ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகவேள் பன்னிரு திருமுறை!

Go down

முருகவேள் பன்னிரு திருமுறை! Empty முருகவேள் பன்னிரு திருமுறை!

Post by சாமி Tue Apr 23, 2013 5:29 pm

சிவபெருமானுக்குப் பன்னிரு திருமுறை இருப்பது போல முருகவேள் பன்னிரு திருமுறை என்று ஒரு திருமுறைத் திரட்டு உண்டு தெரியுமா என்று சொன்னால் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். அதைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.

விவரம் தானே, கேளுங்கள் :

திருப்பரங்குன்றம் திருப்புகழ் - முதல் திருமுறை
திருச்செந்தூர் திருப்புகழ் - இரண்டாந் திருமுறை
திருவாவினன்குடி திருப்புகழ் - மூன்றாந் திருமுறை
திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் - நான்காந் திருமுறை
குன்றுதோறாடல் திருப்புகழ் - ஐந்தாந் திருமுறை
பழமுதிர்சோலை திருப்புகழ் - ஆறாந் திருமுறை
பொதுத் திருப்புகழ் பாடல்கள் - ஏழாந் திருமுறை
கந்தரலங்காரம் - கந்தரந்தாதி - எட்டாந் திருமுறை
திருவகுப்பு - ஒன்பதாந் திருமுறை
கந்தரனுபூதி - பத்தாந் திருமுறை
நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர்,முதலானவர்கள் பாடல்கள் - பதினோராந் திருமுறை
முருகனடியார்கள் வரலாறு ஆகிய சேய்த்தொண்டர் புராணம் - பன்னிரண்டாந் திருமுறை


இவ்வாறாக முருகவேள் பன்னிரு திருமுறை வகுக்கப் பட்டிருக்கிறது. வகுக்கப் பட்டிருக்கிறதா?

வகுத்தவர் யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? வகுத்தவர் வேறு யாரும் இல்லை, திருப்புகழ் ஏடுகளை வாழ்நாளெல்லாம் தேடித் தேடி தொகுத்துப் பதிப்பித்த தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் தாம்!

அது சரி! இங்கு கூறப்படுகிற பதினோராந் திருமுறை வரை பாடிய புலவர்கள், மன்னிக்கவும், செம்புலப் புலவர்கள் முன்னமேயே நாடறிந்த செம்புலப் புலவர்கள். அருணகிரிநாதர், நக்கீரர்,பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடனார் இவர்கள் எல்லாம் நாடறிந்த செம்புலப் புலவர்கள் அல்லவா?

ஆனால் சேய்த்தொண்டர் புராணம் என்ற முருகவேள் பன்னிரண்டாந் திருமுறை பாடிய செம்புலப் புலவர் யார்? அது ஒரு பெரிய கதை!

தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் மேற்படி முருகவேள் நூல்களை எல்லாம் வகுத்துக் கொண்டு வந்திருக்கிறார். இறுதியில் சிவபன்னிரு திருமுறையில் பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம் இருப்பது போல முருகனடியார்கள் புராணம் ஒன்று இருந்தால் அல்லவா முருகவேள் பன்னிரு திருமுறை நிறைவு பெறும் ?

சேய் ஆகிய முருகனது தொண்டர்கள் புராணம், அதாவது சேய்த்தொண்டர் புராணம் யார் பாடுவது? இந்தக் கவலை தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளைக்கு வந்து விட்டது. அவரே நல்ல பாக்கள் புனையும் வல்லமை படைத்தவர் தாம். இருந்தாலும் அதில் அவருக்கு ஒரு தயக்கம் இருந்தது போலும்!

இப்படித் தான் ஒரு பாண்டியன் ஒரு நல்ல பொருள் நூலுக்காகக் கவலைப்பட்டான் என்பது வரலாறு. புலவர்கள் கடும்பஞ்சமான வற்கடத்தின் காரணமாக பாண்டிநாட்டை விட்டு அயல்நாடுகளுக்குச் சென்று மீண்டும் மழையால் நாடு தழைத்த போது பாண்டி நாட்டிற்கு வந்தனராம். ஆனால் தொல்காப்பியத்தில் கூறப்படும் பொருளதிகாரம் மட்டும் கிடைக்கவில்லையாம். எழுத்தும், சொல்லும், பொருளதிகாரத்திற்கு அல்லவா ஏற்பட்டன? அப்பொருளதிகாரம் இன்றேல் எதுவும் இன்று என்று அவன் கவலைப் பட்டபோது பொருள் நூலான இறையனார் களவியல் என்ற நூல் மதுரைச் சொக்கனின் பீடத்தில் எழுந்ததாம். மகிழ்ந்த மன்னன் இந்நூலுக்கு உரை வேண்டுமே என்று கவலையுற்றானாம். மீண்டும் இறைவன் கருணை புரிய உருத்திரசன்மன் என்ற ஊமைக் குழந்தை தேர்வு செய்ய இறையனார் களவியல் உரையாகிய நக்கீரர் உரை கிடைத்தது என்பர்.

இவ்வாறு நல்ல நூலுக்காக நல்லவர்கள் கவலைப்படும் போதெல்லாம் அதைக் கூட்டிக் காட்டித் தருவது இறைவனது இயல்பல்லவா?

அது போல தணிகைமணியாரின் தணியாத கவலையைத் தணிக்க வேண்டி இறைவன் ‘சுந்தரர் உலா’ என்ற ஒரு நூலை அவருக்குக் காட்டி அருளினான். ‘சுந்தரர் உலா’ எழுதியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார்.

சுந்தரர் உலா நூலைப் படித்த பிள்ளைவாள் அதில் சொக்கிப் போனார். நூலின் நடையும், அழகும், சுவையும், பொருளும் நூலாசிரியரான சொக்கலிங்கனார் ஒரு வரகவி என்பதை உறுதி செய்தது. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை முடிவு செய்து விட்டார்! சேய்த்தொண்டர் புராணம் பாட வல்ல வரகவி சொக்கலிங்கனாரே என்று அசைவில்லாத நம்பிக்கை பூண்டு தான் முன்பின் பார்த்தறியாத சொக்கலிங்கனாருக்குக் கடிதம் மூலம் தமது வேண்டுகோளை விடுத்தார். தொண்டுக்கென்றே பிறந்த சொக்கலிங்கனாரும் உடனே அப்பணியை ஏற்று ஓராண்டில் நிறைவேற்றித் தந்தார். பணி தொடங்கியது 1941-ஆம் ஆண்டு. 1942 - ல் மிக அழகிய முறையில் பத்திச்சுவை நனி சொட்டச் சொட்ட சேய்த்தொண்டர் புராணம் தமிழ்நாட்டின் தவப்பயனாய் முகிழ்த்துவிட்டது.

இந்நிகழ்வுகளில் கூர்ந்து கவனித்தால் ஓருண்மை திருவருள் அதில் ஒளித்து வைத்துள்ளது புரியும். தேனூர் வரகவி சொக்கலிங்கனார் தீவிர மணிவாசகப் பித்தர். அவர் மணிவாசகர் உலா பாடியிருந்தால் அதில் வியப்பில்லை. ஆனால் அவர் பாடி வெளியிட்டதோ ‘சுந்தரர் உலா’. சுந்தரர் திருத்தொண்டத்தொகை பாடுவதற்காகவே அவதரித்தவர் என்று பெரியபுராணம் கூறுகிறது. அது போல் சொக்கலிங்கனார் பின்னால் ‘சேய்த்தொண்டத் தொகை’ பாடுவதற்கென்றே சுந்தரரிடம் ஆசியும் ஆற்றலும் பெறவே போலும் ‘சுந்தரர் உலா’ பாடியருளினார். இந்தத் திருவருளைப் புரிந்து கொண்டு தான் போலும் தணிகைமணியார் இவரிடம் சேய்த் தொண்டர் புராணம் பாடப்பணிந்து வேண்டினார்.

இவ்வாறாக மதுரைச் சொக்கலிங்கம் நல்லதொரு வேண்டுகோளுக்கு இரங்கி களவியல் நூல் அருளியது போல, தேனூர் சொக்கலிங்கம் நல்லதொரு வேண்டுகோளுக்கு இணங்கி சேய்த் தொண்டர் புராணம் அருளினார்.

தேனூரின் சொக்கனும் தென்மதுரைச் சொக்கனும்
ஆனால் இருவரும் ஒவ்வுவரே - மானே
ஒருவன் களவியல் நூல் சேய்த்தொண்டர் நூலை
ஒருவன் உவந்தளித்த தால்.

என்று பாடிப் பரவ வேண்டும் என்று தோன்றுகிறது.

பெரியபுராணம் பாடிய சேக்கிழாரும் ஓராண்டில் அதனை முடித்தார் என்று அறிகிறோம். அதே போல தேனூர் சொக்கலிங்கனாரும் சேய்த் தொண்டர் புராணத்தை ஓராண்டில் முடித்திருக்கிறார்.

சேக்கிழாருக்கு இல்லாத பல முட்டுப்பாடுகள் தேனூர் சொக்கலிங்கனாருக்கு உண்டு. சேக்கிழாருக்கு பெரிய புராண அடியார்கள் பற்றிய குறிப்புகளைக் கொடுக்க சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் இருந்தன.

தேனூராருக்கு இவை இரண்டும் இல்லை. அதோடு சேக்கிழார் முதலமைச்சராய் இருந்ததால் தனக்குக் கிடைத்த அடியார்களைப் பற்றிய தகவல்களை ஊர் ஊராகச் சென்று சரி பார்த்துக் கொள்ளும் வசதி இருந்தது. தேனூராருக்கு அதுவும் இல்லை.

எனவே முருகனடியார்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதை இவரே செய்ய வேண்டி இருந்தது. அதன்பின் சேய்த்தொண்டத்தொகை ஒன்றும், சேய்த்தொண்டர் திருவந்தாதியும் பாடி அவற்றை விரித்து சேய்த்தொண்டர் புராணத்தை 3333 பாடல்களில் பாட வேண்டி இருந்தது. ஆக, எல்லாத் தகவல்களும் இவருக்கு முருகன் இதயத்தில் திருவடி பதித்து பத்தியையும், மூளையில் திருவடி பதித்து பாடும் ஆற்றலையும் ஊட்டிட இவர் அருளியது தான் இந்த சேய்த்தொண்டர் புராணம் என்னும் போது நமது கண்கள் வியப்பால் அகல விரிகின்றன!

சேய்த்தொண்டத் தொகை பாடி அதன்பின் சேய்த்தொண்டர் புராணம் பாடுங்கள் என்று இவருக்குக் குறிப்பு கொடுத்ததும் தணிகை மணி செங்கல்வராய பிள்ளை தாம் என்று அறிகிறோம். இவையெல்லாம் முருகனருளால் தான் நடை பெறுகின்றன என்பதற்கு இலை மறை காய் மறையாகப் பல சான்றுகள் கிடைக்கின்றன.

(செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.ச அவர்கள் எழுதியது.)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum