புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_c10தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_m10தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_c10தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_m10தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_c10 
2 Posts - 20%
heezulia
தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_c10தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_m10தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள்


   
   
balamani
balamani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/01/2013

Postbalamani Sun Apr 14, 2013 4:38 pm

தஞ்சைபெரியகோவில் :தெரியாததகவல்கள்

கோயில்எப்படிகட்டப்பட்டது ????என்றதகவல்உங்களுக்காக...

படிப்பதற்குபெரியதாகஉள்ளதுஎனபாதியில்நிறுத்திவிடவேண்டாம்..இதைஒவ்வொருதமிழனும்தெரிந்துகொள்ளவேண்டும் .தஞ்சாவூர்பெருவுடையார்கோயிலுக்குச்சிறப்புஅம்சங்கள்பலஉண்டு.இரண்டுஅல்லதுமூன்றுதளங்களைமட்டுமேகொண்டுகோயில்கள்கட்டப்பட்டுவந்தகாலத்தில், கற்களேகிடைக்காதகாவிரிசமவெளிப்பகுதியில், 15 தளங்கள்கொண்டசுமார் 60 மீட்டர்உயரமானஒருகற்கோயிலைராஜராஜன்எழுப்பியதுஎன்பதுமாபெரும்சாதனையே. அதுமட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கானசெப்புத்திருமேனிகள்என்றுபலபுதியஅம்சங்களையும்இத்திருக்கோயிலில்புகுத்திகோயில்கட்டும்கலையில்ஒருபுரட்சியைஏற்படுத்தியவன்ராஜராஜன்.

தஞ்சாவூர்பெரியகோயிலைப்பற்றிப்பலநூல்கள்வெளிவந்துள்ளன.ஆயினும்இவற்றில்முரண்பாடுகள்காணப்படுகின்றன.கோபுரத்தின்உயரம் 59.75 மீட்டர்முதல் 65.85 மீட்டர்வரைகுறிப்பிடப்பட்டுள்ளன.எனவேசோழர்காலஅளவுகளின்படிகோயிலின்திட்டமிடப்பட்டஉயரம்என்ன, கடைக்கால்கள்எந்தஅடிப்படையில்திட்டமிடப்பட்டன.கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள்முதலியனஇல்லாதஒருகாலத்தில்சுமார் 60 மீட்டர்உயரகோபுரம்எவ்வாறுகட்டப்பட்டது.இந்தகேள்விகளுக்குவிடைபெறநாம்ராஜராஜன்காலத்தில்கையாளப்பட்டஅளவுமுறைகளைப்பற்றிச்சற்றுதெரிந்துகொள்ளவதுஅவசியம்..


பெரியகோயில்அளவுகோல்...

எட்டுநெல்கதிர்களைஅகலவாட்டில்ஒன்றோடொன்றுநெருக்கமாகஅமைத்துஅந்தநீளத்தைவிரல், மானாங்குலம், மானம்என்றுஅழைத்தனர்.இருப்பத்திநான்குவிரல்தஞ்சைமுழம்என்றுஅழைக்கப்பட்டது.ஒருமுழமேஇருவிரல்நீட்டித்துபதினாறுவிரல்அகலத்து, ஆறுவிரல்உசரத்துபீடம், ஒருவிரலோடுஒருதோரைஉசரத்துபதுமம்என்றதிருமேனிபற்றியகுறிப்பைகாணலாம்.

தற்போதையஅளவின்படிஒருவிரல்என்பது 33 மில்லிமீட்டராகும்.கருவறைவெளிச்சுவர்களில்காணப்படும்கலசத்தூண்களின்அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர்ஆகும்.இதுவேதஞ்சாவூர்பெரியகோயிலின்அடிப்படைஅளவாகும்.இதனைநாம்அலகுஎன்றுகுறிப்பிடலாம்.இந்தஅடிப்படையில்விமானத்தின்திட்டமிட்டஉயரம் 180 அலகுகள்.அதாவதுசுமாராக 59.40 மீட்டர்.சிவலிங்கத்தின்உயரம்சரியாக 12 அலகுகள்.இதைப்போன்று 15 மடங்குஉயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர்என்பதேகோபுரத்தின்திட்டமிடப்பட்டஉயரம்.கருவறையின்இருதளங்களிலும்விமானத்தின்பதின்மூன்றுமாடிகளும்சேர்ந்து 15 தளங்கள்என்பதுஇங்குகுறிப்பிடத்தக்கது.அலகுகளின்அடிப்படையில்கருவறை 24 அலகுகள்கொண்டஒருசதுரம்.கருவறையின்உட்சுவரும், வெளிச்சுவரும்முறையே 48 அலகுகள், 72 அலகுகள்அளவுடையசதுரங்களாகும்.பிரகாரத்தில்நாம்காணக்கூடியவிமானத்தின்அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள்.இந்தஅடிப்படையில்விமானத்தின்கடைக்கால் 108 அலகுகள் (36 மீஷ் 36 மீ) பக்கஅளவுகொண்டபெரியசதுரமாகஇருக்கலாம்எனயூகிக்கமுடிகிறது.சரியானஅளவுகள்தெரியவில்லை.

இந்தகடைக்கால்மிகக்குறைந்தஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள்ஆழத்தில்அமைக்கப்பட்டுள்ளதுஎனத்தெரியவந்துள்ளது.கோயில்வளாகத்தின்அருகேபாறைதென்படுகிறது.ஆயினும்சுமார் 42,500 டன்எடையுள்ளவிமானத்தைபாறையின்தாங்குதிறனைச்சோதித்துப்பார்க்காமல்கட்டியிருக்கமாட்டார்கள்என்றுதோன்றுகிறது.சுமார்

1.2 மீஷ் 1.2 மீசதுரத்தில் 0.6 மீஷ் 0.6 ஷ் 0.6 மீஅளவுகற்களைஒவ்வொருஅடுக்கிலும்நான்குகற்கள்என்றகணக்கில்அடுக்கிக்கொண்டேபோய்பாறையில்எப்போதுவிரிசல்கள்விழுகின்றனஎன்பதைக்கவனித்தபின்னரேகடைக்காலின்அளவுகள்தீர்மானிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆயிரம்ஆண்டுகளுக்குமுன்பேபாறையின்மேல்வரும்அழுத்தம்குறித்தசோதனைகள்இக்கோயில்நிர்மாணித்தசிற்பிகள்மேற்கொண்டனர்என்பதுஇக்கோயிலின்மற்றொருசிறப்பம்சமாகும்.


பெரியகோயிலின்விமானவடிவமைப்பு

180 அலகுகள்உயரம்கொண்டகோயில்விமானம்எவ்வாறுகட்டப்பட்டதுஎன்பதுகுறித்தகுறிப்புகள்எதுவுமில்லை.சிலசாத்தியக்கூறுகள்மட்டுமேபரிசீலிக்கலாம்.கருவறையின்உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும்இடையே 6 அலகுகள்கொண்டஉள்சுற்றுப்பாதைஉள்ளது.இந்தஇடைவெளிபடிப்படியாகக்குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர்உயரத்தில்இருசுவர்களும்இணைக்கப்பட்டன.இங்கிருந்துவிமானம்மேலேஎழும்புகிறது.சுவர்களைஇணைத்ததன்மூலம் 72 அலகுகள்பக்கஅளவுகொண்ட (சுமார் 24 மீஷ் 24 மீ) ஒருபெரியசதுரமேடைகிடைக்கப்பெற்றது.விமானம் 13 தட்டுகளைக்கொண்டது.முதல்மாடியின்உயரம்சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவதுமாடியின்உயரம்சுமார் 1.92 மீ.பதின்மூன்றுமாடிகளின்மொத்தஉயரம் 32.5 மீட்டராகும்.பதின்மூன்றாவதுமாடியின்மேல்எண்பட்டைவடிவதண்டு, கோளம், கலசம்மூன்றும்உள்ளன.இதன்மொத்தஉயரம் 30 அலகுகள்.அதாவதுபிரகாரத்திலிருந்துவிமானத்தின் 13-வதுமாடிசரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில்உள்ளது.தஞ்சைசிற்பிகள்இந்தஉயரத்தைமூன்றுசமஉயரப்பகுதிகளாகப்பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறைமேல்மாடிஉயரம் 50 அலகுகள், விமானத்தின்முதல்மாடியிலிருந்து 5-வதுமாடிவரை 50 அலகுகள், விமானத்தின் 6-வதுமாடியிலிருந்து 13-வதுதளம்வரை 50 அலகுகள்.இந்தமூன்றுபகுதிகளுக்கும்அதன்உயரத்துக்கேற்பதனித்தனியானசாரஅமைப்புகள்அமைக்கத்திட்டமிட்டிருந்தனர்என்றுதெரிகிறது.


சாரங்களின்அமைப்பு

கருவறைக்குஒருகீழ்தளமும்ஒருமேல்தளமும்உள்ளன.மேல்தளத்தின்கூரைசரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில்உள்ளது.இங்குதான்முதல்கட்டசாரம் - ஒருசாய்வுப்பாதைமுடிவுற்றது.ஒன்றுக்குமேற்பட்டசாய்வுப்பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளதுதெரிகிறது.இவைபலஆண்டுகளுக்குநிலைத்துநிற்கும்வகையில்அமைக்கப்பட்டன.சாய்வுப்பாதையின்இருபக்கங்களிலும்கற்கள் - சுண்ணாம்புக்கலவைகொண்டுகட்டப்பட்டஉறுதியானசுவர்கள்இருந்தன.இந்தஇருசுவர்களுக்குநடுவில்உள்ளபகுதி (4 அல்லது 5 மீஅகலம்இருக்கலாம்) பெரியமற்றும்சிறியஉடைந்தகற்கள், துண்டுக்கற்கள்ஆகியவற்றால்நிரப்பப்பட்டன.மண்ணால்அல்ல. யானைகள்செல்வதற்குஏற்றமிதமானவாட்டத்துடன்அமைக்கப்பட்டன.மழைநீர்வடியவும்ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.கோயிலின்திருமதில்சுவரும் (சுமார் 1 மீகுறுக்களவுகொண்டது) இதேபாணியில்கட்டப்பட்டிருந்ததுஎன்பதுகுறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவதுகட்டமாக 50 முதல் 100 அலகுகள்வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர்உயரம்வரை) விமானம்கட்டுவதற்குச்சற்றுமாறுபட்டசாரம்தேவைப்பட்டது.இதுஅமைப்பில்சீனாவின்நெடுஞ்சுவர்போல்ஓர்அரண்மதில்சுவர்அமைப்பாகசெங்குத்தானஇருசுவர்களையும், அதன்நடுவேமுதல்கட்டசாரத்தைப்போல்யானைகள்செல்வதற்கேற்றவழித்தடத்தையும்கொண்டிருந்தது. விமானத்தின்நான்குபக்கங்களையும்சுற்றிச்செல்லுமாறுஅமைந்திருந்தஇந்தஅரண்மதில்சாரம், கோபுரம்உயரஉயரதானும்உயர்ந்துகொண்டேசென்றது.முதல்கட்டசாய்வுப்பாதையின்இறுதிகட்டமேடைச்சுவர்களுடன்இந்தஇரண்டாம்கட்டசாரத்தின்சுவர்கள்இணைக்கப்பட்டிருந்தன.இந்தகட்டுமானத்தின்அமைப்பில்மிகுந்தகவனம்தேவைப்பட்டது.இதுமட்டுமன்றிஇந்தஅரண்சுவர்களுக்குநிறையகற்களும்தேவைப்பட்டன.முதல்கட்டசாரங்களில்சிலகலைக்கப்பட்டு, அவற்றின்கற்கள்முதலியவைசெங்குத்தானஅரண்சுவர்கள்கட்டுவதற்குஉபயோகப்படுத்தப்பட்டனஎன்றுநம்புவதற்குஇடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள்வரையிலானவிமானப்பணிகளுக்காகமரத்தினாலானவலுவானசாரம்அமைக்கப்பட்டது.சவுக்குக்கழிகள், சணல்கயிறுகள்தவிர்க்கப்பட்டன.தரமானநல்லஉறுதியானமரங்களிலானதூண்கள் ,நேர்ச்சட்டங்கள் , குறுக்குச்சட்டங்கள்அனைத்தும்முட்டுப்பொருத்துகள்மூலம்இணைக்கப்பெற்றன. இவைஇரண்டாவதுகட்டமதில்அரண்சாரத்தில்நிலைநிறுத்தப்பட்டன.செங்குத்தானதூண்களும்நேர்சட்டங்களும்மேடைகளைவிரும்பியவிதத்தில்அமைத்துக்கொள்ளஉதவின.

அரண்மதில்உட்சுவரிலிருந்துமேடைகளுக்குக்கற்களையும்சிற்பிகள்மற்றும்ஏனையதொழிலாளர்களையும்எடுத்துச்செல்லசாய்வுப்பாதைகள்அமைப்பதுஇந்தமுறையில்எளிதாகவிருந்தது.

மேலேகூறியஅமைப்புஒருசாத்தியக்கூறு.இரண்டாவதுகட்டஅரண்மதில்சுவர்சாரத்துக்குமுதல்கட்டசாய்வுப்பாதைகள்கலைக்கப்பட்டு, அதன்கற்கள்பயன்படுத்தப்பட்டன.விமானக்கட்டுமானப்பணிகள்அனைத்தும்முடிவுற்றதும்சாரங்கள்கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம்அனைத்தும்கோயில்மதில்சுவர், மதில்சுவர்உள்புறத்தில்காணப்படும்துணைக்கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள்அமைப்பதுமுதலியகட்டுமானங்களில்எவ்விதசேதாரமுமின்றிமுழுமையாகப்பயன்படுத்தப்பட்டனஎன்பதுகுறிப்பிடத்தக்கது.



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 14, 2013 5:37 pm

பதிவுகளின் இறுதியில் எங்கிருந்து எடுத்தீர்கள் என்று போட்டுவிடுங்கள் நண்பரே.

அத்துடன் உங்கள் கட்டுரை வலது புறத்தில் பல வரிகள் முழுமையாக இல்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 14, 2013 5:38 pm

தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்ட ரகசியம்!!!

பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் நம் தஞ்சை கோயில் ! ! !

இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது இது எப்படி சாத்தியமானது ? ? ! !
கோயில் எப்படி கட்டப்பட்டது என்ற தகவல் உங்களுக்காக.படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம். இதை ஒவ்வொரு தமிழனும்தெரிந்து கொள்ளவேண்டும் .

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியதுஎன்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம்என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன.கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்...

பெரிய கோயில் அளவுகோல்
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம்.
இந்தஅடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள்.

இந்த அடிப்படையில் விமானத்தின்கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ்0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பதுஇக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு180 அலகுகள் உயரம் கொண்ட கோயில்விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை.

சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது.

விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.சாரங்களின் அமைப்புகருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்குநிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோயிலின்திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச்செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.தஞ்சை பெரியகோவில்மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்டஅரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன.

விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி - துரியன்நியூஸ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Apr 14, 2013 8:52 pm

பத்திகளை ஒழுங்கு படுத்தி படிக்க எளிமையாக்கிய ராஜா அண்ணாவுக்கு நன்றிகள். அருமையான தகவல் சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 15, 2013 2:28 pm

அசுரன் wrote:பத்திகளை ஒழுங்கு படுத்தி படிக்க எளிமையாக்கிய ராஜா அண்ணாவுக்கு நன்றிகள். அருமையான தகவல் சூப்பருங்க
நன்றி நன்றி அசுரன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக