ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள்

2 posters

Go down

பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் Empty பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள்

Post by தாமு Thu Oct 22, 2009 6:05 am

பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் 5 கோடி இந்தியர்கள்; ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பு



இந்தியாவில் எந்த நோயும் ஏற்படுத்தாத பாதிப்பை இப்போது நீரழிவு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. மோசமான உணவு பழக்கம், உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை சுற்றுச்சூழல் பாதிப்பு, மன அழுத்தம் போன்றவற்றால் நீரழிவு நோய் இந்தியர்களை குறிவைத்து தாக்குகிறது.

உலகத்திலேயே இப்போது இந்தியாவில் தான் அதிக நீரழிவு நோயாளிகள் இருப்பதாக சர்வதேச நீரழிவு நோய் தடுப்பு கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

இந்த அமைப்பு எடுத்த ஒரு கணக்கெடுப்பு படி இந்தியாவில் அடுத்த ஆண்டு 5 கோடியே 8 லட்சம் பேர் நீரழிவு நோயாளிகளாக இருப்பார்கள். இது 20, 30-ம் ஆண்டு 8 கோடியே 70 லட்சமாக உயர்ந்து விடும்.

அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 வயதில் இருந்து 79 வயதுக்கு உட்பட்டோரில் 10 லட்சத்து 7 ஆயிரம் பேர் நீரழிவால் உயிரிழப்பார்கள்.

இதில் பெண்கள் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சத்து 81 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பார்கள்.

இப்போது பெரியவர்களில் 100-ல் 7 பேருக்கு நீரழிவு நோய் இருக்கிறது. இது 2030-ல் 8.4 ஆக அதிகரித்து விடும்.

நீரழிவு நோய் பாதிப்பில் சீனா 2-வது இடத்தில் உள்ளது. அங்கு இப்போது 4 கோடியே 32 லட்சம் பேருக்கு நீரழிவு உள்ளது. 2030-ம் ஆண்டு அது 6 கோடியே 21 லட்சமாக அதிகரிக்கும்.

பாகிஸ்தானில் 71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக வரிசையில் பாகிஸ்தான் 7-வது இடத்தில் உள்ளது. இது 2030-ல் 1 கோடியே 38 லட்சமாக அதிகரித்து உலகில் 4-வது இடத்துக்கு வந்து விடும்.

உலக அளவில் 1985-ம் ஆண்டு 3 கோடி நீரழிவு நோயாளிகள் இருந்தனர்.
2000-ம் ஆண்டு அது 15 கோடி ஆனது. அடுத்த ஆண்டு அது 28 கோடியே 50 லட்சம் ஆகிவிடும்.


40 வயதில் இருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்களே அதிக பாதிப்புக்கு ஆளாவார்கள். அடுத்த ஆண்டு இந்த வயதினர் 13 கோடியே 20 லட்சம் பேருக்கு நீரழிவு நோய் இருக்கும். இது 2030-ல் 18 கோடியே 80 லட்சமாக இருக்கும்.

அடுத்த ஆண்டு கணக்குபடி 14 கோடியே 30 லட்சம் பெண்களுக்கும் 14 கோடியே 20 லட்சம் ஆண்களுக்கும் நீரழிவு நோய் இருக்கும். 2030-ம் ஆண்டில் 22 கோடியே 20 லட்சம் ஆண்களும், 21 கோடியே 60 லட்சம் பெண்களும் நீரழிவால் பாதிக்கப்படுவார்கள்.

கிராம மக்களை விட நகர மக்களையே நீரழிவு அதிகம் தாக்கும். அடுத்த ஆண்டு 11 கோடியே 30 லட்சம் நகர மக்களும், 7 கோடியே 80 லட்சம் கிராம மக்களும் நீரழிவுக்கு ஆளாவார்கள். 2030-ம் ஆண்டு 22 கோடியே 80 லட்சம் நகர மக்களையும் 9 கோடியே 90 லட்சம் கிராம மக்களையும் இந்த நோய் தாக்கும்.

உலக அளவில் அடுத்த ஆண்டு மட்டும் 20 வயதில் இருந்து 79 வயதுக்கு உட்பட்டோரில் 40 லட்சம் பேர் நீரழிவுக்கு உயிரிழப்பார்கள். இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளில் தான் அதிகம் பேர் பலியானார்கள்.

உலக அளவில் நீரழிவு நோய்க்குதான் அதிக மருத்துவ செலவு செய்யப்படும் அடுத்த ஆண்டு மட்டும் ரூ.19 லட்சம் கோடி மருத்துவ செலவு செய்யப்படும்.

இது உலக அளவில் செய்யப்படும் மருத்துவ செலவில் 11.6 சதவீதமாகும். இது 2030-ம் ஆண்டில் ரூ.24 லட்சம் கோடியாகிவிடும்.

மற்ற நோய்களை விட அதிக உயிரை குடிக்கும் மோசமான நோயாக நீரழிவு உள்ளது. ஆனால் எந்த நாடுமே இதை தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சர்வதேச நீரழிவு நோய் தடுப்பு கூட்டமைப்பு கூறுகிறது.

இதன் இயக்குனர் அனுப் மிஸ்ரா கூறும் போது பிரசவ காலத்தில் பெண்கள் சரியான ஊட்டச்சத்து சாப்பிடுதல், 10 வயதுக்கு பின்னர் தேவையான உடல் உழைப்புகளை மேற்கொள்ளுதல் மூலம் நீரழிவை தடுக்கலாம் என்றார்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் Empty Re: பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள்

Post by mdkhan Thu Oct 22, 2009 10:15 am

நல்ல தகவல்........ நீரிழிவு நோய்களால் அதிகம் பெண்கள் தற்ப்போது உள்ள சூழ்நிலையில் பாதிக்கப்படுகிறார்கள். முக்கிய காரணம் இன்றைய பெண்களுக்கு அதிக உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது.

எல்லோரும் எப்படியாவது வசதியாக வாழ கற்றுக்கொள்கிறார்கள். தன்னுடைய சொந்த வேலைகளை பார்க்கக்கூட வீட்டில் வேலை ஆட்களை வைத்துக்கொள்கிறார்கள். மேலும் முன்புபோல் தண்ணீர் எடுத்து வரவோ விறகு எடுத்துவரவோ அதிக தூரம் இப்போது உள்ள பெண்கள் நடக்கக்கூடிய தேவை இல்லை. அனைத்தும் வீட்டு வாசலுக்கே வந்துவிடுகிறது.


சிறமம் இல்லாமல் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்பவர்கள் நோய் இல்லாமல் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ள மறந்துவிட்டார்கள்.


... நன்றி தாமு,....


பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் Eegaraitkmkhan
பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் Empty Re: பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள்

Post by தாமு Thu Oct 22, 2009 11:27 am

நீரிழிவு நோய்களால் அதிகம் பெண்கள் தற்ப்போது உள்ள சூழ்நிலையில் பாதிக்கப்படுகிறார்கள். முக்கிய காரணம் இன்றைய பெண்களுக்கு அதிக உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது.

எல்லோரும் எப்படியாவது வசதியாக வாழ கற்றுக்கொள்கிறார்கள். தன்னுடைய சொந்த வேலைகளை பார்க்கக்கூட வீட்டில் வேலை ஆட்களை வைத்துக்கொள்கிறார்கள். மேலும் முன்புபோல் தண்ணீர் எடுத்து வரவோ விறகு எடுத்துவரவோ அதிக தூரம் இப்போது உள்ள பெண்கள் நடக்கக்கூடிய தேவை இல்லை. அனைத்தும் வீட்டு வாசலுக்கே வந்துவிடுகிறது.


சிறமம் இல்லாமல் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்பவர்கள் நோய் இல்லாமல் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ள மறந்துவிட்டார்கள்.


பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் 677196 பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் 677196 பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் 677196
நன்றி கான் பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள் Empty Re: பெண்களுக்கு பெரும் ஆபத்து: நீரழிவு நோய் பிடியில் இந்தியர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum