுபெயரையை அந்த எரிபொருளுக்குசூட்டப்பட்டது.
உலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது.
-
அறிவுலகம்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 23, 2013 5:26 pm

பெற்றோலை பற்றி எழுதியாதால் அதை பற்றிய அறிய தகவல் ஒன்று .

வளைகுடா நாடுகளில் எண்ணைவளம் இருப்பதை உலக நாடுகள் யாரும் அறியாத காலகட்டங்களில் அங்கு உள்ளவர்கள் பெட்ரோல் என்றால் என்ன , அந்த வளம் நாம் நாட்டில் உள்ளது என்ற எந்த செய்தியும் தெரியாமல் இருந்து வந்தனர். தண்ணீர் வளம் இல்லாத அவர்கள் குடி தண்ணீருக்கு அருகில் இருந்த ரஷ்யவின் உதவியை கோரினார்கள். அதாவது அவர்களுக்கு வேண்டிய குடி தண்ணீரை ரஷ்ய கப்பல் மூலம் வழங்குமாறு அணைத்து வலிகுட மன்னர்களும் கேட்டுகொண்டனர் . ரஷ்யாவும் இதை ஒரு வணிக நோக்கில் தன் பணியை தொடங்கியது.

அதன்படி வளைகுடா நாடுகளுக்கு வேண்டிய குடி நீரை வழங்கும் பணியை ரஷ்ய மேற்கொண்டது. மேற்கொண்ட சில மாதங்களில் வளைகுடா நாடுகளில் பெரும் அளவில் பெட்ரோல் வளம் உள்ளதை ரஷ்ய கண்டுபிடித்து, அந்த தகவலை அறிந்த பல கப்பல் முதாலாளிகள் வளைகுடா நாட்டின் மன்னர்களிடம் "உங்களுக்கு தண்ணீர் கொண்டுவரும் கப்பலில் தண்ணீர் இருப்பதால் கப்பல் சரியான நிலப்புதன்மையுடன் வருகிறது , தண்ணீரை உங்கள் நாட்டில் கொடுத்து வெறும் கலன்களுடன் எங்கள் நாட்டிற்க்கு திருப்பும் கப்பல்களில் நிலைப்புத்தன்மை குறைந்து கடலில் சரியாக பயணிக்க முடியவில்லை எனவே நாங்கள் திருப்பி செல்லும் எங்கள் கப்பலில் உங்கள் நாட்டில் கிடைக்கும் உங்களுக்கு பயன்பாடாத இந்த கருப்பு திரவத்தை கப்பலின் நிலப்புதன்மைக்காக தண்ணீர் கலன்களில் அடைத்து கொள்கிறோம் " என்று அனுமதி பெற்று கள்ளத்தனமாக பெட்ரோல் வளங்களை அள்ளி சென்றது.

ரஷ்யவின் கள்ள தனத்தை சற்று காலதாமதமாக புரிந்து கொண்ட அமெரிக்க உடனே வளைகுடா அரசுகளிடம் பேசி உங்களிடம் அளவுக்கு அதிகாமாக பெட்ரோல் வளம் உள்ளது இதை ரஷ்ய கள்ள தனமாக கொண்டு செல்கிறது. நாங்கள் உங்களுக்கு வேண்டிய தொழில் நுட்ப உதவிகளை அளித்து பெற்றோலை சுத்திகரித்து நீங்களே உலக நாடுகளுக்கு விற்று வாணிபம் செய்ய உதவுகிறோம், அதற்கு ஒரு உடன்படிக்கை போட்டு செயல்படலாம் என்று அன்றைய வளைகுடா நாடு மன்னர்களை ஏமாற்றி ஒப்பந்தம் போடப்பட்டதன் விளைவாகவே இன்றும் அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகள் வளைகுடா நாடுகளில் எண்ணையை உறிஞ்சி கொண்டிருக்கின.

(அரேபியா நண்பர் ஒருவரின் தகவல்)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 23, 2013 5:33 pm

கதை நல்லாயிருக்கு சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 23, 2013 11:38 pm

பயனுள்ள தகவல் நன்றி பவுன்ராஜ்




பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Mபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Uபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Tபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Hபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Uபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Mபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Oபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Hபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Aபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Mபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை Eபெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu May 23, 2013 11:44 pm

நல்ல சுவாரஸ்யமான தகவல்,நன்றி நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 24, 2013 8:28 am

சுவையான தகவல். நன்றி Powen raj & Raju saravanan !
டீசல் என்ஜினை கண்டுபிடித்தவர் Rudolf Diesel என்பதே போல் பெட்ரோல் என்ஜினை கண்டு பிடித்தவர் OTTO என்பவர். பெட்ரோல் கார் இயங்குவது otto cycle எனப்படும் சுயற்சியில் இயங்குகிறது.
நம்முடைய ramar மூலிகை பெட்ரோல் தயாரித்த வகை யாரேனும் அறிவாரா?

ரமணியன்



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 24, 2013 11:21 am

இதுதான் அவர் கண்டறிந்த பெட்ரோல் ....

இரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் ஹைட்ரோகார்பன் எனப்படும் பென்சீன், டொலுவீன், (இன்டஸ்ட்ரியல் சால்வன்ட்ஸ் industrial solvents, அதாவது கரைப்பான்கள்) என்ற இரசாயனங்களைப் பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் இருந்து நண்பர்கள் உதவியுடன் குறைந்த விலைக்கு கொண்டுவந்து இருக்கிறார். அதை மிக்ஸ் பண்ணி மூலிகைப் பெட்ரோல் என்று விற்றிருக்கிறார்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 24, 2013 11:51 am

பூவன் wrote:இதுதான் அவர் கண்டறிந்த பெட்ரோல் ....

இரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் ஹைட்ரோகார்பன் எனப்படும் பென்சீன், டொலுவீன், (இன்டஸ்ட்ரியல் சால்வன்ட்ஸ் industrial solvents, அதாவது கரைப்பான்கள்) என்ற இரசாயனங்களைப் பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் இருந்து நண்பர்கள் உதவியுடன் குறைந்த விலைக்கு கொண்டுவந்து இருக்கிறார். அதை மிக்ஸ் பண்ணி மூலிகைப் பெட்ரோல் என்று விற்றிருக்கிறார்.


பாவம் , மூலி யான கை யாக போய் விட்டதே.

ரமணியன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri May 24, 2013 11:58 am

T.N.Balasubramanian wrote:
பூவன் wrote:இதுதான் அவர் கண்டறிந்த பெட்ரோல் ....

இரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் ஹைட்ரோகார்பன் எனப்படும் பென்சீன், டொலுவீன், (இன்டஸ்ட்ரியல் சால்வன்ட்ஸ் industrial solvents, அதாவது கரைப்பான்கள்) என்ற இரசாயனங்களைப் பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் இருந்து நண்பர்கள் உதவியுடன் குறைந்த விலைக்கு கொண்டுவந்து இருக்கிறார். அதை மிக்ஸ் பண்ணி மூலிகைப் பெட்ரோல் என்று விற்றிருக்கிறார்.


பாவம் , மூலி யான கை யாக போய் விட்டதே.

ரமணியன்

அவரும் என்னென்னமோ வித்தைகள் செய்தார் , ஒன்றும் நடக்கவில்லை .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக