ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சாய்பாபா ஆராதனை விழா!

Go down

இன்று சாய்பாபா ஆராதனை விழா! Empty இன்று சாய்பாபா ஆராதனை விழா!

Post by krishnaamma Wed Apr 24, 2013 10:41 am

இன்று சாய்பாபா ஆராதனை விழா! TN_130424100251000000

உலகம் முழுவதும் பக்தர்களைக் கொண்டுள்ள சாய்பாபாவிற்கு, தமிழகத்தில் 905 மையங்கள் உள்ளன. இங்கு வரும் குழந்தைகளுக்கு அன்பும், பக்தியும், ஒழுக்கமும், உண்மையும் போதிக்கப்படுகிறது. பாலவிகாஸ், இளைஞர் அமைப்பு, பஜன் மண்டலி, மகிளா அமைப்பு, சமிதி ஆகிய பிரிவுகளின் கீழ், பக்தர்கள் சமூகத்திற்கு நலன் தரும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். பாலவிகாஸில் உள்ள குழந்தைகளுக்கு தாய் தான் உன் முதல் கடவுள் என கற்றுத் தரப்படுகிறது. சொல்லிக் கொடுப்பவர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் தான், குழந்தைகளை அவ்வளவு அழகாக உருவாக்குகிறார்கள். பாபா, தன் தாய் ஈஸ்வரம்மாவை எந்த அளவு போற்றினார் எனபதற்கு சில உதாரணங்களைக் கூறலாம். மக்களின் தாகம் தணிக்க தண்ணீர் கொடுக்கும்படி மகனிடம் கூறினார் தாய். அவரது கட்டளையை ஏற்று, வறண்ட அனந்தப்பூர் மாவட்டத்திற்கு குடிதண்ணீர் வழங்கினார். அதன்பிறகு சென்னை வரை உள்ள மக்களின் தாகம் தீர்த்தார்.

ஏழைகள் வைத்தியம் பார்க்க வழி செய்ய வேண்டும், என்று ஈஸ்வரம்மா சொன்னதும், அவர்கள் இலவசமாக உயர்சிகிச்சை பெறும் வகையில் புட்டபர்த்தியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியைக் கட்டினார். பிள்ளைகள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் தான் கேட்டார் பாபாவின் தாய். பாபாவோ, பல்கலைக்கழகமே உருவாக்கி கொடுத்துள்ளார். இப்படி தன் தாயின் விருப்பத்தை செய்து கொடுத்த பாபாவின் விருப்பம், அனைவரும் அவரவர் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான்!

ஏப் 24., சாய்பாபா நினைவு நாள்: மும்பையிலுள்ள பாலவிகாஸ் பள்ளிக்கு பாபா விஜயம் செய்தார். ஆசிரியர்களும் மாணவர்களும் ரோஜாவைக் கையில் ஏந்தி, அவரை வரவேற்க காத்திருந்தனர். அப்போது, அந்தப் பள்ளியில் படிக்காத சிறுவன் ஒருவன் அங்கு வந்தான். மற்ற குழந்தைகளைப் போல தானும் ரோஜாவோடு பாபாவை வரவேற்க ஆசைப்பட்டான். ஆனால், அவனுக்கு மலர் வழங்கப்படவில்லை. வருந்திய அவன், தனக்கெதிரே இருந்த செடியில் மலர்ந்திருந்த சிறுபூக்களைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டான். மாணவர்களை ஆசிர்வதித்தபடி வந்த பாபாவிடம், தன் கையில் இருந்த மலர்களைக் கொடுத்தான். அவர் புன்னகை பூத்தபடி, அவனது பிஞ்சுக்கைகளை பிடித்தார். எளிமையான அந்த மலர்களை வாங்கிக் கொண்டு ஆசிர்வதித்தார். பள்ளியில் மூன்று மணிநேர நிகழ்ச்சி நடந்து முடிந்தது. பாலவிகாஸை விட்டுக் கிளம்பும் நேரத்திலும், அந்தச் சிறுவன் கொடுத்த மலர்கள் பாபாவின் கைகளிலேயே இருந்தன. அந்தச்சிறுவன் நெகிழ்ந்து போனான். தங்கள் ரோஜாவுக்கு கிடைக்காத பெருமை, யாரோ ஒரு சிறுவனின் சிறுமலருக்கு கிடைத்ததை எண்ணி மற்ற மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

உயிர்களை நேசித்தவர்: சாய்பாபா பெங்களூருவிலிருந்து புட்டபர்த்திக்கு காரில் சென்று கொண்டிருந்தார். மலைப்பிரதேசமாக இருந்ததால், பாதை கரடுமுரடாக இருந்தது. ஓரிடத்தில், பாம்பு பாதையின் குறுக்கே சென்று கொண்டிருந்தது. பாம்பைக் கண்ட டிரைவர், பின் சீட்டில் இருந்த பாபாவைத் திரும்பிப் பார்த்தார். அவர் தியானத்திலிருப்பதைக் கண்டார். காரை நிறுத்தினால் பாபாவின் தியானம் கலைந்து விடும் என்பதால் பாம்பின் மீது காரை ஏற்றி விட்டு தொடர்ந்து சென்றார். பிரசாந்தி நிலையம் வந்ததும், டிரைவர் பாபாவிற்கு காரின் கதவைத் திறந்தார். இறங்கிய பாபா மெல்ல நடந்து சென்றார். அவருடைய சட்டையின் பின்புறம், மண்ணால் பெரிய பட்டை போட்டது போல அழுக்காகி இருந்தது. இதைக் கண்ட டிரைவர்,சுவாமி! உங்கள் சட்டையில் ஏதோ பட்டை போல் அழுக்காக இருக்கிறதே!, என்றார்.கொஞ்ச நேரத்திற்கு முன் மலைப்பாதையில் ஒரு பாம்பின் மீது கார் ஏற இருந்தது. அதைத் தடுப்பதற்காக காரின் டயருக்குக் கீழே செல்ல வேண்டி வந்தது, என்றார் பாபா.இதைக் கேட்டதும் டிரைவர் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார். புன்னகை தவழ, பாபா பிரசாந்தி நிலையத்திற்கு சென்றார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று சாய்பாபா ஆராதனை விழா! Empty இன்றைய செயல்பாடுகளே எதிர்கால வாழ்வின் ஆணிவேர்

Post by krishnaamma Wed Apr 24, 2013 10:43 am

இன்று சாய்பாபா ஆராதனை விழா! 1303623234saibaba

*மனிதநேயம், நல்லொழுக்கம், கருணை ஆகிய குணங்கள் மனிதனுக்கு அவசியம். இதனைக் கற்றுத்தராத கல்வியால் ஒரு பயனும் இல்லை.
*பிறருக்கு துன்பம் ஏற்படாத வகையில் உங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
*ஆரோக்கியமான வாழ்க்கையே உறுதியான வாழ்க்கை.
*திட்டங்களை செயல்படுத்துவதில் வரைமுறையுடன் செயல்படாத நாடு ஒருபோதும் முன்னேற்றப் பாதையில் செல்லாது.
*கடவுளே அனைத்திலும் அனைத்துமாக இருந்து உலகை இயக்குகிறார்.
*நல்ல எண்ணம், வார்த்தையில் மென்மை, செயல்களில் இரக்கம் கொண்டவர்களே உண்மையான மனிதர்கள்.
*எந்தச் செயலையும் செய்யும் முன்பு, கடவுளை எண்ணித் துவங்குங்கள். உங்களுக்கு அவரருளால் வெற்றியே கிடைக்கும்.
*மனிதனின் அறிவாற்றலை, அவனது குணங்களே நிர்ணயிக்கிறது.
*இன்றைய சிறப்பான செயல்பாடுகளே, எதிர்கால வாழ்க்கைக்கு ஆணி வேராக இருக்கிறது.
*உண்மையாக நடப்பவர்களிடம் நற்குணமும், பிறருடன் இணக்கமாக நடந்து ஒத்துப்போகும் தன்மையும் இருக்கும்.
*ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தாலே போதும். உலகில் அமைதி தானாக வந்துவிடும்.
*உண்மையான நட்பில் அகம்பாவம் துளியும் இருக்காது.
*தியானம் செய்வதால் ஆக்கப்பூர்வமான நற்சிந்தனைகள் உருவாகும்.
*நீங்கள் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால், அவர் உங்களை நோக்கி பத்து அடிகள் எடுத்து வைப்பார்.
*சேவை, கைமாறு கருதாததாக இருக்க வேண்டும். பிறருக்கு செய்த சேவையை வெளிப்படுத்துவதும், அதற்காக பாராட்டை எதிர்பார்ப்பதும் கூடாது.
*ஒவ்வொருவரையும் பிறருக்கு சேவை செய்வதற்காகவே இறைவன் படைத்துள்ளான்.
*நீங்கள் கடவுளை வணங்காவிட்டாலும்கூட, அவர் உங்களுடனேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
*மனப்பூர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் சமைக்கப்படும் உணவிற்கு சுவை அதிகம்.
*உண்மை இருக்குமிடத்தில் மட்டுமே அன்பும், அமைதியும், அதன் வடிவமான கடவுளும், அவரது ஆசிர்வாதமும் இருக்கிறது.
*இறைவன் மீது பக்தி செலுத்துபவர்கள் மட்டுமே, எந்த செயலையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.
*உண்மையான மகிழ்ச்சி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அதை வெளியில் தேடுவதில் ஒரு பயனும் இல்லை.
*கட்டளையிடாமல், அன்புடன் சொல்லித் தரப்படும் முறையே, சிறப்பானகல்வி முறை ஆகும்.
*பற்றில்லாத வாழ்க்கையில்தான் திருப்தி இருக்கிறது.
*சேவை செய்யப்படும் இடத்தில் மட்டுமே பெரு மகிழ்ச்சியும், துன்பமில்லாத நிலையும் இருக்கும்.
-சாய்பாபா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum