ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை திரு நாள் வாழ்த்துகள் !

Go down

சித்திரை திரு நாள் வாழ்த்துகள் ! Empty சித்திரை திரு நாள் வாழ்த்துகள் !

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Apr 14, 2013 6:45 pm

வட இந்தியர்கள் திராவிடர்களே !

தமிழிலிருந்து ஆதியில் மறுவிய பல மொழிகள் கிரதங்கள் எனப்பட்டன ! வட இந்தியாவில் இமயமலை வரை சிந்து சமவெளிவரை பரவிய மனிதர்கள் திராவிடர்களே !

இன்றைக்கு சென்னைத்தமிழ் எவ்வளவு மறுவியுள்ளது ! அதுபோல வடக்கே செல்ல மொழிகள் மறுவியது இயற்கையே !

அதுபோல வடக்கே செல்ல செல்ல அவரவர்களின் இடத்தில் சூரியன் நேர் உச்சியில் உதிப்பதை வைத்து வருடப்பிறப்பை வைப்பதும் இயல்பே !

மொழிகள் பல கிரதங்களாக இருப்பதால் வேதங்களுக்கென்று ஒரு பொதுவான மொழி வேண்டும் என திராவிட ஞானிகளான வசிஸ்ட்டர் விசுவாமித்திரர் வியாசர் போன்றோர் கிரதங்களை சமப்படுத்தி சமஸ்கிரதம் உருவாக்கி அதில் வேதங்ககளை தொகுத்தனர் !

சமஸ்கிரதத்திலிருந்து இன்றைய இந்தி உருது முதலான மொழிகள் வந்தன !

சமஸ்கிரதம் எழுத்தில்லாமல் ஓதும் மொழியாக இருந்ததால் அதை இந்தியர்களான திராவிடர்கள் மறக்க பூசை மட்டுமே தொழிலாக செய்த யூதர்களான லேவி கோத்திரத்தார் தொழில் தேடி இந்தியா வந்து அந்த மொழியையும் திராவிட வேதங்களையும் மணப்படம் செய்து ஓதி வருவதால் அது அவர்களின் மொழி போல மாயத்தோற்றம் அடைந்தது !

சமஸ்கிரதமும் இந்தியும் திராவிட மொழிகளே !

வட இந்தியர்கள் திராவிடர்களே !

புத்த சமண மதங்கள் கோலோச்சிய போது உழவு முதலான வேறு தொழில் செய்து அடக்கி வாசித்த பிராமணர்களுக்கு மீண்டும் பூசைத்தொழிலை இந்தியாவில் முதன்முதலாக கொடுத்தது தமிழில் புத்துயிர் பெற்ற சைவ வைணவ சமயங்களே ! சதுர்வேதி மங்கலங்கள் என்ற பெயரில் பிராமண குடியிருப்புகளை பல இடங்களில் கட்டி அங்கு ஒரு கோவிலும் அமைத்து அதற்கு மானிபங்கள் பல கொடுத்து பிராமணர்கள் சமஸ்கிரத வேதங்களை ஓதி மணப்பாடம் செய்ய வழி செய்தவர்கள் சோழ பேரரசர்களே !

இத்தனைக்கும் திருநாவுக்கரசர் முதலான சைவசமய குரவர்களில் பெரும்பாலோர் திராவிடர்களே !

புத்தம் சமணம் வருமுன் யாகத்தில் உயிர்பலி கொடுத்து அதை உண்ணுபவர்களாகவே பிராமணர்கள் இருந்தார்கள் ! புத்தம் சமணம் உயிர்ப்பலியை தடுத்தததுடன் கோவில்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக மூடப்பட்டு பிராமணர்கள் வேறு தொழிலுக்கு போனார்கள் !

திருநாவுக்கரசரே முதன்முதலாக சைவத்தை மீண்டும் அரச மதமாக ஆக்கி மூடிய கோவில்களை திறந்து புல் புதர் வெட்டும் உழவாரப்படை வேலையை செய்து பதிகம் பாடினார் !

அதன்பிறகு அந்தக்கோவில் பூசை வேலைக்கு ஆசார நியமங்களை கொஞ்சம் ஒழுங்காக செய்ய பிராமணர்களே லாயக்கு என பூசை ஒப்படைக்கப்பட்டது ! அப்போது முதலே புலால் உண்ணாமை அவர்களுக்கு நியமனமானது ! அதற்கு முன்பு அவர்கள் புலால் உண்டவர்களே !

எதற்காக சொல்கிறேனென்றால் சகலத்தையும் உருவாக்கியவர்கள் திராவிடர்கள் ! அதை பூசைக்கென்று பிராமணர்களிடம் ஒப்படைத்தவர்களும் திராவிடர்களே ! ஆனால் வேதங்கள் ஏதோ ஆரிய சொத்து என்பதுபோல மாயை உருவாகியுள்ளது ! கூலிக்கு மனப்பாடம் செய்தவர்களே பிராமணர்கள் !

இந்துமதம் என்பது முழுமுழுக்க திராவிட இனத்தின் தத்துவம் ! அதை உருவாக்கிய ஞானிகளும் அதன் இறைதூதுவர்களான ராமரும் கிரிஸ்ணரும் சாட்சாத் திராவிடர்கள் ! சத்ரியர்கள் ! பிராமணர்கள் அல்ல !


மனிதர்களான இறைதூதுவர்களையும் விட மஹிமையுள்ள நாராயண அவதாரங்களாக பூமியில் அவதரித்த ராமரும் கிரிஸ்ணரும் திராவிடர்களாக அவதரித்திருக்க அந்த உண்மையை அப்படியே மறைத்து சொந்தச்சரக்காக இல்லாமல் கூலிக்கு மணப்படம் செய்தவர்களை ; எப்போதும் சத்ரிய அரசனின் தயவில் வாழ்ந்த பிராமணர்களை ; கோவில் ஆகம நெறிகளில் மூடத்தனமோ பிழைப்புவாதமோ சமூகசீரழிவோ அவ்வளவு கெடுதல் செய்யாத பிராமணர்களை -- ஒழிப்பதுதான் பகுத்தறிவு என்பதாகவும் இந்துமதத்தை கிண்டலும் கேலியும் செய்வதுதான் பகுத்தறிவு என்பதாகவும் அரைவேக்காடு திராவிட பிற்போக்கை முற்போக்கென முத்திரை குத்தி தமிழர்களை குழிக்குள் தள்ளிவிட்டார்கள் !

கோவில் ஆகம நெறி சாராத கிராம தெய்வ வழிபாடுகளில்தான் மூடப்பழக்கவழக்கங்கள் , பித்தலாட்டங்கள் , ஏமாற்றி பிழைப்பது சாதிய கொடுமைகள் போன்ற குறைபாடுகள் – பொதுமக்கள் தாங்களாக ஏற்படுத்திக்கொண்டவை மலிந்து இருந்தது !

அதைக்குறை பேசி அதற்கு சம்மந்தமில்லாத பிராமணர்களை மூடத்தனத்தின் உற்றுக்கண்கள் என்பதுபோல பிராமண எதிர்ப்பு என்ற அட்டைகத்தியை விதவிதமாக சுழற்றி மக்களின் குறுகிய குழு உணர்வுக்கு தீ மூட்டி வளர்த்து தமிழர்களை இந்தியாவிலிருந்து அந்நியர்களாக மாற்றி வைத்துவிட்டனர் ! அதே பாணியில் தமிழ்த்தேசியம் என நேற்று நம்மிடமிருந்து பிரிந்த சொந்த ரத்தமானவர்களை வந்தேறி – தெலுங்கன் , கண்ணடன் ,மலையாளி என வெறுக்க வைப்பவர்களும் பெருத்து வருகிறார்கள் !

நாம் திராவிடர்கள் – இந்திய தேசிய நீரோட்டமும் ; இந்து மதத்தின் கலப்படையாத தூய நெறியை சீரமைத்து உய்வடைய வேண்டியவர்கள் என்பதை தெளிவதும் உலகம் முழுமையும் உய்வடைய இந்தியாவிலிருந்து புறப்பட உள்ள அல்லது வரப்போகிற இறைதூதர் விரைவில் வெளிப்பட பிரார்திப்பதே நமது கடமையாகும் !



இந்த உண்மையை அறியாத அரை வேக்காட்டு அறிஞர்கள் வட இந்தியர்களை ஆரியர்கள் எனவும் தமிழர்கள் மட்டுமே திராவிடர்கள் எனவும் போலி குழு உணர்வை தூண்டி இந்தி எதிர்ப்பு என்ற மாயையை பரப்பி ஆட்சியைப்பிடித்து ஆண்டனர் 1

மலையாளிகள் , கண்ணடர் ,தெலுங்கர் என திராவிடர் அனைவரும் இந்தியை பேசி தேசிய நீரோட்டத்தில் இருக்க தமிழ் நாட்டை மட்டும் அந்நியநாடாக மாற்றிக்கொண்டனர் !

வட இந்தியர்கள் நம்மை ஒதுக்கவில்லை ! நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டோம் !


இந்தி பேசுவதால் கண்ணடம் , மலையாளம் ,தெலுங்கு அழியவே இல்லை ! ஏனென்றால் திராவிட மொழியால் திராவிட மொழி கொஞ்சம் மறுவினாலும் ஜீவன் போகாது ! ஆனால் ஆங்கிலம் என்ற ஐரோப்பிய மொழி கலப்பால் தமிழ் ஜீவனை இழந்து கொண்டுள்ளது !

ஐயோ தமிழ் சாகப்போகிறது இந்தியை ஒழி என பொய்யான மாயைப்பறப்பி ஆங்கிலத்தால் தமிழின் ஆணிவேரை அசைத்துக்கொண்டுள்ளார்கள் ! இந்திய தேசிய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்பட்ட தமிழனை தமிழினத்தை – ஈழத்தமிழனை ஆதரிக்க யாருமில்லை !

தனி ஈழம் இந்திய அரசுக்கு கெடுதல் என்ற கொள்கை முடிவை இந்திய அரசுக்கு குறிப்பாக ராஜிவுக்கு கொடுத்தவர்கள் வட இந்தியர்களல்ல ! இந்திய அரசுக்கு பாதுகாப்பு ஆலோசகர்களாக இருந்த மலையாளிகளே !

அந்த அளவுக்கு தமிழினம் முந்தா நாள் தமிழிலிருந்து பிரிந்த மலையாளிகளிடமும் தனிமைப்பட்டுத்தான் உள்ளது ! காரணம் திராவிட மொழியான இந்தியை எதிர்ப்பதே !

ஆகவே இனியேனும் தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழரை தனிமைப்படுத்தாமல் நம் பிள்ளைகளுக்கு இந்தியை கற்றுக்கொடுப்போம் !

கட்டாய பாடமாக இல்லாமலும்கூட கூடுதல் மொழியாக இந்தி அரசு பள்ளிகளில் கற்றுக்கொடுக்க அரசை வலியுறுத்துவோம் !

வட இந்தியர்களின் சித்திரை பிறப்பை நாமும் கொண்டாடி வாழ்த்துவோம் !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum