ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் பொன்மொழிகள்!!!

4 posters

Go down

விவேகானந்தர் பொன்மொழிகள்!!! Empty விவேகானந்தர் பொன்மொழிகள்!!!

Post by balakarthik Mon Apr 15, 2013 10:59 am

* நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றலை அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஆன்மிக சக்தியாக மாற்ற வேண்டும்.

* நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் விழித்துக்கொள், மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி.

* மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.

* பிறரை முதலில் நம்புவதைவிட்டு உன்னை நீ முதலில் நம்பு, அனைத்து ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பதால், அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. "நான் எதையும் சாதிக்கவல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.

* ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான்.

* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.

* குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.

* பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.

* தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.

* தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.

* கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.

* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.

* கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.

* எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.

* நீங்கள் எல்லை இல்லாத வலிமை பெற்றவர்கள். உங்களின் உண்மை இயல்போடு ஒப்பிடும்போது காலமும் இடமும் கூட ஒரு பொருட்டல்ல.

* இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். என்னால் இயலாது என்று எதையும் மறுக்காதீர்கள். எதையும் உங்களால் சாதிக்க முடியும்.

* பலவீனத்திற்குப் பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பதே.

* உபநிஷதங்களில் இருந்து கிளம்பி, அறியாமைக் குவியல் மீது குண்டைப் போல வெடிக்கும் சொல் "அஞ்சாமை' என்பது தான். இந்த ஒற்றைச் சொல்லில் தான் வேதத்தின் சாரம் அடங்கியிருக்கிறது. இந்தச்சொல் தான் உலகையே மாற்றி அமைக்கும்.

* கடுமையாக உழைக்க முன்வந்தால் குறிக்கோளை எளிதில் அடையலாம்.

* மனதில் வலிமை இருந்தால் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த நிரந்தரமான வாழ்வு கிடைக்கும். பலவீனம் இருந்தால் இடையறாத துன்பமும், சித்திரவதையுமாக வாழ்வு அமையும்.

* மனிதன் வலிமை பெற வேண்டுமானால், உண்மை மிக்கவனாக வாழ வேண்டும்.

* ஆயிரம் முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் ஒருமுறை லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.

* பலவீனத்திற்கு பரிகாரம் பலவீனத்தை சிந்திப்பது அல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

* கீதை படிப்பதை விட, கால்பந்தின் மூலம் நீங்கள் சொர்க்கத்திற்கு அருகில் இருப்பீர்கள். அதனால், உடல் வலிமை மிக்கவராக ஆகுங்கள்.

* உலகில் யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். உங்கள் லட்சியத்தை நோக்கி உறுதியுடன் செயல்படுங்கள்.

* தன்னை பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலமே உலகில் மிகப்பெரிய பாவம்.

* சாந்தமான மனநிலை கொண்டவன் நல்லபணிகளில் ஈடுபட்டு, நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

* மனிதர்கள், விலங்குகளை விட ஒழுக்கமானவர்களாக இல்லை. சமூக பொது அபிப்ராயம் தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது.

* குறிக்கோளில் செலுத்தும் கவனத்தை போலவே, அதை அடையும் பாதையிலும் கருத்தைச் செலுத்துங்கள்.

* ஒவ்வொரு உயிரிலும் உறைந்திருக்கும் தெய்வீக சக்தியை வெளிக்கொண்டு வருவது தான் நம் வாழ்வின் லட்சியம்.

* தன்னை அடக்கியாளப் பழகியவன் ஒருபோதும் புற உலக விஷயங்களுக்கு அடிமையாக மாட்டான். அத்தகையவனே உலகில் வாழத் தகுதி படைத்தவன்ஆகிறான்.

* ஒருவன் நெருப்பில் கூட தூங்க முடியும். ஆனால், வறுமை நிலையிலோ கணப்பொழுதும் கண்மூடித் தூங்க முடியாது.

* மனமும், உடலும் ஒருமித்து இருக்கும் போது எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றியே கிடைக்கும்.

* பெரிய விஷயங்களை நிறைவேற்றும்போது இடையூறுகள் குறுக்கிடவே செய்யும். அதனால் ஆண்மையோடு தொடர்ந்து முயற்சியுங்கள்.

* பசியால் நலிந்து வாடும் ஏழைகளிடம் ஆன்மிகம் பேசுவது அவர்களை அவமதிப்பதாகும்.

* மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.

* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது.

* திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை. கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள். அது போதும்.

* கோழை தான் வாழ்வில் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.

* மக்களிடம் உண்மையான சமத்துவம் எப்போதும் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை.

* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

* மற்றவர்களுக்கு நன்மை செய்யும் முயற்சியில், இந்த உடல் அழிந்து போனால் அதுவே மேலானது.

* சுதந்திரமானவர்களாக இருங்கள். யாரிடமும் எதையும் எதிர்பாராதீர்கள்.

* பிரதிபலன் பாராமல் நன்மை செய்யுங்கள்.


- விவேகானந்தர்

நன்றி :- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் விவேகானந்தர் பொன்மொழிகள்!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விவேகானந்தர் பொன்மொழிகள்!!! Empty Re: விவேகானந்தர் பொன்மொழிகள்!!!

Post by யினியவன் Fri Apr 26, 2013 12:04 am

விவேகானந்தரின் விவேகமான அறிவுரைகள் - நல்ல பகிர்வு பாலா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விவேகானந்தர் பொன்மொழிகள்!!! Empty Re: விவேகானந்தர் பொன்மொழிகள்!!!

Post by சிவா Fri Apr 03, 2015 12:21 am

* எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.

* கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒருபோதும் பாவம் செய்வதில்லை. மனதால்கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை.

* நீங்கள் பலவீனமானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தால் பலமற்றவர்களாகவே ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் பலம் பொருந்தியவர்கள் என்று எண்ணினால் பலமுடையவர்களாக ஆகிவிடுகிறீர்கள்.

* அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. வளர்ச்சி அடைவதுதான் வாழ்க்கை. அதுதான் அன்பாகும். அன்புதான் வாழ்க்கையாகும். அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் ஒரே நியதியாகும்.

* நம்மைப் பற்றியே முதலில் நினைத்துக் கொள்ளும் சுயநலம்தான் மிகப் பெரிய பாவமாகும்.

* உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ ஏற்படுத்தும் எதையும் அணுகக் கூடாதென்பதே உங்களுக்கு நான் கூற விரும்பும் உபதேசம்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருத்தல் அவசியம்.

* ஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! அப்படி நினைப்பது, சமயத்துக்கு மிகப்பெரிய முரண்பட்ட கருத்தாகும்.


விவேகானந்தர் பொன்மொழிகள்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் பொன்மொழிகள்!!! Empty Re: விவேகானந்தர் பொன்மொழிகள்!!!

Post by ayyasamy ram Fri Apr 03, 2015 4:14 am

விவேகானந்தர் பொன்மொழிகள்!!! Kj5hxoTX55ctbNqCvoQR+th
-
விவேகானந்தர் பொன்மொழிகள்!!! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விவேகானந்தர் பொன்மொழிகள்!!! Empty Re: விவேகானந்தர் பொன்மொழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum