ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கோளின் மிரட்டல்!

4 posters

Go down

குட்டிக்கோளின் மிரட்டல்! Empty குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by DERAR BABU Mon Apr 15, 2013 4:58 pm

2012, டிசம்பர் 22-ஆம் நாளோடு உலகத்தின் கதை முடியப் போகிறது' என்று பயமுறுத்திக் கொண்டிருந்த வாய்கள் அடைபட்டுவிட்டன. ஆனாலும் உலகம் இன்றோ நாளையோ அழிந்துவிடப் போகிறது என்ற பயத்தைப் பரப்ப ஏதாவது ஒரு காரணம், மனித இனம் தோன்றிய நாளிலிருந்தே கிடைத்து வருகிறது!

கடந்த பிப்ரவரியில், ஒரு பெரிய விண்கல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்தபோது மக்கள் பயந்தனர்; இருந்தாலும் விஞ்ஞானிகள் அதன் ஓடுபாதையைச் சரியாகக் கணித்து, ""அது பூமிக்கும் நிலவுக்கும் இடையில் புகுந்து நேராகப் போய்விடும்'' என்று சொல்லித் தைரியமூட்டினார்கள். அந்த விண்கல்லும் அதேபோலத் தன் போக்கில் போய்விட்டது. ஆனால், பிப்ரவரி 16-ஆம் நாள் யாரும் எதிர்பார்த்திராத வகையில் ஒரு பெரிய விண்கல் ரஷியாவின் யூரல் பகுதிக்கு மேலாக வெடித்துச் சிதறியது. அது பிறப்பித்த அதிர்ச்சி அலைகள் ஏராளமான கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தன. சிதறிய கண்ணாடித் துண்டுகள் பாய்ந்து ஆயிரம் பேருக்கு மேல் காயம் ஏற்பட்டது.

அடுத்ததாக விஞ்ஞானிகளின் கவனம், "அப்போஃபிஸ்' என்ற குட்டிக் கோளின் (அஸ்டராய்டு) பால் திரும்பியிருக்கிறது. "நாசா' விஞ்ஞானிகள் அதை 2004-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்கள். சூரிய மண்டலத்தில் செவ்வாயின் ஓடுபாதைக்கும் வியாழனின் ஓடுபாதைக்குமிடையில் உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான பாறைகள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை ஒன்று முதல் 500 மைல் வரை அகல நீளமுள்ளவை. அவை உருவான விதம் பற்றிப் பல்வேறு ஊகங்கள் உலா வருகின்றன. ஒரு பெரிய கோள், ஏதோ ஒரு காரணத்தால் உடைந்து பல அளவுகளிலான துண்டுகளாகி அது ஓடிய பாதையிலேயே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன என்று சிலர் ஊகிக்கிறார்கள்.

சூரிய மண்டலம் உருவானபோது அந்தப் பகுதியில் உருவான பாறைகள் ஏதோ காரணமாக ஒன்று கூடி ஒரு கோளாக உருவாக முடியாமல் போனதால் அவை ஒரு பாறைக்கூட்டமாகவே நீடித்துவிட்டன எனச் சிலர் கருதுகிறார்கள். அவை சுற்றிவரும் பாதை "குட்டிக்கோள் பட்டை' என்று குறிப்பிடப்படுகிறது. அந்தப் பாறைகளில் ஒன்றுதான் இந்த அப்போஃபிஸ்.

அது ஏதோ காரணத்தால் தன் ஓடுபாதையிலிருந்து மெல்ல மெல்ல விலகி வந்தபோது "நாசா' விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்தது. 2004 முதல் அதன் ஓடுபாதையை ஒளியியல் மற்றும் ராடார் சாதனங்களின் மூலம் அவர்கள் கண்காணித்து வருகிறார்கள். அது 2029-ஆம் ஆண்டிலும் 2036-ஆம் ஆண்டிலும் பூமியை நெருங்கி வந்து கடந்து செல்லப்போகிறது என்று அவர்கள் கணித்தனர். அது 2029-ஆம் ஆண்டில் பூமியிலிருந்து 31,900 கிலோமீட்டர் உயரத்தில் கடந்து சென்றுவிடும் என்று உறுதி செய்தனர். ஆனாலும் அந்தச் சமயத்தில் அதன் மேல் பூமி செலுத்தப்போகிற நிறையீர்ப்பு விசை காரணமாக அதன் ஒடுபாதை வளைந்து 2068-ஆம் ஆண்டில் அது திரும்பி வரும்போது பூமியை வந்து மோதக்கூடிய வாய்ப்புகள் கணிசமாக உள்ளன என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வானியல் வல்லுநர்கள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பலவிதமான தற்காப்பு உத்திகள் திட்டமிடப்படுகின்றன. அவற்றில் சில அறிவியல் புனைகதைகளில் விவரிக்கப்படுகிற கற்பனைகளைப்போல விசித்திரமாகத் தோன்றுகின்றன. ஆனால், கற்பனைகள் பல சமயங்களில் நிஜமாகியிருக்கின்றன. அறிவியல் புனைகதைகளை எழுதுகிறவர்கள் கற்பனைத் திறனும் சிந்தனைத் திறனும் கொண்ட விஞ்ஞானிகள்தான்.

ஆர்தர் கிளார்க் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. 1945-ஆம் ஆண்டிலேயே அவர், பூமியிலிருந்து தக்க உயரத்திலும் தக்க இடத்திலும் மூன்று செயற்கை நிலவுகளை நிறுத்தி அவற்றை ரேடியோ மற்றும் தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களாகப் பணியாற்றச் செய்யலாம் என்று எழுதினார். அவை பூமியின் வளைவினாலும் மேடு பள்ளங்களினாலும் மின்காந்த அலைகள் தடை செய்யப்படுவதைத் தவிர்த்து உலகின் எல்லாப் பகுதிகளுடனும் மின்னலை செய்தித் தொடர்புகளை ஏற்படுத்த உதவும் என்று அவர் விவரித்தார். இன்று அவருடைய கற்பனை செயல்வடிவம் பெற்று வானில் பல நூறு செய்தித்தொடர்பு நிலவுகள் பூமியிலிருந்து பார்க்கிறபோது அசையாமல் ஒரேயிடத்தில் நின்று கொண்டிருப்பதைப்போல பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் உதவியால் உலகின் பல இடங்களில் நிகழும் சம்பவங்களை நம் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தவாறே தொலைக்காட்சிப் பெட்டிகளில் காண முடிகிறது.

குட்டிக்கோள்களின் பயணப் பாதைகளை இடைவிடாமல் கண்காணிக்கிற வகையில் பல நாடுகள் செயற்கை நிலவுகளையும் ஒளியியல் மற்றும் ரேடார் தொலை நோக்கிகளையும் இயக்கி வருகின்றன. சர்வதேச வானவியல் கூட்டமைப்பின் வருடாந்திரக் கூட்டங்களில் விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளையும் தரவுகளையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்கிறார்கள். கருங்கடல் முதல் பசிபிக் கடல் வரை நீண்டுள்ள ரஷியக் கூட்டமைப்பு நாடுகள் விண்கற்களும் குட்டிக்கோள்களும் தமது புவியியல் பரப்பில் வந்து விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாயிருப்பதாகக் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் அஞ்சுகின்றன. ரஷியா மற்றும் அதன் தோழமை நாடுகளைச் சேர்ந்த வானவியல் வல்லுநர்கள் கூடுதலான அக்கறையுடன் வானத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிற தெருவில் நாம் நடந்து போகும்போது ஒரு பந்து நம்மை நோக்கி வருவதாகத் தெரிந்தால் சட்டென்று நகர்ந்து கொள்கிற மாதிரி, ஒரு குட்டிக் கோள் பூமியை நோக்கி விரைந்து வந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தால் அதன் பாதையிலிருந்து பூமியைக் கொஞ்சம் விலக்கி நகர்த்திவிட முயற்சி செய்ய வேண்டும் என்று ஒரு கருத்தரங்கில் ஓர் ஆய்வர் சொன்னபோது யாரும் கேலியாகச் சிரிக்காமல் அவருடைய பேச்சைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆர்க்கிமிடீஸ் கூடத்தான், ""கால் பதித்து நிற்க ஓரிடம் கிடைக்குமானால் அங்கு நின்றவாறு ஒரு நெம்புகோலின் உதவியால் பூமியையே அசைத்துத் தள்ளிவிடத் தன்னால் முடியுமென்று'' மார்தட்டியிருக்கிறார். பூமி ஒரு குறிப்பிட்ட ஓடுபாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது.

பூமிப்பரப்பிலிருந்து சரியான திசையில் பெரும் நிறையுள்ள பொருளைப் பெரும் வேகத்துடன் விண்வெளியில் செலுத்தினால் நியூட்டனின் மூன்றாவது விதியின் பிரகாரம் பூமி அதற்கு எதிர்த்திசையில் நகரும் என்று ஒரு யோசனை தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு செய்ய நிலத்துக்கு அடியில் ஏராளமான அணுகுண்டுகளைப் புதைத்து அவற்றை ஒரே சமயத்தில் வெடிக்க வைக்க வேண்டும். ஆனால், அணுகுண்டுகளை நம்ப முடியாது.

தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகக் குட்டிக்கோள் மோதுவதால் ஏற்படக்கூடிய சேதங்களைவிட அதிகமான சேதங்களை அணுகுண்டுகள் ஏற்படுத்திவிடக் கூடும். அத்துடன் சுற்றுச்சூழலும் பயங்கரமாகப் பாதிக்கப்படும். இக்காரணங்களால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

சந்திரனை நகர்த்தினால் பூமியும் நகரும் என்று ஒரு யோசனை வெளியிடப்பட்டிருக்கிறது. பூமியும் சந்திரனும் ஒன்றன் மேலொன்று நிறையீர்ப்பு விசையைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. கயிற்றின் முனையில் கட்டப்பட்ட கல்லைப் போலச் சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. எனவே சந்திரனை நகர்த்தினால் பூமியும் கூடவே நகரும். சந்திரனின் தரைப்பரப்பில் அணுகுண்டுகளைப் புதைத்து அதன் நிறையில் 0.5 சதவீத அளவுள்ள பொருள் விநாடிக்கு இரண்டு கிலோமீட்டர் வேகத்தில் விண்வெளியில் பீறிட்டுப் பாயும் வகையில் வெடிக்கச் செய்தால் சந்திரன் அதற்கு எதிரான திசையில் நகரும். அதன் சுற்றுப்பாதை மாறிப் பூமியைச் சுண்டியிழுத்துப் பூமி தன் பாதையிலிருந்து பத்தாயிரம் கிலோ மீட்டர் வரை விலகிப் போகும் என்று ரஷிய விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால், அதன் காரணமாகப் பூமியில் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றித் தெளிவான சித்திரம் வரையப்படவில்லை.

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிற குட்டிக்கோள் தொலைவிலிருக்கும்போதே அணுகுண்டு அல்லது ஹைட்ரஜன் குண்டுகளை ஏவுகணைகளில் ஏற்றியனுப்பி அதைத் தாக்கியழித்து விடலாம் என்று ஒரு யோசனை வெளியிடப்பட்டிருக்கிறது. சிறிய குட்டிக்கோள்களுக்கு அது ஒத்துவரலாம். பல கிலோமீட்டர் நீள அகலமுள்ள பெரிய குட்டிக்கோள்களை அவ்வாறு அழிக்க முயல்வது வெற்றியடையும் என்பது நிச்சயமில்லை. ஒருவேளை அது பல துண்டுகளாக உடைந்து அவை பூமியில் வந்து விழுந்தால் பேராபத்து விளையும். ஒரு பெரிய விண்வெளிக் கலத்தில் நிபுணர்களை வைத்து அனுப்பி பெரிய குட்டிக்கோள் ஒன்றில் இறக்கிச் சரியான முறையில் துளைகளிட்டு வெடிகுண்டுகளைப் பொருத்தி வெடிக்கச்செய்து அதைத் தூள் தூளாக்கி விடுவதாக விவரிக்கும் ஓர் அமெரிக்கத் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாயிற்று. அது ஒர் அறிவியல் புனைகதை என்றாலும் அதுபோன்ற ஓர் உத்தியும் பரிசீலனையில் உள்ளது.

அண்மையில் ஓர் ஆய்வர் குழு குட்டிக்கோள்கள் மற்றும் விண்கற்களின் பரப்பில் ஒளியைப் பிரதிபலிக்கும் ரசாயனங்கள் அல்லது சாயங்களைப் பூசிவிட்டால் சூரியக்கதிர்களின் அழுத்தம் காரணமாக அவற்றின் பயண திசை மாறும் என்று கருத்து வெளியிட்டிருக்கிறது. அதற்கான தொழில்நுட்ப உத்திகளை வடிவமைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

தினமணி


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

குட்டிக்கோளின் மிரட்டல்! Empty Re: குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by balakarthik Mon Apr 15, 2013 5:07 pm

இன்றைய சூழலுக்கு இந்த உலகம் இருப்பதைவிட இறப்பதே மேல்


ஈகரை தமிழ் களஞ்சியம் குட்டிக்கோளின் மிரட்டல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்டிக்கோளின் மிரட்டல்! Empty Re: குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by யினியவன் Mon Apr 15, 2013 5:15 pm

balakarthik wrote:இன்றைய சூழலுக்கு இந்த உலகம் இருப்பதைவிட இறப்பதே மேல்
அரசன் கொல்றது மாதிரி!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குட்டிக்கோளின் மிரட்டல்! Empty Re: குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by SajeevJino Tue Apr 16, 2013 7:25 am

அந்த கிம் பையன் கூட அமெரிக்க மேல தாக்குதல் நடத்த போறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டான்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

குட்டிக்கோளின் மிரட்டல்! Empty Re: குட்டிக்கோளின் மிரட்டல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum