ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!

3 posters

Go down

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Empty ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!

Post by சாமி Sun May 12, 2013 8:27 pm

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!
- நீதிபதி எஸ்.மகராஜன்.

புண்பட்ட நெஞ்சுக்குச் சிரிப்பைப்போல இதமான மருந்து வேறு கிடையாது. உலக வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு இன்பதுன்பம், பித்தலாட்டம் இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு சிரிக்கத் தெரியாமலும் நாம் இருந்தோமேயானால், என்ன ஆகும் நம் கதி? பைத்தியம் பிடித்துவிடும். பைத்தியம் பிடிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பதற்காகவே நமக்குச் சிரிப்பு என்ற தெய்வீகசக்தி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

என்று சொன்னார் குறளாசிரியர்.

சிரிக்கத் தெரியாதவனுக்குப் பட்டப் பகலும் அமாவாசை இருட்டாகத்தான் இருக்கும் என்பது இந்த்க் குறளின் பொருள். தெளிவு இல்லாத காரணத்தால் சிரிப்பற்று இருக்கிறோம். உள்ளத்தில் தெளிவு வந்துவிட்டாலோ, வாழ்க்கையே ஒரு சிரிப்பாக இருக்கும். சிந்தனைத் தெளிவுள்ளவனுக்கு இந்த உலகம் ஒரு ஹாஸ்ய நாடகமாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டவனுக்கு இந்த உலகம் சோக நாடகமாகக் காட்சி கொடுக்கிறது என்று சொன்னார்.

மிருக வர்க்கங்களிலேயே சிரிக்கும் ஆற்றலைப்பெற்ற பிராணி, மனிதன் ஒருவன்தான். ஆனால் இந்த அரிய ஆற்றலை மனிதனுக்குப் பயன்படுத்தத் தெரியவில்லையே என்று ஆற்றாமைப்படுகிறார் வள்ளுவர்.

அணுகுண்டுக்கு இல்லாத சக்தி சிரிப்புக்கு இருக்கிறது என்பதை ஒரு புராணக்கதை விளக்குகிறது. திரிபுரத்தில் அட்டகாசம் செய்துகொண்டு இருந்த அரக்கர்களை சிவபெருமான் அழித்தார். எப்படி அழித்தார்? ஹைட்ரஜன் குண்டு போட்டல்ல, ஒரு சிரிப்பு சிரித்தார். அவ்வளவுதான் தீமையே வடிவாக வந்த அரக்கர்கள் தீய்ந்து ஒழிந்தார்கள்.
சீராரூர் மேவும் சிவனே – சிரிப்பன்றோ
நேராரூர் இட்ட நிலை

என்று பாடினார் கவிஞர்.

சிரிப்பு புற இருளை மாத்திரமல்ல, அக இருளையும் அகற்றி துன்பத்தைத் துடைத்து இன்பத்தை நல்குகிறது.
ஆனந்தம் இல்லாத வாழ்க்கை, பயனற்ற வாழ்க்கை. ஆனந்தம் இல்லாத சமயம், பயனற்ற சமயம். ஆகவே, நீட்ஷே (Nietzsche) என்ற ஜெர்மன் தத்துவ ஞானி “How can I believe in GOD who would not dance?” என்றார். அதாவது, ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை என்றார்.

நீட்ஷே காலத்தில் இருந்த ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் சிலுவையின் உட்பொருளாகிய தியாகத்தை மறந்து புறப்பொருளாகிய துன்பத்தைப் பாராட்டி, அல்லல்படுவதே வாழ்க்கையின் நோக்கம் என்று தவறாகக் கருதி வந்தார்கள். இந்தக் கருத்தின் விளைவாக ஐரோப்பிய சமூகத்தில் துன்ப உணர்ச்சி பரவியது.

‘இறைவன் இன்ப வடிவானவன், துன்ப வடிவானவன் அல்ல’ என்பதை வலியுறுத்துவதற்காகவே, நம் முன்னோர்கள் அவனை ஆடல்வல்லான் என்றும், ஆடல் அரசன் என்றும் போற்றி வணங்கினார்கள். நடராஜ தத்துவமே ஆனந்த தத்துவம் என்பதை உணர்ந்து அனுபவித்தார்கள்.

ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன்
பாட வல்லார் நெறி பாட அறிகிலேன்

என்று சொன்னார் திருமூலரும்.

ஆனந்தம் மேலிடும்போது, மயில் தன் தோகையை விரித்து ஆடுகிறது. நடனமே ஆனந்தத்தின் பரிபூரண வெளியீடு. அப்படியானால், இன்ப வடிவான இறைவன் ஆடிக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஆடும் தன்மை அவனுக்கு இல்லை என்றால், அவனுக்கு ஆனந்தம் இல்லை என்றாகிவிடும். ஆனந்தம் இல்லை என்றால், அவனைக் கடவுள் என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? ஆகவேதான், ‘ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை’ என்று சொன்னார் நீட்ஷே.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Empty Re: ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!

Post by drrajmohan Sun May 12, 2013 9:00 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Empty Re: ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!

Post by drrajmohan Sun May 12, 2013 9:04 pm

பகிர்வுக்கு நன்றி


!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Empty Re: ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!

Post by ஆரூரன் Mon May 13, 2013 3:37 pm

சாமி wrote: ‘இறைவன் இன்ப வடிவானவன், துன்ப வடிவானவன் அல்ல’ என்பதை வலியுறுத்துவதற்காகவே, நம் முன்னோர்கள் அவனை ஆடல்வல்லான் என்றும், ஆடல் அரசன் என்றும் போற்றி வணங்கினார்கள்.

இன்ப வடிவான இறைவன் ஆடிக்கொண்டுதானே இருக்க வேண்டும்? ஆடும் தன்மை அவனுக்கு இல்லை என்றால், அவனுக்கு ஆனந்தம் இல்லை என்றாகிவிடும். ஆனந்தம் இல்லை என்றால், அவனைக் கடவுள் என்று எவ்வாறு ஒப்புக்கொள்வது? ஆகவேதான், ‘ஆடத்தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை’ என்று சொன்னார் நீட்ஷே.

ஜாலி கலக்கலா சொல்லியிருக்கார் !!! ஜாலி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை! Empty Re: ஆடத் தெரியாத கடவுளை நான் நம்பத் தயாரில்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum