ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா-மகள் நட்பு

+2
kannammak62
Powenraj
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அம்மா-மகள் நட்பு Empty அம்மா-மகள் நட்பு

Post by Powenraj Sun Apr 21, 2013 4:50 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/c2255c9d-cd71-4d8b-a055-9973e4cd12c5_S_secvpf.gif
* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்?
* அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்?
* அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்?
இப்படி பல கேள்விகளுக்கும் விடை, தாய்-மகள் இருவரும் காட்டும் பாசத்தில், அந்த அன்யோன்யத்தில் தான் இருக்கிறது. தாயின் கடுமையான கண்டிப்பு தான் ஒரு பெண்ணை சரியாக வழிநடத்தும் என்பதில் ஒரு மிலிட்டரி கட்டுப்பாடு தான் எட்டிப் பார்க்கும். அனுபவரீதியாக பார்த்தால் அந்த கண்டிப்பு பெரும்பாலும் தோல்வியில் தான் முடிந்திருக்கும்.
ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு பிறகு பெண்களுக்கு அறிவுரை பிடிக்காது. கண்டிப்பும் பிடிக்காது. பின் எப்படித்தான் வழி நடத்துவது? தாயானவள் தன் மகளிடம் காட்டும் உன்னத நட்பின் மூலமாகத் தான் இதைசாதிக்க முடியும். தாய்-மகளின் உறவு சிநேகிதி அந்தஸ்தை அடையும்போது கண்டிப்பான அறிவுரை கூட மகளால் நல்ல ஆலோசனையாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
'வயசுப் பெண்ணை வீட்டில் வைத்திருப்பது மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போல'என்ற உதாரணத்தை இன்றைக்கும் கிராமங்களில்கேட்க முடியும். மடி சுமந்த பிள்ளை எப்போது உங்கள் கைமீறியது? எதனால் மீறியது? யோசித்துப் பார்த்தால் நீங்கள் எப்போது கண்டிப்பு என்ற அஸ்திரத்தை அளவுக்கு மீறி பிரயோகிக்க ஆரம்பித்தீர்களோ, அப்போது முதல் தான் அந்த கெட்ட ஆட்டம் ஆரம்பித்திருக்கும்.
எப்போதும் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு தொட்டதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருப்பது. தேவையற்ற சந்தேகங்களை மனதில் ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் போகும் இடமெல்லாம் தொடர்வது இதெல்லாம் உங்கள் பெண்ணின் மனதில் உங்களை தரம் தாழ்த்தி விடும். இதுவே தொடரும்போது ஒரு கட்டத்தில் இம்மாதிரியான வதந்தியை உண்மையாக்கினால்தான் என்ன என்கிற அளவுக்குக் கூட அவர்கள் போய்விடும் அபாயம் உண்டு.
கண்ணாடியில் முகம் பார்க்கிறீர்கள். சோர்வாக இருந்தால் கண்ணாடி உடனே காட்டிக் கொடுத்து விடும்.உடனே சிற்சில ஒப்பனைகள் மூலம் சோர்வை சரி செய்து விடலாம். ஆனால் உங்கள் மனக்கண்ணாடி தான் உங்கள் பெண். அதில் சந்தேகம் என்ற கல்லை எடுத்து தேவையில்லாமல் கீறல் விழுந்து போகும் காரியத்தை செய்து விடாதீர்கள்.
இதனால் உங்கள் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, நாளடைவில் பலவிதமான வியாதிகளுக்கு ஆட்பட்டு விடு வார்கள். பெண் குழந்தைகளைப் பற்றிய தேவையற்ற சிந்தனைகளை தூரம் தள்ளுங்கள். அவர்கள்எதிர்காலம் என்னாகும் என்ற பயத்தை அப்பு றப்படுத்துங்கள். நல்ல சிநேகிதியாக எப்போதும் அவர்களிடம் கலகலப்பாக மனம் விட்டுப் பேசுங்கள்.
நாளடைவில் அவர்களும் ஒரு நல்ல தோழியாக உங்களை நேசிக்க துவங்குவார்கள். இந்த நேசம் உங் களுக்குள் ஒரு நெருக்கமான பிணைப்பை உருவாக்கும். அந்த பிணைப்பு அவர்களை உங்களிடம் வெளிப்படையாக நடக்கத் தூண்டும். பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் ஒளிவு மறைவே இருக்காது. பின் அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் நேராது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த ஏதேனும் ஒரு விஷயம் உங்களை வெகுவாக பாதித்திருந்தால் அதனை அவர்களிடம் மனம் விட்டு பேசலாம். அது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அனுபவங்களே ஒருவருடைய அறிவை விசாலமாக்கும். இளையபருவத்தில் உங்களுக்கு எதிர்பாராமல் ஒரு கசப்பான அனுபவம் கிடைத்திருக்கலாம்.
நேர்ந்த அந்த பாதிப்பை மட்டும் தவிர்த்து, 'நல்லவேளை அந்த நேரத்தில் தெய்வாதீனமாக தப்ப முடிந்தது' என்பதாக சொல்லிஅவர்களை அலர்ட்டாக இருக்க செய்யலாம். இம்மாதிரியான ஆலோசனைகள் அவர்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்கும்மனப் பக்குவத்தைக் கொடுக்கும். ஒரேநாளில் மொத்த அனுபவங்களையும் அவர்களிடம் புகுத்த முயற்சிக்காதீர்கள்.
அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைக்கு தக்க அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுடைய நம்பிக்கை பலப்படும். பெண்கள் சில சமயம் மனதில் எதையாவது மறைத்து தனக்குத் தானே தீர்வு தேடிக் கொள்ள விரும்புவார்கள். அந்த நேரத்தில் முறையான பகிர்தல் இருந்தால் பிரச்சினைகளை எளிமையாக்கிக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு உங்கள் பெண் பள்ளிக்கோ கல்லூரிக்கோ போகும் நேரத்தில் டென்ஷனை ஏற்படுத்துகிற அளவுக்கு ஒரு இளைஞன் ஒருதலை ராகத்துடன் தொடரலாம். ஆனால் அதை பெற்றோர் எப்படிஎடுத்துக் கொள்வார்களோ என்ற எண்ணத்தில் சில பெண்கள் அதை பெற்றோரிடம் சொல்லாமல் தவிர்க்கலாம். தாய், மகள் நட்பு என்பது எப்போதும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பைத் தருவது.
ஒரு பெண் வீட்டுக்குள் எப்படி இருக்கிறாள் என்பது எளிதில் தெரிந்துவிடும். ஆனால் வெளியில் போய் என்ன செய்கிறாள், யார் யாருடன் பழகுகிறாள், எங்கெங்கே செல்கிறாள் என்று அவளுடைய செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இதையெல்லாம் தாயிடம் பகிர்ந்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்தால் தான் அவர்களே இளைஞன் பின்தொடரும் விஷயம்வரை அம்மாவிடம் மனம் விட்டு பேசத் தொடங்கி விடுவார்கள்.
அப்புறம் பிரச்சினை ஏது? பின்தொடருதல் ஏது? ஒருவேளை வயதுக்கேற்ற குறும்பில் பாய்பிரண்ட் போன்ற கலாசாரங்களில் சிக்கி, தவறான பாதைக்குள் சில பெண்களின் பயணம் தொடரத் தலைப்பட்டால், அவர்களை பாதுகாத்து வழிநடத்த இந்த 'அம்மா நட்பு' துணையாக இருக்கும். உண்மையான அன்பும், நேசமும், துளியும் சந்தேகத்திற்கு இடம் கொடுக்காது.
சந்தேகம் என்பது நல்ல நட்பை பிளவு படுத்தும் ஆயுதம். இந்த ஆயுதத்தை எப்போதும் நாம் பிரயோகப்படுத்தக் கூடாது. அது மனதளவிலும் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். நன்மை, தீமைகளை பகுத்தறிந்து உணரும் ஆற்றலை நாம் அவர்களுக்கு கொடுத்தால் மட்டும் போதுமானது. சில தவறுகள் எந்த வகையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தக்க உதாரணங்களோடு நாம் அவர்களுக்கு விளக்கி அவர்களை தவறுகளிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.
வெளிப்படையான நட்பு பல பிரச்சினைகளுக்கு அப்போதேஉரிய தீர்வை சொல்லி விடுகிறது.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by kannammak62 Sun Apr 21, 2013 4:57 pm

நன்றி
kannammak62
kannammak62
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by ஜாஹீதாபானு Sun Apr 21, 2013 6:25 pm

பெண் குழந்தைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு நன்றி

நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by யினியவன் Sun Apr 21, 2013 6:28 pm

ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by யினியவன் Sun Apr 21, 2013 6:28 pm

நல்ல பகிர்வு பவுன்ராஜ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by ஜாஹீதாபானு Sun Apr 21, 2013 6:39 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை

சும்மாவே என் சமையல நக்கல் பண்ணுவா நீங்க வேற எடுத்துக் குடுக்குறிங்களாக்கும்...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by பாலாஜி Mon Apr 22, 2013 12:34 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நானும் என் மகளிடம் தோழி போல் தான் பழகுகிறேன்...
வடை மட்டும் பண்ணிடாதீங்க - எதிரியா ஆயிடுவாங்க புன்னகை

சும்மாவே என் சமையல நக்கல் பண்ணுவா நீங்க வேற எடுத்துக் குடுக்குறிங்களாக்கும்...

இல்லையான மட்டும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 22, 2013 12:39 pm

பானுவுக்கும் வடைக்கும் என்ன அப்படி ஒரு தொடர்பு ?!!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by பாலாஜி Mon Apr 22, 2013 12:40 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பானுவுக்கும் வடைக்கும் என்ன அப்படி ஒரு தொடர்பு ?!!

இது ஒரு பெரிய கதை ... ஒரு திரியே உள்ளது ... அதை நீங்க பார்க்கவில்லையா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 22, 2013 12:43 pm

இல்லையே பாலாஜி ....நான் பானு என்றால் பிரியாணியைத்தான் நினைத்தேன்...அதிலும் ஆம்பூர் பிரியாணி. இந்த வடை சமாச்சாரம் எனக்கு முழுமையாகத் தெரியவில்லை...அந்த லிங்க் கொஞ்சம் கொடுங்களேன் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அம்மா-மகள் நட்பு Empty Re: அம்மா-மகள் நட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum