புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாளன் படை நடவடிக்கையில் வீரகாவியமான 21 கரும்புலிகளின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
இந்த தளத்தில் காணொளிகள் இருக்கின்றன
அன்புடன்
நந்திதா
http://www.meenagam.org/?p=13922
எல்லாளன் படை நடவடிக்கையில் வீரகாவியமான 21 கரும்புலிகளின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.
எழுதியவர்பகலவன் on October 22, 2009
பிரிவு: முதன்மைச்செய்திகள், வரலாறு
சிங்கள
இனவெறி அரசின் குகைக்குள்ளேயே புகுந்து பத்திற்கும் மேற்பட்ட விமானங்களை
முற்றாக அழித்தும், பதினெட்டு விமானங்களை சேதத்திற்குள்ளாக்கியும் 14
விமானப்படையினரைக் கொன்றும் வீரகாவியம் படைத்து ஈற்றில் 21 தேசத்தின்
புதல்வர்கள் கரும்புலிகளாக வீரமரணம் அடைந்த எல்லாளன் படை நடவடிக்கையின்
இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
அம் மாவீரர்களை நினைவு கூரும் இந்நாளில்
அவர்களின் இலட்சிய பயணத்தில் நாமும் பங்குகேற்போம் என்ற உறுதி
எடுத்துக்கொள்வதோடு அத்தாக்குதல் பற்றிய சிறு விபரத்தையும் நேயர்களுக்காக
தருகிறோம்.
விடுதலைப் புலிகளின் சிறப்புக்
கரும்புலித் தாக்குதல் அணியினர் வில்பத்து சரணாலயத்துக்கூடாக அரச
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஊடுருவி அங்கிருந்து காடுகள் வழியாக அனுராதபுர
வான்படைத்தளத்துக்கு அருகிலிருக்கும் நுவரவாவிக்கு சென்று அக்டோபர் 21
வான்படைத் தளத்துக்கு அருகாமையில் உள்ள தென்னந்தோப்பில்
பதுங்கியிருந்தவாறு கிளிநொச்சியிலிருந்து வரவேண்டிய கட்டளைக்காக
காத்திருந்தனர்.
2007 அக்டோபர் 21 இரவு சிரச
தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி நடப்
பெற்றுக் கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம்
நெலுங்குளம் பெருந்தெருவைக் கடந்து தளத்தின் வடக்குப் பகுதியை அடைந்தது.
முன்காலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த
முதலாவது முட்கம்பி வேலி, இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில்
சமாந்தரமாக தளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது கம்பி வேலி,
இவையிரண்டுக்கும் இடையில் செயற்படா நிலையில் இருந்த மின்வேலி என்பவற்றை
வெட்டி தளத்தினுள் உட்புகுந்தனர்.
உள்நுழைந்த அணியினர் தாமிருந்த
நிலைக்கும் வானூர்தி ஓடுபாதைக்கும் இடையில், முதல் நிலை பதுங்கு
குழிகளுக்கு குறுக்காக புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை
அகற்றினர். பாதையின் இருபுறமும் பதுங்கு குழிகளை நோக்கி மிதிவெடிகள்
நிலைக்குத்தாக புதைக்கப்பட்டிருந்தன. சத்தவெடிகளை அகற்றியவுடன் விடுதலைப்
புலிகளின் அணியினர் முதல் நிலை பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை
அடைந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர்.
பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு
முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி ஊர்ந்து செல்ல தொடங்கினர்.
இரண்டாவது குழுவினர் அணையின் மற்றைய முனையை அடைந்து முதன் நிரை பதுங்கு
குழிகளில் இரண்டு பதுங்கு குழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக
நகரத் தொடங்கினர். 3 விடுதலைப் புலிகள் மாத்திரம் நகர்ந்து செல்லும்
விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத்
தாக்குவற்காக பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர்.
எவ்வாறெனினும் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து
சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை.
14 பேரைக் கொண்ட முதலாவது அணியின் பணி
உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை
அழிப்பதாகும். இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை
அழிப்பதற்கு காத்திருந்தது. முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது,
இரண்டாவது அணி எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்த
“வீ பகுதி” யை நோக்கி நகரத்தொடங்கியது. இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும்
பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்த 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை
நோக்கி துப்பாகி சூட்டை நடத்தி முதல் நிரல் பதுங்கு குழிகளில் காவலுக்கு
இருந்த வான்படையினரை கொன்றப் பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து
கொண்டனர். துப்பாக்கிச் சூடு தொடங்கிய நேரம் அக்டோபர் 22 முன்காலை 3:20
மணியாகும். துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் முழுமையான உசார்
நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி
ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி
அழித்து விட்டமையால் வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக
வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.
கோபுரத்திற்கு அருகில் இருந்த 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி
நிலை சில நிமிட கடும் தாக்குதலுக்கு பின்னர் புலிகள் வசமானது. வானூர்தி
எதிர்ப்புத் துப்பாக்கியைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்
தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து முன்காலை 4:30
மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு சிறு ரக
விமானங்கள் தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசித் தாக்கினர்.
வான்படைத் தளத்தின் வானூர்தி எதிர்ப்பு
துப்பாக்கியை தம்வசப்படுத்தியிருந்த விடுதலைப் புலிகள் அதைக் கொண்டு
வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கியும், உலங்கு வானுர்திகள் நோக்கியும்,
அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக்
கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி
படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக
அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும்
அவர்கள் தாக்கியழித்தனர்.
கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது
அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர்.
அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த நிலையில் சமர்
தொடர்ந்தது. இருப்பினும் அந்த நேரம் பீச்கிராஃப் உம், சில
உலங்குவானூர்திகள் ஆகியவற்றை விடுதலைப் புலிகள் அழித்திருந்தனர் .
நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காலை 7:00 மணியளவில் மேஜர்
சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப்
படையினர் புலிகள் அணி மீது தாக்குதலைத் தொடுத்து, தாக்குதலில் காலை 11:00
மணியளவில் 21 சிறப்புக் கரும்புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்ட நிலையில்,
மோதல்களை முடிவுக்கு வந்திருந்தது. இதில் ஆறு விடுதலைப் புலி
உறுப்பினர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்க செய்து தற்கொலைச் செய்திருந்தனர்.
இத்தாக்குதலில் பங்கேற்றிருந்த புலிகளின்
அணியில் இருந்த 27 போராளிகளில் 21 கரும்புலிகள் வீரச்சாவைத்தழுவிக்கொள்ள
மிகுதி 6 பேர் சுமார் காலை 5 மணியளவில் தளத்தை விட்டு வெளியேறி சில
நாட்களின் பின் பாதுகாப்பாக வன்னித்தளத்தை சென்றடைந்திருந்தனர்.
இலங்கையில் உள்ள 13 வான் தளங்களில்
அனுராதபுர வான்படைத்தளம் நவீன வசதிகள் பொருந்திய ஒரு முக்கிய இராணுவ
வான்படைத் தளமாகவும், வட கிழக்குக்கு அருகாமையிலும் அதேவேளை சிங்கள உள்
நிலப்பரப்பிலும் அமைந்துள்ளதால் வடகிழக்கில் இருக்கும் இராணுவத்துக்கும்,
இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆள் ஆயுத வழங்கல்களுக்கு இந்த தளம்
முக்கியமானதாக இருந்தமையாலுமே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதலை
திட்டமிட்டு வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தனர்.
எல்லாளன் 205 கி.மு இருந்து 161 கி.மு
வரை அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான்
என்றும் இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக
பொதுவாக சிங்கள பௌத்தச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே
குறிப்பிடுகின்றது. அதானால் தற்கால நிகழ்வை ஒரு வரலாற்று பின்னணியுடன்
தொடர்பு படுத்த முனைவதோடு மட்டுமல்லாமல், சிங்கள ஆட்சியாளர்களின் “மகாவம்ச
சிந்தனைக்கு” தொடர்பாகவும் இருக்கும் முகமாக எல்லாளன் நடவடிக்கை என தமிழீழ
விடுதலைப்புலிகளால் இத்தாக்குதலுக்கு பெயரிடப்பட்டிருந்தது.
எல்லாளன் நடவடிக்கையின் போது மொத்தம் 10
வானூர்திகள் முற்றாக அழைக்கப்பட்டதாகவும் 16 வானூர்திகள் சேதமடைந்ததாகவும்
அநுராதபுரம் நீதிமன்றத்தில் நவம்பர் 7, 2007 இல் இடம்பெற்ற விசாரணைகளில்
அநுராதபுரம் காவற்துறைத் தலைமையகத்தினர் தகவல் தெரிவித்தனர். அத்துடன்
கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் பலத்த சேதத்துக்குள்ளாயின என்றும்
தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
[தொகு] பொதுமக்களுக்கு பாதிப்பு இன்மை
உள்ளக சிங்கள நிலப்பரப்பில் இடம்பெற்ற
புலிகளின் இந்த நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு எந்தவித சேதமும்
ஏற்படவில்லை. புலிகள் விமானங்களைப் பயன்படுத்தி குண்டு வீசிய பொழுதும்,
அவை துல்லியமாகப் படை இலக்குகளைத் தாக்கியது. கடந்த சில வருடங்களாக
புலிகள் மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை இயன்றளவு தவிர்த்து வருவதற்கு
இந்த ஒழுக்கமான படை நடவடிக்கை நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த அவதானிப்பை
வெளி நாட்டு ஊடகங்களும், தீவர சிங்கள இராணுவ சார்பு ஊடகங்களும்
சுட்டியதும் இங்கு குறிக்கத்தக்கது.
ஆனால் மாறாக இலங்கை இராணுவ விமான
குண்டுவீச்சுகளின் போதும் படைநடவடிக்கைகளின் போதும் பொதுமங்கள் பெரும்
பாதிப்பு உள்ளாவதும், இடம்பெயர்வதும் இங்கு குறிக்கத்தக்கது.
இந்தத் தாக்குதலில் இழக்கப்பட்ட வான்
ஊர்திகள் 40 மில்லியனுக்கு மேலான அமெரிக்க டொலர் பெறுமதி மிக்கவை. புலிகள்
நேரடியாக பொருளாதார இலக்குகளைத் சமீபகாலமாக தாக்கவில்லையாகினும், இலங்கை
அரசின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்ததக்க இராணுவ இலக்குளை தெரிந்தெடுத்து
தாக்குதலில் தொடர்ச்சியாக எல்லாளன் நடவடிக்கையையும் பார்க்கலாம்.
தாக்குதலில் பங்கேற்ற 21 சிறப்புக் கரும்புலிகளின் பெயர்களை விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டிருந்த விபரம் இணைக்கப்பட்டுள்ளன.
லெப்.கேணல் வீமன் – திருகோணமலை கோபாலபிள்ளை பிரதீபன்
லெப். கேணல் இளங்கோ – யாழ்ப்பாண மாவட்டம் இராசதுரை பகீரதன் லெப்
. கேணல் மதிவதனன் – யாழ்ப்பாண மாவட்டம் பாலசுப்பிரமணியம் தயாசீலன்
கப்டன் தர்மினி – கிளிநொச்சி கணேஸ் நிர்மலா கப்டன் புரட்சி
- யாழ்ப்பாண மாவட்டம் செல்வராசா தனுசன்
மேஜர் சுகன் – யாழ்ப்பாணம் கதிரவன் ஜீவகாந்தன் மேஜர் இளம்புலி
- யாழ்ப்பாணம் துரைரட்ணம் கலைராஜ்
மேஜர் காவலன் – பூநகரி, கிளிநொச்சி சண்முகம் சத்தியன் கப்டன் கருவேந்தன்
- கிளிநொச்சி மயில்வாகனம் சதீஸ்குமார்
கப்டன் புகழ்மணி – யாழ்ப்பாணம் தர்மலிங்கம் புவனேஸ்வரன் மேஜர் எழில்இன்பன்
- யாழ்ப்பாணம் விமலநாதன் பிரபாகரன்
கப்டன் புலிமன்னன – யாழ்ப்பாணம் கணபதி நந்தகுமார் கப்டன் அன்புக்கதிர்
- முல்லைத்தீவு வில்சன் திலீப்குமார்
கப்டன் சுபேசன் – மன்னார் நாகராசா மகாராஜ் கப்டன் செந்தூரன்
- யாழ்ப்பாணம் கணேசநாதன் தினேஸ்
லெப். அருண் – யாழ்ப்பாணம் பத்மநாதன் திவாகரன் கப்டன் பஞ்சசீலன்
- மட்டக்களப்பு சிவானந்தம் கஜேந்திரன
மேஜர் கனிக்கீதன் – மட்டக்களப்பு இராசன் கந்தசாமி கப்டன் ஈகப்பிரியா
- யாழ்ப்பாணம் கந்தையா கீதாஞ்சலி கப்டன் அருள்மலர் – யாழ்ப்பாணம் சேவியர் உதயா
கப்டன் ஈழத்தேவன் – யாழ்ப்பாணம் தங்கராசா மோசிகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு சுமார் 30 வருடங்களின் பின்
அந்த இயக்கம் அதன் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை தரை மூலமும்
கடல்மார்க்கங்களினூடும் மேற்கொண்டு விட்ட நிலையில் இறுதிக் காலங்களில்
அதன் தாக்குதல்களை வான் பரப்பூடாகவும் மேற்கொண்டிருந்தது தெரிந்ததே.
.புலிகள் இயக்கம் விமானப்படையணியை
உருவாக்கியுள்ளதை நிரூபிக்கும் முதல் நிகழ்வு 1998 இல் நிகழ்ந்தது. 1998
நவம்பர் 27 ம் திகதி புலிகள் இயக்கம் அதன் மாவீரர்க்ள தினத்தைக் கொண்டாடிய
பொழுதே முதன் முதலாக புலிகளின் விமானம் பகிரங்கமாக வானில்
பறக்கவிடப்பட்டது. முல்லைத்தீவு முள்ளியவளையில் நிகழ்ந்த மாவீரர் நினைவு
தின நிகழ்வின்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அதில் கலந்து கொண்டு
சுடரேற்றிய வேளையில் புலிகள் இயக்கத்தின் விமானம் முதன் முதலாக வானில்
பறந்து மலர்களைத் தூவியது.
இதன் பின்னரே புலிகளி;டம் உள்ள விமானம்
பற்றியும் விமானப்படை பற்றயும் வெளி உலகத்துக்கு தெரியவந்திருந்தது.
சுமார் 9 வருடங்களின் பின்னர் புலிகள் இயக்கத்தின் வான் புலிகள் முதலாவது
விமானத்தாக்குதலை 2007 மார்ச் 26ம் திகதி கட்டுநாயக்கா விமானநிலைய
விமானப்டை முகாம் மீது மேற்கொண்டது. இதைத் தொடாந்து சிறியரக விமானங்கள்
மூலம் யாழப்பாணம், மயிலிட்டி கடற்படை முகாம், கொலன்னாவ பெற்றறோலிய களஞ்சிய
நிலையம், முத்துராஜவெல எரிவாயு களஞசியம், அனுராதபுரம் விமானப்படை முகாம்,
மணலாறு இராணுவ பாதுகாப்பு நிலைகள் ஆகிய படையினர் தரப்பு முகாம்கள் மற்றும்
பொருளாதரா மத்திய நிலையங்கள் மீது தாக்குதல்களை புலிகள் இயக்கத்தின் வான்
புலிகள் அணியினர் நடத்தியுமிருந்தனர். உலகில் விடுதலை அமைப்பு ஒன்றால்
மேற்கொள்ளபட்ட முதலாவது விமானத் தாக்குதலாகவும் அது அமைந்தது
குறிப்பிடத்தக்கது.
இன்று உலகம் முழுவதும் பலவேறு தீவிரவாத
அமைப்புகளும் விடுதலை அமைப்புகளும் இயங்கி வருகின்றன. ஆனால்,
தாக்குதல்களுக்காக தனியான விமானப் படையணி அணியை உருவாக்கி இவ்வாறு விமானத்
தாக்குதல்கைளை நடத்திய ஒரே ஒரு சர்வதேச விடுதலை அமைப்பு தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கம் ஒன்றேயாகும்.
தாக்குதல் காணொளி:
ஒப்பரேசன் எல்லாளன் படை நடவடிக்கையில் களப்பலியான கரும்புலிகளை நினைவு கூர்ந்து ஓர் பாடல்
அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள்
“வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே
சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம்
விரைவாக வந்து சேரும்” என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான
தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது
அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதம்:
09.10.2007
என் அன்பான மக்களுக்கு,
சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.
தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள்
நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான்
மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட
பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.
அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற
வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட
குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய
வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில
முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக
எழுந்து நிற்க வேணும்.
எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில
அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து
அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள
வெறியர்களுக்கு.
வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.
இ.இளங்கோ.
swfobject.embedSWF("https://www.youtube.com/v/I5mdJv6d4Lc&rel=0&fs=1&showsearch=0&showinfo=0", "vvq-13922-youtube-1", "425", "344", "9", vvqexpressinstall, vvqflashvars, vvqparams, vvqattributes);
swfobject.embedSWF("https://www.youtube.com/v/zZc1g433u14&rel=0&fs=1&showsearch=0&showinfo=0", "vvq-13922-youtube-2", "425", "344", "9", vvqexpressinstall, vvqflashvars, vvqparams, vvqattributes);
(Visited 3 times, 3 visits today)
அன்புடன்
நந்திதா
http://www.meenagam.org/?p=13922
எல்லாளன் படை நடவடிக்கையில் வீரகாவியமான 21 கரும்புலிகளின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று.
எழுதியவர்பகலவன் on October 22, 2009
பிரிவு: முதன்மைச்செய்திகள், வரலாறு
சிங்கள
இனவெறி அரசின் குகைக்குள்ளேயே புகுந்து பத்திற்கும் மேற்பட்ட விமானங்களை
முற்றாக அழித்தும், பதினெட்டு விமானங்களை சேதத்திற்குள்ளாக்கியும் 14
விமானப்படையினரைக் கொன்றும் வீரகாவியம் படைத்து ஈற்றில் 21 தேசத்தின்
புதல்வர்கள் கரும்புலிகளாக வீரமரணம் அடைந்த எல்லாளன் படை நடவடிக்கையின்
இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
அம் மாவீரர்களை நினைவு கூரும் இந்நாளில்
அவர்களின் இலட்சிய பயணத்தில் நாமும் பங்குகேற்போம் என்ற உறுதி
எடுத்துக்கொள்வதோடு அத்தாக்குதல் பற்றிய சிறு விபரத்தையும் நேயர்களுக்காக
தருகிறோம்.
விடுதலைப் புலிகளின் சிறப்புக்
கரும்புலித் தாக்குதல் அணியினர் வில்பத்து சரணாலயத்துக்கூடாக அரச
கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஊடுருவி அங்கிருந்து காடுகள் வழியாக அனுராதபுர
வான்படைத்தளத்துக்கு அருகிலிருக்கும் நுவரவாவிக்கு சென்று அக்டோபர் 21
வான்படைத் தளத்துக்கு அருகாமையில் உள்ள தென்னந்தோப்பில்
பதுங்கியிருந்தவாறு கிளிநொச்சியிலிருந்து வரவேண்டிய கட்டளைக்காக
காத்திருந்தனர்.
2007 அக்டோபர் 21 இரவு சிரச
தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சி நடப்
பெற்றுக் கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகளின் அணி அனுராதபுரம்
நெலுங்குளம் பெருந்தெருவைக் கடந்து தளத்தின் வடக்குப் பகுதியை அடைந்தது.
முன்காலை 2:30 மணியளவில் விடுதலைப் புலிகள் தளத்திற்கு வெளியில் இருந்த
முதலாவது முட்கம்பி வேலி, இதற்கு அடுத்த நிலையில் சில அடி தூரத்தில்
சமாந்தரமாக தளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது கம்பி வேலி,
இவையிரண்டுக்கும் இடையில் செயற்படா நிலையில் இருந்த மின்வேலி என்பவற்றை
வெட்டி தளத்தினுள் உட்புகுந்தனர்.
உள்நுழைந்த அணியினர் தாமிருந்த
நிலைக்கும் வானூர்தி ஓடுபாதைக்கும் இடையில், முதல் நிலை பதுங்கு
குழிகளுக்கு குறுக்காக புதைக்கப்பட்டிருந்த ஒலிகளை எழுப்பும் கண்ணிவெடிகளை
அகற்றினர். பாதையின் இருபுறமும் பதுங்கு குழிகளை நோக்கி மிதிவெடிகள்
நிலைக்குத்தாக புதைக்கப்பட்டிருந்தன. சத்தவெடிகளை அகற்றியவுடன் விடுதலைப்
புலிகளின் அணியினர் முதல் நிலை பதுங்குகுழிகளின் பின்புறம் உள்ள அணைகளை
அடைந்தனர். அந்தப் பதுங்குகுழிகளில் வான்படையினர் பணியில் இருந்தனர்.
பதுங்குகுழிகளை அடைந்ததும் அவர்களில் ஒரு பிரிவினர் பதுங்குகுழியின் ஒரு
முனையை அடைந்து வானூர்தி ஓடுபாதையை நோக்கி ஊர்ந்து செல்ல தொடங்கினர்.
இரண்டாவது குழுவினர் அணையின் மற்றைய முனையை அடைந்து முதன் நிரை பதுங்கு
குழிகளில் இரண்டு பதுங்கு குழிகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியினூடாக
நகரத் தொடங்கினர். 3 விடுதலைப் புலிகள் மாத்திரம் நகர்ந்து செல்லும்
விடுதலைப் புலிகளை வான் படையினர் கண்டு தாக்கினால் வான் படையினரைத்
தாக்குவற்காக பதுங்குகுழியின் பின்புறம் நிலையெடுத்து இருந்தனர்.
எவ்வாறெனினும் பதுங்குகுழியில் இருந்த வான் படையினர் எவரும் நகர்ந்து
சென்ற விடுதலைப் புலிகளை அவதானிக்கவில்லை.
14 பேரைக் கொண்ட முதலாவது அணியின் பணி
உலங்குவானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்ததும் பதுங்குகுழிகளை
அழிப்பதாகும். இரண்டாவது அணி வானூர்திகளின் தரிப்பிடங்களை அடைந்து அவற்றை
அழிப்பதற்கு காத்திருந்தது. முதலாவது அணி ஓடுபாதையை அடைந்த போது,
இரண்டாவது அணி எம்ஐ-24, எம்ஐ-17 உலங்குவானூர்திகள் நிறுத்தப்பட்டிருந்த
“வீ பகுதி” யை நோக்கி நகரத்தொடங்கியது. இரு அணிகளும் ஓடுபாதையை அடைந்ததும்
பதுங்குகுழிக்குப் பின்னால் இருந்த 3 விடுதலைப் புலிகளும் பதுங்குகுழியை
நோக்கி துப்பாகி சூட்டை நடத்தி முதல் நிரல் பதுங்கு குழிகளில் காவலுக்கு
இருந்த வான்படையினரை கொன்றப் பின்னர் அவர்களும் தமது அணிகளுடன் இணைந்து
கொண்டனர். துப்பாக்கிச் சூடு தொடங்கிய நேரம் அக்டோபர் 22 முன்காலை 3:20
மணியாகும். துப்பாக்கிச் சத்தங்களைத் தொடர்ந்து தளம் முழுமையான உசார்
நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
தாக்குதல் தொடங்கியதும் வானூர்தி
ஓடுபாதையில் இருந்த முதல் நிலை பதுங்குகுழிகளை விடுதலைப் புலிகள் தாக்கி
அழித்து விட்டமையால் வானூர்தி கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு அண்மையாக
வானூர்தி மற்றும் உலங்குவானூர்திகளுக்கு எந்த பாதுகாப்பும் இருக்கவில்லை.
கோபுரத்திற்கு அருகில் இருந்த 12.7 மி.மீ வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி
நிலை சில நிமிட கடும் தாக்குதலுக்கு பின்னர் புலிகள் வசமானது. வானூர்தி
எதிர்ப்புத் துப்பாக்கியைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் தளத்தின் தொலைத்
தொடர்பு, ராடார், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கி நிலைகளை தமது
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து முன்காலை 4:30
மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு சிறு ரக
விமானங்கள் தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசித் தாக்கினர்.
வான்படைத் தளத்தின் வானூர்தி எதிர்ப்பு
துப்பாக்கியை தம்வசப்படுத்தியிருந்த விடுதலைப் புலிகள் அதைக் கொண்டு
வானூர்திகளின் தரிப்பிடங்களை நோக்கியும், உலங்கு வானுர்திகள் நோக்கியும்,
அப்பகுதியில் இருந்த வான் படையினர் மீதும் தாக்குதல்களை நடத்திக்
கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் 6 பேர் இரு பதுங்குகுழிகளை கைப்பற்றி
படையினர் மீது தாக்குதல்களை நடத்த, ஏனையவர்கள் வானூர்திகளை ஒவ்வொன்றாக
அழித்தனர். இதன் போது தளத்தின் இரண்டாவது பெரிய தீயணைப்பு நிலையத்தையும்
அவர்கள் தாக்கியழித்தனர்.
கடும் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது
அருகில் இருந்த கஜபா படைப்பிரிவின் படையினரும் உதவிக்கு விரைந்திருந்தனர்.
அப்போது சில விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த நிலையில் சமர்
தொடர்ந்தது. இருப்பினும் அந்த நேரம் பீச்கிராஃப் உம், சில
உலங்குவானூர்திகள் ஆகியவற்றை விடுதலைப் புலிகள் அழித்திருந்தனர் .
நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காலை 7:00 மணியளவில் மேஜர்
சந்திமால் பீரீஸ், கப்டன் கோசலா முனசிங்க தலமையில் விரைந்த சிறப்புப்
படையினர் புலிகள் அணி மீது தாக்குதலைத் தொடுத்து, தாக்குதலில் காலை 11:00
மணியளவில் 21 சிறப்புக் கரும்புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்ட நிலையில்,
மோதல்களை முடிவுக்கு வந்திருந்தது. இதில் ஆறு விடுதலைப் புலி
உறுப்பினர்கள் தாங்களாகவே குண்டை வெடிக்க செய்து தற்கொலைச் செய்திருந்தனர்.
இத்தாக்குதலில் பங்கேற்றிருந்த புலிகளின்
அணியில் இருந்த 27 போராளிகளில் 21 கரும்புலிகள் வீரச்சாவைத்தழுவிக்கொள்ள
மிகுதி 6 பேர் சுமார் காலை 5 மணியளவில் தளத்தை விட்டு வெளியேறி சில
நாட்களின் பின் பாதுகாப்பாக வன்னித்தளத்தை சென்றடைந்திருந்தனர்.
இலங்கையில் உள்ள 13 வான் தளங்களில்
அனுராதபுர வான்படைத்தளம் நவீன வசதிகள் பொருந்திய ஒரு முக்கிய இராணுவ
வான்படைத் தளமாகவும், வட கிழக்குக்கு அருகாமையிலும் அதேவேளை சிங்கள உள்
நிலப்பரப்பிலும் அமைந்துள்ளதால் வடகிழக்கில் இருக்கும் இராணுவத்துக்கும்,
இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆள் ஆயுத வழங்கல்களுக்கு இந்த தளம்
முக்கியமானதாக இருந்தமையாலுமே விடுதலைப்புலிகள் இந்தத் தாக்குதலை
திட்டமிட்டு வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தனர்.
எல்லாளன் 205 கி.மு இருந்து 161 கி.மு
வரை அனுராதபுரத்தை தலைநகராக கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னனாவான்
என்றும் இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாக
பொதுவாக சிங்கள பௌத்தச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சமே
குறிப்பிடுகின்றது. அதானால் தற்கால நிகழ்வை ஒரு வரலாற்று பின்னணியுடன்
தொடர்பு படுத்த முனைவதோடு மட்டுமல்லாமல், சிங்கள ஆட்சியாளர்களின் “மகாவம்ச
சிந்தனைக்கு” தொடர்பாகவும் இருக்கும் முகமாக எல்லாளன் நடவடிக்கை என தமிழீழ
விடுதலைப்புலிகளால் இத்தாக்குதலுக்கு பெயரிடப்பட்டிருந்தது.
எல்லாளன் நடவடிக்கையின் போது மொத்தம் 10
வானூர்திகள் முற்றாக அழைக்கப்பட்டதாகவும் 16 வானூர்திகள் சேதமடைந்ததாகவும்
அநுராதபுரம் நீதிமன்றத்தில் நவம்பர் 7, 2007 இல் இடம்பெற்ற விசாரணைகளில்
அநுராதபுரம் காவற்துறைத் தலைமையகத்தினர் தகவல் தெரிவித்தனர். அத்துடன்
கட்டடங்கள் மற்றும் இயந்திரங்கள் பலத்த சேதத்துக்குள்ளாயின என்றும்
தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
[தொகு] பொதுமக்களுக்கு பாதிப்பு இன்மை
உள்ளக சிங்கள நிலப்பரப்பில் இடம்பெற்ற
புலிகளின் இந்த நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு எந்தவித சேதமும்
ஏற்படவில்லை. புலிகள் விமானங்களைப் பயன்படுத்தி குண்டு வீசிய பொழுதும்,
அவை துல்லியமாகப் படை இலக்குகளைத் தாக்கியது. கடந்த சில வருடங்களாக
புலிகள் மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளை இயன்றளவு தவிர்த்து வருவதற்கு
இந்த ஒழுக்கமான படை நடவடிக்கை நல்ல எடுத்துக்காட்டாகும். இந்த அவதானிப்பை
வெளி நாட்டு ஊடகங்களும், தீவர சிங்கள இராணுவ சார்பு ஊடகங்களும்
சுட்டியதும் இங்கு குறிக்கத்தக்கது.
ஆனால் மாறாக இலங்கை இராணுவ விமான
குண்டுவீச்சுகளின் போதும் படைநடவடிக்கைகளின் போதும் பொதுமங்கள் பெரும்
பாதிப்பு உள்ளாவதும், இடம்பெயர்வதும் இங்கு குறிக்கத்தக்கது.
இந்தத் தாக்குதலில் இழக்கப்பட்ட வான்
ஊர்திகள் 40 மில்லியனுக்கு மேலான அமெரிக்க டொலர் பெறுமதி மிக்கவை. புலிகள்
நேரடியாக பொருளாதார இலக்குகளைத் சமீபகாலமாக தாக்கவில்லையாகினும், இலங்கை
அரசின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்ததக்க இராணுவ இலக்குளை தெரிந்தெடுத்து
தாக்குதலில் தொடர்ச்சியாக எல்லாளன் நடவடிக்கையையும் பார்க்கலாம்.
தாக்குதலில் பங்கேற்ற 21 சிறப்புக் கரும்புலிகளின் பெயர்களை விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டிருந்த விபரம் இணைக்கப்பட்டுள்ளன.
லெப்.கேணல் வீமன் – திருகோணமலை கோபாலபிள்ளை பிரதீபன்
லெப். கேணல் இளங்கோ – யாழ்ப்பாண மாவட்டம் இராசதுரை பகீரதன் லெப்
. கேணல் மதிவதனன் – யாழ்ப்பாண மாவட்டம் பாலசுப்பிரமணியம் தயாசீலன்
கப்டன் தர்மினி – கிளிநொச்சி கணேஸ் நிர்மலா கப்டன் புரட்சி
- யாழ்ப்பாண மாவட்டம் செல்வராசா தனுசன்
மேஜர் சுகன் – யாழ்ப்பாணம் கதிரவன் ஜீவகாந்தன் மேஜர் இளம்புலி
- யாழ்ப்பாணம் துரைரட்ணம் கலைராஜ்
மேஜர் காவலன் – பூநகரி, கிளிநொச்சி சண்முகம் சத்தியன் கப்டன் கருவேந்தன்
- கிளிநொச்சி மயில்வாகனம் சதீஸ்குமார்
கப்டன் புகழ்மணி – யாழ்ப்பாணம் தர்மலிங்கம் புவனேஸ்வரன் மேஜர் எழில்இன்பன்
- யாழ்ப்பாணம் விமலநாதன் பிரபாகரன்
கப்டன் புலிமன்னன – யாழ்ப்பாணம் கணபதி நந்தகுமார் கப்டன் அன்புக்கதிர்
- முல்லைத்தீவு வில்சன் திலீப்குமார்
கப்டன் சுபேசன் – மன்னார் நாகராசா மகாராஜ் கப்டன் செந்தூரன்
- யாழ்ப்பாணம் கணேசநாதன் தினேஸ்
லெப். அருண் – யாழ்ப்பாணம் பத்மநாதன் திவாகரன் கப்டன் பஞ்சசீலன்
- மட்டக்களப்பு சிவானந்தம் கஜேந்திரன
மேஜர் கனிக்கீதன் – மட்டக்களப்பு இராசன் கந்தசாமி கப்டன் ஈகப்பிரியா
- யாழ்ப்பாணம் கந்தையா கீதாஞ்சலி கப்டன் அருள்மலர் – யாழ்ப்பாணம் சேவியர் உதயா
கப்டன் ஈழத்தேவன் – யாழ்ப்பாணம் தங்கராசா மோசிகரன்
விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டு சுமார் 30 வருடங்களின் பின்
அந்த இயக்கம் அதன் பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை தரை மூலமும்
கடல்மார்க்கங்களினூடும் மேற்கொண்டு விட்ட நிலையில் இறுதிக் காலங்களில்
அதன் தாக்குதல்களை வான் பரப்பூடாகவும் மேற்கொண்டிருந்தது தெரிந்ததே.
.புலிகள் இயக்கம் விமானப்படையணியை
உருவாக்கியுள்ளதை நிரூபிக்கும் முதல் நிகழ்வு 1998 இல் நிகழ்ந்தது. 1998
நவம்பர் 27 ம் திகதி புலிகள் இயக்கம் அதன் மாவீரர்க்ள தினத்தைக் கொண்டாடிய
பொழுதே முதன் முதலாக புலிகளின் விமானம் பகிரங்கமாக வானில்
பறக்கவிடப்பட்டது. முல்லைத்தீவு முள்ளியவளையில் நிகழ்ந்த மாவீரர் நினைவு
தின நிகழ்வின்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அதில் கலந்து கொண்டு
சுடரேற்றிய வேளையில் புலிகள் இயக்கத்தின் விமானம் முதன் முதலாக வானில்
பறந்து மலர்களைத் தூவியது.
இதன் பின்னரே புலிகளி;டம் உள்ள விமானம்
பற்றியும் விமானப்படை பற்றயும் வெளி உலகத்துக்கு தெரியவந்திருந்தது.
சுமார் 9 வருடங்களின் பின்னர் புலிகள் இயக்கத்தின் வான் புலிகள் முதலாவது
விமானத்தாக்குதலை 2007 மார்ச் 26ம் திகதி கட்டுநாயக்கா விமானநிலைய
விமானப்டை முகாம் மீது மேற்கொண்டது. இதைத் தொடாந்து சிறியரக விமானங்கள்
மூலம் யாழப்பாணம், மயிலிட்டி கடற்படை முகாம், கொலன்னாவ பெற்றறோலிய களஞ்சிய
நிலையம், முத்துராஜவெல எரிவாயு களஞசியம், அனுராதபுரம் விமானப்படை முகாம்,
மணலாறு இராணுவ பாதுகாப்பு நிலைகள் ஆகிய படையினர் தரப்பு முகாம்கள் மற்றும்
பொருளாதரா மத்திய நிலையங்கள் மீது தாக்குதல்களை புலிகள் இயக்கத்தின் வான்
புலிகள் அணியினர் நடத்தியுமிருந்தனர். உலகில் விடுதலை அமைப்பு ஒன்றால்
மேற்கொள்ளபட்ட முதலாவது விமானத் தாக்குதலாகவும் அது அமைந்தது
குறிப்பிடத்தக்கது.
இன்று உலகம் முழுவதும் பலவேறு தீவிரவாத
அமைப்புகளும் விடுதலை அமைப்புகளும் இயங்கி வருகின்றன. ஆனால்,
தாக்குதல்களுக்காக தனியான விமானப் படையணி அணியை உருவாக்கி இவ்வாறு விமானத்
தாக்குதல்கைளை நடத்திய ஒரே ஒரு சர்வதேச விடுதலை அமைப்பு தமிழீழ விடுதலைப்
புலிகள் இயக்கம் ஒன்றேயாகும்.
தாக்குதல் காணொளி:
ஒப்பரேசன் எல்லாளன் படை நடவடிக்கையில் களப்பலியான கரும்புலிகளை நினைவு கூர்ந்து ஓர் பாடல்
அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள்
“வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே
சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம்
விரைவாக வந்து சேரும்” என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான
தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது
அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதம்:
09.10.2007
என் அன்பான மக்களுக்கு,
சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.
தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள்
நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான்
மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட
பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.
அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற
வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட
குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய
வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில
முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக
எழுந்து நிற்க வேணும்.
எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில
அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து
அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள
வெறியர்களுக்கு.
வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.
இ.இளங்கோ.
swfobject.embedSWF("https://www.youtube.com/v/I5mdJv6d4Lc&rel=0&fs=1&showsearch=0&showinfo=0", "vvq-13922-youtube-1", "425", "344", "9", vvqexpressinstall, vvqflashvars, vvqparams, vvqattributes);
swfobject.embedSWF("https://www.youtube.com/v/zZc1g433u14&rel=0&fs=1&showsearch=0&showinfo=0", "vvq-13922-youtube-2", "425", "344", "9", vvqexpressinstall, vvqflashvars, vvqparams, vvqattributes);
(Visited 3 times, 3 visits today)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|