Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
+7
தளிர் அலை
தர்மா
ராஜா
உமா
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது
Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:43 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'கல்யாண மாங்காய்'
இப்ப மாங்காய் சீசன் அல்லவா, அதனால் முதலில் மாங்காய். அதிலும் இது ரொம்ப சிம்பிளான ஊறுகாய் - 'கல்யாண மாங்காய்' இதை 1 வாரம் வைத்துக்கொள்ளலாம். பிரிட்ஜ் இல் வைத்தால் 1 மாதம் வைத்துக்கொள்ளலாம்.
தேவையானவை:
பெங்களுரா மாங்காய் - 1 ( கிளிமூக்கு மாங்காய் )
மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
வறுத்துப் பொடித்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்.
தாளிக்க:
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
மாங்காயைக் அலம்பி துடைத்துப் பொடியாக நறுக்கவும்.
அதை ஒரு பேசினில் போடவும் .
அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும்.
பிறகு மிளகாய் பொடி தூவவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அவ்வளவுதான், இதை உடனே யே தொட்டுக்கொள்ளல்லாம்.
கல்யாணம் மற்றும் சீமந்தங்களில் இப்படி செய்வார்கள் , அதனாலேயே இந்த பேர் வந்தது
தேவையானவை:
பெங்களுரா மாங்காய் - 1 ( கிளிமூக்கு மாங்காய் )
மிளகாய் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
வறுத்துப் பொடித்த வெந்தய பொடி - 1/2 ஸ்பூன்
பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்.
தாளிக்க:
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
மாங்காயைக் அலம்பி துடைத்துப் பொடியாக நறுக்கவும்.
அதை ஒரு பேசினில் போடவும் .
அதன் மேல் சுற்றிலும் உப்பைத் தூவவும்.
பிறகு மிளகாய் பொடி தூவவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே மாங்காயின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அவ்வளவுதான், இதை உடனே யே தொட்டுக்கொள்ளல்லாம்.
கல்யாணம் மற்றும் சீமந்தங்களில் இப்படி செய்வார்கள் , அதனாலேயே இந்த பேர் வந்தது
Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 3:31 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாங்காய் வத்தல் ஊறுகாய்
இந்த ஊறுகாய் 'இன்ஸ்டன்ட் ஊறுகாய்' காய்ந்த மாங்காய் இருந்தால் போறும், சில நிமிடங்களில் தயாரிக்கலாம். ( காய்ந்த மாங்காய் செய்வது குறித்து லிங்க் இங்கே
தேவையானவை:
காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 1 கப்
மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் உப்பு
வறுத்து பொடித்த வெந்தய பொடி 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/2 டீ ஸ்பூன்
தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
செய்முறை :
மாங்காய் வற்றலை ஒரு 5 நிமிஷம் வென்னீரில் போடவும்.
தண்ணிரை வடி கட்டவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மாங்காய் மேல் கொட்டவும்.
அதிலேயே மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி மற்றும் உப்பு போட்டு குலுக்கவும்.
சுவையான ஊறுகாய் தயார்.
தேவையானவை:
காய்ந்த மாங்காய் துண்டங்கள் - 1 கப்
மிளகாய் பொடி - 4 டீ ஸ்பூன்
தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் உப்பு
வறுத்து பொடித்த வெந்தய பொடி 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1/2 டீ ஸ்பூன்
தாளிக்க கடுகு மற்றும் எண்ணெய்
செய்முறை :
மாங்காய் வற்றலை ஒரு 5 நிமிஷம் வென்னீரில் போடவும்.
தண்ணிரை வடி கட்டவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து மாங்காய் மேல் கொட்டவும்.
அதிலேயே மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி, வெந்தயபொடி மற்றும் உப்பு போட்டு குலுக்கவும்.
சுவையான ஊறுகாய் தயார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாவடு
தேவையானவை:
மாவடு - 1 படி
கல் உப்பு - 100 கிராம்
மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
விளக்கெண்ணெய் எண்ணெய் 4 டீஸ்பூன்.
செய்முறை:
உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
பெரிய ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் மாவடுவை போட்டு விளக்கெண்ணெய் எண்ணெய் விட்டு நன்றாகக் குலுக்க வும்.
பிறகு உப்பு, மஞ்சள் பொடி போட்டு மறு முறை குலுக்கவும்.
அப்படியே வைக்கவும்.
மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
ஒரு நாலு நாளில் ஊறிடும்.
ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கார மாவடு
மாவடு ஊறுகாயை சிலர் காரம் போட்டும் செய்வார்கள். அது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை:
மாவடு - 1 படி
கல் உப்பு - 1 கப்
மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
விளக்கெண்ணெய் எண்ணெய் 1/2 cup
அரைக்க :
மிளகாய் வற்றல் - 30 -35
கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
விரலி மஞ்சள் - 2 -3
செய்முறை:
உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
மிளகாய் வற்றல்,கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மிளகாய் பொடி மட்டும் மஞ்சள் பொடி கலவையை , கலந்து பிசிறிக் கொள்ளவும்.
ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் கொஞ்சம் மாவடுவை போடவும்.
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே கொஞ்சம் மாவடு, அதன்மேலே ஒரு உப்பு மறுபடி மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
அப்பவே உபயோகிக்கலாம் .
ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.
தேவையானவை:
மாவடு - 1 படி
கல் உப்பு - 1 கப்
மஞ்சள் பொடி - 2 டீ ஸ்பூன்
விளக்கெண்ணெய் எண்ணெய் 1/2 cup
அரைக்க :
மிளகாய் வற்றல் - 30 -35
கடுகு - 2 டேபிள் ஸ்பூன்
விரலி மஞ்சள் - 2 -3
செய்முறை:
உருண்டை அல்லது நீள மாவடுவைத் தேர்ந்தெடுத்து, நன்கு அலம்பி , ஈரம் போகத் துடைக்கவும்.
மிளகாய் வற்றல்,கடுகு, விரளி மஞ்சளை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மாவடுவில் விளக்கெண்னை, கடுகு, மிளகாய் பொடி மட்டும் மஞ்சள் பொடி கலவையை , கலந்து பிசிறிக் கொள்ளவும்.
ஜாடி அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டில் கொஞ்சம் மாவடுவை போடவும்.
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் உப்பைப் போட்டு மேலே கொஞ்சம் மாவடு, அதன்மேலே ஒரு உப்பு மறுபடி மாவடு என்று மாற்றி மாற்றி எல்லாவற்றையும் போட்டு, மேலாக நல்லெண்ணையும் சேர்த்து மூடிவைக்கவும்.
மறுநாள் எடுத்து, ஓரிரு முறை குலுக்கி வைக்கவும்.
அப்பவே உபயோகிக்கலாம் .
ஊறுகாயை அவ்வப்போது கிளறி விட்டால் போறும் ஒரு வருடம் வரை நன்றாக இருக்கும்.
மாவடு நீர் விடும் என்பதால் மாவடு மூழ்கும் அளவு தண்ணீர் அதிலிருந்தே கிடைத்து விடும்.
துளி கூட நாம் தண்ணீர் விட வேண்டாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மெந்தய மாங்காய்
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 10
மிளகாய் - 150 கிராம்
உப்பு
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 - 1 1/2 கப்
கடுகு 2 டீ ஸ்பூன்
செய்முறை:
மாங்காயை நன்கு அலம்பி, துடைத்து, கொட்டை எடுத்துட்டு , சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலி இல் துளி எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு பொடிக்கவும்.
'கர கர'ப்பாக அரைக்கவும்.
துண்டங்களை ஒரு பேசினில் போட்டு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெந்தயப்பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு நன்றாகக் குலுக்கவும்.
ஒவ்வொரு துண்டத்திலும் எல்லாம் 'கோட்' ஆகி இருக்கணும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் .
அதை மாங்காய் துண்டங்கள் மேல் கொட்டவும்.
கொட்டி னதை நன்கு கலக்கவும்.
ஒரு 2 நாள் கழித்து நன்றாக ஊறின பின் சாப்பிடலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
மாங்காய் - 10
மிளகாய் - 150 கிராம்
உப்பு
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 - 1 1/2 கப்
கடுகு 2 டீ ஸ்பூன்
செய்முறை:
மாங்காயை நன்கு அலம்பி, துடைத்து, கொட்டை எடுத்துட்டு , சின்ன சின்னதாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலி இல் துளி எண்ணெய் விட்டு மிளகாயை வறுக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்சி இல் போட்டு கொஞ்சம் உப்பு போட்டு பொடிக்கவும்.
'கர கர'ப்பாக அரைக்கவும்.
துண்டங்களை ஒரு பேசினில் போட்டு, அதில் மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, வெந்தயப்பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போட்டு நன்றாகக் குலுக்கவும்.
ஒவ்வொரு துண்டத்திலும் எல்லாம் 'கோட்' ஆகி இருக்கணும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும் .
அதை மாங்காய் துண்டங்கள் மேல் கொட்டவும்.
கொட்டி னதை நன்கு கலக்கவும்.
ஒரு 2 நாள் கழித்து நன்றாக ஊறின பின் சாப்பிடலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 3:33 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆவக்காய்
தேவையான பொருட்கள்:
புளிப்பான மாங்காய் - 10
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
உப்பு
வெந்தயம் - 100 கிராம்
வெள்ளை கொத்து கடலை 1/2 கிலோ
எண்ணெய் 1 கிலோ
செய்முறை:
இந்த ஊறுகாய்க்கு எல்லாமே பச்சையாகத்தான் போடணும்.
மாங்காயை நன்கு அலம்பி , துடைத்து, கொட்டையும் சேர்த்து, ஒரு காயை 16 துண்டுகளாக நறுக்க வேண்டும்.
எல்லா துண்டுகளுமே ஓட்டுடன் இருந்தால் நல்லது.
உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்றாகத் துணியால் துடைக்கவும்.
சுத்தமாக உலர்ந்த ஜாடியில் அல்லது ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மாங்காய் துண்டங்களை போடவும்.
அதன் மேலே உப்பு மற்றும் மிளகாய் பொடி போடவும்.
நன்கு குலுக்கவும்.
மாங்காய் துண்டங்களின் மேல் உப்பும் மிளகாய் பொடியும் நன்கு ஒட்டி இருக்கணும்.
இப்போது வெந்தயம் மற்றும் கொத்து கடலையை போடணும்; நன்கு குலுக்கணும்.
இப்போது எண்ணெய் விடணும், மாங்காய் இன் மேலே எண்ணெய் மிதக்கும்படி இருக்க வேண்டும். ஈரம், காற்று படக் கூடாது.
நன்கு மூடி வைக்கணும்.
தினமும் நன்கு 'அடி ஓட்ட' கிளறி விடணும்.
ஒரு வாரம் கழித்து உபயோகிக்க துவங்கலாம்.
அருமையான ஊறுகாய் இது.
தயிர் சாதம் என்று இல்லை பருப்பு சாம்பார் சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்; ஆவக்காய் சாதமே சாப்பிடலாம்
புளிப்பான மாங்காய் - 10
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
உப்பு
வெந்தயம் - 100 கிராம்
வெள்ளை கொத்து கடலை 1/2 கிலோ
எண்ணெய் 1 கிலோ
செய்முறை:
இந்த ஊறுகாய்க்கு எல்லாமே பச்சையாகத்தான் போடணும்.
மாங்காயை நன்கு அலம்பி , துடைத்து, கொட்டையும் சேர்த்து, ஒரு காயை 16 துண்டுகளாக நறுக்க வேண்டும்.
எல்லா துண்டுகளுமே ஓட்டுடன் இருந்தால் நல்லது.
உள்ளிருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்றாகத் துணியால் துடைக்கவும்.
சுத்தமாக உலர்ந்த ஜாடியில் அல்லது ஒரு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் மாங்காய் துண்டங்களை போடவும்.
அதன் மேலே உப்பு மற்றும் மிளகாய் பொடி போடவும்.
நன்கு குலுக்கவும்.
மாங்காய் துண்டங்களின் மேல் உப்பும் மிளகாய் பொடியும் நன்கு ஒட்டி இருக்கணும்.
இப்போது வெந்தயம் மற்றும் கொத்து கடலையை போடணும்; நன்கு குலுக்கணும்.
இப்போது எண்ணெய் விடணும், மாங்காய் இன் மேலே எண்ணெய் மிதக்கும்படி இருக்க வேண்டும். ஈரம், காற்று படக் கூடாது.
நன்கு மூடி வைக்கணும்.
தினமும் நன்கு 'அடி ஓட்ட' கிளறி விடணும்.
ஒரு வாரம் கழித்து உபயோகிக்க துவங்கலாம்.
அருமையான ஊறுகாய் இது.
தயிர் சாதம் என்று இல்லை பருப்பு சாம்பார் சாதம் மற்றும் பருப்பு பொடி சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்; ஆவக்காய் சாதமே சாப்பிடலாம்
Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 3:40 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எலுமிச்சங்காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் கிலோ ,
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், எலுமிசம்பழ துண்டுகளை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சம் அது வதங்கட்டும்.
இப்போது உப்பு போடவும்; மீண்டும் நன்கு கிளறவும்.
காய் பாதி வெந்ததும், வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போடவும்.
நன்றாகக் கிளறவும்.
எல்லாமாக நன்கு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, மிளகாய்ப் பொடி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ஆறினதும் பாட்டில்களில் சேமிக்கவும்.
உடனே யே தொட்டுக்கலாம்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் கிலோ ,
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பின்பு வாணலி இல் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு வெடித்ததும், எலுமிசம்பழ துண்டுகளை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சம் அது வதங்கட்டும்.
இப்போது உப்பு போடவும்; மீண்டும் நன்கு கிளறவும்.
காய் பாதி வெந்ததும், வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி எல்லாம் போடவும்.
நன்றாகக் கிளறவும்.
எல்லாமாக நன்கு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, மிளகாய்ப் பொடி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
ஆறினதும் பாட்டில்களில் சேமிக்கவும்.
உடனே யே தொட்டுக்கலாம்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எலுமிச்சங்காய் ஊறுகாய் 2
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் கிலோ ,
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
அதன் மேல் உப்பைத் தூவவும்.
பிறகு மிளகாய் பொடி தூவவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
நன்கு குலுக்கவும்
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
மிளகாய்ப் பொடி - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - கால் கிலோ ,
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
அதன் மேல் உப்பைத் தூவவும்.
பிறகு மிளகாய் பொடி தூவவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
நன்கு குலுக்கவும்
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'அம்ருத்' என்கிற எலுமிச்சை ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
பச்சை மிளகாய் - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை தோல் சிவி துருவவும்.
எலுமிச்சம் துண்டங்களுடன் போடவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி, மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
நன்கு குலுக்கவும்.
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
இதை 'அம்ருத்' என்று சொல்வார்கள்
எலுமிச்சம் பழம் - 1 கிலோ
உப்பு - 100 - 150 கிராம்
பச்சை மிளகாய் - 200 கிராம்
வறுத்து அரைத்த வெந்தயப் பொடி - 50 கிராம்
பெருங்காயப் பொடி - 1 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 கிராம்
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன்
இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
எலுமிசம்பழ துண்டுகளை ஒரு பேசினில் போடவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
இஞ்சியை தோல் சிவி துருவவும்.
எலுமிச்சம் துண்டங்களுடன் போடவும்.
ஒரு வாணலி இல் எண்ணெய் காய வைத்து, கடுகு தாளித்து, அதை அப்படியே எலுமிச்சம் துண்டங்களின் மேல் விட்டு , கலந்து வைக்கவும்.
அடுத்து வறுத்தரைத்த வெந்தய பொடி, மஞ்சள் பொடி மற்றும் பெருங்காயபொடி தூவவும்.
நன்கு குலுக்கவும்.
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.
ஒரு நாலு நாள் கழித்து தொட்டுக்கொள்ளலாம்.
ஆனால் தினமும் நன்கு கிளறி விடனும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
இதை 'அம்ருத்' என்று சொல்வார்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
» ருசியான வரகு வடை
» சில ருசியான உணவுகள்....
» ருசியான ஆட்டுக்கால் பாயா...
» ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்
» ருசியான வரகு வடை
» சில ருசியான உணவுகள்....
» ருசியான ஆட்டுக்கால் பாயா...
» ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|