புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
62 Posts - 41%
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
9 Posts - 6%
prajai
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mruthun
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
mruthun
காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_m10காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:43 am

First topic message reminder :

1.புத்திலிபாய்



போர்பந்தர் சமஸ்தானத்தில் திவான் பதவி வகித்தவர் உத்திமசந்திர காந்தி. அவருடைய ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் பிறந்தவர் கரம்சந்திர காந்தி என்று அவரை அழைப்பது வழக்கம். காபா காந்தி ராஜ்காட்டில் திவானாக இருந்தார். புத்திலிபாயை மணந்துகொண்டார்.

புத்திலிபாய்க்கு ஒரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். 1869-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம நாளன்று காபா காந்தி–புத்திலிபாயின் கடைசி மகனாகத் தோன்றியவர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. காபா காந்தி நாணயமும் நேர்மையும் மிகுந்த திவானாக இருந்தார். புத்திலிபாய் தவஒழுக்கத்தில் சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

தினசரி பிரார்த்தனை செய்தபிறகே உணவு உட்கொள்வதை புத்லிபாய் வழக்கமாகக் கொண்டிருந்தார். தனந்தோறும் விஷ்ணு கோவிலுக்குச் சென்று வருவார். ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரதத்தை தவறாமல் கைக்கொள்வார். மிகக் கடுமையான விரதங்களை மேற்கொண்டு, அதை நிறைவேற்றி வருவார். உடவாசம் இருப்பார். சாதுர்மாஸத்தில் புத்லிபாய் ஒருநாளைக்கு ஒரு வருடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் பூரண உபவாசம் இருப்பார்.

ஒரு வருடத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, புத்திலிபாய் தினம் சூரிய தரிசனம் செய்தபிறகே சாப்பிடுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டார். அவ்விதமே செய்து வந்தார். தினமும், மோகனதாஸூம் அவருடைய உடன்பிறப்புகளும் காலை வேளையில் சூரியன் எப்போது மேகக் கூட்டங்களிலிருந்து வெளிவரப் போகிறான் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். மழைக்காலமானதால், சூரியனின் தரிசனம் கிடைத்தும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் கிடைத்ததும், குழந்தைகள் ஓடிச்சென்று தாயிடம் தெரிவிப்பார்கள். புத்லிபாய் வெளியில் வந்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்திருப்பான். ‘அதனாலென்ன மோசம்! இன்று நான் சாப்பிடுவது பகவானுக்கு விருப்பமில்லை’ என்று கூறியபடி, மலந்த முகத்தடன் மீண்டும் வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுவார்.

புத்லிபாய் கல்விஞானம் பெற்றிராவிடினும், அனுபவ ஞானம் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்காட் சமஸ்தானத்தில் இருந்த ராஜ குடும்பத்துப் பெண்மணிகள் எல்லோரும் புத்லிபாயின் அனுபவஞானம் மிகுந்த பேச்சைக் கேட்பதில் மிகவும் விருப்பம் உடையவர்கள். புத்திலிபாய் அடிக்கடி சமஸ்தானத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களோடு உற்சாகமாகப் பேசுவார்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:50 am

11. பாத்திரம் துலக்குவதில்



1903-ம் வருடம் காந்திஜி மூன்றாண்டு முறையாக தென்னாப்பிரிக்கா நாட்டுக்குச் சென்றார். டர்பன் நகரில் வக்கீலாக இருந்தார். அலுவலக சிப்பந்திகள், காந்தியுடன் அவரது வீட்டிலேயே தங்கியிருந்தார்கள்.

காந்திஜியின் வீடு மேல்நாட்டுப் பாணியில் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு அறையிலும் சாக்கடை அமைக்கபட்டிருந்தால் அழுக்கு நீர் பாத்திரம் ஒன்று இருந்தது. சிப்பந்திகள் அவரவர் பாத்திரங்களை, அவரவர் சுத்தம் செய்து வைத்திவிடுவது வழக்கமாக இருந்தது.

காந்திஜியின் அலுவலகத்தில் புதிதாக ஒரு கிறிஸ்துவ சிப்பந்தி சேர்ந்திருந்தான். அவன் புதிநவனாதலால், அவனுடைய அறையிலிருந்து பாத்திரத்தை, கஸ்தூரிபாயை சுத்தம் செய்ய சொன்னார் காந்திஜி.

”என்னால் முடியாது” என்றால் கஸ்தூரிபாய்.

”ஏன் முடியாது” என்று காந்திஜி கேட்டார்.

”ஒரு தீண்டத்தகாதவரின் பாத்திரத்தை நான் தொட்டு சுத்தம் செய்யமாட்டேன்” என்று கஸ்தூரிபாய் பிடிவாதமாகக் கூறினார்.

”சரி நான் செய்கிறேன்” என்றார் காந்திஜி.

அவர் செய்வதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கண்கள் தாரைதாரையாக நீர் பெருக்க, கோபத்துடன் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் சுத்தம் செய்தார்.

”கோபத்தோடு இதைச் செய்வதாயிருந்தால் செய்யவே வேண்டாம். மூடத்தனமான எண்ணங்களை விட்டுவிட்டு இரு” என்றார் காந்திஜி.

கஸ்தூரிபாயின் கோபம் எல்லை கடந்தது.

”உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என்னைத் தொலைத்துவிடுங்கள்” என்றார்.

இதைக் கேட்டு காந்திஜி, அவரருகே சென்று வெளியே தள்ளுவதற்கு முயன்றார்.

கஸ்தூரிபாய் வேதனையும் வருத்தமும் அதிகரிக்க கண்ணீர் சிந்தினார்.

”என்னை வெளியே போகச் சொல்கிறீர்களா? உங்களையே நம்பி வந்தேன். இங்கே எனக்கு போக்கிடம் எங்கே? என் பெற்றோர்களோ உற்றார்களோ இருக்கிறார்களா? உதைத்தாலும் வதைத்தாலும் உங்களைத் தவிர நான் யாரிடமும் போவேன்?”

கஸ்தூரிபாய், இவ்வாறு கூறியதும் காந்திஜி வெட்கமடைந்தார். மனைவியின் வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்தார். அளவற்ற பொறுமையும் அன்பும் கொண்ட கஸ்தூரிபாய், காந்திஜியை தமது அன்பால் வென்றார்.

கணவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதையே தமது வாழ்நாளில் லட்சியமாகக் கொண்டவர் கஸ்தூரிபாய்.

காந்திஜி கஸ்தூரிபாய் வாழ்க்கை எப்போதும் திருப்தியும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் உடையதாக இருந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:50 am

12. உயிர் போனாலும் பரவாயில்லை



ஒரு சமயம் கஸ்தூரிபாயின் உடல்நலம் குன்றியது. மருத்துவர்கள், அவருக்கு ரணச்சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். ஒரு பிரபல மருத்துவமனையில் கஸ்தூரி பாயை சேர்த்தார்கள். மயக்க மருந்து கொடுக்காமலே, ரணச்சிகிச்சை செய்யப்பட்டது.

மருத்துவர்கள் இனி கவலை இல்லை என்று சொன்னதும் காந்திஜி, ஜோகனிஸ்பர்க் போனார்.

அவர் ஊருக்குச் சென்ற சில தினங்களில் கஸ்தூரி பாயின் உடல்நிலை மோசமாகியது. மிகவும் பலவீனமடைந்திருந்தாள். காந்திஜிக்கு போன் மூலம் செய்தி அனுப்பப்பட்டது.

அவர் டர்பனுக்கு விரைந்து வந்தார். மருத்துவரைப் பார்த்தார். கஸ்தூரிபாயின் உடல்நிலையில் முன்னேற்றம் எற்பட வேண்டுமானால் உனடடியாக மாட்டிறைச்சி ரஸம் (சூப்) கொடுக்க வேண்டும் என்றார் மருத்துவர். இதைக் கேட்டதும் காந்திஜி சிந்தனையில் ஆழ்த்தார்.

“நான் இதற்கு ஒப்புதல் தரமாட்டேன். அவளையே கேளுங்கள். அவள் சம்மதம் என்றால் கொடுங்கள். நான் தடுக்கமாட்டேன்” என்றார்.

மருத்துவர் இதள்கு உடன்படவில்லை. ”நோயாளியிடம் ஆலோசனை கேட்பது தவறு. நான் சொல்லுவதைச் சொல்லிவிட்டேன்”. இனி அவருடைய உயிருக்கு நான் பொறுப்பாளி இல்லை. உங்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிடுகிறேன்” என்றார்.

சிகிச்சை விஷயத்தில் பூரண சுதந்திரம் தமக்கு வேண்டும் என்று மருத்துவர் விரும்பினார். காந்திஜியோ, ஜீவஹிம்சை வழியான அசைவ உணவை உண்பதை வெறுப்பவர்.

கஸ்தூரிபாயைக் கலந்து ஆலோசிக்க விரும்புனார். நடந்தது அனைத்தையும் அவளிடம் கூறினார்.

எல்லாவற்றையும் கேட்டபிறகு கஸ்தூரிபாய், ”எனக்கு மாட்டிறைச்சி ரஸம் வேண்டாம். அரிதாகக் கிடைத்த மனித ஜென்மத்தை நான் அசுத்தப்படுத்த விரும்பவில்லை. உங்கள் காலடியில் இருந்து உயிர் விட்டாலும் விடுவேனே தவிர, இதையெல்லாம் உண்ணமாட்டேன்” என்று முடிவாகக் கூறிவிட்டார்.

அதற்குப் பிறகும் காந்திஜி விடாமல் எடுத்துரைத்தார்.

”எனக்காக, நீ வேண்டாம் என்று சொல்லாதே. உன் உடல்நிலைக்கு இது தேவை என்கிறார் மருத்துவர். உயிர் வாழ்வதற்காக, அசைவ உணவு உண்ணுவது, மது அருந்துவது இவையும் மருந்து போலத்தான் கொடுப்பார்கள். நன்றாக யோசித்துச் சொல்”.

ஆனால் கஸ்தூரிபாய் எக்காரணம் கொண்டும் இந்த மருத்துவத்துக்கு உடன்படவில்லை. தன்னை இங்கிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி கணவரிடம் கேட்டுக்கொண்டார்.

உயிர் போனாலும் கொள்கையை விடாமல் காப்பாற்றும் இந்தத் தம்பதியரை மருத்துவர் அதிசயமாகப் பார்த்தார்.

காந்திஜி, மனைவியை அழைத்துக்கொண்டு டர்பனுக்கு வந்து தமது சொந்த சிகிச்சையைத் துவங்கினார்.

கஸ்தூரிபாயின் மன உறுதியாலும் காந்திஜியின் தளராத நம்பிக்கையாலும், நோய் குணமாகியது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:50 am

13. டர்பன் ரயிலில்…



தென்னாப்ரிக்காவில், பிரிட்டோரியாவுக்கு, காந்திஜியை, வழக்கு தொடர்பாக செல்லுமாறு தாதா அப்துல்லா சேட் கூறினார். வழக்கு பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொண்ட பிறகு, காந்திஜி பிரிட்டோரியாவுக்குக் கிளம்பினார். அவருக்கு முதல் வகுப்பு டிக்கெட் வாங்கிக் கொடுத்தார் சேட்.

முதல் வகுப்பில், காந்திஜி பயணம் செய்தார். நேட்டாலின் தலைநகரமாகிய மேரிஸ்பர்க்குக்கு ரயில் வந்தபோது, இரவு ஒன்பது மணி. முதல் வகுப்புப் பெட்டியில் வெள்ளையர் பார்த்தார். அவர் உடனே சென்று இரண்டு ரயில் நிலைய அதிகாரிகளை அழைத்துக் கொண்டு வந்தார்.

அவர்களும் காந்திஜியை உற்றுப் பார்த்தார்கள். முடிவில், ”கீழே இறக்கு; சாமான்கள் ஏற்றும் வண்டியில் ஏறிக்கொள்” என்று காந்திஜியைப் பார்த்துச் சொன்னார்கள்.

”நான் எதற்காக இறங்க வேண்டும்? என்னிடம் முதல் வகுப்புப் பயணச் சீட்டு இருக்கிறது” என்று மிகவும் பணிவாகக் காந்திஜி கூறினார்.

”இருந்தால் என்ன? அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. இந்த பெட்டியில் நீ ஏறக்கூடாது. சாமான்கள் பெட்டியிலே தான் பயணம் செய்ய வேண்டும்” என்று அந்த அதிகாரி கடுமையாகக் கூறினார்.

”டர்கனில் இந்தப் பெட்டியில்தான் எனக்கு இடம் அளிக்கப்பட்டது. ஆகையால் நான் இதிலேதான் என் பயணத்தைத் தொடர்வேன்” என்று உறுதியாகச் சொன்னார்.

”ஒரு கறுப்பர் இவ்வளவு உறுதியாக, பிடிவாதமாகப் பேசுவதா?” என்று எண்ணிய அந்த ரயில் நிலைய அதிகாரி கடும் கோபம் கொண்டார்.

”மரியாதையாக, நீயே இறங்குகிறாயா இல்லை போலீஸ்காரனை அழைத்து வெளியே தள்ளிச் சொல்லட்டுமா?” என்று மிரட்டினார்.

அவருடைய மிரட்டலுக்கு காந்திஜி பயப்படவில்லை. நன்றாக அமர்ந்துகொண்டு, சரி, நானாக, இந்த இடத்தைச் செய்யுங்கள்” என்றார். அவர் குரலில் கோபமும் இல்லை; மரியாதைச் குறைவான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தவில்லை.

ஆயினும் அந்த அதிகாரி ஆவேசத்துடன் அங்கிருந்து சென்றார். அவர் காந்திஜியை மிரட்டியது போலவே, போலீஸ்கார் ஒருவருடன் திரும்பி வந்தார்.

போலீஸ்காரரும் ”இறங்கு” என்று காந்திஜியை மிரட்டினார்.

”முடியாது” என்றார் காந்திஜி.

உடனே போலீஸ்காரர், காந்திஜியின் கையைப் பிடித்து இழுத்து வெளியிலே தள்ளினார். அவருடைய பெட்டி படுக்கைகளையும் வெளியில் எறிந்தான். ரயிலும் கிளம்பிச் சென்றது.

தமக்குச் சரி என்று தோன்றுவதை, யார் தடுத்தாலும் செய்வது என்பது காந்திஜியின் குணம். இந்த மன உறுதிதான் சத்யாக்ரஹம் என்ற அஹிம்சை ஆயுதம் தொன்றவும் காரணமாக இருந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:50 am

14. குதிரை வண்டியில்



பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில் சார்லஸ் டவுனை காந்திஜி அடைந்தார். ஜோகான்ஸ்பார்க் போக வேண்டும். ஆனால் சார்லஸ் டவுனிலிருந்து குதிரை வண்டியில் பயணம் செய்ய பயணச்சீட்டு காந்திஜியிடம் இருந்தது. ஆனால் அந்த வண்டிக்குள் அமர்ந்திருந்த பல வெள்ளையர்களுக்கு நடுவே காந்திஜியை ஏற்ற வண்டித் தலைவன் விரும்பவில்லை.

தென்னாப்ரிக்காவில் உள்ள இந்தியர்களை ‘கூலி’ என்று அழைப்பது வெள்ளைக்காரர்களின் வழக்கம். ஒரு கூலியை, அதுவும் ஊருக்குப் புதியவனாக இருப்பவனை எதற்காக வண்டியில் ஏற்ற வேண்டும் என்று வண்டித் தலைவன் எண்ணினான்.

ஆனால் காந்திஜி வண்டியில் ஏற்ற வேண்டும் என்று புடிவாதமாக இருந்தார்.

ஆகையால் அவரை வண்டி ஓட்டியின் அருகிலே உட்காரச் சொன்னான் அந்தத் தலைவன். இப்படி உட்கார வைப்பது அநீதி என்றும் அவமதிப்பு என்றும் காந்திஜி எண்ணினார். ஆகையால் இந்த வண்டியை விட்டால், இனி வேறு வண்டி இல்லை என்ற நிலைமை, இன்னொரு நாள் வீணாகும். எனவே வேறு வழியின்றி அவன் காட்டிய இடத்தில் உட்கார்ந்தார்.

வண்டி சென்றது. பகல் மூன்று மணி ஆகும்போது பர்தேகோப் என்ற இடத்தை அடைந்தது. வண்டித் தலைவன் அப்போது சுருட்டு பிடிக்க நினைத்தான். காந்திஜி உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார விரும்பினான். வண்டியிலிருந்து இறங்கப் பயன்படுத்தும் படியில் காந்திஜியை உட்காரச் சொன்னான்.

‘வண்டிக்கு உள்ளே போகச் சொன்னால் போகிறேன். இங்கே படியில் என்னால் உட்கார முடியாது” என்றார் காந்திஜி.

தலைவனுக்குக் கோபம் வந்தது. காந்திஜியை அறைந்தான். கீழே தள்ள முயன்றான். ஆனாலும் காந்திஜி வண்டியின் கம்பியை விடாமல் பிடித்துக்கொண்டு வந்தார். வண்டியினுள்ள உட்கார்ந்திருந்த சில வெள்ளையர்கள் காந்திஜியின் மெலிந்த உடலையும், தலைவனின் முரட்டுத்தனத்தையும் எண்ணி காந்திஜிக்காக பரிந்து பேசினார்கள்.

காந்திஜியின் விடாப்பிடியான குணம் அவருக்கு நியாயத்தை வழங்கியது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:51 am

15. கோடெஸ்ஸின் நட்பு



தென்னாப்ரிக்காவில் டிரான்ஸ்வால் என்ற ஊரில் காந்திஜி தங்கியிருந்தபோது, அவருக்கு சில வெள்ளையர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் நடத்தும் பிராத்தனைக் கூட்டங்களுக்குக் காந்திஜியும் போவார்.

டிரான்ஸ்வால் நகரச் சட்டப்படி இந்தியர்கள் எவரும் பொது நடைபாதையில் நடக்கக்கூடாது; இரவு ஒன்பது மணிக்குமேல், அனுமதிச்சீட்டு பெறாமல் செல்வதும் கூடாது.

காந்திஜி நண்பர் கோடெஸ்ஸூடன் தினந்தோறும் இரவு உலாவச் செல்வார். திரும்பி வருவதற்கு இரவு பத்து மணியாகிவிடும்.

”மிஸ்டர் காந்தி எதற்கும் நீங்கள் அனுமதிச் சீட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிடில், அரசாங்கம் உங்களைக் கைது செய்துவிடும்” என்று மிகவும் கவலையுடன் கூறினார்.

அத்துடன் நில்லாமல், அவ்வூரின் மிகச் சிறந்த பாரிஸ்டர் ஒருவரிடம் கடிதமும் வாங்கித் தந்தார். அனுமதிச் சீட்டும் பெற்றுத் தந்தார்.

நண்பரின் இந்த உதவியால் காந்திஜி டிரான்ஸ்வாலில் எப்போதும் எங்கேயும் போக முடிந்தது.

ஆனால் அனுமதிச் சீட்டு இருந்தாலும் இந்தியர்கள் இரவில் செல்வது தடை செய்யப்பட்டது. காந்திஜி அதைப் பற்றி எண்ணாமல் வழக்கம்போல் வெளியே சென்றார். அவரைக் கண்டதும் ஒரு காவல்காரன், உதைத்துத் தள்ளி ‘போ போ’ என்று விரட்டினான்.

எதிர்பாராமல் கிடைத்த உதையால் காந்திஜி கீழே விழுந்தார்.

நல்ல வேளையாக அச்சமயத்தில் காந்திஜியின் நண்பர் கோடெஸ் குதிரைமீது அங்கே வந்தார்.

நடந்த சம்பவத்தையும் கீழே விழுந்து கிடப்பவர் காந்திஜி என்பதையும் அறிந்து பரபரப்புடன் ஓடிவந்தார். ”நண்பரே, அடி ஏதும் பட்டுவிட்டதா” என்று அன்போடு விசாரித்தார்.

காவல்காரன்மீது கடுங்கோபம் கொண்டார்.

”முரட்டுத்தனமாக அவன் நடந்துகொண்டான். எச்சரிக்கை செய்யாமல் இவ்வாறு நடந்துகொண்ட இவன்மீது வழக்குத் தொடர வேண்டும். இந்த வழக்கில் நான் சாட்சி சொல்வேன். இவன் கட்டாயம் தண்டிக்கபட வேண்டும்” என்றார்.

ஆனால் காந்திஜி அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா?

”வேண்டார். பாவம்! கறுப்பு மனிதர்களிடம் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது இந்த நாட்டுச் சட்டம். அவன் அந்த சட்டத்தின்படி செய்தான். என்னை அடித்தான் என்பதற்காக இவன்மேல் கோபம் கொண்டு பழிவாங்க மாட்டேன். ”தீமையை மன்னித்துவிட்டேன். அருள்வாக்கு, இவனை நானும் மன்னித்துவிட்டேன். வழக்குத் தொடர வேண்டும்”.

மிஸ்டர் கோடெஸ் திகைத்தார்.

இச்செய்தி உலகமெங்கும் பரவியது.

கோடெஸ் அந்தக் காவல்காரனிடம் காந்திஜி கூறியத்ச் சொன்னதும் அவன் உள்ளம் இளகியது.

காந்திஜியிடம் ஓடோடிவந்து மன்னிப்புக் கேட்டான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:51 am

16. கடவுளிடம் விட்டுவிடுங்கள்!



ஜெர்மானிய நண்பர் காலன்பார்க் என்பவர் தென்னாப்ரிக்காவில் காந்திஜியை இருந்தார். சில எதிரிகள், காந்திஜியை தாக்குவார்களோ என்ற எண்ணத்தில், காந்திஜி எங்கே சென்றாலும் அவரைத் தொடர்ந்து செல்வார்.

ஒருநாள், காந்திஜி வெளியே போகும்பொழுது அணிந்து கொள்வதற்காக கோட்டை எடுத்தார். கோட்வழக்கத்தைவிட கவனமாக இருந்தது. பையைப் பார்த்தார். அதிலே துப்பாக்கி இருந்தது.

உடனே காந்திஜி காலன்பாகை அழைத்தார்.

”என் பையிலே இந்தக் கைத்துப்பாக்கியை ஏன் வைத்தீர்கள்” என்றார்.

”ரஸ்கின்,டால்ஸ்டாமய் இவர்களுடைய புத்தகங்களில் எங்காவது காரணமில்லாமல் ரிவால்வர் வைத்திருப்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா?”

”ஆனால் சில குண்டர்கள் உங்களைத் தாக்க வருவார்களோ என்றுதான் இவ்வாறு செய்தேன்” என்று காலன்பாக் சமாதானம் தெரிவித்தார்.

”என்னை அவர்களிடமிருந்து காக்க விரும்புகிறீர்கள் அப்படித்தானே”.

”ஆமாம் அதனால்தான் உங்கள் பின்னாலேயே வருகிறேன்”.

”ஓகோ இப்போது எனக்கு ஒன்று புரிகிறது. என்னைக் காக்கவேண்டிய கடவுளின் அதிகாரத்தையும் நீங்களே எடுத்துக்கொண்டு விட்டீர்களா? நீங்கள் இருக்கும்வரை நான் என்னுடைய வாழ்வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. கடவுளின் செயலை நீங்களை நீங்களே செய்து விடுவீர்கள்”.

காலன்பாக் என்ன பதில் சொல்வது என்றறியாமல் திகைத்தார்.

”என்ன யோசிக்கிறீர்கள். பகவானிடம் நான் கொண்ட பக்தியையே இது அவமதிப்பதாகும். என்னைக் காப்பாற்றுகிற கவலையை விடுங்கள். என்னைப் பற்றி அக்கறை கொள்பவர் அந்த பகவான் ஒருவரே! அவரிடம் என்னைக் காப்பாற்றும் பொறுப்பை விட்டுவிடுங்கள். இந்த கைத்துப்பாக்கி ஒருபோதும் விட்டுவிடுங்கள். இந்த கைத்துப்பாக்கி ஒருபோதும் என்னைக் காப்பாற்றாது”.

காலன்பாக் மிகவும் பணிவாக, ”மன்னியுங்கள். நான் தவறு செய்துவிட்டேன். இனி நான் உங்களைப்பற்றிக் கவலை கொள்ளமாட்டேன்”.

கைத் துப்பாக்கியை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:51 am

17. ரஸ்தம்ஜி காட்டிய அன்பு



1894-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நேட்டாலில் காந்திஜியின் தலைமையில் ‘நேட்டால் இந்தியக் காங்கிரஸ்’ உருவாயிற்று. தென்னாப்ரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவது என்பது இந்தக் காங்கிரஸின் நோக்கம்.

காந்திஜி தென்னாப்ரிக்காவில் வாழ்ந்த பல இந்தியர்களை இச்சங்கத்தில் உறுப்பினராக்கினர். எல்லோரும் ஒற்றுமையாக உரிமைக்குரல் கொடுத்ததும் அரசாங்கம் அதை எதிர்த்தது. அத்துடன் நில்லாமல் காந்திஜியை பலவிதங்களிலும் துன்புறுத்தத் தொடங்கியது.

ஒருநாள் காந்திஜி ரிக் ஷாவில் ஏறி ரஸ்டம்ஜி என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்ட மக்கள் அந்த ரிக் ஷாவில் ஏறி ரஸ்தம்ஜி என்ற நண்பரின் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்ட மக்கள் அந்த ரிக் ஷாவை நிறுத்தினார்கள். காந்திஜயைச் சூழ்ந்துகொண்டு அடித்தார்கள். ரத்தம் ஒழுக தளராமல் நின்றார். மேலும் மேலும் அடிகள் விழுந்தன.

அந்நிலையில் போலீஸ் சூப்ரெண்ரெண் டின் மனைவி அவ்வழியாகச் சென்றாள். காந்திஜியின் நிலையைக் கண்டு கலங்கி அவரைச் சூழ்ந்துகொண்டிருந்த மக்களை விலக்கினார்.

தன்னுடைய குடையை விரித்து காந்திஜிக்கு நேராகப் பிடித்துக் கொண்டாள். மக்கள் காந்திஜயை நெருங்க முடியவில்லை. அவரை அடிபடாமல் காப்பாற்றி ரஸ்டம்ஜியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

போலீஸ் சூப்ரெட்டெண்டு அலெக்ஸாந்தல் மிகவும் பரிவிள்ளம் கொண்டவர். அவர் காந்திஜியின் நிலைமையைக் கண்டு, தாங்கள் என்னுடைய பொறுப்பில் போலீஸ் ஸ்டேஷனிலேயே இருங்கள்” என்றார்.

ஆனால் காந்திஜி அவ்விதம் ஒளிந்து இருக்க விரும்பவில்லை.

காந்திஜியின் மீது கோபம் கொண்ட தென்னாப்ரிக்க வெள்ளையர் அவரைத் தேடி ரஸ்டம்ஜியின் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டார்கள்.

கூச்சலை போட்டு, கதவைத் தட்டினார்கள். இச்செய்தியைக் கேள்வியுற்று, அலெக்ஸாந்தர் அங்கே வந்தார். கோபம் பொதுமக்களை திசைதிருப்ப அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

ரகசியமாக ஒரு காவலாளியை வீட்டினுள்ளே அனுப்பி, காந்திஜியைப் பின்புற வழியாகத் தப்பிச் செல்லுமாறு யோசனை கூறினார்.

தன்னால் ரஸ்டம்ஜக்கும் அவரது குடும்பத்தாருக்கும் துன்பம் நேரக்கூடாது என்ற எண்ணத்தினால் காந்திஜி மாறுவேடம் பூண்டு, ரஸ்டம்ஜியின் வீட்டின் பின்புற வழியாகச் சென்றார்.

அவர் சென்று பல நிமிடங்கள் ஆனபிறகு, அலெக்சாந்தர் மக்களிடம், ”வீட்டினுள்ளே காந்திஜி இருக்கிறாரா என்று யாரேனும் இருவர் சென்று பாருங்கள்” என்றார். அவர்களும் காந்தியைத் தேடிச் சென்றார்கள். வீட்டினுற் காந்திஜி இல்லை என்று தெரிந்ததும் கலைந்து சென்றார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:51 am

18. கஸ்தூரிபாயின் கண்ட ஹாரம்



1901-ஆண்டின் காந்திஜி, தென்னாப்பிக்காவிலிருந்து கிளம்பி தாயகம் திரும்ப எண்ணினார். தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்திஜியின் நண்பர்கள், அவர் தாயகம் திரும்புவதற்கு எளிதில் அனுமதி கொடுக்கவில்லை.

காந்திஜி, அவர்களின் அன்பிலே உள்ளம் கசிந்தார். எனுனும் இந்தியாவுக்குக் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடவில்லை.

காந்நிஜிக்கு, தென்னாப்பிரிக்காவிலிருந்த நண்பர்கள் ஒரு பிரிவு ஒபசார விழாவை ஏற்பாடு செய்தார்கள். திரளாக மக்கள் அதிலே கலந்து கொண்டார்கள். தங்களுடைய அன்பை வெளிப்படுத்த, பல பரிசுப் பொருங்களை காந்திஜிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் அளித்தார்கள். தங்க நகைகள், வெள்ளிப்பாத்திரங்கள், வைர நகைகள் என்று எல்லாம் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களாக இருந்தன.

இந்தப் பரிசுப் பொருட்களை மறுப்பதால், அவர்களிடைய மனம் வருத்தமடையும். க்ஷற்பதும் காந்திஜக்கு சர் என்று தோன்றவில்லை. பொதுத்தொட்னு செய்த தனக்கு, கூளி கொடுத்ததுபோள இந்தப் பரிசுப் பொருட்களை அளிக்கப்பட்டன என்றே அவர் எண்ணுனார். பொது சேவைக்குக் கூலி பெறுவது என்பது கேவலம் என்பதை உணர்த்தார். ஆயினும் இது விஷயமாக குடும்பத்தாரையும், ஆலோசிக்க வேண்டும் என்று எண்ணி, வீடு வந்து சேர்ந்தார்கள்.

அதுநாள் வரை, காந்திஜியின் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பாத்திரம் என்று விலையுயர்ந்த பொருட்கள் வீட்டில் இருந்தன. அவற்றை அவர சுமை என்றே எண்ணினார். தங்களுக்கு உரியது என்ற எண்ணமும் அவருக்கு இல்லை.

காந்திஜி, தம்முடைய மகன்களை அழைத்து, இதைப் பள்ளிக் கேட்டார். இந்த விலையியர்ந்த பொருட்களை பொதுப்பணிக்கு கொடுத்துவிடுவது தான் தமது நோக்கம் என்றும் அதுபற்றிஅவர்களது எண்ணம் என்ன என்றார்.

காந்திஜியின் அடிச்சுவட்டில் வளர்ந்த பிள்ளைகள் அல்லவா. அவர்கள் ஒருமனதாக, எல்லாவற்றையும் பொதுப்பணிக்குக் கொடுத்துவிடுவதே நல்லது என்றார்கள்.

ஆனால் கஸ்தூரிபா காந்திக்கு அளிக்கப்பட்ட ஐம்பத்திரண்டு பவுன் கண்டஹாரம் பற்றி அவரைக் கேட்டார்.

கஸ்தூரிபா கண்டஹாரத்தைக் கொடுக்க சம்மதிக்கவில்லை.

”இந்த கண்டக்ஹாரம், நான் செய்த பொது சேவைக்காகக் கொடுக்கப்பட்டதா, இல்லை நீ செய்ததற்காகக் கொடுகக்ப்பட்டதா?”

காந்திஜி இவ்வாறு கேட்டதும், கஸ்தூரிபாவும் வாதிட்டார்.

”உங்களுடைய சேவைக்காக்க கொடுக்கபட்டதுதான். ஆனால் நீங்கள் செய்த சேவையில் எனக்கு பங்கில்லையா? நீங்கள் சொன்னதையெல்லாம் நான் செய்யவில்லையா? வீட்டுக்கு அழ்த்து வந்தவர்களுக்கெல்லாம் அடிமை போல் நான் உழைக்கவில்லையா?” என்றார்.

காந்திஜி, கஸ்தூரிகாவிடம், பொது சேவையில் ஈடுபட்டவர்கள், பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியத்தை அவளுக்கு எடுத்துச் சொன்னார்.

கஸ்தூரிபாவும் கண்டஹாரத்தைக் கொடுத்தார்.

தென்னாப்ரிக்க இந்திய மக்களின் பொது நலனுக்காக, காந்திஜி பரிசுப் பொருட்களைக் கொடுத்து உதவினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:52 am

19. எந்த வேலையானால் என்ன?



காந்திஜி தாயகம் வந்து சேர்ந்த 1901-ம் ஆண்டில், இந்திய காங்கிரஸ் மகாசபை, கல்கத்தாவில் நடைபெற்றது. அதற்கு காந்திஜியும் சென்றிருந்தார்.

மகாசபை கூடுவதற்கு இரு தினங்களுக்கு முன்பாகவே, நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களும் பிரதிநிதிகளும் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தார்கள். மகாநாடு நடக்கும் இடத்தில் குப்பையும் கூளமுமாக இருப்பதை காந்திஜி பார்த்தார்.

”இந்தக் குப்பைகளைப் பெருக்கி அள்ள வேண்டும்” என்று அங்கிருந்த தொண்டர் ஒருவரிடம் சொன்னார்.

அந்தத் தொண்டர் காந்திஜியை ஏற இறங்கப் பார்த்து விட்டு, ”இந்த வேலையைச் செய்ய நாம் என்ன தோட்டிகளா” என்றார்.

காந்திஜி, அந்தத் தொண்டரின் எண்ணத்தை மாற்ற விரும்பினார். நான் இருக்கும் இடத்தை, நாமே சுத்தம் செய்வதில் என்ன தவறு? ஒரு துடைப்பத்தை எடுத்து வந்து காந்திஜி, அந்தக் குப்பையைப் பெருக்கினார். இதைப் பார்த்த அந்தத் தொண்டரும், தாமும் அவ்வாறே செய்யத் தொடங்கினார்.

காந்திஜி, இந்தத் துப்புரவுப் பணியுடன், காங்கிரஸ் அலுவலகப் பணி ஏதேனும் இருந்தாலும் செய்யலாமே என்று நினைத்தார். சிறிது நேரத்தைக்கூட வீணாக்க காந்திஜி விரும்பியதில்லை.

காங்கிரஸ் மகாசபை செயலாளரைப் போய்ப் பார்த்தார். கோஷால் என்பவர் அப்போது செயலாளரைப் போய்ப் பார்த்தார். கோஷால் என்பவர் அப்போது செயலாளராக இருந்தார்.

அவர் காந்திஜியைப் பார்த்து, ”இங்கே, உங்களுக்கு என்ன வேலை கொடுக்க முடியும், குமாஸ்தா வேலை செய்வீர்களா?” என்றார்.

”அதற்கென்ன, செய்வேன்” என்று காந்திஜி பணிவாக பதில் கூறினார். கோஷாலுக்கு காந்திஜியின் பதில் வியப்பைத் தந்தது.

”இவர் கூறியதைக் கேட்டீர்களா? சமூகத் தொண்டு செய்ய வருபவர்கள் எந்த வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்” என்று அங்கே இருந்த தொண்டர்களிடம் கூறினார்.

பிறகு காந்திஜியிடம் அவர் செய்ய வேண்டிய வேலையைக் குறிப்பிட்டார். ”அங்கே உள்ள கடிதங்களைப் பிரித்து, படித்து, முக்கிநமான விஷயம் என்றால், அக்கடிதங்களி மட்டுமே என்னிடம் கொடுங்கள்” என்றார்.

காந்திஜியும் அவருக்கு அளிக்கப்பட்ட வேலையை கவனத்துடன் செய்தார்.

அவர் அவ்வாறு குமாஸ்தா வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்த சில காங்கிரஸ் தலைவர்கள், கோஷாலைக் கடிந்துகொண்டார்கள்.

காந்திஜியைப் பற்றி அறிந்துகொண்ட கோஷால், ”அட்டா உங்களுக்கு இந்த வேலைய்க் கொடுத்தேனே!” என்று வருந்தினார்.

”இதற்கு ஏன் வருத்துகிறீர்கள். இதுவும் ஒரு காங்கிரஸ் தொண்டுதானே! எந்த வேலையானால் என்ன? இதில் உயர்வு தாழ்வு பார்ப்பது சரியல்ல”—-என்றார்.

ஒரு தொண்டரைப்போல உழைக்கவும் காந்திஜி அஞ்சியதில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 6:52 am

20. கைதேர்ந்த தையல்காரர்



குளிர் காலங்களில், காந்திஜி, கம்பளித் துணியை தலையில் சுற்றிக்கொள்வார். நாளடைவில் அது நைந்து கிழிந்த கம்பளித் துணியை, இனி அவர் உபயோகிக்க முடியாது என்று எண்ணி, புதிய கம்பளித் துணியை எடுத்து வைத்திருந்தார்.

மறுநாள் இரவு, காந்திஜியிடம் அந்தப் புதிய கம்பளித் துணியை, தலையில் சுற்றிக்கொள்ளுமாறு அளித்தார்கள்.

அவர், ”பழைய துணி கொடுக்கிறீர்கள்” என்றார் ஆசரம உதவியாளர்.

”இது எனக்கு வேண்டாம். பழைய துணிதான் வேண்டும் அதைக் கொண்டு வாருங்கள்” என்றார். பழைய துணியைக் கொண்டுவந்து தந்தார்கள்.

”நீயோ, நானோ ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கிறோமா? இல்லையே. உனக்கு உன் தந்தை செலவு செய்கிறார். என்க்காக யார் செலவு செய்வார்கள்? அப்படி இருக்கம்பொழுது, பொருள்களை வீணாக்கலாமா? இன்னும் சிறிதுகாலம் அதை தைத்து பயன்படுத்தலாம் அல்லவா? இதைக் கொண்டுபோய் பத்திரமாக வை” என்று புதிய கம்பளித் துணியைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

”பாபுஜி நீங்கள் படுக்கப் போகுமுன்பு, நானே கிழிசலைத் தைத்துத் தருகிறேன்” என்று ஆசரமத்தில் இருந்தவர் கூறினார்.

ஆனால் அவர் சொன்னபடி, அவரால் செய்ய முடியவில்லை. வேறு வேலைகளில் மூழ்கி, இதைப்பற்றி மறந்து போய்விட்டார்.

இரவு நள்ளிரவு ஆகும்போது, அவருக்கு அதைப் பற்றிய நினைவு வந்தார். ஆனால் அதற்கு காந்திஜியே, கிழிசலைத் தைத்துவிட்டு, கம்பளியை அணிந்துகொண்டு விட்டார் என்பதை அறிந்து வெட்கமடைந்தார்.

காந்திஜி, விரும்பியிருந்தால் எத்தனையோ உயர் ரக கம்பளிகளும் சால்வைகளும் வந்து குவிந்திருக்கும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

மறுநாள், காந்திஜி, ஆச்ரமவாசியிடம், ”என்னுடைய தையல் எப்படி இருக்கிறது?” என்று கம்பளியைக் காட்டிக் கேட்டார்.

”கைதேர்ந்த தையல்கார்ரின் திறமை இதில் தெரிகிறது” என்றார் அந்த ஆச்ரமவாதி. பிளவுபட்டு நின்ற பாரதத்தின் கிழிசல்களையெல்லாம் தைத்து, ஒன்றுபட்ட பாரதமாக ஆக்கிய கைதேர்ந்த தையல்காரர் காந்திஜி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக