புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_vote_lcapஉயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_voting_barஉயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_vote_lcapஉயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_voting_barஉயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_vote_lcapஉயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_voting_barஉயர்ந்ததை தியாகம் செய்வோம்! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்ததை தியாகம் செய்வோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:17 pm

உயர்ந்ததை தியாகம் செய்வோம்! E_1365758164

தமிழ் புத்தாண்டின் முதல்மாதம் சித்திரை. ஆண்டின் ஆரம்பத்தில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுதிமொழி ஏற்பர். இந்தாண்டு வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும். கடந்த ஆண்டை விட, தொழிலில் லாபத்தை அதிகப்படுத்த வேண்டும். பதவி உயர்வை அடைந்தே தீர வேண்டும். இப்படியாக லாபம் கருதி, அந்த உறுதிமொழிகள் அமையும். ஆனால், "எனக்கு கிடைக்க வேண்டிய உயர்ந்த லாபம் ஒன்றை, உலகத்துக்காக அளிக்கிறேன்...' என்ற தியாக மனப்பான்மை, யாருக்காவது வருமா! வந்ததே... ஒரு மாமுனிவருக்கு. உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், உள்ளத்தில் உயர்ந்த அந்த முனிவரே அகத்தியர்.
கயிலை மலையில், சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடக்க ஏற்பாடாயிற்று. தென்னகமே திரண்டு அங்கே போயிற்று. இதனால், பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. இந்த இடத்தில், ஒரு சந்தேகம் எழும். உருண்டையான உலகத்தில் உயர்வு தாழ்வு என்பது ஏது? தட்டையாக இருந்தால் தானே இது சாத்தியம் என்று கேட்பர்.
ஒன்றை சிந்திக்க வேண்டும். இந்தக் காலத்தில் நடக்க வில்லை என்பதற்காக, எந்தக் காலத்திலும் நடக்கவில்லை என, எதையும் சொல்ல முடியாது. டயனோசர் என்ற பெரிய விலங்கு பற்றி பேசுகிறோம். நம் கோவில் தூண்களில், யாழி என்ற வித்தியாசமான விலங்கைப் பார்க்கிறோம். அவை இப்போது இல்லை; அப்போதும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்! மனித முகமும், மிருக உடலும் கொண்ட புருஷாமிருகம் என்ற ஒன்று இருந்ததாகக் கூட புராணங்களில் இருக்கிறது. உயிரினங்களில் மட்டுமல்ல, பூகோள ரீதியாகவும், பூமி எப்படியோ மாறியிருக்கிறது. உலகம் என்பது அழியும் பொருள். சில யுகங்களுக்கு முன், இப்படி நிகழ்ந்திருக்கக் கூடும். அதையே முன்னோர் எழுதி வைத்துள்ளனர். இன்று நாம் எழுதி வைப்பதை, நம் எதிர்கால தலைமுறையினர் படித்து, இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா என்று ஆராய்ச்சி செய்வது இயல்பே. அதற்காக, இன்று நடந்த உண்மையை எதிர்காலத்தில் பொய் என்று சொன்னாலும் அது உண்மையே.
அயோத்தியில் பிறந்த ராமர், ராமேஸ்வரம் வரை வந்ததாகப் படிக்கிறோம். எங்கள் ஊருக்கு கிருஷ்ணர் வந்தார், முருகன் வந்தார், பிள்ளையார் வந்தார் என்று சம்பந்தமில்லாத இடங்களுக்கு கூட வந்ததாக தல புராணங்களில் எழுதியிருப்பர். அவ்வாறு சொல்வதன் மூலம், அந்த புண்ணிய தெய்வங்களின் பாதம், தங்கள் ஊரில் பட்டதாக பெருமைப்படுவர். இதுபோன்ற விஷயங்களில், மக்கள் பெறுகின்ற திருப்தியைக் கெடுத்து, அவர்களுக்கு புத்தி கலக்கத்தை உண்டாக்கக் கூடாது என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லி இருக்கிறார்.
இருக்கட்டுமே! அகத்தியர் என்ற மாமுனிவர், அவரவர் ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் கயிலையில் தரிசிக்க வேண்டிய திருமணக் காட்சியை சென்னை துவங்கி, கோடியக்கரை போய், தெற்கே இருக்கிற பொதிகைமலை அடிவார பாபநாசம் வரை இழுத்து வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம்.
அந்தக் கதை முக்கியமல்ல! அதில் புதைந்து கிடக்கும் சாராம்சமே முக்கியம். கடவுளின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது. "அந்த அரிய சந்தர்ப்பத்தை நீ விட்டுக் கொடுத்தால், நீ போகுமிடமெல்லாம் என் திருமணக்காட்சியைக் காட்டுவேன்...' என்று ஒரு பரீட்சை வைத்தார் சிவன். உலக மக்களெல்லாம் அந்த காட்சியைக் கண்டு மோட்சம் பெறட்டுமே என்ற நல்லெண்ணத்
துடன், தான் பெற வேண்டிய அரிய காட்சியை தியாகம் செய்தார் அகத்தியர்.
அதுமட்டுமா... உலகத்தில் ஏழை, பணக்காரர், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று, ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன; இன்றும் இருக்கின்றன. இவையெல்லாம் நீங்கி, உலகமக்கள் சம அந்தஸ்து பெற வேண்டும் என்ற உயர்ந்த தத்துவமும் இந்நிகழ்ச்சியில் புதைந்து கிடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில், சித்திரை விஷுஅன்று இரவில், சிவனின் கயிலைத் திருமணக்காட்சியை, அகத்தியர் காணும் நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நல்ல நாளில், பிறருக்காக தியாகம் செய்யும் நல்ல பண்பை வளர்த்துக் கொள்ள உறுதி எடுப்போம்.

நன்றி : வார மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:27 pm

ஆண்கள் அதான் கல்யாணம் செஞ்சிட்டு
வாழ்க்கையவே தியாகம் பன்றாங்கம்மா புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:29 pm

யினியவன் wrote:ஆண்கள் அதான் கல்யாணம் செஞ்சிட்டு
வாழ்க்கையவே தியாகம் பன்றாங்கம்மா புன்னகை

புன்னகை அது சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:31 pm

சிவன் ஊரெல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தராரு
நாங்க வீட்ல கூட காட்சி தர முடியலம்மா முடியல புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:40 pm

யினியவன் wrote:சிவன் ஊரெல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தராரு
நாங்க வீட்ல கூட காட்சி தர முடியலம்மா முடியல புன்னகை

அதுக்கு பதில் அவர் மகன் வேஷத்தை வீட்டில் போடும்படி இருக்கோ ?????????????? கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:43 pm

முருகனா? - கிழிஞ்சது போங்க
வினாயகராவே இருந்திருக்கலாமோன்னு தோனுதும்மா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 20, 2013 9:03 am

யினியவன் wrote:முருகனா? - கிழிஞ்சது போங்க
வினாயகராவே இருந்திருக்கலாமோன்னு தோனுதும்மா புன்னகை

முருகன் என்று சும்மா சொல்லக்கூடாது ............... ஸ்பஷ்டமாக 'பழனியாண்டி ' என்று சொல்லணும் ............ ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 20, 2013 12:53 pm

யினியவன் wrote:ஆண்கள் அதான் கல்யாணம் செஞ்சிட்டு
வாழ்க்கையவே தியாகம் பன்றாங்கம்மா புன்னகை

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக