புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10சொல்லப்படாத உண்மைகள்! Poll_m10சொல்லப்படாத உண்மைகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லப்படாத உண்மைகள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 3:01 pm

என் அப்பா, ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியவர். தமிழகத்தில் மூலை முடுக்கிலுள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து, ஏழை மாணவர்களுக்கு இலவச கோடைக்காலப் பயிற்சி, அளிப்பது வழக்கம். அந்த, பத்து தினங்களும் இலவச உணவும் அளிக்கப்படும். அந்த சமையல் பொறுப்பைத் தான், பிச்சை ஏற்றிருந்தான். நூறு பேருக்கானாலும், நொடியில் சமைத்து விடுவான். அதனாலேயே அப்பாவுக்கு பிடித்த தொழிலாளியாகி விட்டான்.
சில கிராமங்களுக்கு செல்லும் போது, நானும் போவேன். அப்போதெல்லாம், பிச்சை என்னை விழுந்து விழுந்து கவனிப்பான். நான், வீட்டில் வந்து சொன்னால் பாட்டி திட்டுவாள். "அவன்கிட்டயெல்லாம் பையனை ஏன் விடுறே? அவன் கூட பேசிப்பழகி, அவனை மாதிரியே நடக்கறான் பாரு...'என்பாள்.
"அவனும், மனுஷ பிறவிதாம்மா...'என்பார் அப்பா. ரொம்ப நாள் கழித்துத் தான், அவன் திருநங்கை என்றே எனக்குத் தெரியும். மற்ற நேரங்களில் ஆணைப்போலவும், கூவாகம் செல்லும் போது மட்டும் பெண்ணாகவும் மாறுவதை பார்த்து, வியந்திருக்கிறேன். ஒரு பூப்போட்ட கைலியும், சட்டையும் அணிந்தபடி, பெண்ணைப் போல நடப்பான். இழுத்து இழுத்து பேசுவான். "பிரபு தம்பி, நல்லா சாப்பிடணும். முட்டை தோசை போடட்டுமா...'என்று, அக்கறையாய் கேட்பான்.
பிச்சையின் முட்டை தோசை, அத்தனை ருசியாக இருக்கும். ஒரு கரண்டி மாவை கிண்ணத்தில் எடுத்து, அதில், நுரை பொங்க அடித்த முட்டையை ஊற்றுவான். உப்பும், மிளகுத்தூளும் கலந்து, கலக்கி தோசை ஊற்றி தந்தானென்றால், பஞ்சை பிய்த்து சாப்பிடுவது போல் இருக்கும். நாலைந்து கேட்பேன். முட்டை தோசை என்றில்லை. காடை, கோழி என ஒவ்வொன்றும் ருசியாக இருக்கும். கூத்தாண்டவர் கோவில் விசேஷத்துக்கு கிளம்பும் போது, சகலவித அலங்காரங்களோடு, நடிகையைப் போல் கிளம்புவான். மை தீட்டிய விழிகளும், தலை நிறைய பூவும், அடுக்கின வளையலுமாய் பெருமிதம் பொங்க போவான். எனக்கோ, நாடகத்தில் பெண் வேஷம் கட்டியதைப் போல் இருக்கும்.
"டேய் பிச்சை... வேலை முடிஞ்சுதுன்னு, உடனே ஊருக்கு கிளம்பிடாத... தஞ்சாவூரு பக்கம், பத்து நாள் கேம்ப் இருக்கு' என்றார் அப்பா.
"சரிங்கய்யா, கேம்ப் முடிஞ்சே ஊருக்கு போறேன்' என்றான்.
"அப்படி என்ன தான், உன் ஊருல இருக்கோ!' என்றபடி எழுந்து போனார்.
"பிச்சை, எங்க வீட்டுக்கு வந்துடேன். எதுக்கு ஊருக்கு போவணும்' என்று கேட்டேன்.
"எனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க அக்காவும், அக்கா மகளும் தான் இருக்காங்க. "புள்ள' கல்லூரியில் படிக்குது. நான், போயி பணம் கொடுத்தா தான் பொழப்பு ஓடும் தம்பி. மத்தபடி, அய்யாவத் தாண்டி எனக்கு என்ன கிடக்கு' என்றான்.
அவனது ஊர், காட்டுமன்னார் கோவில் பக்கம், ஒரு கிராமம் என்றும், வாய்க்காலும், தென்னை மரங்களுமாய் பார்க்க அழகாக இருக்கும் என்றும் சொல்வான். அன்றைக்கு அப்பாவுக்கு நெஞ்செரிச்சல். பிச்சை, பரபரவென்று வேலியோரம் போய், இரண்டு பிரண்டைகளை பறித்து வந்தான். காய்ந்த மிளகாய், பூண்டுப்பல், உளுந்து, பெருங்காயம் இவற்றோடு பிரண்டையும், புளியையும் நன்றாக சுட்டு, அம்மியில் வைத்து, துவையல் அரைத்து வந்தான். கொஞ்சம், ரசம் சாதத்தோடு சாப்பிட்ட அப்பாவுக்கு நெஞ்செரிச்சல் நின்றது.
"டேய்... நளன்டா நீ. இதை சாப்பிடு பிரபு' என்று எனக்கும் கொடுத்தார்.
உண்மையில், அப்படிப்பட்ட துவையலை, நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை.
நான் ஒன்பதாவது முடித்து, பத்தாவது போகப் போவதால், என்னை வீட்டிலேயே விட்டு விட்டு,"கேம்ப்'க்கு போய்விட்டார் அப்பா. எனக்கும், கணக்கு டியூஷன் இருந்தது. கிட்டத்தட்ட கேம்ப் முடியும் தருவாயில், அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. கை, கால் மூட்டு கள் வீங்கி, எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. பாட்டி, அப்பாவுக்கு போன் செய்தாள். இரண்டு நாளில், அப்பா பிச்சையுடன் வீடு வந்தார்.
"இதை ஏண்டா, இழுத்துட்டு வந்தே?'என்று கேட்டாள் பாட்டி.
"ஒம் மருமகளுக்கு, உடம்பு சரியாகும் வரை, பிச்சை தான் சமைப்பான்' என்றார் அப்பா. பாட்டி வாயை மூடிக் கொண் டாள். அவளாலும், ஒரு டம்ளரைக் கூட கழுவ முடியாது. எனக்கு ஜாலியாக இருந்தது. இனி, விதவிதமாய் சாப்பிடலாம். அம்மா, சமையலறையை காட்டி, இன்னது இங்கிருக்கிறது என்று சொன்னதோடு, ஓய்வெடுக்க கிளம்பி விட்டாள். பிச்சை முதல்நாள் சற்றே தயக்கமாய் வேலை செய்தான். மறுநாளோ, சொந்த வீடு போல பழகிக் கொண்டான்.
அம்மாவுக்கு, முடக்கத்தான் தோசை செய்து கொடுத்தான். "மருந்து பாட்டுக்கு, மருந்து சாப்பிடுங்கம்மா... இதையும், சாப்புட்டு பாருங்க...' என்று கார சட்னி செய்து கொடுத்தான். சில நாட்களிலேயே, பாட்டியையும் கவர்ந்து விட்டான். தொண்டைக்கு இதமாய், சுக்கு கஷாயம் போட்டு, பிளாஸ்க்கில் ஊற்றி வைத்தான். பாட்டிக்கு, கண்ணீரே வந்துவிட்டது. எனக்கோ, தினமும் ராஜ சாப்பாடு தான். ஆப்பம் பால், இடியாப்பம் குருமா, அடை துவையல் என வித்தியாசமாய் சாப்பிட்டேன்.
"ஏண்டா பிச்சை, அக்கா குடும்பத்துக்கே செலவழிச்சா... நாளைக்கு உனக்குன்னு எதுவும் வேணாமா?' என்று, ஒரு நாள் கேட்டாள் பாட்டி.
"எதுக்கு ஆச்சி, கையில சமையல் வேலை இருக்கு. நம்ப அய்யாகிட்டயே, காலம் பூராவும் இருந்துக்கிடுவேன். அக்கா மவ நல்லாப் படிக்குது. நல்ல அரசாங்க வேலையில, இருக்கிற மாப்பிள்ளையா பார்த்து, கட்டிக்குடுத்துட்டா என் கடமை முடிஞ்சிரும். அக்கா, பொண்ணோட போய் தங்கிக்கிடும்' என்றான்.
சில நாட்களிலேயே, அவன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றானாள் அம்மா. நான் பத்தாம் வகுப்பு சென்றேன். என், மத்தியான டிபன்கள் பள்ளியில் பிரசித்தி பெற்றன. எனக்கு கீரையும், காய்களும் அறவே பிடிக்காது. பிச்சை, பசுங்கீரையை பசுமையாகவே கடைந்து கொடுப்பான். சீரகமும், பெருங்காயமும் மணக்கும். என் வாழ்நாளில் முதன்முறையாக, பீன்ஸ், அவன் செய்து தான் சாப்பிட்டேன். முதலில், அதை ஏதோ உப்புமா என்று நினைத்து, வாயில் போட்டேன். நீர்ச்சுவையோடு, பருப்பும், தேங்காயும் உதிராக ருசியாக இருந்தது. என் நண்பர்கள், என் டப்பாவுக்காக சண்டை போட்டனர். நான், ஒரு சுற்று பருத்து போனதாக பாட்டி சந்தோஷப்பட்டாள்.
ஒருநாள், பிச்சை கலவர முகத்தோடு பாட்டியிடம் வந்து நின்றான். "ஆச்சி...நானு, அவசரமா ஊருக்கு போவணும்...லீவு குடுங்க...' என்றான்.
"என்னடா விஷயம்?'
"அக்கா வரச் சொல்லிச்சு... எனக்கே, என்னன்னு தெரியல' என்றான்.
பணம் கொடுத்து அனுப்பி விட்டாள் பாட்டி. போனவன், பத்து நாளாக வரவேயில்லை. மீண்டும், அம்மாவின் சமையல் எனக்கு பிடிக்கவேயில்லை. பிச்சை வரவுக்காக ஏங்கினேன்.
வெள்ளிக்கிழமை ஸ்கூல் முடிந்து வந்தேன். வெண்டைக்காய் சாம்பாரின் மணம், ஊரைத் தூக்கியது. ஹை...பிச்சை வந்தாச்சு. உள்ளே நுழைந்து, நேரே, சமையலறைக்கு ஓடினேன்... "யாரிது?' புதிதாய் கல்யாணமான இளம்பெண். பாட்டியின், அறைக்கு ஓடினேன். பிச்சை கைகட்டி நின்றிருந்தான். அப்பா, அம்மா, பாட்டி எல்லாரும் இருந்தனர்.
"இது உனக்கே நியாயமா இருக்கா... ஊரு உலகம் என்னடா சொல்லும்? உன்னைய பத்தி எல்லாருக்குமே தெரியுமே... நீ போயி, உன் அக்கா மகளை கல்யாணம் கட்டிக்கிட்டு வந்திருக்கியே' என்று கத்தினாள் பாட்டி.
"அந்தப் பொண்ணு வாழ்க்கையை வீணடிச்சுட்டியே... ரொம்ப சின்ன பொண்ணுடா' அம்மா, அப்பா தலையில் அடித்துக் கொண்டனர். "வெளியில சொன்னா வெட்கக்கேடு, பிச்சை தெரிஞ்சு தான் செய்தியா?' என்று அங்கலாய்த்தனர்.
"என்னை மன்னிச்சுடுங்கய்யா... வேற வழி தெரியல. மக, எங்கியோ கெட்டுப்போயி வந்துட்டான்னு தெரிஞ்சதும், எங்கக்கா நாண்டுக்கிட்டு செத்துப் போச்சு. இதை கூட்டிக்கிட்டு, கெடுத்தவன் கிட்டேயே போயி நியாயம் கேட்டேன். அவங்க பெரிய பணக்காரங்க, அரசியல்வாதிங்க வேற. ஏழை சொல்லு எடுபடுமா? அசிங்கப்பட்டு திரும்பிட்டோம். இதுக்கு இனிமே, ஒரு பாதுகாப்பு வேணுமே. அதான் தாலி கட்டிபுட்டேன்' என்று அதே பெண்மைக் குரலில் சொன்னான் பிச்சை.
"யாரு தோட்டமா இருந்தா என்னா. ஆடு மேயாம ஒரு வேலி. இந்த வேலி, என்னிக்குமே பயிரை மேயாது இல்லிங்களா' என்று கூறியபடி, அந்தப் பெண்ணுக்கு இணையாய், பெண்ணைப் போலவே நடந்து சென்ற பிச்சையை, அப்பா பெருமூச்சுடன் பார்த்தார்.
பல ஆண்டுகளுக்கு பின்...
""என்ன கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களா?'' என்று, என் மனைவி அனுராதா கையில் பஜ்ஜித் தட்டுடன் வந்து, என் அருகே வைத்தாள். கடலை எண்ணையில், பொன்னிறத்துண்டாய் வறுபட்ட பஜ்ஜி மினுங்கியது. வாசனை எட்டூருக்கு இழுத்தது.
இந்த இடத்தில், என் மனைவியின் கைப்பக்குவத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பிரமாதமாய் சமைப்பாள். எங்களுக்குள், வயசு வித்தியாசம் சற்று அதிகம் தான். நான், என்றும் இளமையாய் இருப்பதால் மேட்சாக இருந்தது.
""இந்த கதை, அதிக வரவேற்பை பெறும் பாரேன்... ஏன்னா சில உண்மைகள் சுவாரஸ்யமானது,'' என்றேன் பஜ்ஜியை கடித்தபடி. ""எழுத்தாளரே... எனக்கு உள்ளே வேலையிருக்கு,'' என்றபடி போனாள் அனுராதா.
நான் கதையை மடித்து, உறையில் இட்டேன். பிச்சையின் மனைவியின் மகள் தான் அனுராதா என்பதை, எதற்கு உங்களுக்கு சொல்ல வேண்டும்?***

சூ.ஜூலியட் மரியலில்லி

நன்றி : வார மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 30, 2013 5:47 pm

நல்ல திருநங்கை
நல்ல எழுத்தாளர்
சொல்லப்படாத உண்மைகளை
சொல்லிய விதம் நன்று
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 30, 2013 9:31 pm

யினியவன் wrote:நல்ல திருநங்கை
நல்ல எழுத்தாளர்
சொல்லப்படாத உண்மைகளை
சொல்லிய விதம் நன்று
ஆமாம் இனியவன், படிக்கும் போதே பகிரத்தோன்றியது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri May 03, 2013 4:02 pm

கதை அமர்க்களம்! பகிர்ந்ததற்கு நன்றி.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 5:56 pm

சிறப்பான கதை , பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 03, 2013 6:18 pm

நன்றி ரமணி, நன்றி பாலாஜி புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக