புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
44 Posts - 58%
heezulia
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
3 Posts - 4%
viyasan
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
236 Posts - 42%
heezulia
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
13 Posts - 2%
prajai
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_m10தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி  - ஒரு ஆய்வு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது எப்படி - ஒரு ஆய்வு


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jan 04, 2013 12:57 am

தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய கருத்தை இங்கு பதிவிடுகிறேன்.

சொல் என்பது மிக இலகுவாக, சிறியதாக, எளிதில் பொருள் புரியாத வகையில் உருவாக்க வேண்டும் . நம் பழந்தமிழ் சொற்களை பாருங்கள்

இரும்பு,குதிரை,புசுனை, கரடி, - இதற்க்கு என்ன பொருள் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, மீறி சொன்னால்

இரும்பு - என்றால் கருப்பாக , நல்ல உறுதியான உலோகம் என்று சொல்லலாம்.
குதிரை - என்றால் அது ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
கரடி - என்றால் அதுவும் ஒரு விலங்கு என்று சொல்லலாம்.
பூசுனை - அது ஒரு வகையான காய்கறி என்று சொல்லலாம்.

இது போல் தான் அன்றைய தமிழன் அணைத்து சொற்களையும் உருவாக்கிய உள்ளான்.இது போன்ற சொற்கள் தான் மக்களின் பேச்சு வழக்கில் எளிதில் அழிய இடம் பொறும்.

ஆனால் இன்றைய தமிழன் உருவாக்கும் தமிழ் சொற்கள் சில
பதிவு வட்டு (Compact Disc ) , தொடர்வண்டி (Train ),மிதிவண்டி (Cycle ),விசைபலகை (keyboard ) , மின்கடத்தி (wire)என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவை சொற்களே இல்லை சொல்தொடர்கள் .இவைகளுக்கு என்ன பொருள் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லிவிடும்.இது சொற்கள் என்று அழைகப்படும் சொல்தொடர்கள், பேச்சு வழக்கில் வரவே வராது.

மேற்கூரிய சொற்களை உதரணமாக பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று அழைத்து பாருங்கள் கேட்பவருக்கு புதிதாக , எளிதில் மனதில் பதிந்துவிடும். அதயே பயன் படுத்தி பேச பழகி விடுவர்.

சரி எப்படி நீங்கள் பதிகரம்(Compact Disc ) , சாரணம் (train ) என்று பெயர் வைக்கலாம் நீங்கள் என்ன தமிழில் பட்டம் பெற்றவர அல்லது தமிழ் புலவரா என்று மனதில் தோன்றும்.

எதற்கு எந்த பட்டமும் தேவை இல்லை புலமையும் தேவை இல்லை, சற்று நமது பழந்தமிழர் உருவாக்கிய சொற்களை பகுத்து ஆராய்ந்தால் போதும்.

நாம் சாதரணமாக பேசும் சொற்கள் சில

1) ஆராய்ந்து (ஆரா + ஆய்ந்து)
2) சாப்பிட்டு (சாப்பாடு + விட்டு(முடித்து)
3) கூப்பிடு (கூப்பாடு + இடு )
4) குதிரை (குதி + விரை) குதித்து விரைவது
5) கரடி (கரம் (கை ) + அடி ) காலை தனது கையாக பயன்படுத்துவது
6) பூசுனை (பூசு + சுனை ) ஒருவகை அரிப்பு பொருளால் பூசப்பட்ட காய்

மேலே உள்ளதைபோல்
பதிகரம்(Compact Disc ) = பதிப்பு + சக்கரம்
சாரனம் (train ) = சாரை(நீண்ட) + வாகனம்
திரணி(pump ) = திரவ + ஏணி


ஆங்கிலத்திலும் என்னக்கு தெரிந்த ஒரு சொல்.

Elephant = help + hand

இது போல் தமிழில் உள்ள சொற்களை பகுத்து ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.


ஆகவே ஒரு புதிய சொல்லை உருவாக்க இரு பொருள் விளங்காத (எளிதில்) சொற்களை இணைத்து நீளம் குறைந்த சொல்லை உருவாக்குவதே ஒரு சிறப்பான சொல்லாக்கமாக அமையும்.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Jan 04, 2013 2:42 pm

இதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jan 05, 2013 12:44 pm

இதோ சில தமிழ் சொற்கள் உருவாக்கபட்டவிதம்

1) இருக்கை (sofa) = இரு + கை (இரு கைகளை கொண்ட அமரும் ஆசனம் )
2) நாற்காலி (chair ) = நான்கு + கால் (நான்கு கால்களை கொண்ட அமரும் ஆசனம்)
3) முகவரி (address ) = முகம் + வரி (ஒரு பொருளின் அடையாளம் + எழுத்து )
4) மூலதனம் (investment ) = மூலம் + தனம் (முதன்மை செல்வம் (அ) பணம்)
5) கோதானம் (பசு கன்று) = கோ(பசு) + தானம் (கன்று குட்டி)
6) கோவில் (Temple ) = கோ (எல்லோருக்கும் முதன்மையனவனின் இல்லம் )
7) திருகை (rotating wheel )= திரு + கை (சுழலும் மர கை)
8) கலப்பை (plow ) = கலப்பு + கை (மண்ணை கலக்கும் மர கை)
9) உலக்கை (Pestle ) = உரல் + கை (உரலை குத்த பயன்படும் மர கை)
10)விஞ்ஞானம் (சயின்ஸ்) = விந்தை + ஞானம் (விந்தையான ஞானம்-அறிவு)

மேற்சொன்ன சொற்களின் பகுப்பு சொற்களை பாருங்கள் அந்த இரு சொற்கள் இணைந்து மிக சரியான பொருளை உணர்த்துகிறது. சொற்களின் நீளத்தை பாருங்கள் , பேச்சு வழக்கில் எளிதாக பயன்பதும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய தமிழ் சொற்களை நம் தற்கால தமிழர் உருவாக்கி இருந்தால் எப்படி இருக்கும்
1) இருக்கை (sofa) = இருகால் அசனம்.
2) நாற்காலி (chair ) = நான்குகால் அசனம்.
3) முகவரி (address ) = அடையாள எழுத்து.
4) மூலதனம் (investment ) = முதல் பணம்.
5) கோவில் (Temple ) = கடவுள் இல்லம்
6) திருகை (rotating wheel ) = வட்ட சுழலி.
7) கலப்பை (plow ) = மன்கலக்கி.
8) உலக்கை (Pestle ) = இடி மரம்.

போன்று தான் உருவாக்கி இருப்பார்கள்.

ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது






[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 05, 2013 2:09 pm

தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள் ..... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆயினும் நீங்கள் கூறுவது போல் தற்காலத் தமிழர்கள் உருவாக்குவதில்லை ..

குறுகிய + தகடு = குறுந்தகடு
கணிக்கும் + பொறி = கணிப்பொறி
வன்மையான தகடு = வன்தகடு

இப்படித் தானே வழங்கப்படுகிறது. சில நேரங்களில் கவிதைகள், இணையத்தில் பதியும் கட்டுரைகளில் இது போன்றத் தவறு நிகழ்கிறது....ஆனால் இன்று வரை அகராதியில் ஏறும் வார்த்தைகள் மொழியறிஞர்களால் தான் உருவாக்கப்படுகிறது.அல்லது சரிபார்க்கப்படுகிறது.

தமிழ் கல்வெட்டுகளைப் படித்தால் பெரும்பாலானவை முழுநீள சொற்றொடர்களாகத் தான் எழுதப்பட்டுள்ளது. எங்கு இடைவெளி விட வேண்டும், எங்கு இணைத்து எழுத வேண்டும் என்ற குழப்பம் நிலவியுள்ளது. இக்குழப்பம் நீங்கி புணர்ச்சி விதிகள் மொழியறிஞர்களால் தெளிவு செய்யப்பட்டது.

புணர்ச்சியில் இயல்பு புணர்ச்சி என்ற வகை உண்டு. அதில் இணையும் வார்தைகள் சிதைவதில்லை,,,நீங்கள் கூறும் compact disc இந்த வகை தான்.....ஒரு வார்த்தையை உருவாக்கும் பொழுது அதில் உள்ள வேர்ச்சொல் சிதைவடையாமல் உருவாக்கவேண்டும்.

சாரணம் என்ற வார்த்தையை புரியாதவர் பிரித்தால் சாவு + ரணம் என்றோ, பதிகரம் என்பதை பதிவு + கரம் என்று பிரித்து தவறாகப் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது....
ஆனால் தொடர்வண்டி என்ற சொல் குழப்பம் இல்லாதது....தமிழில் ஒரு பொதுப் பெயரும் சிறப்புப் பெயரும் சேரும் பொழுது இணைத்து எழுத வேண்டும் என்பது விதி, அவை ஒரு வாக்கியமாகத் தான் கருத்தப்படுகிறது.

மா + மரம் = மாமரம்
வேப்பமரம் போன்றவை












சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jan 05, 2013 3:18 pm

[quote=சாரணம் என்ற வார்த்தையை புரியாதவர் பிரித்தால் சாவு + ரணம் என்றோ, பதிகரம் என்பதை பதிவு + கரம் என்று பிரித்து தவறாகப் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது....
ஆனால் தொடர்வண்டி என்ற சொல் குழப்பம் இல்லாதது.... [/quote]

அன்பரே திரும்ப நீங்கள் நான் முதலில் ஆரம்பித்த இடத்திற்கே சென்று விட்டீர்கள்.

என் பதிவில் பாருங்கள் "சொல் என்பது மிக இலகுவாக, சிறியதாக, எளிதில் பொருள் புரியாத வகையில் உருவாக்க வேண்டும்" அதுபோன்ற சொற்கள் தான் பேச்சு வழக்கில் வரும்.

சொல்லின் பொருளை சொல்லை பார்த்தாலே சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.தொடர்வண்டி என்ற சொல் எல்லோருக்கும் புரிகிறது, சொல் என்பது அனைவருக்கும் புரிய வேண்டும் என்று சொல்லும் உங்களிடம் சில கேள்விகள்

1) தொடர்வண்டி என்பது சொல்லா அல்லது சொற்றொடர.
2) தொடர்வண்டி என்ற சொல்லை மக்கள் பேச்சு வழக்கத்தில் பயன்படுத்த மறுப்பது ஏன்.
3) ரயில் என்ற ஆங்கில சொல்லின் ஒலி வீச்சு(சொல் நீளம்) எவ்வளவு தொடர்வண்டி சொல்லின் ஒலி வீச்சு எவ்வளவு.
4) தொடர் என்ற சொல்லுக்கும் வண்டி என்ற சொல்லுக்கும் என்ன அர்த்தம் என்பதை சொல்லவும்.

5) தொடர், வண்டி என்ற சொற்கள் தொடர்வண்டி என்ற சொல்லை போல் பார்த்தவுடன் பொருளை விளங்குவது போல் சொல்லை உருவாக்க நமது பழந்தமிழர் தவறு செய்து விட்டார்களா.

மேலும் இரும்பு , தாமிரம், கல் , கோ போன்ற பல சொற்கள் ஏன் தொடர்வண்டி சொல் போல் பார்த்தவுடன் பொருள் விளங்கவில்லை.

இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் தான் நமது கருத்தை வெளி உலகிர்க்கு எடுத்து செல்லும்.
















[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 5:54 pm

சூப்பருங்க

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Jan 05, 2013 6:52 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.] கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 12, 2013 6:11 pm

இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் தான் நமது கருத்தை வெளி உலகிர்க்கு எடுத்து செல்லும்.

தங்களின் வார்த்தையை முற்றிலும் ஏற்கிறேன்....ஒரு சில கருத்துகளை தங்களின் ஆலோசனைக்கு வைக்கிறேன்.

தமிழ்மொழி இலக்கண மரபுகள் நிறைந்த ஓர் அற்புத மொழி...இதில் இருக்கும் சொற்களும், உருவாகும் சொற்களும் இந்த மரபில் ஒத்துப் போக வேண்டும்.

தங்கள் சொல்லும் முறையில் சொற்கள் உருவாக்கும் பொழுது அவை புரிந்து கொள்வதில் சிரமமும் குழப்பமும் நிலவும்..

பேச்சு வழக்கில் இருக்கும் சொற்கள் முறையான சொற்கள் இல்லை என்பது மொழிமரபு..ஆங்கிலத்திலும் இதுபோன்ற சொற்களை informal expression என்று விளிக்கின்றனர்.

உதாரணமாக நாம் பயன்படுத்தும் சைக்கிள், rail, xerox, mobile போன்ற வார்த்தைகள் மொழிமரபில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை . Rail என்ற வார்த்தை தண்டவாளத்தை தான் குறிக்கும், cycle என்ற வார்த்தை சுழச்சியை தான் குறிக்கும். mobile என்பது நகருவதை குறிக்கும். ஆனால் இவை பேச்சு வழக்கில் வேறு பொருளில் ஆளப்படுகிறது.

உருவாகும் சொல் எந்தச் சூழ்நிலையிலும் ஒரே பொருளை கொடுக்க வேண்டும், அப்பொழுது தான் அச்சொல் காலத்தை கடந்து நிற்கும், மேலும் மரபில் அமைந்தால் மட்டுமே ஒருவர் அதை ஆராய முடியும். ஆனால் பேச்சு வழக்குச் சொற்கள் அப்படி செய்வதில்லை.

மேலும் தாங்கள் பகுபத சொல்லுக்கும், சொற்றொடருக்கும் உள்ள வேறுபாட்டை உணர வேண்டும்....

155 எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

156. பொருண்மை தெரிதலும், சொன்மை தெரிதலும்,
சொல்லின் ஆகும்' என்மனார் புலவர்


ஒரு சொல், ஒரு பொருளையும், அதன் தன்மையையும் விவரிக்க வேண்டும். இதன் படி அமைப்பதே தமிழ் மரபு.

எல்லா மொழிகளிலும் வேர்ச்சொல்லில் இருந்து வந்த பல சொற்றொடர்கள் சொல்லாக ஆளப்படுகிறது.

டெலிவிஷன், டெலிபதி, டெலெஸ்கோப், டெலிஃபோன் போன்றவை....இவை ஒவ்வொன்றுகும் வேறு வேறு சொல் இருப்பின் ஆங்கிலம் கற்பவரின் நிலைமையை யோசித்து பாருங்கள்..

பழந்தமிழிலும் யானைப்பாகன், தேர்ப்பாகன், அரசவை, படைத்தலைவன் போன்ற வார்த்தைகள் ஆளப்பட்டிருக்கிறது...இவைகள் சொற்றொடர்களே

எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய

சொற்றொடர்களும் ஒரு சொல்லாக உச்சரிக்க வேண்டும் என்பது தொல்காப்பிய தமிழ் மரபு....ஆகையால் தொடர்வண்டி ஒரு சொல்லாக உச்சரிப்பதில் குழப்பம் இல்லை.

சொற்கள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை வரவேற்கிறேன், ஆயினும் இவை அனைத்திலும் சாத்தியமா என்று தெரியவில்லை..மேலும் தாங்கள் கூறும் முறைமையில் பல வேர்ச் சொல் உருவாகும்....இது மொழியை கற்பவருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்...




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Apr 06, 2013 3:35 pm

ஆங்கிலத்தில் கலைச்சொல் உருவாக்குவதற்கு அந்நாட்டவர் கடைபிடிக்கும் வழிமுறைகள் இதோ உங்கள் பார்வைக்கு. உடனே தமிழும் ஆங்கிலமும் ஒன்றா தமிழ் இலக்கணமும் ஆங்கில இலக்கணமும் ஒன்றா என்று அடம் பிடிக்காமல் தமிழும் ஒரு மொழி தான் , ஆங்கிலமும் ஒரு மொழி தான், ஆங்கிலம் இன்று நல்ல வளர்ச்சி பெற்ற மொழி என்ற வகையில் அவர்கள் கடைபிடிக்கும் சொல்லாக்க வழிமுறைகளை நாம் சற்று ஆராய்வோம்.

ஆங்கில சொற்கள் கீழ்காணும் பல வழிமுறைகளில் உருவாக்கப்படுகின்றன.

1) Borrowing - இரவல்பெறல்
2) Shortening or Clipping - சுருக்குதல் (அ) நறுக்குதல்
3) Functional Shift - செயல் மாற்று
4) Back-formation - மீள் உருவாக்கம்
5) Blends - கலப்புகள்
6) Acronymic Formations - சுருக்க உருவாக்கம்
7) Transfer of Personal or Place Names - நபர் அல்லது இடப்பெயர் மாற்றங்கள்
8) Imitation of Sounds - ஒலிகளின் பிரதிபலிப்பு
9) Folk Etymology - நாட்டுப்புற சொற்பிறப்பியல்
10) Combining Word Elements - சொல்கூறு பிணைப்பு.
11) Literary and Creative Coinages - எழுத்து மற்றும் கற்பனை படைப்பு


Borrowing - இரவல்பெறல்
இன்று ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் பெரும்பாலான மற்ற மொழிகளில் இருந்து இரவலாக பெற்றது. பெரும்பாலும் ஐரோப்பிய மொழிகளில் இருந்து பெருவாரியான சொற்கள் இரவல் பெறப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் சுமார் 120 மொழிகளிளின் சொற்கள் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எடுத்துகாட்டாக தமிழின் பல சொற்கள் ஆங்கிலத்தில் சிறு ஒலி மாறுதலுடன் அப்படியே பயன்படுத்தபடுகின்றன
1) கட்டுமரம் - kattamaran
2) வண்டி - bandy
3) குருந்தம் - corundum
4) மிளகுத்தண்ணி - mulligatawny
5) பறையன் - pariah
6) பச்சலை - patchouli
7) வெறுந்தரை - verandah or veranda
8) யனைகொண்டான் - anaconda
9) பனைமரம் - Palmyra
10) காசு - cash
11) பரடு - Parade
12) கரவித்தை - karathe

இது போன்று நிறைய தமிழ் சொற்கள் அப்படியே ஆங்கிலம் உள்வாங்கிகொண்டது. உள்வாங்கிகொண்டலும் அந்த சொற்களை ஆங்கிலத்தின் மொழி இலக்கனத்திற்கு உட்பட்டு ஒலி மருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் இது போன்று மற்ற மொழி சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முடிந்தவரை அவற்றை நாம் தவிர்க்கவேண்டும், பேச்சில் வழக்கத்தில் வந்து விட்ட சில சொற்களை அப்படியே விட்டுவிடுவதா இல்லையா என்பது நம் கையில் தான் உள்ளது. எடுத்துகாட்டாக காபி, வீடியோ, ரயில், சைக்கிள், மோட்டார் என சில சொற்களை கூறலாம்.

கவிஞர் ஜெயமோகன் தனது கட்டுரையில் கூறியது

" கலைச்சொல்லாக்கம் நிகழாமல் பிறசொற்களை அப்படியே கடன்வாங்கிக்கொண்டிருக்கும் மொழியில் காலப்போக்கில் மிகப்பெரிய அழிவு நிகழும். அந்த மொழியின் ஒலிநேர்த்தி இல்லாமலாகும். அந்த மொழியைக் கலையிலக்கியங்களுக்குப் பயன்படுத்த முடியாமலாகும்."

எனவே கூடுமனவரை அவைகளுக்கு சரியான, ஆங்கிலத்துடன் போட்டிபோடும் அளவிற்கு சிறந்த சொற்களை உருவாக்கவேண்டும். அதுவும் அந்தந்த துறை தமிழ் புலமை கொண்ட வல்லுனர்கள் அல்லது பொறியாளர்கள் உருவாக்கினால்தான் அது சிறப்பானதாக இருக்கும்.இதை பற்றி பிறகு வரும் பதிவுகளில் அலசுவோம்.

கடைசியில் என்னை பொறுத்தவரை இந்த Borrowing - இரவல்பெறல் முறை ஆங்கிலத்திற்கு மட்டுமே ஒத்துவரகூடியது.
தமிழுக்கு அது ஒத்துவராது, அப்படியும் அதை பின்பற்றினால் கவிஞர் ஜெயமோகன் அவர்கள் கூற்று தான் பலிக்கும்.

அடுத்து( Shortening or Clipping - சுருக்குதல் (அ) நறுக்குதல் )
தொடரும் .....



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 06, 2013 4:18 pm

தொடருங்கள் ராஜூ - பயனுள்ள பகிர்வு




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக