புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_lcapகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_voting_barகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_lcapகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_voting_barகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_lcapகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_voting_barகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_lcapகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_voting_barகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_lcapகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_voting_barகாந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:43 am

First topic message reminder :

1.புத்திலிபாய்



போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.

ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.

புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:57 am

31. வெளியேறமாட்டேன்



பீகார் மாகாணத்தில் சம்பரான் என்றொரு ஜில்லாவில், அவுரித் தொட்டங்கள் நிறைந்திருந்தன. ஒவ்வொரு தோட்டக் குடியானவனும் ‘தீன்கதியா’ என்ற கட்டாய அவுரிப் பயிர் செய்ய வேண்டுமென்று, தோட்ட முதலாளிகள் கூறினார்கள்.

தங்களுக்கு இழக்கப்படும் கொடுமைகெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று குடியானவர்கள் நினைத்தார்கள். அவர்களிடைய பிரதிநிதியக ராஜ்குமார் சுக்ளா என்பவர் காந்தியைச் சந்தித்தார்.

சம்பராளில் நடப்பதையெல்லாம் அவர் காந்திஜிக்கு கூறினார். சம்பரான் குடியானவர்களின் குறைகளை விசாரிக்க, தாம் அங்கே வருவதாக காந்திஜி கூறி, சுக்லாவை அனுப்பி வைத்தார்.

பின்பு கல்கத்தாவுக்குச் செல்லும்போது, சம்பரானுக்குச் சென்றார். அங்கு சென்றதும் தோட்ட முதலாளிகளையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்துப்பேசினார். காந்திஜி, தாம் தோட்டக் குடியானவர்களின் நிலைபற்றி விசாரிக்க வந்ததாகக் கூறினார்.

இதைக் கேட்ட தோட்ட முதலாளிகள் கோபமடைந்தார்கள். காந்திஜி இவ்விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும் எச்சரித்தார்கள்.

அரசாங்க அதிகாரியான கமிஷனரோ, காந்திஜியை மிரட்டினார். ”இவ்வூரில் எல்லையை விட்டுப் போய் விடுங்கள். வெளியேறவில்லை என்றார் என்ன நடக்குமென்று கூற முடியாது” என்றார்.

திட மனதும் உறிதியான கொள்கையும் கொண்ட காந்திஜி இதையெல்லாம் பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை.

அச்சமயத்தில் மோத்திஹாரியின் அருகில் இருந்த ஒரு சிற்றூரில் அவுரி தோட்டத் தொழிலாளி ஒருவன் துன்புறுத்தப்பட்ட செய்தி கிடைத்தது.

உடனே அவ்விடத்துக்குச் செல்ல காந்திஜி விழைந்தார். காத்திஜி ஒரு யானைமீது அமர்ந்து பயணம் செய்தார். சிறிது தொலைவு சென்றதும் காவல்துறையைச் சார்ந்த ஒருவன் காந்திஜியிடம், ”ஐயா, தங்களுக்குக் காவல்துறை அதிகாரி வந்தனம் தெரிவிக்கச் சொன்னார்” என்றான். இதற்கு என்ன பொருள் என்று காந்திஜிக்கு புரிந்தது. காந்திஜிக்கு, அந்தக் காவல்துறைச் சேவகனுடன், அவருடைய வண்டியில் பயணம் செய்தார்.

வண்டி சிறிது தூரம் சென்றதும், இன்னுமொருவன் வண்டியை நிறுத்தி கடிதத்தைக் கொடுத்தான்.

”இவ்வூரை விட்டு உடனே வெளியேற வேண்டும்” என்ற உத்தரவு அதில் இருந்தது.

அச்சம் என்பதையே அறியாத காந்திஜி, அக்கடிதத்திலே கையெழுத்திட்டார். அதோடு மட்டுமா? ”விசாரனை முடியும் வரை இவ்வூரை விட்டு வெளியேறமாட்டோன்” என்றும் எழுதி அனுப்பினார்.

திட்டமிட்ட படி பயணத்தைத் தொடர்ந்தார். மோத்திக்ஹரிக்கு வந்து சேர்ந்தார். அவர் அவ்வூரை அடைவதற்று முன்பே, அவரைப் பற்றிய செய்திகள் அங்கே வந்திருந்திருந்தன.

ஊர் மக்கள் அனைவரும் கூடி அவரை வரவேற்றார்கள். வெள்ளையரின் உத்தரவுக்கு அடிபணியாமல் வருபவரை அம்மக்கள் காண்பது இது முதன் முறையல்லவா?

இச்செய்தி சம்பரானில் மட்டுமல்ல இந்திய நாடு முழுவதிலும் பரவியது. வெள்ளையரின் அதிகாரத்துக்குப் பணிய மறுத்த முதல் இந்தியர் காந்திஜி என்ற புகழ் பரவியது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:58 am

32. இருப்பது ஒன்றுதான்!



கிராமத்தில் சுகாதார வசதிகள் செய்வது கற்க பள்ளிகள் ஏற்படுத்துவது, சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்கக் கற்பிப்பது, இவை எல்லாம் காந்திஜியின் அரசியல் போராட்டங்களுடன் இணைந்தே இருந்தன.

பிதிஹர்வா என்ற கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவியிருந்தார். அங்கே ஒருமுறை காந்திஜி சென்றிருந்தார். அவருடன் அவரது மனைவி கஸ்தூரிபாயும் சென்றிருந்தார்.

கிராம மக்கள் மிகவும் அழுக்கான ஆடைகள் அணிந்திருந்ததை காந்திஜி கண்டார். இது அவருக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

மனைவியை அழைத்து, ‘பா, அதோ பார், இவர்கள் உடைகள் எவ்வளவு அழுக்கான உள்ளன. துவைத்துக் காட்டவேமாட்டார்களா? நீ போய் இதைப்பற்றி அந்தப் பெண்மணியிடம் கேட்டுவிட்டு வா” என்று கூறினார்.

கஸ்தூரிபாயிம், அப்பெண்மணியின் அருகில் சென்றாள். தன் கணவர் கூறியதை அப்படியே கேட்டார்.

அப்பெண்மணியோ, கஸ்தூரிபாயை தனது குடிசைக்குள்ளே வருமாறு அழைத்தார்.

‘உள்ளே வந்து நன்றாகப் பாருங்கள். வேறு துணிமணிகள் வைத்துள்ள பெட்டியோ அலமாரியோ இங்கிருக்கிறதா என்று பாருங்களேன்” என்றாள் அப்பெண்மணி.

கஸ்தூரிபாய் குடிசைக்குள் பார்த்தாள். அப்படி எதுவும் தென்படவில்லை. ”ஒன்றுமில்லை” என்றார்.

”என்னிடம் இருப்பதே இந்த ஒரே ஒரு புடைவைதான். இப்படி இருக்கும்போது, நான் எவ்வாறு குளிப்பேன்? உங்கள் கணவரிடம் சொல்லி எனக்கு மாற்றுப் புடைவை வாங்கித் தாருங்கள். நான் தினமும் குளித்து, துவைத்தபுடவையைக் கட்டுவேன்” என்றாள். அவள் கூறியதைக் கேட்டு, கஸ்தூரிபாயின் நெஞ்சம் இளகியது.

மானத்தைக் காக்கவும் துணியின்றி இருக்கும் ஏழை கிராம மக்களின் துயரக் கதையைக் காந்திஜி கேட்டார். இதற்கு ஒரு வழி தேட முனைந்தார்.

கிராம மக்களின் சுயதேவையை நிறைவு செய்வதள்காக காந்திஜி ராட்டை இயக்கத்தைத் தோற்றுவிக்க, இது போன்ற கிராமத்தில் பார்த்த நிகழ்ச்சிகளே அடித்தளமாக அமைந்தன.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:58 am

33. புதுமையான வேலைநிறுத்தம்



குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரில் ஆலைகள் அதிகம். அதில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மிகக் குறைவாக இருந்தது. தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரினார்கள். ஆனால் முதலாளிகள் இதற்கு சம்மதிக்கவில்லை. தொழிலாளர்கள் பல நாட்கள் கிளர்ச்சி செய்தார்கள். ஆனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை.

ஆலைத் தொழிலாளர்களின்மீது அக்கறை கொண்ட திருமதி அனுசுயாபென் என்பவர், காந்திஜியின் சம்பரான் வெற்றியைப் பற்றிக் கேள்வியுற்றார். காந்திஜிக்கு அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் பிரச்சினை பற்றி எழுதினார். காந்திஜியை வருமாறு அழைத்தார்.

சம்பரான் நிலைமை சீராகி, அவுரித் தோட்டக் குடியானவர்களுக்கு நியாயம் கிடைத்தபிறகு, காந்திஜி அகமதாபாதுக்குக் கிளம்பினார். ஆலைத் தொழிலாளர்களையும் முதலாளிகளையும் சந்தித்துப் பேசினார். முதலாளிகள், தங்களுக்கும் தொழிலார்களுக்கும் இடையில் யாரும் குறுக்கிட வேண்டாம் என்று பிடிவாதமாக்க் கூறினார்கள்.

தொழிலாளர்களின் நலனைக் கருதி, காந்திஜி வேலை நிறுத்தம் செய்யச் சொன்னார். அவ்வாறு சொல்லும்போது சில நிபந்தனைகளையும் விதித்தார்.

1. யாரும் எக்காரணம் கொண்டும் வன்முறை வழிகளைக் கைக்கொள்ளக்கூடாது
2. கட்டுப்பாட்டை மீறி வேலைக்குச் சென்றால், அவரை மற்றவர்கள் கட்டாயப் படுத்தக்கூடாது.
3. வேலைநிறுத்தத்தின்போது, வாழ்க்கை நடத்துவதற்காக யாரும் பிச்சை எடுத்தல் கூடாது.
4. எவ்வளவு நாட்கள் வேலைநிறுத்தம் நடந்தாலும் மனம் தளரக்கூடாது.

தொழிலாளர்கள்மேற்படி நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள்.

இரண்டு வாரகாலம் ஓடியது. சிலர் வேலைக்குத்திரும்பிச் சென்றதை காந்திஜி அறிந்தார். மற்ற தொழிலாளர்கள் நிபந்தனையை மீறியதற்காக, காந்திஜி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தார்.

தொழிலாளர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். காந்திஜியை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் வேலைநிறுத்தம் முடியும்வரை கைவிடுவதில்லை என்று அவர் உறுதியாக இருந்தார்.

காந்திஜி உண்ணாநோன்பை ஏற்று மூன்று நாட்கள் ஆயின். ஆலை முதலாளிகள் கலங்கினார்கள். காந்திஜியிடம் பெரும் மதிப்பு வைத்திருந்த திரு. அம்பாலால் என்பவர் காந்திஜியைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க காந்திஜி உண்ணாவிரதத்தை முடித்தார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறின. அவர்களும் மகிழ்வோடு வேலைக்குத் திரும்பினார்கள்.

இதைப்பற்றிக் குறிப்பிட்ட வெள்ளையரான நகர கமிஷன் கெய்ரா, ஒரு கலவரமும் இல்லாமல் இருபத்தியொரு நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது புதுமை என்று வியந்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:58 am

34. வெள்ளாட்டுப்பால் அருந்தலாமே



1918-ம் வருடம், காத்திஜியின் உதல்நிலை வேகுவாகப் பாதிக்கப்பட்டிருந்து. நண்பர்களின் ஆலோசனையின் பேரில் காந்திஜி மருத்துவரைப் பார்க்க இசைந்தார். சங்கர்லால் பாங்கர் என்னும் நண்பர், டாக்டர் தலாலை அழைத்து வந்து காந்திஜியின் உடல்நிலையைப் பரிசோதிக்கச் செய்தார்.

டாக்டர் தலால் நன்றாகப் பரிசோதனை செய்தார். பிறகு அவர் தமது ஆலோசனையை வழங்கினார்.

”வெகுநாட்கள் சீதபேதி ஆனதால் உடல் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இரத்தம் இழந்திருக்கிறது. தினமும் நிறைய பால் அருந்த வேண்டும். இன்ஜக் ஷன் மூலமாக இரும்புச் சத்தையும் ஏற்றினால்தான் உடல் பலம் பெற முடியும்” என்றார்.

”இன்ஜக் ஷன் செய்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆயினும் உங்களிடைய ஆலோசனையை ஏற்று செய்து கொள்கிறேன். ஆனால் பால் சாப்பிடமாட்டேன் என்றுஉறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதை மீறி என்னால் சாப்பிட முடியாது”.

சத்தியத்தை மீற அவர் என்றுமே துணிந்ததில்லை.

”பால் சாப்பிடமாட்டீர்கள்? ஏன் அப்படி ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள்” என்று டாக்டர் தலால் கேட்டார்.

”பல நகரங்களில் பசு, எருமை மாடுகள் நிறைய பால் கறக்க வேண்டும் என்பதற்காக மாட்டுக்காரர்கள் அவற்றைக் கொடுமைப்படுத்துவதைப் பார்த்தேன். அதுமுதல் பால் சாப்பிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பால் இயற்கை உணவு இல்லை என்பதே என் எண்ணம்”.

காந்திஜியின் அருகில் இருந்த கஸ்தூரிபாய், ”பசும் பால், எருமைப்பால் மட்டும்தானே சாப்பிட மாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொண்டீர்கள். ஆனால் வெள்ளாட்டுப் பாலை சாப்பிடலாம் இல்லையா?” என்றார்.

டாக்டர் தலால், ”வெள்ளாட்டுப் பால் அருந்துங்கள் அது போதும்” என்றார்.

காந்திஜிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. ஆயினும் உடல்நலம் கருதி வெள்ளாட்டுப்பாலை அருந்த ஒப்புதல் அளித்தார். ஆயினும் உறுதிமொழியை மீறி வெள்ளாட்டுப் பாலை அருந்துவது அவரது மனத்துக்கு வேதனையை அளித்து வந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:58 am

35. கனவில் வந்த யோசனை



ரெளலட் கமிட்டியின் அறிக்கையின்படி, இந்தியாவில் எந்தவிதமான கிளர்ச்சிகளும் நடைபெற தடைவிதிக்க அரசாங்கம் தயாராக இருந்தது. இந்த அறிக்கை சட்டமானால், நிலைமை ஆலோசித்தார்கள்.

சட்டசபையில் இந்த மசோதாவே வெளியிட்டபோது, அதை எதிர்த்துப் பேசியவர், மகாகனம் சீனிவாச சாஸ்திரியார்.

சட்டசபை நடவடிக்கைகளைக் காணச் சென்றிருந்த காந்திஜி சாஸ்திரியாரின் உணர்ச்சிபூர்வமான பேச்சைக் கேட்டு மெய்சிலிர்த்தார்.

வெள்ளையர் அரசோ சிறிதும் அசையவில்லை. மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், சென்னைக்கு வருமாறு காந்திஜியை நண்பர்கள் அழைத்தார்கள். சென்னையில் திரு. ராஜகோபாலாச்சாரியாரின் விருந்தினராக காந்திஜி தங்கினார். திரு. கஸ்தூரிரங்க ஐயங்கார், சேலம் விஜயராகவாசாரியார் போன்றவர்களுடன் காந்திஜி கலந்து ஆலோசித்தார்.

சாத்வீக முறையில் சட்டமறுப்பு செய்ய வேண்டும் என்பது பற்றி பேசினார்கள். இதற்கிடையில் ரெளலட் மசோதா சட்டமாகிவிட்டது. செய்தி கிடைத்ததும் எல்லோரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.

காந்திஜி சிந்தனையுன் படுக்கச் சென்றார். மறுநாள் விடியற்காலையில் எழுந்துகொண்டார். ஏதோ கனவு கண்டதுபோல் இருந்தது. அதைப்பற்றி ராஜகோபாலாச் சாரியாரிடம் கூறினார்.

”நேற்றிரவு கனவு ஒன்று கண்டேன். நாட்டுமக்கள் அனைவரும் முழு வேலைநிறுத்தம் நடத்தும்படி கேட்டுக்கொள்ள வேண்டுமென்று யோசனை அக்கனவிலே தோன்றியது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

”முழு வேலைநிருத்தம் செய்வது என்பது நல்ல யோசனைதான்” என்று ராஜகோபாலாச்சாரியாரும் யோசனையை ஏற்றார்.

பிறகு எல்லோரும் கலத்து ஆலோசித்தார்கள். புனிதமான இந்தப் போராட்டத்தினை தூய்மையாக நடத்த வேண்டும் என்று காந்திஜி விரும்பினார். அதனால் முழு வேலைநிறுத்தத்தின் போது, மக்கள் உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று முடிவாயிற்று.

1919-ம் வருஷம் மார்ச் மாதம் 30-ம் நாள் முழுவேலைநிருத்த நாளாக குறிக்கப்பட்டு, நாடு முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான இந்தியர்கள் ஒன்றுபட்டு நின்றார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:59 am

36. இந்து —-முஸ்ஸிம் ஒற்றுமை



1919-ம் வரிடம் மார்ச்சு 30-ம் தேதியை முழு வேலைநிருத்த நாளாக அறிவித்து, பின்பு ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்கள். ஆனால் இச்செய்தி பல இடங்களுக்குப் போய்ச் சேரவில்லை. முன்பே குறிப்பிட்டது போல அவர்கள் மார்ச்சு 30-ம் தேதியை வேலைநிறுத்த நாளாக அனுஷ்டித்தார்கள். டில்லி மாநகரில் ஒரு சிறிய கடைகூடத் திறக்கப்படவில்லை.

வண்டிகள் ஓடவில்லை. வீதியெங்கும் மக்கள் கும்பல் கும்பலாக ஊர்வலமாகச் சென்றார்கள். யாரும் எந்தவித வன்முறையிலும் இறங்கவில்லை. பலர் உண்ணாநோன்பை மேற்கொண்டார்கள். கூட்டம் கூட்டமாகப் பிரார்த்தனை செய்தார்கள்.

மிகவும் பிரம்மாண்டமான கூட்டம் ஜூம்மா மசூதியில் நடைபெற்றது. வரறாறு காணாத கூட்டம் அலைமோதியது. மொகலாய மாமன்னன் ஷாஜகஹான் கட்டிய மசூதியான அதன் உட்புறத்தில் ஒரு லட்சம் பேர்கள் உட்கார முடியும். விசாலமான அம்மசூதியில் இதுநாள்வரை முஸ்லிம்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட்டதில்லை.

ஆனால் மார்ச்சூ 30-ம் நாளன்று நடந்த கூட்டதிதில் தேசியத் தலைவர்கள் பேசினார்கள். அதில் குறிப்பிடத்தகுந்தவர் சுவாமி சிரத்தானந்தர்.

இன்னொருவர் அஜ்மல்கான். இவர்களுக்கு டில்லி மக்களிடையே பெரும் செல்வாக்கு இருந்தது.

தலைவர்கள் இருவரும் பேசப்போவதாக கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஜூம்மா மசூதியில் கூடியிருந்தார்கள்.

அவர்களில் இந்துக்களும் இருந்தார்கள். ஜூம்மா மசூதிக்குள் அதுவரை அனுமதிக்கப்படாதவர்களும் இன்று அனுமதிக்கப் பட்டார்கள்.

இந்துவும் முஸ்லிமும் ஒற்றுமையாக தேசத்தில்காகப் போராட முன்வந்த இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மார்ச்சு 30-ம் நாள் இந்திய சுதந்திர வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நன்னாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:59 am

37. இமாலயத் தவறு



நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்தியபிறகு, ஏப்ரல் 7-ப் தேதியன்று காந்திஜி பஞ்சாபுக்குக் பயணமானார். அப்போது பஞ்சாபில், பொதுமக்கள்மீது துப்பாக்கிப் பிரயோகமும், அதனால் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருந்தன. இதைப்பற்றி விசாரிக்கவே காந்திஜி அங்கு செல்ல விரும்பினார்.

அம்ருதசரஸ் போகும் வழியில் டில்லி அருகே, காந்திஜயை ஒரு போலீஸ் அதிகாரி சந்தித்து உத்தரவோன்றைக் கொடுத்தார். அதில் காந்திஜி பஞ்சாபுக்குப் போகக் கூடாது என்று எழுதியிருந்தது.

பஞ்சாபில் அமைதியைக் காப்பதற்காகவே போக விரும்பினார் காந்திஜி. எனவே, இந்த உத்தரவொன்றைக் பணிய மறுத்தார். அதனால் அவரைக் கைது செய்தார்கள் மீண்டும் பம்பாய்க்கு அவரைக் கொண்டுவந்து விட்டார்கள்.

காந்திஜியை அரசாங்கம் தடுத்து, கைது செய்து, பின்பு பம்பாய்க்கே திரும்ப அழைத்துவரும் செய்தி மக்களிடையே பரவியது. பம்பாய் அருகே பைதோனியில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள். காந்திஜியைக் காணவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருந்த மக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினமானதாயிற்று.

பம்பாய் வந்தடைந்ததும் நேராக பைதோனிக்குச் சென்று, காந்திஜி அங்கே கூடியிருந்தவர்களைக் கண்டார். அவரைக் கண்டதும் பொதுமக்களின் உற்சாகம் கரைபுரண்டது. ‘வந்தேமாதரம்’, ‘அல்லாஹூ அக்பர்’ என்ற கோஷங்களும் எழுந்தன. அத்துடன் நில்லாமல் கற்களை வீசத் தொடங்கினார்கள். காந்திஜி எவ்வளவோ வேண்டிக்கொண்டும் கூட்டம் கட்டுக்கடங்காமல் வன்முறையில் இறங்கியது.

அச்சமயத்தில் அரசாங்கத்தின் குதிரைப்படையினர் கூட்டத்தின் நடுவில் புகுந்து, கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். குதிரையின் காலடியில் மாண்டவர்களும், மிதியுண்டு கிடந்தவர்களிம், காயமடைந்தவர்களுமாக, கூச்சலும் குழப்பமும் மிகுந்தது.

இதனைக் கண்ணுற்ற காந்திஜியின் மனம் மிகுந்த வேதனையை அடைந்தது. வண்டியிலேறி, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்.

பொதுமக்கள்மீது குதிரைப்படையை ஏவியது தவறு என்று அதிகாரியிடம் கூறினார்.

அவரோ, காந்திஜியின்மீது குற்றம் சுமத்தினார்.

”நீங்கள் செய்யும் போதனையால், ஜனங்கள் கட்டுக்கடங்காமல் போகிறார்கள். அம்ருதசரஸிலும் அகமதாபாத்திலும் பயங்கரமான கலவரங்கள் நடக்கின்றன. ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்திருக்கிறார்கள். தந்திக்கம்பிகளை அறுத்திருக்கிறார்கள். இதுதான் உங்கள் அகிம்சை வழியா? என்று அதிகாரி கேட்டார்.

போலீஸ் கமிஷனரின் சொற்கள் அவரது மனத்தை வருத்தின. மறுநாள் அகமதாபாத் நகரம் சென்றார் சபர்மதி நதிக்கரையில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் பேசும்பொழுது, ”ஜனங்கள் அகிம்சையைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பிறகு சத்தியாக்கிரகத்தை நான் துவங்கி இருக்க வேண்டும். அப்படி நான் செய்யவில்லை. நான் ‘இமாலயத் தவறு’ செய்துவிட்டேன் என்று மிகவும் வருத்தம் தெரிவித்தார்.

சத்தியாக்கிரக இயக்கத்துக்கு மக்களைத் தகுதி செய்வதற்காக காந்திஜி அந்த இயக்கத்தை சில காலம் ஒத்தி வைத்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:59 am

38. இத்தனை பெட்டிகளா?



1931-ம் ஆண்டு வட்டமேஜை மகாநாட்டுக்காக, ‘ராஜபுதனம்’ என்ற கப்பலில் காந்திஜி பயணம் செய்தார். அவருடன் மகாதேவ சர்க்காவும் தேசாயும் உடன் சென்றார். காந்திஜியின் சர்க்காவும் பஞ்சணிக்கும் வில்லும் பல பெட்டிகளும் உடைமைகளாகாக கப்பலில் ஏற்றப்பட்டன.

கப்பல் கிளம்பியபின்பே, காந்திஜி தமது சாமான்களைக் கவனித்தார். மீராபென், காந்திஜியின் பயண ஏற்பாடுகளைக் கவனித்தாள்.

”இந்தப் பெட்டிகளில் என்ன இருக்கிறது?” என்றார்.

”பாபுஜி, தங்களுடைய உடைகள்” என்றாள் பெரிய பெட்டியா?”

”துணி மட்டுமில்லை” என்றாள் மீராபென், சற்று தயக்கமாக

”வேறு எதை வைத்து நிரப்பியிருக்கிறீர்கள்? நான் இந்தியாவில் என் துணிகளை பெட்டியிலா வைத்திருந்தேன்? காகிதம் வைப்பதற்குக்கூட பெட்டியைக் கொண்டுவந்திருக்கிறீர்களே” என்று கடிந்துகொண்ட காந்திஜி தமக்கு மிகவும் அவசியமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற பெட்டிகளையெல்லாம் ஏடன் துறைமுகம் வந்ததும் இந்தியாவிக்குத் திருப்பி அனுப்பிவிடச் சொன்னார்.

பின்பு கப்பலில் தாம் எங்கே உட்கார வேண்டும் என்று தீர்மானிப்பதற்காக, கப்பலின் மேல்தளத்திற்கு வந்தார். கப்பலின் ஓரத்தில் ஆட்டம் அதிகமாக இருக்கும். அங்கே நிற்கவே முடியாத அளவு ஆடியது. ஆனால் காந்திஜியோ அத்தனைய ஆபத்தான இடத்தில்தான் உட்கார போவதாக்க் கூறிவிட்டார்.

”நல்ல இடத்தில் நாம் போய் உட்கார்ந்தால் அதனால் மற்றவர்களுக்குக் கஷ்டம் ஏற்படக்கூடும். அங்கே தனிமை கிடைப்பதும் அரிதாகிவிடும். இதுபோன்ற தொல்லையான ஆபத்தான இடமே, நமக்கு நல்லது” என்று காந்திஜி உறுதியாகக் கூறினார். முதல் வகுப்பு டிக்கெட் இருந்தும் அவர், கப்பலின் மேல்தளத்தியலே இருந்தார்.

”சூரிய சந்திரர்கள் சஞ்ணரிக்காத இடத்தில் கடவுள் வாசம் செய்கிறார்” என்று கூறிவதுபோல, யாரும் சஞ்சாரம் செய்யாத இடத்தில் காந்திஜி இருந்தார். அவரது கப்பல் பயணம் இவ்விதமாகத் தொடர்ந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:59 am

39. கதர் என்பது தாரகமந்திரம்



கதர் பணியில் காந்திஜி தீவிரமாக ஈடுபட்டிருந்தார். 1927-ம் ஆண்டு பண்டித மதன்மோகன் மாளவியா, காந்திஜியை தமது இந்து பல்கலைக்கழகத்தில் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

காந்திஜியும் வருவதற்கு ஒப்புக்கொண்டார்.

பல்கலைக்கழகத்திலே சுமார் இரண்டாயிரம் மாணவர்கள் கூடியிருந்தார்கள். காந்திஜி பேசினார்.

”கதரைப் பற்றியே நீங்கள் எப்போதும் பேசுகிறீர்கள். ஆனால் அதை யாரும் செவி கொடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லை. நீங்கள் கதரைப் பற்றிப் பேசுவதை நிறுத்து விடக்கூடாதா?” என்று என்னிடம் சில பத்திரிக்கை நிருபர்கள் கேட்டார்கள்.

”பிரகலாதனை, எவ்வளவோ சித்ரவதைகள் செய்தார்கள். விஷம் கொடுத்தார்கள் ஆனாலும் அவன் நாராயணன் நாமம் சொல்வதை நிறுத்தினானா? நிறுத்தவில்லையே! அவனுடைய உதாரணத்தையே நானும்
பின்பற்றுகிறேன். கதர் என்பது ஒரு தாரகமந்திரம். அதை நான் சொல்வதால், யாரும் என்னை நான் இந்த தாரக மந்திரத்தைச் சொல்வதை நிறுத்த வேண்டும்”.

”யுத்த காலத்தில், பிரிட்டனில் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், தையல் வேலையில் ஈடுபட வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு அது வேள்வியாகும். இன்று சமக்கு சர்க்காவே வேள்வி. ஆகவேதான் நான் கதவைப் பற்றிப் பேசுகிறேன்.”

இந்தியாவில் வாழும் ஏழை மக்கள்மீது உங்களுக்கு அன்பு இருக்குமானால், அவர்களிடைய வறுமை நிலை உங்கள் இதயங்களைத் தொடுமானால், இன்றே ஆசார்யகிருபளானி நடத்தும் கதர் கடையில்மீது படையெடுத்து, அங்கே சரக்கே இல்லாமல் செய்துவிடுங்கள்”.

”மாளவியாஜி, பணக்காரரிடம் பிச்சை எடுக்கிறார். நானோ ஏழைகளிடம் பிச்சை எடுக்கிறேன். ஏழைகளை விட ஏழைகளாக வாழ்பவர்களுக்காகவே நான் பிச்சை எடுக்கிறேன். மாளவியா, சீரிய சிந்தனையியும் எளிய வாழ்வும் வாழ்பவர். அவரைப்போல, மாணவர்களாகிய நீங்களும் வாழ முயற்சி செய்ய வேண்டும்.

காந்திஜியும் மாளவியாஜியும் கருத்து வேறுபாடுகள் நிறைந்தவர்களாக இருந்தாலும் இறுதிவரை நண்பர்களாகத் திகழ்ந்தார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:59 am

40. ஆனந்தபவனம்——ஸ்வராஜ்யபவனம்



இரண்டு துருவங்களைப் போன்றவர்கள் காந்திஜியும் மோதிலால் நேருவும். ஜாலியன்வாலாபாக் படுகொலையை விசாரிக்க அமைத்த குழுவில் மோதிலால் ஒரு உறுப்பினர். அச்சமயத்தில் காந்திஜியுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டு அவரால் ஈர்க்கப்பட்டார்.

”வாழ்க்கை வாழ்வதற்கே” என்ற கொள்கை உடைய மோதிலால் நேரு ஆடம்பரப் பிரியர்; மோதிலால் நேருவின் மாளிகையான ஆனந்தபவனத்திலே, அடிக்கடி ஆடம்பரமான விருந்துகள் நடைபெறும். ஒரு மன்னரைப் போல வாழ்ந்தார் மோதிலால் நேரு. ஆங்கிலேய நாகரீகத்தில் மூழ்கி இருந்த ஆனந்தபவன் ‘சுதந்திரப் போராட்டத்தின் பாசறையாக’ மாறியது. காந்திஜியின் தொடர்பு ஏற்பட்டதும், மோதிலாலின் ஆடம்பர வாழ்க்கை மாறியது.

இதைப்பற்றி, காந்திஜிக்கு மோதிலால் எழுதினார்.

ஆனந்தபவனத்தில் வெள்ளிச் சாமான்கள் எதுவும் இல்லை. எல்லாம் பித்தலைச் சாமான்கள்தான். வேலைக்காரக் கூட்டமும் போய்விட்டது. இப்பொழுது, உதவிக்கு ஒரே ஒருவன்தான் இருக்கிறான். கைவசம் கொஞ்சம் அரிசியும் பருப்பும் மட்டுமே வைத்திருக்கிறோம். இப்போது சாப்பாட்டில் சாதம் பருப்பு, காய்கறிகள்தான். ஆங்கிலேய உணவு இல்லை. வேட்டைக்குப் போவதை நிறுத்திவிட்டேன். தினமும் நீண்டதூரம் நடக்கிறேன். துப்பாக்கியைத் தூர எறிந்துவிட்டேன். எட்வண்ட் அர்னால்ட் எழுதிய பகவத்கீதையின் ஆங்கில மொழி பெயர்ப்பை மூன்றாவது முறையாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னே வீழ்ச்சி. ஆனால் நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்”.

காந்திஜி என்னும் சந்யாசியால் கவரப்பெற்ற மோதிலாலின் வாழ்வு அடியோடு மாறிப் போயிற்று.

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட உயரக ‘சூட்’ அணியும் வழக்கமுடைய மோதிலால், அழகாகக் கதர் உடை அணியலானார். கதர் குல்லாய் தலையிலே கம்பீரமாகக் காட்சி தரலாயிற்று.

ஆனந்தப வனுக்கு வந்த சிஹால்சிங், மோதிலால் நேருவின் தோற்றத்தைக் கண்டு வியந்தார்.

”இதென்ன பெரும் மாறுதல்?”

”தோற்றத்தில் மட்டுமல்ல மனத்திலும்தான்” என்றார் மோதிலால் நேரு.

1930-ல் மோதிலால் நேரு தமது சொந்த இருப்பிடமான ஆனந்தபவனத்தை ஸ்வராஜ்ய பவனமாக, காந்திஜிக்குத் தந்து நாட்டுடைமை ஆக்கினார்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக