Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு!
3 posters
Page 1 of 1
ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு!
சென்னை : மாநகராட்சி மலிவு விலை உணவகங்களில், இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை ஒரு கோடியை எட்டி விடும் என, எதிர்பார்க்கப் படுகிறது. நேற்று வரை, 94 லட்சம் இட்லிகள் விற்று தீர்ந்துள்ளன.
சென்னையில், கடந்த பிப்., 19 முதல், அர” நடத்தும் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் இதுவரை, 200 உணவகங்கள் திறக்கப் பட்டு உள்ளன. இவற்றில், 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 3 ரூபாய்க்கு தயிர் சாதம் விற்கப்படுகின்றன.
தரத்தில் குறையில்லை:
"எக்காரணம் கொண்டும், உணவின் தரத்தில் எந்த குறைபாடும் வரக்கூடாது; சுகாதார அலுவலர்கள், பொறுப்பாளர்கள், சாப்பிட்டு பார்த்த பின்பே, விற்பனையை துவங்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறைந்த விலையில், தரமான உணவு கிடைப்பதால், மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். கூலி தொழிலாளர் மட்டுமின்றி, அரசு, தனியார் மற்றும் ஐ.டி., நிறுவன ஊழியர்களும், உணவகங்களில் நீண்ட வரிசையில் காத்து நின்று, உணவை ருசித்து செல்கின்றனர்.ஒவ்வொரு உணவகத்திலும், தினசரி 1,000 முதல், 3,500 வரை இட்லிகள் விற்பனையாகின்றன. இதை ஒப்பிடுகையில், சாம்பார் சாதம், 250 முதல், 350 வரை மற்றும் தயிர் சாதம், 100 முதல், 300 வரைதான் விற்பனையாகின்றன. சென்னையில் உள்ள 200 மலிவு விலை உணவகங்களிலும், விற்பனையில் முதல் இடம் பிடித்துள்ள இட்லி, தினசரி, மூன்று லட்சம் வரை விற்கப்படுகிறது.அதிகபட்சமாக, கடந்த 20ம் தேதி, சனிக்கிழமையன்று, 3.16 லட்சம் இட்லிகளும், 64,121 சாம்பார் சாதமும், 25,389 தயிர் சாதமும் விற்பனையாயின.
தொடங்கப்பட்டு 54 நாட்களே ஆன இந்த உணவகங்களில், கடந்த 21ம் தேதி வரை, 91,12,880 இட்லிகளும், 19,33,561 சாம்பார் சாதமும், 12,21,045 தயிர் சாதமும் விற்பனையாகி உள்ளன. மொத்தம், 2.24 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது.நேற்று, மூன்று லட்சம் இட்லிக்கும் மேல் விற்று, இட்லி விற்பனை, 94 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில், இட்லி விற்பனை எண்ணிக்கை, ஒரு கோடியை எட்டி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மலிவு விலை உணவகங்கள், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தரத்தில் எந்த குறையும் வராதபடி கண்காணித்து வருகிறோம். இன்னும் ஐந்து மாதங்களில், மேலும் சில மலிவு விலை உணவ கங்கள் திறக்கப்படும்' என்றார்.
புதினா சட்னியா, ஊறுகாயா?
மலிவு விலை உணவகங்களில், தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டு கொள்ள ஊறுகாய் கொடுத்தால் நன்றாக இருக்கும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசுக்கு, இது தொடர்பாக பரிந்துரை அளித்து உள்ளோம். உரிய அனுமதி கிடைத்ததும் செயல்படுத்துவோம்' என்றனர்.
"எங்களுக்கு கிடைக்கல':
ஆலந்தூர் மண்டலம், 159வது வார்டு மீனம்பாக்கம் குடியிருப்பு பகுதியில், ஒரு மலிவு விலை உணவகம் உள்ளது. இங்கு சமையல் அறை இல்லாததால், 166வது வார்டு உணவகத்தில் இருந்து இட்லி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் ஆயிரம் இட்லி மட்டுமே 159வது வார்டு உணவகத்திற்கு வருகிறது.மலிவு விலை உணவகத்தில், காலை 7:00 முதல் 10:00 மணி வரை இட்லி விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், 159வது வார்டில், குறைந்த எண்ணிக்கையில் இட்லிகள் விற்கப்படுவதால், காலை 9:00 மணிக்கே விற்பனை முடிந்து விடுகிறது. இதனால், காலை உணவருந்த வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "159வது வார்டு, மலிவு விலை உணவகத்திற்கு சரியான இடம் கிடைக்காமல் பெரும் சிக்கலுக்கு மத்தியில் திறந்தோம். சமையல் அறையுடன் சேர்த்து உணவகம் திறக்க இடம் தேடி வருகிறோம். விரைவில் திறக்கப்படும். அப்போது இந்த பிரச்னை தீர்க்கப்படும்' என்றார
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு!
குஸ்பு இட்லி , ரவா இட்லி , பீர் இட்லி , மோர் இட்லி இதெல்லாமே சாப்பிட்ருக்கோம் இதமட்டும் விட்டுடுவோமா என்ன ரெண்டு நாள் என்ன ஒருநாளுலையே ரெண்டு கோடியை தாண்டலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஒரு கோடி : இரண்டு நாட்களில் எட்ட உள்ள இலக்கு!
ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருப்பதால் மகிழ்ச்சி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» ஆவணி மாத பட்டு விற்பனை, இலக்கு ரூ.1.50 கோடி
» 15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு
» இரண்டு நாட்களில் 135 கி.மீ ஓட்டம்! – சாதனையில் இணையும் சென்னை இளைஞர்!
» இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம்
» இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?
» 15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு
» இரண்டு நாட்களில் 135 கி.மீ ஓட்டம்! – சாதனையில் இணையும் சென்னை இளைஞர்!
» இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் குறையும்: வானிலை ஆய்வு மையம்
» இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|