ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பந்து! - சிறுவர்கதை

4 posters

Go down

பந்து! - சிறுவர்கதை Empty பந்து! - சிறுவர்கதை

Post by சிவா Sun May 12, 2013 11:35 am



ராமு என்ற ஏழைச் சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் கடைவாசலில் நின்று, கண்ணாடிக் கதவிற்குள்ளிருக்கும் அந்த அழகான பந்தை ஆசையோடு பார்த்துக் கொண்டு இருப்பான். ஏன் என்றால் அவனால் அதை வாங்க முடியாதே... அவனுக்குப் அந்த பந்தை வாங்கக் காசு ஏது? ஒருநாள் கடைக்காரனைக் கேட்டதற்கு அவன், அதன் விலை ஐந்து ரூபாய் என்றான். ராமுவின் முகம் ஏமாற்றத்தால் வாடிவிட்டது.

ஒரு பெருமூச்சுடன் பந்தை மறுபடியும் பார்த்துவிட்டு ராமு மேலே நடந்தான். பந்தை ஆகாயத்தில் தூக்கிப் போட்டுப் பிடிப்பது போலவும், பந்து துள்ளிக் குதித்து ஓட, ராமு அதைத் தாவி பிடிப்பது போலவும், கனவு கண்டு கொண்டே நடந்தான்.

அவன் கனவைக் கலைத்தது ஒரு பரபரப்பான குரல்.

""தம்பி, என் கைக்கடிகாரம் எங்கேயோ நழுவி விழுந்துவிட்டது. கொஞ்சம் தேடிப்பாரேன். எனக்கு வயசாயிடுத்து. கண்ணே சரியாத் தெரியலே... தேடித் தந்தா உனக்கு ஐந்து ரூபாய் தரேன்,'' என்று பரிதாபமாக ஒரு கிழவர் ராமுவை வேண்டினார்.

ஒவ்வொரு பையனும், ""நான் தேடித்தரேன் தாத்தா'' என்று குதிபோட்டுக் கொண்டு ஓடினர்.

""யார் தேடித் தந்தாலும் சரி, ஐந்து ரூபாய் பரிசாகத் தருவேன். இந்த வழியாகத்தான் வந்தேன். இங்கே தான் விழுந்திருக்கும்,'' என்றார் கிழவர்.

ஐந்து ரூபாய்!
ராமுவிற்கு நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. உடனே அந்தக் கண்ணாடி பீரோவில் இருந்த பளபளக்கும் பந்துதான் அவன்முன் காட்சியளித்தது.

""கடவுளே! கைக்கடிகாரம் என் கையில் கிடைக்கும் படி செய். எனக்கு ஐந்து ரூபாய் தருவார் தாத்தா. உடனே அந்தப் பந்தை வாங்கிவிடுவேன்,'' என்று நினைத்தபடி வந்தவழியே திரும்பித் தேட ஆரம்பித்தான்.

சாலை வழியே தேடிக்கொண்டு வரும் போது ராமுவின் கண்களில் ஒரு வினோதப் பொருள் தென்பட்டது. பரபரப்புடன் அதை நெருங்கிப் பார்த்தான் ராமு.

"ஐயோ பாவம்!' என்று வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன.

அது ஒரு சின்னக் குஞ்சுப் பறவை. புல் தரையில் விழுந்து கிடந்தது. இன்னும் இறக்கை முளைக்கவில்லை. தன் சின்னச் சிறகை ஆட்டி, ஆட்டி எழுந்திருக்கப் பார்த்தது. ஆனால் முடியவில்லை. மரத்தின் மேலிருந்த கூண்டிலிருந்து தவறி விழுந்திருக்கிறது. தாய்ப் பறவை கீச்சு மூச்சென்று கத்தியபடி மேலும் கீழும் பறந்தபடி தன் குஞ்சைக் கவனித்துக் கொண்டிருந்தது.

"ராமுவிற்கு விஷயம் புரிந்துவிட்டது. பாவம், அதனால் தன் குஞ்சை மேலே கொண்டு போக முடியவில்லை. தன்னைக் கண்டதும் உதவிக் கேட்டு தான் இப்படிக் கத்தி ஆரவாரம் செய்கிறது' என்று நினைத்தான் ராமு. பறவையைக் கூட்டில் சேர்த்துவிடுவதுதான் தனது கடமை என்று தீர்மானித்தான்.

இதை எடுத்துக்கொண்டு மரத்திலேறிக் கூட்டில்விட்டுக் கொண்டிருந்தால் என் கையில் கடிகாரமும் அகப்படாது. பந்தும் வாங்க முடியாது; தனக்கு முன்னால் பையன்கள் எல்லாம் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டான். பிறகு வந்து பறவையை கவனிக்கலாம் என்று எண்ணி, அவர்களுக்கு முன் கடிகாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு அடி முன்னால் நடந்தான்.

திடீரென்று குஞ்சு கிரீச்சிட்டது. திரும்பிப் பார்த்த ராமு, குஞ்சு எழுந்திருக்க முயன்று மல்லாந்து விழுந்துவிட்டதைக் கண்டான். குஞ்சு தவிப்பதைக் கண்ட தாய்ப்பறவை துடித்தது. கத்தியபடி சுற்றிச் சுற்றிப் பறந்தது.

அந்தப் பரிதாபமான காட்சி ராமுவை உருக்கிவிட்டது. இப்படியே இதை விட்டு விட்டுப் போனால், பூனைக்கோ, கழுகுக்கோ அது இரை ஆகிவிடும் என்பதும் அப்போது தான் ஞாபகம் வந்தது. பந்தை மறந்தான்.

கீழே குனிந்து குஞ்சை மெதுவாகத் தூக்கினான். அதன் பட்டுப்போன்ற மிருதுவான மெல்லிய உடலின் ஸ்பரிசம் ராமுவின் உடலைச் சிலிர்க்கச் செய்தது. பஞ்சு போன்ற அதை ஜாக்கிரதையுடன் கையில் ஏந்தியபடி மரத்தில் ஏறினான்.

தாய்ப்பறவையின் ஆனந்தத்தைக் கேட்கவா வேண்டும்? அது ராமுவைச் சுற்றி சுற்றி சந்தோஷ ஆரவாரம் செய்தது. ஒரு உயிரைக் காப்பாற்றினோம் என்ற பெருமை ராமுவுக்குத் தாங்கவில்லை. பச்சிளங்குஞ்சை அதன் கூட்டில் சேர்த்து விட்டு மரத்திலிருந்து கீழே குதித்த ராமு, "அப்பா' என்று அலறினான். அவன் காலிலிருந்து ரத்தம் கசிந்தது.

கீழே குனிந்த ராமுவுக்கு அழுகைக்குப் பதில் ஆனந்தம்தான் உண்டாயிற்று. கால் வலியையும் மறந்தான். புல்லினிடையே பளிச்சிட்ட எதையோ எடுத்துக்கொண்டு ஓட்டமாக ஓடினான்.

ராமுவின் காலில் குத்தியது என்ன தெரியுமா? கடிகாரத்தைக் கட்டிக்கொள்ள அதனுடன் ஒரு தோல் பட்டை இணைத்திருக்கு மல்லவா? அதன் ஒரு முனையில் மறு முனையை மாட்டி இழுத்துச் செறுக, ஒரு ஊசி இருக்குமல்லவா? அதுதான் அவன் காலில் குத்தியது. நல்ல வேளையாக ராமு கடி காரத்தின் மேல் குதிக்காமல் சிறிது தள்ளி ஊசியின் மேல் குதித்தான். அது அவன் அதிர்ஷ்டம்தான்.

தாத்தாவிடம் கடிகாரத்தை கொடுத்தான். தாத்தா அவனுக்கு ஐந்து ரூபாய் பரிசாக கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, பந்தை வாங்க சந்தோஷமாக கடைக்கு சென்றான் ராமு.
***
சிறுவர் மலர்


பந்து! - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பந்து! - சிறுவர்கதை Empty Re: பந்து! - சிறுவர்கதை

Post by Muthumohamed Sun May 12, 2013 11:40 am

நல்ல வேளையாக ராமு கடி காரத்தின் மேல் குதிக்காமல் சிறிது தள்ளி ஊசியின் மேல் குதித்தான். அது அவன் அதிர்ஷ்டம்தான்.

சூப்பருங்க



பந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Uபந்து! - சிறுவர்கதை Tபந்து! - சிறுவர்கதை Hபந்து! - சிறுவர்கதை Uபந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Oபந்து! - சிறுவர்கதை Hபந்து! - சிறுவர்கதை Aபந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Eபந்து! - சிறுவர்கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பந்து! - சிறுவர்கதை Empty Re: பந்து! - சிறுவர்கதை

Post by ராஜா Sun May 12, 2013 11:53 am

நன்றி தேங்யு அங்கிள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பந்து! - சிறுவர்கதை Empty Re: பந்து! - சிறுவர்கதை

Post by யினியவன் Sun May 12, 2013 12:47 pm

அந்த ஸ்ட்ராப் குத்தி ரத்தம் வர அளவுக்கு டீடெயில் வேணுமா?

நல்ல பகிர்வு பாஸ்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பந்து! - சிறுவர்கதை Empty Re: பந்து! - சிறுவர்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum