புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_c10பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_m10பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_c10 
5 Posts - 63%
heezulia
பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_c10பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_m10பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_c10பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_m10பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை


   
   
koothan
koothan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/04/2013

Postkoothan Fri Apr 26, 2013 10:48 am


பாஸ்…

இந்த ARTICLE ல, நான் சொல்ற பல விசயங்கள், உங்களுக்கும் நடந்திருக்கும். தயவுசெஞ்சு இதை நான் எழுதுனதா நினைக்காதீங்க. நீங்கதான் இப்படி ஒரு ARTICLE ல எழுதி, படிச்சுட்டு இருக்கீங்க…! என்ன சரிதானே..!

இத நான் ஏன் சொல்றேனா..நாம அன்றாடம் பார்த்த காட்சிகளை, (என்ன பெரிசா பார்த்துரப்போறோம்..? பஸ்ல, ட்ரெயின்ல, அப்புறம் இன்னும் எக்ஸட்ரா எக்ஸ்ட்ரா பயணம் செய்யும் போது, பேங்க்ல, ரேசன் கடையில இப்படி பல இடங்களில..ம் அப்புறம் முக்கியமா நம்ம டாஸ்மாக்குல.. ) பார்த்த மனிதர்களை எனது கண்ணோட்டத்தில் எழுதியிருக்கிறேன்.

இதுல ஒரு அதிசயம் இருக்கு பாஸ். அதாகப்பட்டது…என்னவென்றால்..அடடா நாம நினைச்ச மாதிரியே இவனுமில்ல சிந்திச்சிருக்கான் பயபள்ள…(ம்க்கும்…சிந்திச்சிட்டாலும்..) அட்லீஸ்ட் மனசுல தோணும் பாஸ். நீங்களும் சில இடங்களிலெல்லாம், யாரையாவது பார்த்து ஏதாவது ஒரு கேள்வி கேக்கணும்ன்னு நினைச்சிருப்பீங்க இல்ல…? நானும் தான் …

அந்த கேள்வியும், அதற்க்கான காரணமும் தான் இந்த ARTICLE ல, சாராம்சம் பாஸ்.


அடுத்ததா ஒரு முக்கியமான விசயம்….
அதாகப்பட்டது, இந்த விசயங்களெல்லாம் என் வாழ்வில் இருந்து நான் கற்றுக்கொண்டது. அதனால் நான் (நான் என்பதை ஒழின்னு சொல்லி எத்தனை ஞானிகள் சொல்லியும் கேக்கலயே) மற்றும் என்னை சார்ந்தவர்கள் பற்றிய ஒரு நீரோட்டம் கூடவே வரும். யாரும் என் சுயசரிதையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று தப்பாக எண்ணிவிட வேண்டாம்.(ஒரு தன்னடக்கம் தான்பா) என்ன ரெடியா பாஸ்…போலாமா….?


(1)சின்ன வயசுல ஒரு செய்தித்தாள்



எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்து, சும்மா ஒரு 26 வருசமா NEWS பேப்பர் வாங்குற பழக்கம், எங்க வீட்ல உண்டு. ஆனா என்னமோ பாருங்க..இந்த NEWS வாசிக்கனும்னு எனக்கு தோணுனதே இல்லை. நீ NEWS வாசிக்கலைனா என்ன உலகம் மாறிகிட்டு சுத்துதான்னு என்னை நக்கல் பண்ணி என் மனசை நோகடிச்சுராதிங்க பாஸ். அது ஏனோ தேவையில்லாத விசயம் என்று தான் எனக்கு தோணுச்சு. ஆனா பாருங்க..எங்க அப்பா இருக்காரே..அவர் ஒரு அரசியல் பைத்தியம்.இந்த பேப்பரை படிச்சுட்டு அவர் கொடுக்கிற அளப்பரைக்கு ஒரு அளவே இருக்காது.


பேப்பர் படிக்கும் போது எவனாவது சிக்குனா பாவம் அவன் செத்தான்...இந்த இந்திராகாந்தியை ஏன் தெரியுமா சுட்டாங்க?..பஞ்சாப் காரன் யார் தெரியுமா? அவன் என்ன செஞ்சான் தெரியுமா ன்னு பல கேள்வியைக் கேட்டு சும்மா சுத்த உட்ருவாரு எங்கப்பா. கன்னித்தீவுன்னு ஒரு சித்திரகதை ஒன்னு வருமே நீங்க பாத்திருப்பீங்க..அடுத்தநாள் என்னவா இருக்கும் அப்படிங்கறதை அப்படியே முதல்நாளே சொல்லிருவாரு. (அட..விடுங்க பாஸ்…சின்ன பையனா இருந்த எனக்கு அது பெரிய விசயம் தானே). சொன்னா நம்பமாட்டீங்க…அரசியல் கூட்டணி இந்த மாசம் மாறிடும் அப்படீம்பாரு. அப்படியே நடக்கும். அவருடைய அந்த அசாத்திய அறிவைக் கண்டு பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கெல்லாம் உச்சி குளிர்ந்து அப்படியே மெய்சிலிர்த்து போய்டுவேன். அடடா எனக்குன்னு ஆண்டவன் அறிவான அப்பாவை அனுப்பி வைச்சிருக்கானே என்று பிள்ளையாரை நாலு சுத்து எக்ஸ்ட்ராவாக்கூட சுத்திருக்கேன்னா பாத்துக்கோங்களேன்.

சரி இப்ப விசயத்துக்கு வர்ரேன்.

இந்த NEWS பேப்பர்தான் அந்த அரசியல் அறிவுக்கு காரணமான்னு ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் நான் கண்டுபிடித்தேன். முதல் பக்கத்திலிருந்து அடுத்த எட்டு பக்கமும் படித்து முடித்து விட்டால் ஜென்ரல் நாலேட்ஜ் வந்துரும்ன்னு நான் முடிவு கட்டிட்டேன். (நல்லா படிச்சிருந்தேனா IAS பாஸ் பண்ணியிருக்கவும் வாய்ப்பிருந்திச்சு..அட நம்புங்க பாஸ்.)
அங்க ஆரம்பிச்சு பாஸ்;….நான் NEWS பேப்பர் படிக்க ஆரம்பிச்சது.

காலையில சூடா காபியோட(பல் தேய்க்காமல் தான்…என்னது..? சும்மா இருங்க நீங்க மட்டும் எப்படி..?) இந்த NEWS பேப்பரும் என் கைக்கு வந்துரனும்..இல்லைன்னா.. அந்த நாள் என் வீட்டுக்கு சனிய நாள். காலையிலேயே என் ரணகளம் ஆரம்பிச்சுரும்.

மடிப்பு கலையாமல் இருக்கும் NEWS பேப்பரை அப்படியே கையில் எடுத்து, அப்படியே ஒரு முகர்ந்;து பார்த்து அந்த பேப்பர் வாசனையை ரசித்து விட்டு, முதல் பக்கத்தை அப்படியே விரித்து, ம்….என்ன இன்னிக்கு விசேசம்..? என்று NEWS பேப்பரை மேய்கிற அனுபவமே தனிதான் பாஸ்.

சும்மா சொல்லக்கூடாது..நான் NEWS பேப்பர்களை இப்படி மனம் குளிர்ந்து பாராட்டுறேனா..அதுல படிக்கும் படியான நல்ல நல்ல செய்திகள் இருந்துச்சு. இன்னிக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது.தேசத்தலைவர்களின் வரலாறுகளும், நல்ல கட்டுரைகளும் அதிகமாக அச்சாகியிருக்கும்.கவர்ச்சி படங்கள் ஏதோ கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்.அதாவது நான் என்ன சொல்ல வர்ரேன்னா…கொஞ்சம் நல்ல விசயங்களை, பொது அறிவை கற்றுக் கொடுத்தது அந்த செய்தி தாள்கள்.

எண்ணிபார்த்தால் ஒரு அஞ்சாறு விதமான பேப்பர்தான் அன்றைக்கு இருக்கும் ன்னு நினைக்கிறேன். அன்னிக்கு எங்கங்க இருந்திச்சு இந்த டிவியும், மற்ற விசயமும்?. எல்லாமே பேப்பர்தான்.

ம்...அப்புறம் ரேடியோன்னு ஒண்ணு இருந்துச்சில்ல? அந்த காமெடியை நான் அடுத்ததா சொல்லவா?


(2) செய்திகள் வாசிப்பது....ரேடியோவும்.... டி வி யும்


ஆமாம் பாஸ் ரேடியோ ன்னு ஒண்ணு ரொம்ப முக்கியமான சாதனம்...ம்....ரேடியோன்னு ஒண்ணு இருந்திச்சு. அவன் கொடுக்கிற அலைவரிசையில, முள்ளை நகர்த்...தி கொண்டு போய் சேர்க்கறக்குள்ள மனசபுள்ள நரம்பு அந்துரும், டொய்ங்ன்னு ஒரு சத்தம் மட்டும் கேட்குமே தவிர சரியா பாட்டு கேக்காது. அப்படியே கேட்டாலும், பாட்டு ஒரு பக்கம், MUSIC ஒரு பக்கம்னு இழுத்துக்கிட்டு கிடக்கும். சரி செய்தியாவது கேப்போம்ன்னு ஸ்டேசன் பக்கமா முள்ளை நகர்த்தி, டொய்ங் சத்தமில்லாமல், இரைச்சல் இல்லாம்ல் சரியான இடத்தில் வைத்துப் பார்த்தால், இத்துடன் செய்திகள் முடிவடைகின்றன. மீண்டும் ஆல் இந்திய வானொலியின் தமிழ் ஒலிபரப்பிற்கு மாலை சந்திப்போம் ன்னு சத்தம் வரும். என்ன கொடுமை சார் இது.



டிவியின்னு ஒண்ணை நான் என் 16 வயசுலேதான் பார்த்தேன். அதுவும் என் பிரெண்ட் ரெனால்டு வீட்டுல.அவன் வீடு என் வீட்டிலேர்ந்து சுமார் ஒரு கிலோமீட்டராவது இருக்கும். சும்மா ஒரு பிளாக் அண்டு ஒயிட் டிவிதான். இன்னைக்கு அரசாங்கம் நமக்கு கொடுத்திருக்கிற கலர் டிவியெல்லாம் அன்னைக்கு இருந்திருந்தா அது ரொம்ப பெரிசு, சொகுசு.

சிலுவை மாதிரி ஒரு கம்பத்தை ஊணி, அதுல இருந்து ஒயரை டிவிக்கு கனெக்சன் கொடுத்திருந்தார்கள். அது என்னடா ன்னு கேட்டேன். அதுல இருந்துதான்டா மடையா படம் வரும் ன்னான் என் பிரெண்ட். சரியா போச்சு போ..எல்லா மேட்டரும் இதுலதான் இருக்குதா..ன்னு எனக்கு ஒரே ஆச்சரியம். ஒரு நாள் அதுல நான் தெரியாம சாஞ்சு நின்னதுக்கு என்னை என்ன பேச்சு பேசுனான் தெரியுமா பாஸ்… ஐய்யய்யோ..என்னமோ அது திரும்பி நின்னா படம் தெரியாதாம்..சத்தம் வராதாம். ஏதோ ஃபீரிகன்சியாம் என்னனோவோ சொல்லி என்னை அவமானப்படுத்திட்டான் பாஸ’

அதுல நான் தமிழ் படமோ, பாடலோ பார்த்த வரலாறே இல்லை.

அய்யய்யோ அந்த கொடுமையை நான் நாளைக்கு சொல்றேன்....


பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை Tumblr_lhfxbqMYnG1qhcabio1_400பங்காளி - பழைய பார்வையில் ஒரு தொடர் கட்டுரை RadioTV

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக