புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_m10உயர்ந்ததை தியாகம் செய்வோம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்ததை தியாகம் செய்வோம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:17 pm

உயர்ந்ததை தியாகம் செய்வோம்! E_1365758164

தமிழ் புத்தாண்டின் முதல்மாதம் சித்திரை. ஆண்டின் ஆரம்பத்தில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு உறுதிமொழி ஏற்பர். இந்தாண்டு வீடு வாங்க வேண்டும். கார் வாங்க வேண்டும். கடந்த ஆண்டை விட, தொழிலில் லாபத்தை அதிகப்படுத்த வேண்டும். பதவி உயர்வை அடைந்தே தீர வேண்டும். இப்படியாக லாபம் கருதி, அந்த உறுதிமொழிகள் அமையும். ஆனால், "எனக்கு கிடைக்க வேண்டிய உயர்ந்த லாபம் ஒன்றை, உலகத்துக்காக அளிக்கிறேன்...' என்ற தியாக மனப்பான்மை, யாருக்காவது வருமா! வந்ததே... ஒரு மாமுனிவருக்கு. உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், உள்ளத்தில் உயர்ந்த அந்த முனிவரே அகத்தியர்.
கயிலை மலையில், சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடக்க ஏற்பாடாயிற்று. தென்னகமே திரண்டு அங்கே போயிற்று. இதனால், பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. இந்த இடத்தில், ஒரு சந்தேகம் எழும். உருண்டையான உலகத்தில் உயர்வு தாழ்வு என்பது ஏது? தட்டையாக இருந்தால் தானே இது சாத்தியம் என்று கேட்பர்.
ஒன்றை சிந்திக்க வேண்டும். இந்தக் காலத்தில் நடக்க வில்லை என்பதற்காக, எந்தக் காலத்திலும் நடக்கவில்லை என, எதையும் சொல்ல முடியாது. டயனோசர் என்ற பெரிய விலங்கு பற்றி பேசுகிறோம். நம் கோவில் தூண்களில், யாழி என்ற வித்தியாசமான விலங்கைப் பார்க்கிறோம். அவை இப்போது இல்லை; அப்போதும் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்! மனித முகமும், மிருக உடலும் கொண்ட புருஷாமிருகம் என்ற ஒன்று இருந்ததாகக் கூட புராணங்களில் இருக்கிறது. உயிரினங்களில் மட்டுமல்ல, பூகோள ரீதியாகவும், பூமி எப்படியோ மாறியிருக்கிறது. உலகம் என்பது அழியும் பொருள். சில யுகங்களுக்கு முன், இப்படி நிகழ்ந்திருக்கக் கூடும். அதையே முன்னோர் எழுதி வைத்துள்ளனர். இன்று நாம் எழுதி வைப்பதை, நம் எதிர்கால தலைமுறையினர் படித்து, இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா என்று ஆராய்ச்சி செய்வது இயல்பே. அதற்காக, இன்று நடந்த உண்மையை எதிர்காலத்தில் பொய் என்று சொன்னாலும் அது உண்மையே.
அயோத்தியில் பிறந்த ராமர், ராமேஸ்வரம் வரை வந்ததாகப் படிக்கிறோம். எங்கள் ஊருக்கு கிருஷ்ணர் வந்தார், முருகன் வந்தார், பிள்ளையார் வந்தார் என்று சம்பந்தமில்லாத இடங்களுக்கு கூட வந்ததாக தல புராணங்களில் எழுதியிருப்பர். அவ்வாறு சொல்வதன் மூலம், அந்த புண்ணிய தெய்வங்களின் பாதம், தங்கள் ஊரில் பட்டதாக பெருமைப்படுவர். இதுபோன்ற விஷயங்களில், மக்கள் பெறுகின்ற திருப்தியைக் கெடுத்து, அவர்களுக்கு புத்தி கலக்கத்தை உண்டாக்கக் கூடாது என்று கிருஷ்ணரே கீதையில் சொல்லி இருக்கிறார்.
இருக்கட்டுமே! அகத்தியர் என்ற மாமுனிவர், அவரவர் ஊருக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் கயிலையில் தரிசிக்க வேண்டிய திருமணக் காட்சியை சென்னை துவங்கி, கோடியக்கரை போய், தெற்கே இருக்கிற பொதிகைமலை அடிவார பாபநாசம் வரை இழுத்து வந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம்.
அந்தக் கதை முக்கியமல்ல! அதில் புதைந்து கிடக்கும் சாராம்சமே முக்கியம். கடவுளின் திருமணத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் யாருக்கும் கிடைக்காது. "அந்த அரிய சந்தர்ப்பத்தை நீ விட்டுக் கொடுத்தால், நீ போகுமிடமெல்லாம் என் திருமணக்காட்சியைக் காட்டுவேன்...' என்று ஒரு பரீட்சை வைத்தார் சிவன். உலக மக்களெல்லாம் அந்த காட்சியைக் கண்டு மோட்சம் பெறட்டுமே என்ற நல்லெண்ணத்
துடன், தான் பெற வேண்டிய அரிய காட்சியை தியாகம் செய்தார் அகத்தியர்.
அதுமட்டுமா... உலகத்தில் ஏழை, பணக்காரர், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று, ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருந்தன; இன்றும் இருக்கின்றன. இவையெல்லாம் நீங்கி, உலகமக்கள் சம அந்தஸ்து பெற வேண்டும் என்ற உயர்ந்த தத்துவமும் இந்நிகழ்ச்சியில் புதைந்து கிடக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில், சித்திரை விஷுஅன்று இரவில், சிவனின் கயிலைத் திருமணக்காட்சியை, அகத்தியர் காணும் நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நல்ல நாளில், பிறருக்காக தியாகம் செய்யும் நல்ல பண்பை வளர்த்துக் கொள்ள உறுதி எடுப்போம்.

நன்றி : வார மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:27 pm

ஆண்கள் அதான் கல்யாணம் செஞ்சிட்டு
வாழ்க்கையவே தியாகம் பன்றாங்கம்மா புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:29 pm

யினியவன் wrote:ஆண்கள் அதான் கல்யாணம் செஞ்சிட்டு
வாழ்க்கையவே தியாகம் பன்றாங்கம்மா புன்னகை

புன்னகை அது சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:31 pm

சிவன் ஊரெல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தராரு
நாங்க வீட்ல கூட காட்சி தர முடியலம்மா முடியல புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 19, 2013 9:40 pm

யினியவன் wrote:சிவன் ஊரெல்லாம் கல்யாண கோலத்தில் காட்சி தராரு
நாங்க வீட்ல கூட காட்சி தர முடியலம்மா முடியல புன்னகை

அதுக்கு பதில் அவர் மகன் வேஷத்தை வீட்டில் போடும்படி இருக்கோ ?????????????? கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:43 pm

முருகனா? - கிழிஞ்சது போங்க
வினாயகராவே இருந்திருக்கலாமோன்னு தோனுதும்மா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 20, 2013 9:03 am

யினியவன் wrote:முருகனா? - கிழிஞ்சது போங்க
வினாயகராவே இருந்திருக்கலாமோன்னு தோனுதும்மா புன்னகை

முருகன் என்று சும்மா சொல்லக்கூடாது ............... ஸ்பஷ்டமாக 'பழனியாண்டி ' என்று சொல்லணும் ............ ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 20, 2013 12:53 pm

யினியவன் wrote:ஆண்கள் அதான் கல்யாணம் செஞ்சிட்டு
வாழ்க்கையவே தியாகம் பன்றாங்கம்மா புன்னகை

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம் சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக