ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை

2 posters

Go down

கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை Empty கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை

Post by யினியவன் Tue Apr 23, 2013 3:43 am

கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை

BBC தமிழ் - மார்ச் 08

மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு மிகப்பெரும் மறுசுழற்சி தொழிற்சாலைக் கட்டிடம் ஒன்று தைவானில் உருவாகிவருகிறது.

உலக அளவில் மனிதர்கள் உருவாக்கும் பல்வேறுவகையான கழிவுகள், மனிதர்களுக்கு மாபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இந்த தலைவலி, தைவான் நாட்டை கடுமையாக பாதித்ததன் விளைவு, அந்த நாட்டு அரசாங்கம் அந்த கழிவுகளையே தங்களின் தேவைகளுக்கான மூலப்பொருளாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

தைவான் தீவு சுமார் பதினான்காயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட ஒரு குட்டித்தீவு. சுமார் இரண்டரை கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இந்தத் தீவின் பெரும்பகுதி மலைகள். அதனால் மக்கள் பயன்பாட்டுக்கான நிலப்பகுதி என்று பார்த்தால் மற்ற நாடுகளைவிட அங்கே குறைவு.

மின்னணுக்கழிவுகளால் மூழ்க இருந்த தைவான்

இந்த பின்னணியில் உலக புகழ்பெற்ற மின்னணு தொழில் நிறுவனங்கள் பலவும் தங்களின் உற்பத்தி நிலையங்களை தைவான் நாட்டில் வைத்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், தைவான் நாட்டு மக்கள், உலக அளவில் மின்னணு சாதனங்களை அதிகம் பாவிப்பவர்களாகாவும், அவற்றை அடிக்கடி மாற்றிக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதனால் உருவாகும் மின்னணுக்கழிவுகள் தைவான் நாட்டில் மிக மிக அதிகம். இவற்றை இதற்கு முன்னர் வெறுமனே நிலத்தின் மிகப்பெரிய பள்ளங்களில் இட்டு நிரப்பிவந்த தைவான் நாட்டு அரசுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதில் பெரும் சிக்கல் உருவானது. இருக்கும் பள்ளங்களையெல்லாம் நிரப்பிவிட்ட நிலையில், இந்த குப்பைகளை கொட்டுவதற்கு தைவானில் புதிய நிலமோ பள்ளங்களோ இல்லை.

எனவே 2010 ஆம் ஆண்டு முதல் தைவானில் உருவாகும் குப்பைகளை நிலத்தில் புதைக்கும் பழக்கத்தை அந்நாட்டின் அரசாங்கம் முற்றாக தடை செய்து உத்தரவிட்டது. அன்று முதல் தைவானில் உருவாகும் மின்னணு குப்பைகளும் முழுமையாக மறுசுழற்சி செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மறுசுழற்சிக்கு மாற்றில்லை

இதன் ஒருபகுதியாக கணிணிகளின் மதர்போர்ட்களில் இருக்கும் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. அதில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட மற்றவை தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. இப்படி பிரிக்கப்படும் உலோகங்கள் அனைத்துமே பிறகு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படி பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்களின் இருக்கைகள் என்று பல உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் உச்சகட்டமாக, துணிகள் கூட மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய துணிவகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த முயற்சிகளின் அடுத்த கட்டமாக இப்படி மறு சுழற்சி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டே கட்டும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இதில் மறுசுழற்சி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு ஒட்டுமொத்த கட்டிடமும் கட்டப்பட இருப்பதாக கூறுகிறார் இந்த கட்டிட வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கும் தைவானின் பிரபல கட்டிடகலைஞர் ஆர்தர் ஹவுங்.

இந்த கட்டிடத்தின் சுவர்கள் வெளியில் இருக்கும் சூரியஒளியை உள்ளே விடும்படியானதாக இருக்கும் என்று கூறும் அவர், இந்த கட்டிடம் கடும்புயலை தாங்கும் அளவுக்கு உறுதியாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

இந்த கட்டிடம்தான் உலக அளவில் முழுக்க முழுக்க மறுசுழற்சி முறையில் பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்ட மிகப்பெரிய மறுசுழற்சி தொழிற்சாலை என்று வர்ணிக்கும் ஆர்தர், மனிதர்கள் உருவாக்கிய மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளாக பார்க்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகளுக்கு தைவான் கண்டிருக்கும் இந்த தீர்வு உலகின் மற்ற நாடுகளுக்கான முக்கிய முன்னுதாரணமாக இருக்கும் என்கிறார்.

கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை 130308185214taiwanrecyc



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை Empty Re: கழிவிலிருந்து ஒரு கண்ணாடி மாளிகை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Apr 23, 2013 8:16 am

மிகவும் நன்று மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum