ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

3 posters

Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by அகல் Fri May 10, 2013 9:10 pm

http://1.bp.blogspot.com/-yHQ9aPwr-Io/UYupIvjgEdI/AAAAAAAACFk/khS7F1gmwpM/s1600/Paintings+of+rural+indian+women+-+Oil+painting+%252818%2529.jpg

"இன்னைக்கு பொண்ணுப் பாக்குறப்ப இவன பொண்ணுட்ட பேசவே விடக்கூடாது, எதையோ பேசுறான் அப்பறம் எனக்கு பிடிக்கலங்குறான்" என்று சரவணின் தாய் அவனது அண்ணியிடம் சொல்லியது பக்கத்து அறையில் இருந்த அவனுக்குக் கேட்டுவிட்டது.

இதுவரை மூன்று பெண்கள் பார்த்தாகிவிட்டது, எதுவும் அமையவில்லை. சரவணன் 6.2 அடி உயரம். முதல் பெண்ணை போட்டோவில் பார்த்து சரி என்று சொல்லிவிட்டு நேரில் போய்ப் பார்த்தான். ஐந்து அடிக்கே ஒரு அங்குலம் தேவைப்படும் அளவிற்கு உயரம். அப்பா அம்மாவிற்கு குடும்பம், பெண் பிடித்திருந்தாலும், வேண்டாம் என்று அடம்பிடித்தான்.

இரண்டாவது பார்த்த பெண்ணிற்கு ஏதோ ஒரு காரணத்தினால் சரவணனைப் பிடிக்கவில்லை. மூன்றாவது பெண்ணிடம் சிறிது நேரம் பேசியவுடனே, அவளுக்கு இருந்த ஆடம்பர வாழ்க்கை எண்ணம் தனது நடுத்தர குடும்பத்திற்கு ஒத்துவராது என்று சரவணன் முடிவு செய்துவிட்டான்.

இன்று பார்க்கப் போவது நாலாவது பெண்.

சரவணின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணனின் குழந்தை மற்றும் தாத்தாவோடு வாடகைக்கு வரவழைக்கப் பட்ட இன்னோவா காரில் கிளம்பினான் சரவணன். அரைமணி நேரத்திற்கு பிறகு கார் அம்மன் கோவிலைக் கடந்து அடுத்த சந்தில் இடதுபுறமுள்ள பெண் வீட்டின் முன் நின்றது.

பெண்ணின் தந்தையும் தாயும் வாசலில் நின்று மகிழ்ச்சியாக வரவேற்றார்கள்.

காரிலிருந்து கடைசியாக இறங்கிய சரவணன், அண்ணி சுமதியின் கையைத் தட்டினான். சுமதி திரும்பினாள்.

"அண்ணி என்ன மட்டும் பொண்ணுட்ட பேசவிடல, கண்டிப்பா நான் கல்யாணாத்துக்கு ஒத்துக்க மாட்டேன். பொண்ணுப் பாக்கவும் வரமாட்டேன்" என்றான் சரவணன்.. அமைதியான குரலில் கம்பீரமாக..

"நான் இருக்கேன்ல சரவணா... வா பாத்துக்கலாம்" என்றாள் சுமதி. புருவங்களைச் சுருக்கி..

"அண்ணி உங்கள நம்பித்தான் உள்ள வாரேன், நீங்க தான் எப்டியாச்சும் பொண்ணோட பேச ஏற்பாடு பண்ணனும்" என்றான் சரவணன். இந்தமுறை அப்பாவியாக...

வீட்டிற்குள் நுழைந்தவுடன், இரண்டு சிறிய தனி சோபாவில் எதிரெதிராக சரவணனையும் தாத்தாவையும் அமர வைத்துவிட்டு, பெரிய சோபாவில் அவனது அண்ணன், அம்மா, அப்பா அமர்ந்தனர். எதிர் மூலையில் அண்ணனுடன் அமரப்போகும் அண்ணியை, தான் இருக்கும் சோபாவின் முனையில் அம்மாவோடு அமரும்படி கண்களால் சைகை கட்டினான் சரவணன். அதைப் புரிந்துகொண்ட சுமதி தலையை அசைத்தபடி வந்து அமர்ந்துகொண்டாள்.

சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெண்ணை வரச்சொன்னார்கள். அறைக்குள் இருந்த கலைவாணி காபி தட்டை ஏந்திக்கொண்டு சற்று தலையைக் குனிந்துகொண்டே வந்தாள். சிவந்த நிறம், அளவான கூந்தல், அல்லிவாறிப் பூசப்படாதா மேக்கப், சாயம் தீட்டப்படாத இயல்பான இதழ்கள். போதுமான வளையல், கலை நயமிக்க சேலை என்று அவளது தோற்றம் உருவகப் படுத்தப்படாமால் உள்ளது உள்ளபடி இருந்தது.

பிஞ்சுக் குரலில் "ஐ சித்தி நல்லாருக்கு" என்றாள் சுமதியின் ஐந்து வயது மகள். கூடி இருந்தோர் அனைவரும் சிரித்தனர். "ஏய் சும்மா இரு" என்று அதட்டினாள் சுமதி.

மற்றவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு கடைசியாக சரவணனிடம் காபியைக் நீட்டினாள் கலைவாணி. சரவணன் அவளது விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தான். ஏதோ ஒன்று அவளிடம் சிறப்பாக இருப்பதாக அவன் உணர்ந்தான். அது ஒட்டுமொத்தமாக சரவணனை அவளது பக்கம் இழுத்தது. அவளால் சரவணனின் பார்வைக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடனே தனது அறைக்குத் திரும்பினாள்.

ஒரு புறம் பலகாரமும் மற்றொரு புறம் குடும்ப வரலாறும் பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தது. அரை மணி நேரம் ஆயிருக்கும். சரவணன் மூன்றாவது முறையாக அண்ணியின் காதோரம் சொன்னான்.

"அண்ணி பொண்ணுட்ட பையன் பேசணும்னு சொல்லுங்க அண்ணி..."

ஆனால் பெரியவர்களுக்கு முன் இவ்வாறு சொல்ல அவளாலும் இயலவில்லை. சரவணன் வெறுப்படைந்தான். ஜன்னலின் வழியாக அவனை ஒரு முறைப் பார்த்தாள் கலைவாணி.

"சரி நல்லது.. போயிட்டு வாரமுங்க" என்று பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் எழுந்து விடை பெற்றனர். சரவணன் கோபமாக எழுந்தான்.

"கொஞ்சம் நில்லுங்க.. நான் பொண்ணுட்ட பேசணும்" என்றான் சரவணன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படிச் சொல்லுவோம் என்று சரவணனும் எதிர்பார்க்கவில்லை. பெரியவர்களுக்கு இந்தச் சூழலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. தவறாக நினைக்க மாட்டார்களா என்று சரவணனும் சற்றும் யோசிக்கவில்லை.

சில நொடி மௌனத்தை உடைத்த பெண்ணின் மாமா, தாராளமா பேசுங்க தம்பி என்றார் சிரித்துக்கொண்டே.

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் நண்பர்களிடம் கலகலப்பாக பேசும் சரவணின் கோபம் சற்று தணிந்தது. சிறிய புன்னகையோடு விறுவிறுப்பாக கலைவாணி இருந்த அறைக்குள் சென்று கதவை சாத்தினான். அவள் சற்று பயத்தை உணர்ந்தாள்.

உள்ளே நுழைந்து ஒரு நிமிடம் அமைதி காத்தான் சரவணன்.

"எனக்கு என்ன தோணுதோ அதப் பேசுவேன்.. தப்பா நெனச்சுக்காதிங்க" என்று சொல்லிய சரவணன்

"உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா ?" என்றான்.

"ஹ்ம்ம்" என்றாள்..

"உண்மைய சொல்லுங்க. எதோ நான் கேக்குறேங்கரதுக்காக சொல்லவேண்டாம்" என்று சொல்லி சிறிய புன்னகையை தவழவிட்டான்.

"பிடிச்சிருக்கு" என்றாள்..

உண்மையில், இரண்டு நிமிடம் அவன் எதார்த்தமாகப் பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது.

பர்ஸில் இருந்து ஒரு பிஸினெஸ் கார்டை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
"இந்தாங்க இத வச்சுக்கோங்க"

அதில் "சரவணன், சீனியர் எஞ்சினியர்" என்று கம்பனி பெயர், மொபைல் எண்ணுடன் அச்சிடப் பட்டிருந்தது.

கார்டைக் கொடுத்தவுடன், அறையை விட்டு வெளியே நகர்ந்தான். மாப்பிள்ளை வீட்டார் வீட்டை விட்டு நகர்ந்தனர்.

இரண்டு நாட்கள் கழித்து சற்று அச்சத்துடன் அப்பாவிடம் பெண் வீட்டார் என்ன சொன்னார்கள் என்று கேட்டான்.

"ஜாதகம் சரி இல்லைன்னு சொல்றாங்கடா, அவங்க பேசறதப்பாத்த அவங்களுக்கு பொண்ண கொடுக்க விருப்பமில்ல போல தெரியுது" மேலோட்டமாகப் பேசினார்.

"அதுக்கு..." என்றான் சரவணன்.

"ஊர்ல என்ன பொண்ணா இல்ல.. இன்னைக்கு ரெண்டு பொண்ணு தரகர் பாத்து சொன்னார். நல்ல குடும்பம், நீ பெங்களூர் போயிட்டு பத்துநாள் கழிச்சு வா, ஒரு பொண்ணு சென்னையில இருந்து வருதாம், பாத்துட்டு போவ" என்றார்...

சரவணனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தப் பெண் தான் வேண்டும் என்று அம்மா, அண்ணியிடம் சொல்லிவிட்டு பெங்களூர் சென்று விட்டான்.

"அவங்களுக்கு பிடிக்கலேனா நாம எப்படிப்பா வற்புறுத்த முடியும்" என்று அவனது அம்மா தொலைபேசியில் சொல்லி அவன் மனதை மாற்ற முயற்சித்தாள். இரண்டு மாதங்களாக மற்ற பெண்ணைப் பார்க்க அவனது அப்பா அழைத்தும், வேலைப் பளு, வரமுடியாது என்று தட்டிக் கழித்தான்.

தன்னோடு விடுதியில் தங்கி இருந்த கார்த்திக் மற்றும் ஆண்டனியிடம் நடந்ததைச் சொல்ல, அறையே அதிரும் அளவிற்கு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சரவணன் புண் முறுவலோடு "டே போதும் நிறுத்துங்கடா" என்றான்.

அவனது கலையான கருப்பு முகமும் வெண் பற்களும், அந்த ஜன்னலில் இருந்த கண்ணாடி வழியாக பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

"மச்சி... மச்சி... தாங்கலடா.. உன் தைரியத்த பரட்டுறதா இல்ல உன் காதலைப் பாரட்டுறதா.. என்ன ஒரு காதல்... என்ன ஒரு காதல்... இதுநாளதான் ரெண்டு மாசமா மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கியா ?" என்று கார்த்திக் சொல்ல, மீண்டும் ஆண்டனியும் கார்த்திக்கும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.

"டே கடுபேத்தாதிங்கடா, சொல்லவே கூடாதுன்னு நெனச்சேன்.. ஆனா உளறி கொட்டிட்டேன்" என்று சொல்லிகொண்டே சிரித்த சரவணின் செல்போன் மணி அடித்தது.

"மச்சி.. உன் காதலி கலைவாணியாத்தான் இருக்கும் மச்சி... ஹ்ம்ம் போயிப் பேசு டா... பேசு.." என்று கேலி பேசினான் கார்த்திக்.. சிரிப்பொலி இன்னும் அறையை அதிரவைத்துக் கொண்டிருந்தது...

அறையிலிருந்து வெளியே வந்து மொபைலில் பச்சை பட்டனை அழுத்தி "ஹலோ" என்றான் சரவணன்.

எதிர் முனையில் அமைதியே பதிலானது.

மீண்டும் "ஹலோ... யார் பேசுறது" என்றான்.

சில நொடிகளுக்குப் பிறகு,

"ஹலோ நான் கலைவாணி பேசுறேன்" என்று மெல்லிய அந்த பெண் குரல் கேட்டது.

"இப்படியும் காதல் வரும்..." தொடரும்...

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post.html

கதையின் அடுத்த பாகம் இங்கே: http://kakkaisirakinile.blogspot.in/2013/05/2_10.html

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty Re: இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by யினியவன் Fri May 10, 2013 9:23 pm

நல்லாருக்கு அகல் - அங்கயும் தொடரும்ன்னு போட்டுட்டீங்களே - அந்த போனைப் போட்ட மாதிரியே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty Re: இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by அகல் Fri May 10, 2013 9:28 pm

ஹா ஹா... நன்றி அண்ணே புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty Re: இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by யினியவன் Fri May 10, 2013 9:31 pm

இந்த 6.2 நீங்கதானா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty Re: இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by அகல் Fri May 10, 2013 9:35 pm

நானா இல்லையானு கிளைமாக்ஸ்ல தெரியுமுண்ணே புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty Re: இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by யினியவன் Fri May 10, 2013 9:37 pm

அந்த கேனன் 550 ல ஒரு படத்த போட்டா அந்த
கேனயன் யாருன்னு நாங்களே தெரிஞ்சுக்கறோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty Re: இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by மதுமிதா Fri May 10, 2013 9:38 pm

நல்ல இருந்தது தொடர்ச்சி எப்போ போடுவிங்க?


இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Mஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Aஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Dஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Hஇப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) U



இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty Re: இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by யினியவன் Fri May 10, 2013 9:43 pm

madhukrish wrote:நல்ல இருந்தது தொடர்ச்சி எப்போ போடுவிங்க?
கல்யாணம் ஆகி பூரிக் கட்டை அவரு தலையில் போடறப்ப போட்டுடுவாரு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..) Empty Re: இப்படியும் காதல் வரும் (சிறுகதை.. உண்மைக் கதை..)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum