புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_m10திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Dec 14, 2009 12:33 pm



திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள்











[You must be registered and logged in to see this image.]காலம்
பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க
வேண்டியதன் அவசியத்தைப் பற்றி திருவள்ளுவப் பெருமான் அருளியவற்றை சென்ற
கட்டுரையில் கண்டோம். இன்னும் அவரின் பல அறவுரைகளைத் தொடர்ந்து கண்டு
பயனடைவோம்.
வெற்றியினை விரும்பாத மனிதர்கள் உண்டா? இன்று வெற்றிக்கான வழிகாட்டி
என்ற பெயரில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியாகின்றன. இணையத்திலோ, பல
ஆயிரக்கணக்கான தளங்கள், பற்பல உத்திகளைப் பற்றிப் பேசுகின்றன. இவை
எல்லாவற்றையும் படித்தோமானால் கடைசியில் அவற்றின் சாரம் ஒன்றுதான்.
விடாமுயற்சி, சோம்பலின்மை, தகவல் தொடர்புத்திறன், அறிவுத்திறன் போன்ற
தகுதிகள் பல்வேறு விகிதத்தில் ஒன்று கலந்து வெற்றிக்கான பாதையை
அமைத்துக்கொடுக்கின்றன. வெற்றியாளர்களுக்கான பொதுப்பண்புகளாகப் பல
புத்தகங்கள் கூறுவனவற்றை வள்ளுவர் எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்கு முன்பே
எப்படி அழகுற விளக்கியிருக்கிறார் என்று பார்க்கும்பொழுது வியப்பே
ஏற்படுகிறது.

சந்தர்ப்பத்தை நழுவ விடாத தன்மை:

'Opportunity is missed by most people because it is dressed overalls
and looks like work' என்பது பிரபல அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசனின்
கருத்து. நாள், கோள் பார்த்துக் கொண்டோ, சோம்பலின் காரணமாகவோ செயலைத்
தள்ளிப் போட்டுக்கொண்டே போனால் வெற்றித்திருமகள் எப்படித் தேடி
வருவாள்? அதனால்தான் வள்ளுவர் சொல்கிறார்
'ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல்'
இதன் கருத்தாவது, செய்ய முடிந்த இடத்தில் எல்லாம் செயலைச்
செய்துகொண்டே இருக்க வேண்டும். செய்யா இயலாத இடத்திலோ, செயலைச்செய்து
முடிப்பதற்கான வழிகளை அறிந்து செயலினை முடிக்க வேண்டும் என்பதாகும்.
தளராது செயல்படுபவனே வெற்றியாளன் ஆக முடியுமல்லவா?

தகுந்த காலமும் இடமும் அறிந்து செயல் புரிதல்:

வெற்றியாளர்கள், 'Optimist sees Opportunity in every difficulty,
Pessimist sees difficulties in every opportunity' என்ற பொன்மொழியினை
அறிந்தவர்கள். எந்தக் காலத்தில்/எந்த இடத்தில் எத்தகைய செயலைச்
செய்யலாமென்று அறிந்து, செயலாற்றி வெற்றியை ஈட்டுபவர்கள். காற்றடிக்கும்
நேரத்தில் மாவு விற்கவும், மழை கொட்டுகையில் உப்பு விற்பவனும், கொல்லன்
பட்டறைகள் நிறைந்த இடத்தில் ஊசி வியாபாரம் செய்யச் ச்செல்பவனும் வெற்றி
பெற முடியுமா?
இதை மனதில் கொண்டுதான் வள்ளுவப் பெருந்தகை 'இடனறிதல்',
'காலமறிதல்' என்ற தலைப்புகளில் இருபது குறள்கள் இயற்றி, நமக்கு வழி
காட்டுகிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

'அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்' என்று கேட்கிறார் இவர்.
(பொருள்: கருவியையும் காலத்தையும் அறிந்து செயல்பட்டால், முடிக்க முடியாதது என்று ஒன்று உண்டா? - காலமறிதல் - குறள் எண்- 483)

'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து' என்பது இவர் வெற்றிக்குக் கூறும் மற்றொரு உத்தியாகும்
(பொருள் - வெற்றியை விரும்புபவன், தக்க காலத்தை எதிர்நோக்கி, கொக்கு
போல் காத்திருக்க வேண்டும். வெற்றிக்கான செயல் செய்யும் காலம்
கனியும்பொழுது, அந்தக்கொக்கு விரைந்து மீனைக் கவ்வுவது போல,
செயலாற்றுதல் வேண்டும். - காலமறிதல் - குறள் எண்- 490)

'அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்'
என்று சரியான இடத்தில் சரியான செயலைச் செய்வதன் பயனை
வலியுறுத்துகிறார். (பொருள் - இடமறிந்து ஒரு செயலில் ஈடுபட்டால்
துணிச்சல் தவிர வேறு துணைகள் தேவையில்லை - இடனறிதல் - குறள் எண் -497)

'நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற'
என மேலும் ஒரு உவமையின் மூலம் தகுந்த இடத்தில் தகுந்த செயலைச் செய்வதன்
இன்றியமையாமையை விளக்குகிறார் இவர். ( பொருள் - முதலையானது நீரில்
உள்ளவரை மிகுந்த வலிமையுடையது, மற்ற மிருகங்களை வெல்லக் கூடியது. ஆனால்
அதுவே, கரைக்கு வந்துவிடுமானால், மற்ற மிருகங்கள் அதனை வென்றுவிடும்.
அதாவது, தனக்கு எந்தத் துறையில் திறமை உள்ளதோ, அந்தத் துறையில் ஈடுபட்டு
வெற்றியை ஈட்டவேண்டும். தனக்குத் தெரியாத துறையில் கால்வைத்து,
தேவையில்லாமல் மாட்டிக்கொண்டு திண்டாடக்கூடாது என்பது இதன் கருத்து.
உள்ளூர் யானை, அசலூர்ப் பூனை என்னும் பழமொழி இங்கு நினைவில் கொள்ளத்
தக்கது. - குறள் எண் - 495)

தகவல் பரிமாற்றத் திறன்:

தன் கருத்துக்களை, பிறர் ஏற்கும்படி கூற வல்லவன் எளிதில் வெற்றியடைவான்
என்பது வள்ளுவரின் முடிவு. இது உண்மையும் கூட. உங்களிடம் ஒரு புதிய உத்தி
ஏதும் இருக்கலாம். அதைச் செயல் படுத்த வேண்டுமானால், பலரது ஒத்துழைப்பும்
தேவைப்படும். அப்பொழுதுதான் உங்களால் வெற்றியடைய முடியும்.அவ்வாறு பலரின்
ஒத்துழைப்பும் வேண்டுமானால், உங்கள் உத்தியை அவர்கள் ஏற்றுக்கொள்ள
வேண்டும். அதற்கு, அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம், மனதில் பதியும்
வண்ணம் எடுத்துக்கூறும் பேச்சுத்திறமை (Communication Skill) வேண்டும்.
இதையும் திருக்குறள் அழகாகத் தெளிவு படுத்துகிறது சொல்வன்மை என்ற
அதிகாரத்தில் உள்ள முத்தான பத்துக் குறளின் மூலம்.

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது'
என்று, தகவல் பரிமாற்றத்தில் சிறந்தவர் வெற்றியாளராவது உறுதி என திட்டவட்டமாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.
(பொருள் - தான் சொல்ல விரும்புவதை, நன்கு திறம்படக் கூற வல்ல, சொல்ல
வேண்டியவற்றை மறவாமல், அவைக்கு அஞ்சி சோர்ந்துவிடாமல் சொல்லக்கூடிய
வல்லமை படைத்தவனை யாராலும் வெற்றி கொள்ள இயலாது - சொல் வன்மை - குறள்
எண் - 647)

விடாமுயற்சி வெற்றி தரும்:
'மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையினாள்'
என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் வள்ளுவர். அதாவது
சோம்பலுள்ளவனிடத்தில் மூதேவியும், சோம்பலை நீக்கி நல்முயற்சியை
மேற்கொள்ளுபவனிடம் திருமகள் வீற்றிருப்பாள் என்பது இதன் பொருள். (
ஆள்வினை உடைமை - குறள் எண் - 617)
மூதேவி என்பது துன்பத்தையும் வறுமையையும், திருமகள் என்பது செல்வத்தையும் வெற்றியையும் குறிக்கிறது.

வாழும் முறை குறித்தும், வாழ்வின் பல கூறுகள் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளவை இன்னும் எவ்வளவோ உண்டு. வரும் கட்டுரைகளில்
குறளமுதைத் தொடர்ந்து பருகுவோம்.

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:22 pm

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் 103459460 திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் 103459460 திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:51 am

திருவள்ளுவர் காட்டும் வெற்றிக்கான வழிகள் 103459460 சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக