ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

+6
சதாசிவம்
T.N.Balasubramanian
Dr.சுந்தரராஜ் தயாளன்
balakarthik
யினியவன்
சாமி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by சாமி Wed May 01, 2013 4:22 pm

First topic message reminder :

இது தமிழ்ப்பாடல்தான். யார் பாடியது என்று சொல்லுங்கள் உறவுகளே!
விளக்கம் பிறகு சொல்கிறேன்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.


(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by T.N.Balasubramanian Wed May 08, 2013 5:38 am

மிக்க நன்றி,சாமி அவர்களே. குழம்பிய உள்ளத்திற்கு குத்து விளக்கென விளக்கம் . நன்றி நன்றி அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by சாமி Tue May 28, 2013 11:00 pm

பாடல் எண் : 2
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.


படிக்க வசதியாக:
யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆதாய் ஆயாய் ஆயா
தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா யா கா

அருஞ்சொற்பொருள்:-

யாகா = தமிழ் வேள்விப் பயனாக விளங்குபவனே
யாழீ = யாழ் இசைப்பவனே
காயா = அருளுருவத் திருமேனி எடுப்பவனே
காதா = "காதுதல்" ஆகிய ஒடுக்குதல் தொழிலைச் செய்ய வைப்பவனே
யார் ஆர் = எத்தகையவர்களுக்கும்
ஆதாய் ஆயாய் = ஆகின்ற தாய் ஆயினவனே
ஆயா = ஆராய முடியாத
தார் ஆர் ஆயா = ஆத்திப் பூவை மாலையாகக் கொண்டவனே
தாக ஆயா = வெட்கையுற்ற தாருக வனத்து முனி பத்தினியர் கூட்டத்தை உடையவனே
காழீயா = சீர்காழி இறைவனே
யா = (துன்பங்கள்) எவற்றினின்றும்
கா = எம்மைக்காத்தருள்க

விளக்கவுரை :
தமிழ் வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. ஒடுக்குதல் தொழிலைச் செய்ய வைப்பவனே, அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே (சிவனுக்குரிய மாலைகளில் திருவாத்தியும் ஒன்று) தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 11:15 pm

மாலைமாற்று விளக்கபடம்..

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Maalaimarru

நன்றி - சாக்தஸ்ரீ டாக்டர் ஜெயபாரதி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 11:24 pm

காளமேகம், அருணகிரிநாதர் பாடல்கள் எல்லாமே இந்த மாலைமாற்று வகையை சேர்ந்தது தான்.

கொக்கொக்கக் காக்கைக்கு…

காக்கைக்காகா கூகை, கூகைக்காகா காக்கை,
கோக்குக் கூ காக்கைக்குக் கொக்கொக்க, கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: காளமேகம்

(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக சேர்த்தவை)

பகல் நேரத்தில் காக்கைதான் பலம் வாய்ந்தது. அப்போது ஆந்தையால் காக்கையை வெல்லமுடியாது.

ஆனால் இரவு நேரத்தில் ஆந்தையின் பலம் அதிகரித்துவிடும். அப்போது காக்கையால் ஆந்தையை வெல்லமுடியாது.

ஆக, நேரம் பார்த்து எதிரியுடன் மோதுவது முக்கியம்.

ஓர் அரசனின் கடமை, உலகத்தை (தன்னுடைய மக்களைக்) காப்பாற்றுவதுதான். ஆனால் அதற்காக அவன் அவசரப்படக்கூடாது. மீன் வரும்வரை ஆற்றங்கரையில் காத்திருக்கும் கொக்கைப் போலப் பொறுமையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பகைவர்களை ஜெயிப்பது சிரமம்.

இந்த பாடல் முழுவதும் ‘ககர’ வரிசையில் அமைந்தது.

இன்றைய பாடலில் அரிய சொல் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது, மொத்தப் பாடலும் அரியதுதான். ஆகவே வார்த்தைகளைத் தனித்தனியே பிரித்துப் பார்த்துவிடலாம்:

காக்கைக்கு ஆகா கூகை (ஆந்தை)
கூகைக்கு ஆகா காக்கை
கோ(அரசன்)க்குக் கூ (உலகம்) காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு)
கொக்கு ஒக்க (கொக்கைப் போல)
கைக்கைக்கு (பகைவர்களை எதிர்ப்பதற்கு)
காக்கைக்கு (காப்பாற்றுவதற்கு)
கைக்கு ஐக்கு ஆகா (சரியான நேரம் அமையாமல்போனால்)

நன்றி தினம் ஒரு பா


Last edited by ராஜு சரவணன் on Tue May 28, 2013 11:34 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 11:33 pm

இது போல் தற்போது மாலைமாற்று பாடல்கள் பாடும் கவிகள் யாராவது இருகிறார்களா ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by யினியவன் Wed May 29, 2013 12:34 am

பூவணை எழுத சொல்லுவோமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by Ramkishore Wed May 29, 2013 6:27 am

திருஞானசம்பந்தரின் மாலைமாற்று பாடல்
Ramkishore
Ramkishore
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 14/06/2012

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by T.N.Balasubramanian Wed May 29, 2013 7:38 am

ராஜு சரவணன் wrote:இது போல் தற்போது மாலைமாற்று பாடல்கள் பாடும் கவிகள் யாராவது இருகிறார்களா ?

இருக்கலாம். நமக்கு தெரியாமலும் இருக்கலாம்.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by ராஜு சரவணன் Wed May 29, 2013 7:54 am

யினியவன் wrote:பூவணை எழுத சொல்லுவோமா?

அவர் ஆளைமாற்று பாடல் பாடுவதில் கில்லாடி பாஸ். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by யினியவன் Wed May 29, 2013 10:16 am

திருஞானசம்பந்தர் கதை திரைப்படமாக விரைவில் வர இருக்கிறது.

இவரின் 11 பாடலகள் படத்தில் இருக்கிறதாம் - நன்றாக எடுத்திருப்பார்கள் என நம்புவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  - Page 2 Empty Re: யாமாமாநீ யாமாமா யாழீகாமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum