ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதத்தின் மாண்பு

3 posters

Go down

மருதத்தின் மாண்பு  Empty மருதத்தின் மாண்பு

Post by நாகசுந்தரம் Sat Apr 27, 2013 4:48 am

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் !
வீணில் உண்டு களிப்போரை
நிந்தனை செய்வோம் !
இது பாரதி பாடல் !
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றையவர்
தொழுதுண்டு பின் செல்பவர் !
இது வள்ளுவன் வாக்கு !

உழவன் உழுகிறான் !
அங்கு நெல் மட்டுமா விளைகிறது ?
அவனது உழைப்பும் அல்லவா
விதை போடுகிறது !
மருத நிலம் அவனது கூடு !
வயல்கள் அவனது வீடு !
கயல்விழியார் கடைக்கண்ணுக்கு
காத்திருப்பார் பலர் !
வயல்வெளியே உலகம் என்று
விழித்திருப்பார் உழவர் !
அவன் அதிகாலை விழிக்காவிட்டால்
பலரது இரவு உறக்கம் பாதியிலேயே போய்விடும் !
அவன் விதையை மட்டுமா தூவுகிறான் ?
பலரது வாழ்க்கையின் பாதையை அல்லவா போடுகிறான் !
அவன் பாடும் பாட்டு களைப்பு தீரமட்டும் அல்ல !
பலரது வயிற்றுப்பாட்டையும் அல்லவா பாதுகாக்கிறது !
தலையில் அவன் கட்டும் முண்டாசு !
பலரது தலைவிதியை மாற்றுகிறதோ?
ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லையென்றால்
நம் வீட்டில் ஏஸி ஓடாது !
அதனால் நமக்கு வேலையும் ஓடாது !
மருத நில மன்னவனோ
வெயிலில் கால்பதித்து காய்கிறான் !
பொழுது சாயும் வரையில்
வயல்வெளியில் நிற்கிறான் !
அவனது கடமையால் தான்
நமது உடைமை உயிர் வாழ்கிறது !
உப்பு குறைவென்று
உணவை கொட்டுகிறோம் !
ஒரு மணி அரிசிக்கு அவன்
ஓராயிரம் தடவை உழுகிறான் !
வள்ளுவப் பெருந்தகை
ஒரு மணி அரிசியைக்கூட வீணாக்காதவராம் !
ஆம் !
அவர் ஊசியால் அரிசியை மட்டும் கோற்கவில்லை !
உழவனது உழைப்பையும் அல்லவா சேர்த்துக் கோற்கிறார் !
பலரது வயிற்றுக்கு பாலை வார்க்கிறான் உழவன் !
அவனது வீட்டிலோ வெறும் கப்பங்கூழுதான் !
அவன் சேற்றில் காலை வைத்தால்தான்
நமக்கு வயிற்றிலே சோறு கிடைக்கும் !
மருத நிலம் நமக்கு மாதா !
உணவு அருந்த மட்டும் அல்ல !
அவளை வணங்கவும் கூடத்தான் !
அதனால் தான் பொய்யாப்புலவன்
தொழுதுண்டு பின்செல்லப் பணித்தான் !
உணவை அருந்தும் முன்
உழவனை தொழவேண்டும் !
உழவன் மழை வேண்டி மன்றாடுகிறான் !
வருண பகவானே பொய்யாமல் பெய்து விடு !
இல்லையென்றால்
உனக்கு உண்ண உணவு (அவி) கிடைக்காது !
பொன்னி நதியே வயலுக்கு வேண்டிய நீரைக்கொடு !
இல்லையென்றால் உனக்கு
பொழுது விடிந்ததும் பூஜை கிடைக்காது !

ஆடிப்பட்டம் வர
தேடி விதை விதைத்து,
பாடிக்கொண்டே பிரித்து நாட்டு நட்டு,
வாடாமல் வளர வாகாக நீர்பாய்ச்சி,
காகம் கழுகையெல்லாம்
கம்பால் விரட்டிவிட்டு,
முதிர்ந்து வருகையிலே
மேலாக அறுப்பறுத்து,
மூட்டை மூட்டையாக
நெற்குவியல் தருகிறானே !
அவனா ?

ஆடிபண்டிகையில்
ஆகாரம் பல உண்டு,
பாடிக்கொண்டு பல பலகாரம்
செய்துவைத்து,
காக்கைக்கு கூட இன்றி
மூக்கை பிடிக்க உண்ணும்
நாமா ?

யார் உயர்ந்தோர் ?
சிறிதேனும் சிந்திப்போம் !

மருதநிலம் மற்றய நிலங்களில் சிறந்தது !
ஏனென்றால் குறிஞ்சி மலைக்கு எப்போதாவதுதான் செல்வோம் !
பாலைக்கும் காலம் உண்டு !
முல்லைகாட்டுக்கு மனம் வந்தபோதுதான் செல்வோம் !
நெய்தல் கடலோ ஓரத்தில்தான் உள்ளது !
ஆனால் மருதமோ வயலும் வயல் சார்ந்த நிலமும் !
அங்கே (உழவன்) நித்தமும் போகாவிட்டால்
நமக்கேது நிதம் சோறு?

அகத்திணையில் மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும் !
ஊடல் காதலுக்கு உயிர் போன்றது !
உழவன் உயிர் காக்கிறான் !
ஊடல் உணர்வைக் காக்கிறது !

ஒரு உழவன் பட்டணம் சென்றான் !
அங்கு ஒரு உணவகம் சென்றான் !
பக்கத்தில் பகட்டாக பலர் !
உணவு வந்தது !
உழவனுக்கு மிகுந்த பசி !
கையால் பிசைந்து களைப்பாற உண்டான் !
பகட்டான பட்டணத்தார்
பரிகசித்தார் அவன் உண்ணும் பாங்கைக்கண்டு !
பட்டாடை உடுத்தும் பகட்டான அவர்க்கு
வேர்வை தெரியாது !
விதைதூவத் தெரியாது !
காத்திருந்து களைபரிக்கத்தெரியாது !
நீர்பாய்ச்சி நிரவத் தெரியாது !
அறுப்பறுத்து கட்டத்தெரியாது !
ஆனால் தட்டில் விழுந்த உணவை
கைபடாது உண்ணமட்டும் தெரியும் !
அந்த உழவனுக்கோ !
அந்த அரிசியின் தோற்றத்துக்கு வேண்டிய
அனைத்து நிலையும் தெரியும் !
ஆனால் அவனுக்கு அந்த அரிசி உணவை
உண்ண தெரியாதாம் ! பரிகாசம் செய்கிறார் பகட்டுக்காரர் !
உழவன் கணக்குப்பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது என்பது சரிதான் போலும் !
உண்ணும் முன் உழவைத்தொழுங்கள் !
இந்திரனைத் தொழும் மருத நில மன்னவர்கள்
சிந்தனையில் நல்லவர்கள் !
நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை !
நல்லவராய் நாமிருப்போம் !
மருதத்தில் மழை பெய்தால்தான்
விருந்து வைக்கக்கூட வகை பிறக்கும் !
உழவைப்போற்றுவோம் !
உண்மையாய் நடப்போம் !
மருதா நல்லூரில் மருதப்பூங்கா அமைக்கையிலே
மருத நில உழவனுக்கு மனதாற நன்றி சொல்வோம் !
பரிகாசம் செய்யாமல்
பரிசுத்தம் ஆகிடுவோம் !
வாழ்க மருதம் ! வளர்க நெற்பயிர் !



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

மருதத்தின் மாண்பு  Empty Re: மருதத்தின் மாண்பு

Post by முனைவர் ம.ரமேஷ் Sat Apr 27, 2013 8:32 am

நல் வளர்ச்சி... கவிதையும் நடையும் வளர்ச்சி பெறுகிறது.... பாராட்டுகள் சூப்பருங்க


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

மருதத்தின் மாண்பு  Empty Re: மருதத்தின் மாண்பு

Post by பூவன் Sat Apr 27, 2013 8:03 pm

ஆடிப்பட்டம் வர
தேடி விதை விதைத்து,
பாடிக்கொண்டே பிரித்து நாட்டு நட்டு,
வாடாமல் வளர வாகாக நீர்பாய்ச்சி,
காகம் கழுகையெல்லாம்
கம்பால் விரட்டிவிட்டு,
முதிர்ந்து வருகையிலே
மேலாக அறுப்பறுத்து,
மூட்டை மூட்டையாக
நெற்குவியல் தருகிறானே !
அவனா ?

மருதம் கண்முன் கொண்டுவந்தது
மருதத்தின் மாண்பு .....

கவிதை அழகு ,அருமை அய்யா ... சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மருதத்தின் மாண்பு  Empty Re: மருதத்தின் மாண்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum