புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டாணியோ பட்டாணி! Poll_c10பட்டாணியோ பட்டாணி! Poll_m10பட்டாணியோ பட்டாணி! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பட்டாணியோ பட்டாணி! Poll_c10பட்டாணியோ பட்டாணி! Poll_m10பட்டாணியோ பட்டாணி! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பட்டாணியோ பட்டாணி! Poll_c10பட்டாணியோ பட்டாணி! Poll_m10பட்டாணியோ பட்டாணி! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பட்டாணியோ பட்டாணி! Poll_c10பட்டாணியோ பட்டாணி! Poll_m10பட்டாணியோ பட்டாணி! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டாணியோ பட்டாணி! Poll_c10பட்டாணியோ பட்டாணி! Poll_m10பட்டாணியோ பட்டாணி! Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பட்டாணியோ பட்டாணி! Poll_c10பட்டாணியோ பட்டாணி! Poll_m10பட்டாணியோ பட்டாணி! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பட்டாணியோ பட்டாணி! Poll_c10பட்டாணியோ பட்டாணி! Poll_m10பட்டாணியோ பட்டாணி! Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பட்டாணியோ பட்டாணி! Poll_c10பட்டாணியோ பட்டாணி! Poll_m10பட்டாணியோ பட்டாணி! Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாணியோ பட்டாணி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 12, 2013 11:40 am


நீக்ரோ இளைஞனின் பெயர் கார்வார் ஜார்ஜ். நீக்ரோவை வெள்ளையர்கள் மிகவும் வெறுத்தனர். நீக்ரோக்களுக்குப் படிக்கும் உரிமை கிடையாது. எந்த உயர் பதவியும் கிடையாது என்ற சூழ்நிலை நிலவிய காலம் அது.

கார்வார் பிறந்தவுடனேயே அவருடைய தந்தை இறந்து விட்டார். ஏதோ ஒரு காரணத்துக்காக, போலீசார் அவனுடைய தாயாரைக் கைது செய்தனர். அதன்பிறகு அவள் திரும்பவே இல்லை, அவள் கதி என்னவாயிற்று என்று எவருக்குமே தெரியாது.

அப்போது கார்வார் கைக் குழந்தை. இந்தக் கைக் குழந்தை எதற்கு இடைஞ்சல் என்று கருதிய போலீசார் கார்வாரைத் தெருவோரத்தில் இருந்த ஒரு சாக்கடை அருகே எறிந்து விட்டனர்.

கார்வாருக்கு ஓர் அண்ணன் இருந்தான். அவனும் இளம்வயதில் அம்மை தாக்கி இறந்து போனான். கார்வாரின் நிலையை எண்ணிப் பாருங்கள்! எத்தனைப் பரிதாபம்!

அவர் அங்குமிங்கும் அனாதையாக வளர்ந்து சுற்றிக் கொண்டிருந்த போது, அவர் மேல் பரிதாபப்பட்ட ஒருவர் அவரைத் தன் வீட்டு வேலைக்காரராகச் சேர்த்துக் கொண்டார். கல்வியின் மேல் கார்வாருக்குத் தணியாத தாகம் இருந்ததால், அவர் பள்ளிக்கும் அனுப்பப்பட்டார்.

பள்ளியில் கார்வார் நன்றாகப் படித்தார். அவர் தன் கவனத்தை எதிலும் சிதற விட வில்லை. எந்நேரமும் படிப்பு படிப்புதான்! அப்போது அவர் மனதில் ஓர் வைராக் கியம் பிறந்தது.

"நீக்ரோக்கள் படிக்கக் கூடாது என்பதை எதிர் காலத்தில் உடைத்தெறிய வேண்டும். கல்லூரிக்குப் போகக் கூடாது என்று வெள்ளையர்கள் நினைத்திருந்ததை மீறிக் கல்லூரி செல்ல வேண்டும். உயர்ந்த பதவியில் அமர வேண்டும்!' என்பதே அவரின் குறிக்கோள்.

நீக்ரோக்கள் ஏன் இத்தனைக் கேவலமாக நடத்தப்படுகின்றனர்? அவர்கள் மனிதர்கள் இல்லையா? என்று அவர் எண்ணி துடி துடித்தார். இதன் காரணமாகவே, அவர் நன்றாகப் படித்தார். அதன் விளைவாக, அயோவா பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் தாவரவியலைக் கற்றுத் தரும் பேராசிரியர் ஆனார்.

அப்போது அங்கிருந்த நீக்ரோ விவசாயிகளுக்குச் சில பிரச்னைகள் இருந்தன. அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்த பயிர், வளம் குன்றிப்போனது. அவர்கள் பருத்தி பயிரிட்டிருந்தனர். அதில், பூச்சிகள் வேறு தாக்கித் தொல்லை கொடுத்தன.

பருத்திக்குப் பதிலாக, வேறு எதையாவது பயிரிட்டால் தான் பிழைக்க முடியும் என்ற நிலை. ஆனால், என்ன பயிரிடுவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்லை.

அவர்கள் கார்வாரிடம், ஆலோசனை கேட்டனர்.

"பட்டாணி பயிரிடுங்கள்!' என்றார் கார்வார்.

"அது மனித உணவல்ல... குரங்கு உண்ணும் உணவு. அதையா பயிரிடுவது, நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்!' என்று கேட்டனர் அந்தப் பாமர விவசாயிகள்.

"பட்டாணி லாபகரமானது. அதே சமயம் அதில் பூச்சிகள் விழாது!' என்றார் கார்வார்.

பின்னர் பட்டாணி பயிரிடுவது எப்படி என்று தன் மாணவர்களுக்கு அவர் போதித்தார். அந்த விவசாயிகளை அழைத்துச் சொல்லிக் கொடுத்தார். அவரைத் தேடி வராத நம்பிக்கையற்ற விவசாயிகளை அவரே தேடிச் சென்றார்.

அவர் ஒரு வேனில்தன் மாணவர்களை அழைத்துக் கொண்டு, அவர்கள் வீடு தேடிச் சென்று போதித்தார். அவர்களுக்கு நம்பிக்கைப் பிறந்தது. அவர்கள் பட்டாணி பயிர் செய்தனர். அமோக விளைச்சலாயிற்று.

அவ்வளவு பட்டாணியை யார் விலை கொடுத்து வாங்குவார்கள். அடுத்த பிரச்னை உருவானது. கார்வார் யோசித்தார். அந்தப் பட்டாணியை உலர்த்தினார். அவற்றை உடைத்தார். மாவாக்கி பட்டாணி மாவில் விதவிதமான சூப்புகளைத் தயாரித்தார். கேக்குகளை உருவாக்கினார்.

விவசாயிகளின் மனைவிகளை அழைத்து எப்படி இதைச் செய்வது என்று அவர்களுக்கு கற்றுத் தந்தார். அவர் பெயர் பரவியது. புகழ் கூடியது. அப்போது அவரை வாஷிங்டன் வரும்படி அழைப்பு வந்தது.

"வாஷிங்டனில் தாவரவியல் நிபுணர்கள் முன்னிலையில் வந்து இதற்குச் செயல்முறை விளக்கம் அளியுங்கள்!' என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது. கார்வார் வாஷிங்டன் கூட்டத்துக்கு வந்தார்.

நிபுணர்கள் முன்னிலையில் வந்த போது, "ப்ச், ஒரு நீக்ரோவா நீ! உனக்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. பத்து நிமிடம் ஒதுக்கி இருக்கிறோம். நீ சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு ஓடிப்போ!' என்றனர்.

ஆனால், கார்வார் கலங்கவில்லை. "தான் கொண்டு சென்ற மூட்டைகளை அவிழ்க்கவே அந்த நேரம் பற்றாதே...' என்று அங்கலாய்த்தார் அவர். ஆனாலும் அவர் அதற்காக வருந்தவில்லை.

மாயா ஜாலம் போல மூட்டைகளை விறுவிறுவென பிரித்தார். அதிலிருந்த பொருட்களை நொடியில் மேஜை மீது பரப்பினார்.

"பட்டாணி எண்ணெய், பட்டாணிக் காப்பிப் பொடி, பட்டாணிப் பால், பட்டாணிமாவு, பட்டாணி கேக், பட்டாணி சூப், பட்டாணித் தின்பண்டங்கள், பட்டாணி இனிப்பு, பட்டாணி கார வகையறாக்கள்' என மேஜையே விழாக் கோலமாகி விட்டது.

அதை எல்லாம் கண்டவர்கள் வியப்பின் உச்சத்துக்கே சென்றனர். "பட்டாணியிலிருந்து இத்தனைப் பொருட்களைச் செய்ய முடியுமா?' என்று அவர்களுக்கே மலைப்பாக இருந்தது.

பத்து நிமிடம் ஒருமணி நேரமாயிற்று. இரண்டு மணி நேரமாயிற்று. அவர்கள் பிரமையின் உச்சியில் நின்றனர்.

இதனால் மளமளவென்று நாட்டுப் பொருளாதாரம் உயர்ந்தது. அவரை விருதுகள் தேடி வந்தன. பட்டமும், பணமும் குவிந்தது.

எங்கள் நிறுவனத்தில் வந்து தாங்கள் பணியாற்ற வேண்டும் என்று மூலைக்கு மூலை அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் எல்லாவற்றையும் மறுத்து, "பேராசிரியர் உத்தியோகமே போதும்!' என்று கூறி விட்டார்.

திறமைசாலிகளை உலகம் தேடி வரும் என்பதற்கு கார்வார் ஜார்ஜ் ஒரு உதாரணம் .

சிறுவர் மலர்



பட்டாணியோ பட்டாணி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 12, 2013 11:58 am

திறமைசாலிகளை உலகம் தேடி வரும் என்பதற்கு கார்வார் ஜார்ஜ் ஒரு உதாரணம் .


உண்மை வரிகள் உண்மையும் கூட




பட்டாணியோ பட்டாணி! Mபட்டாணியோ பட்டாணி! Uபட்டாணியோ பட்டாணி! Tபட்டாணியோ பட்டாணி! Hபட்டாணியோ பட்டாணி! Uபட்டாணியோ பட்டாணி! Mபட்டாணியோ பட்டாணி! Oபட்டாணியோ பட்டாணி! Hபட்டாணியோ பட்டாணி! Aபட்டாணியோ பட்டாணி! Mபட்டாணியோ பட்டாணி! Eபட்டாணியோ பட்டாணி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக