Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
2 posters
Page 1 of 1
அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
http://3.bp.blogspot.com/-kN9G_VseB1Q/UV60yMNM6vI/AAAAAAAABmA/Wj21jhsqd8g/s1600/Woman-grief-painting-640x480.jpg
பெங்களுர் வந்து ஐஞ்சு மாசம் ஆச்சு. ஒரு வழியா இன்னும் ரெண்டு நாள்ல ட்ரைனிங் முடிஞ்சிரும். ஒரு மூனு நாள் லீவு போட்டு ஊருக்குப் போயிட்டு வரணும். தஞ்சாவூர் தெப்பக்குளம், எப்பவும் திட்டும் அம்மா, எதிர்வீட்டு இமயா குட்டி எல்லாத்தையும் பாக்காம இருக்க முடியல. தங்கைக்கு பன்னெண்டாவது பரிட்ச முடிஞ்சது. தம்பிக்கு இந்த வாரத்துல பத்தாவது பரிட்ச முடிஞ்சிரும். அவங்களோட நேரத்த கழிக்க இது தான் சரியான நேரம்.
போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு நெறைய வாங்க வேண்டி இருக்கு.
எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, அம்மா காஸ்ட்லியா ஒரு நல்ல சேல கூட கட்டுனதில்ல. அவங்களுக்கு ஒரு நல்ல பட்டுப்பொடவ வாங்கணும். தம்பிக்கு ஒரு பிராண்டேட் ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட். அந்த கிரிகெட் பைத்தியம், போன் பண்றப்பல்லாம் பேட் கேக்குது. அதுவும் ஒன்னு வாங்கணும்.
இந்த வருஷம் தங்க காலேஜ் போவா. ஒரு மொபைல் வேணும்னு வேலைக்கு வாரப்பவே சொன்னா. அவள்ட்ட மொபைல் இருக்கறதும் தேவைதான். நல்லதா ஒரு மொபைல் வாங்கணும். அப்பறம் இமயா குட்டிக்கு கண்டிப்பா ஒரு கவுன்.
அப்பாவேற ரொம்பநாள் வைத்தியம் பாக்காம படுத்த படுக்கையா இருக்காரு. அவர நல்ல டாக்டர்ட காட்டனும். நமக்காக ரொம்ப உழைச்சாரு. அவர் படுத்த பின்னாடி அம்மா தான் எல்லா சுமையும் அஞ்சு வருசமா தாங்குறா.
எல்லாத்துக்கும் மேல, காலேஜ் படிப்புக்கு பாங்குல வாங்குன கடனுக்கு இன்னும் ஒரு தவண கூட கட்டல. அதுக்கு ஒரு பெரிய தொகைய கட்டணும்..
என்று எதிர்காலத்தில் தான் செய்யவேண்டியதை மனத்திரையில் ஓட்டிக் கொண்டே, காலை ஐந்து மணியைக் காட்டும் அலாரத்தை தலையணையில் சாய்வாக தலையை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி...
யாழினி...
தேவியின் மூத்த மகள் . அம்மாவிடம் அடிவாங்காமல் படுக்கைவிட்டு எழதா அளவிற்கு படு சுறுசுறுப்பானவள். இன்று அனைவருக்கும் முன்பே விழித்துவிட்டாள். தூங்கி எழுந்த முகம்.. இருந்தும் புதியதாய் மொட்டு விரித்த மலரைப்போல் பளபளப்பு குறையவில்லை. அரை உடல் போர்த்தப்பட்ட போர்வையும், அதன் மேல் கிடக்கும் தங்கையின் காலையும் நகர்த்திப் போட்டுவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தாள்.
நேற்றே இவளது கல்லூரி படிப்பின் கடைசி நாள். படிப்பில் படு சுட்டி. பொறியியல் மூன்றாம் வருடமே கேம்பஸ் தேர்வில் வேலை கிடைத்து விட்டது. பெரிய கம்பெனி, கை நிறைய சம்பளம். இன்னும் 20 நாட்களில் பெங்களூரில் வேலைக்குச் சேர வேண்டும். ஒரே சந்தோசம். மென்பொருள் கம்பெனியின் சூழல் எப்படியிருக்கும் என்ற உற்சாகமும் பரபரப்பும் அவளுக்குள்.
நாம் வேலைக்குச் சேர்ந்ததும், ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் அம்மாவிற்கு முதலில் ஓய்வு தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே பல் தேய்த்தாள்.
பொழுது விடிந்தது...
அரிசியை முறத்தில் போட்டு புடைத்துக்கொண்டே அம்மா சமயலறையில் இருந்து வெளியே வந்தாள். "அம்மா...." என்று தேவியை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் யாழினி. தேவி திட்டினாள்.
"ஏய் உனக்கு என்னடி ஆச்சு.. மொதல்ல பல்தேச்சியா ?"
"ஹ்ம்ம் அதெல்லாம் அப்பவே ஆச்சே"
"சரி சரி... இமையா, தம்பி அப்டி இப்டினு யார் கூடயும் ஊர்சுத்த போயிடாத. நாலு மணிக்கு உன்ன பொண்ணு பாக்க வாரங்க"
"ஏம்மா உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா"
"நான் எதுக்குடி விளயாடனும்.. நேத்து முந்தாநாள் உன் அப்பாவழி சொந்தம் ஒருத்தர பாத்தேன். உன்ன எங்கயோ பாத்தாங்களாம். அவர் பையனுக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்காம். அவங்க குடும்பத்த எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவர் பையனும் கூட ரொம்ப நல்லவர்" என்று கூறிய தேவியை இடைமறித்தாள் யாழினி..
"அம்மா..."
"ஏய் இருடி... உனக்கு கண்டிப்பா பொருத்தமா இருப்பார். நாளைக்கு அந்த பையன் பெங்களூர் போறதால, இன்னைக்கு பொண்ண பாக்க முடியுமான்னு கேட்டாங்க. சரின்னு சொல்லிட்டு துணியெல்லாம் வாங்க கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள நேத்து நீங்க தூங்கிட்டிங்க. அதான் ராத்திரியே சொல்ல முடில" என்றாள் தேவி...
அருகில் குறுகிப் படுத்திருந்த அப்பாவிடம் ஓடினாள் தேவி.
"அப்பா என்னப்பா சொல்றாங்க அம்மா ?"
"ஏய்... இதெல்லாம் பண்ண சொன்னதே உன் அப்பாதான். அவர்ட்ட என்னா பிராது சொல்ற..."
யாழினி கண்களில் நீர் முட்டியது. இப்படி நடக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. கிணற்றிற்குள் போடப்பட்ட கல்லாய் நொடிபொழுதில் சோகத்தில் மூழ்கினாள்.
"இதுக்கு இப்ப என்ன அவசரம். நான் வேலைக்குப் போகணும், நம்ம குடும்பத்துக்கு ஒரு விடிவு பொறக்கணும்" கோபத்தோடே சொல்லிவிட்டு அழுதாள்.
"பாருமா... உணகப்பறம் தங்கச்சி இருக்கா, அப்பறம் தம்பி.. அவங்கள படிக்க வைக்கணும், அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும். இந்த குடும்பம் மாதிரி இன்னொன்னு கெடைக்குமான்னு எனக்கு தெரில. ஜாதகப்பொருத்தம் அத்தனையும் அம்சமா இருக்கு. அதோட அப்பாவுக்கு எதாச்சும் ஆகறதுக்கு முன்னாடி உனக்கு நல்லது பண்ணி பாக்கனும்னு அடிக்கடி சொல்றாரு..."
என்று தன் நிலையைச் சொல்லி அவளை தேற்ற மட்டுமே முயற்சித்தாள் தேவி.
யாழினியின் அழுகை அடைமழையாய் தொடர்ந்தது..
தேவி அவளை அணைத்துக் கொண்டே சொன்னாள்..
"உனக்கு வேலைக்குதான போகணும்..? பையன் பெங்களூர்ல தான வேல பாக்குறாரு.. நீயும் கல்யாணத்துக்கப்பறம் அங்க போ.. வேல பாரு.. பணம் அனுப்பு.. யாரு வேண்டாம்னா" என்றாள் தேவி.. அவளை சாமாதனப்படுத்த..
யாழினிக்கு கல்யாண ஆசை இல்லை. அவளுக்கு அதில் சற்றும் ஈடுபடும் இல்லை என்றாலும், இந்த வார்த்தை யாழினியை கொஞ்சம் தேற்றுவதாய் இருந்தது.
மாலை 3 மணி...
இளைய மகளின் உதவியுடன் சமையல், பலகாரம் செய்துவிட்டு, தூசிகள் பறந்து கொண்டிருக்கும் ஹாலை சுத்தம் செய்து முடித்தாள் தேவி.
வராத கன்றுக் குட்டியை வம்படியாக இழுப்பதுபோல், புது சேலை, சில நகைகளை கட்டாயமாக உடுத்தி யாழினியை அறைக்குள் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் தேவி.
மாலை மணி நான்கு...
மணமகன் வீட்டார் ஐந்தாறு பேர், திறந்திருக்கும் வாசல் கதவைத் தட்டி உள்ளே நுழைந்தனர்.தேவியின் மகன் ஓடிப்போய் அவர்களின் வருகையை அம்மாவிடம் சொன்னான். நடக்க முடியாமல் தனியறையில் படுத்திருக்கும் தந்தையை அனைத்துப் பிடித்து அனைவர் முன்னும் கொண்டு அமர்த்தினான்.
அறையைவிட்டு வெளியே வந்தாள் தேவி...
"வாங்க வாங்க.. உக்காருங்க... எல்லாரும் சௌக்கியமா.. பாப்பாவ கொஞ்சம் ரெடி பண்ணிட்டு இருந்தேன். அதான்" என்றாள் தேவி..
"ஹ்ம்ம் பரவால்ல பரவால்ல.. பொறுமையா வாங்க... அவரசரமில்ல" என்று சிரித்தார் மாப்பிள்ளையின் தந்தை.
அவர்களின் குடும்ப வரலாற்றை பேசிக்கொண்டே நேரம் கடந்தது...
அனைவரும் டீ, பலகாரங்கள் கொடுத்துவிட்டு அனைவர் முன்னும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் யாழினி. மணமகன் லட்சணமாக இருந்தாலும், அவனை கடனுக்காகவே பார்த்துவிட்டுப் போனாள். யாழினியை பேருந்து நிலையத்தில் சுடிதாரில் பார்த்துவிட்டு இன்று சேலைக் கோலத்தில் பார்த்தது மணமகனுக்கு பூரிப்பாய் இருந்தது. அவனுக்கு முழு சம்மதம். இரட்டைச் சந்தோசம்.
பேச்சு வார்த்தை தொடந்தது. மணமகனின் தந்தை பேசினார்.
"பாருமா தங்கச்சி... எங்க குடும்பத்த பத்தி உனக்கே நல்லாத் தெரியும். வசதி வாய்ப்புக்கு எந்த குறையுமில்ல. இவன் போயி சம்பாதிச்சுதான் குடும்பம் நடத்தனும்னு ஒண்ணுமில்ல. ஆனா அவன் ஆசப்பட்டதால வேல பாக்குறான். எங்களுக்கு உங்கள்ட இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்ல." என்று சொன்னதை வழிமறித்து...
"என்னால முடிஞ்சத செய்றேன் அண்ணே" என்றாள் தேவி.
"பொம்பளையா, உறவுக்காரங்க உதவி கூட இல்லமா தனியா இருந்து எல்லாத்தையும் கர சேக்குறீல்ல, அந்த தைரியத்துல சொல்றே. அதுதாம்மா உன்ட எனக்கு ரொம்ப புடிச்சது. ரொம்ப சந்தோசமம்மா. நீ முடிஞ்சத செய் செய்யாம போ, அதெல்லாம் எனக்கு தேவையில்ல." என்ற அவரின் அசாதாரணமான வார்த்தைக்கு அனைவரும் சிரித்தனர்..
"ஆனா ஒரே ஒரு கண்டிசன்மா. பொண்ணுக்கு பெரிய கம்பனில வேல கெடச்சிருக்குனு கேள்விப்பட்டேன். சந்தோசம்.. ஆனா, எனக்கு இவன் ஒரே பையன். தாயில்லாம வளந்தவன். அதோட பொண்ணு போயி சம்பாதிச்சு தான் குடும்பம் நடத்தனும்ங்ற தேவையும் இல்ல. அதனால பொண்ணு வேலைக்கு போகாமா, இவனுக்கு மனைவியா மட்டுமில்ல தாயாவும் அன்பு காட்டணும்னு பையன் நெனைக்கிறான்." என்றார் எதார்த்தம் மீறாத ஒரு சராசரி தகப்பனாக.
இதைக் கேட்ட யாழினிக்கு தலையில் இடி விளுந்ததது போல் இருந்தது. மயக்கம் வருவதாய் உணர்ந்தாள். தன்னால் பேச முடியாமல், அம்மாவிடம் வேண்டாம் என்று சைகை காட்டினாள்.
யாழினியின் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு "அதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்லண்ணே" என்று தனது கணவரின் நிலையையும், ஒரு பெண்ணாக தான் படும் கஷ்டத்தையும் மனதில் கொண்டு சொன்னாள் தேவி..
"அப்ப ரொம்ப சந்தோசம். சரிமா அப்ப ஒரு நல்ல நாள் பாத்துட்டு தகவல் சொல்றோம், கூடிய சீக்கிரத்துல கல்யாணத்த வச்சுக்குவோம்" என்று கூறிவிட்டு அனைவரும் கிளம்பினர்.
தனது மன நிலையை அம்மாவிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல் இரவு முழுதும் அழுதாள் யாழினி.
நடு இரவு நகர்ந்து வெகு நேரமானது..
ஹாலில் சட சட வென்று ஐந்து மணிக்கு சத்தம் கேட்டது.
யாழினி எழுந்தாள். குனிந்தே வேலை செய்து சற்று வளைந்துபோன முதுகுடன், வலது புறத்தில் துணியை குவியலாகப் போட்டுவிட்டு தையல் மெசினை ஓட்டிக் கொண்டிருக்கும் தன் தாயைப் ஏக்கத்தோடே பார்த்தாள்.
தையல் மெசினுக்கு ஓய்வு, அம்மாவிற்கு பட்டுப்புடவை, தம்பிக்கு கிரிக்கெட் பேட், தங்கைக்கு மொபைல், அப்பாவிற்கு வைத்தியம் என்று எதையுமே தனது கையால் செய்ய முடியாத இயலாமையையும், இந்த சபிக்கப்பட்ட சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் ஒரு சொட்டி கண்ணீர் விட்டு, ஒட்டுமொத்த வெறுப்பில் உள்ளூர சொல்லிக் கொண்டாள்.
"அடுத்த பிறவியிலாவது நான் ஒரு ஆண்பிள்ளையா பொறக்கணும்"
முற்றும்...
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/04/blog-post_5.html
அன்புடன்,
அகல்
பெங்களுர் வந்து ஐஞ்சு மாசம் ஆச்சு. ஒரு வழியா இன்னும் ரெண்டு நாள்ல ட்ரைனிங் முடிஞ்சிரும். ஒரு மூனு நாள் லீவு போட்டு ஊருக்குப் போயிட்டு வரணும். தஞ்சாவூர் தெப்பக்குளம், எப்பவும் திட்டும் அம்மா, எதிர்வீட்டு இமயா குட்டி எல்லாத்தையும் பாக்காம இருக்க முடியல. தங்கைக்கு பன்னெண்டாவது பரிட்ச முடிஞ்சது. தம்பிக்கு இந்த வாரத்துல பத்தாவது பரிட்ச முடிஞ்சிரும். அவங்களோட நேரத்த கழிக்க இது தான் சரியான நேரம்.
போறதுக்கு முன்னாடி வீட்டுக்கு நெறைய வாங்க வேண்டி இருக்கு.
எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து, அம்மா காஸ்ட்லியா ஒரு நல்ல சேல கூட கட்டுனதில்ல. அவங்களுக்கு ஒரு நல்ல பட்டுப்பொடவ வாங்கணும். தம்பிக்கு ஒரு பிராண்டேட் ஜீன்ஸ் பேன்ட், டீ ஷர்ட். அந்த கிரிகெட் பைத்தியம், போன் பண்றப்பல்லாம் பேட் கேக்குது. அதுவும் ஒன்னு வாங்கணும்.
இந்த வருஷம் தங்க காலேஜ் போவா. ஒரு மொபைல் வேணும்னு வேலைக்கு வாரப்பவே சொன்னா. அவள்ட்ட மொபைல் இருக்கறதும் தேவைதான். நல்லதா ஒரு மொபைல் வாங்கணும். அப்பறம் இமயா குட்டிக்கு கண்டிப்பா ஒரு கவுன்.
அப்பாவேற ரொம்பநாள் வைத்தியம் பாக்காம படுத்த படுக்கையா இருக்காரு. அவர நல்ல டாக்டர்ட காட்டனும். நமக்காக ரொம்ப உழைச்சாரு. அவர் படுத்த பின்னாடி அம்மா தான் எல்லா சுமையும் அஞ்சு வருசமா தாங்குறா.
எல்லாத்துக்கும் மேல, காலேஜ் படிப்புக்கு பாங்குல வாங்குன கடனுக்கு இன்னும் ஒரு தவண கூட கட்டல. அதுக்கு ஒரு பெரிய தொகைய கட்டணும்..
என்று எதிர்காலத்தில் தான் செய்யவேண்டியதை மனத்திரையில் ஓட்டிக் கொண்டே, காலை ஐந்து மணியைக் காட்டும் அலாரத்தை தலையணையில் சாய்வாக தலையை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி...
யாழினி...
தேவியின் மூத்த மகள் . அம்மாவிடம் அடிவாங்காமல் படுக்கைவிட்டு எழதா அளவிற்கு படு சுறுசுறுப்பானவள். இன்று அனைவருக்கும் முன்பே விழித்துவிட்டாள். தூங்கி எழுந்த முகம்.. இருந்தும் புதியதாய் மொட்டு விரித்த மலரைப்போல் பளபளப்பு குறையவில்லை. அரை உடல் போர்த்தப்பட்ட போர்வையும், அதன் மேல் கிடக்கும் தங்கையின் காலையும் நகர்த்திப் போட்டுவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தாள்.
நேற்றே இவளது கல்லூரி படிப்பின் கடைசி நாள். படிப்பில் படு சுட்டி. பொறியியல் மூன்றாம் வருடமே கேம்பஸ் தேர்வில் வேலை கிடைத்து விட்டது. பெரிய கம்பெனி, கை நிறைய சம்பளம். இன்னும் 20 நாட்களில் பெங்களூரில் வேலைக்குச் சேர வேண்டும். ஒரே சந்தோசம். மென்பொருள் கம்பெனியின் சூழல் எப்படியிருக்கும் என்ற உற்சாகமும் பரபரப்பும் அவளுக்குள்.
நாம் வேலைக்குச் சேர்ந்ததும், ஓய்வில்லாமல் உழைத்து கொண்டிருக்கும் அம்மாவிற்கு முதலில் ஓய்வு தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே பல் தேய்த்தாள்.
பொழுது விடிந்தது...
அரிசியை முறத்தில் போட்டு புடைத்துக்கொண்டே அம்மா சமயலறையில் இருந்து வெளியே வந்தாள். "அம்மா...." என்று தேவியை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தாள் யாழினி. தேவி திட்டினாள்.
"ஏய் உனக்கு என்னடி ஆச்சு.. மொதல்ல பல்தேச்சியா ?"
"ஹ்ம்ம் அதெல்லாம் அப்பவே ஆச்சே"
"சரி சரி... இமையா, தம்பி அப்டி இப்டினு யார் கூடயும் ஊர்சுத்த போயிடாத. நாலு மணிக்கு உன்ன பொண்ணு பாக்க வாரங்க"
"ஏம்மா உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா"
"நான் எதுக்குடி விளயாடனும்.. நேத்து முந்தாநாள் உன் அப்பாவழி சொந்தம் ஒருத்தர பாத்தேன். உன்ன எங்கயோ பாத்தாங்களாம். அவர் பையனுக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்காம். அவங்க குடும்பத்த எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். அவர் பையனும் கூட ரொம்ப நல்லவர்" என்று கூறிய தேவியை இடைமறித்தாள் யாழினி..
"அம்மா..."
"ஏய் இருடி... உனக்கு கண்டிப்பா பொருத்தமா இருப்பார். நாளைக்கு அந்த பையன் பெங்களூர் போறதால, இன்னைக்கு பொண்ண பாக்க முடியுமான்னு கேட்டாங்க. சரின்னு சொல்லிட்டு துணியெல்லாம் வாங்க கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள நேத்து நீங்க தூங்கிட்டிங்க. அதான் ராத்திரியே சொல்ல முடில" என்றாள் தேவி...
அருகில் குறுகிப் படுத்திருந்த அப்பாவிடம் ஓடினாள் தேவி.
"அப்பா என்னப்பா சொல்றாங்க அம்மா ?"
"ஏய்... இதெல்லாம் பண்ண சொன்னதே உன் அப்பாதான். அவர்ட்ட என்னா பிராது சொல்ற..."
யாழினி கண்களில் நீர் முட்டியது. இப்படி நடக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. கிணற்றிற்குள் போடப்பட்ட கல்லாய் நொடிபொழுதில் சோகத்தில் மூழ்கினாள்.
"இதுக்கு இப்ப என்ன அவசரம். நான் வேலைக்குப் போகணும், நம்ம குடும்பத்துக்கு ஒரு விடிவு பொறக்கணும்" கோபத்தோடே சொல்லிவிட்டு அழுதாள்.
"பாருமா... உணகப்பறம் தங்கச்சி இருக்கா, அப்பறம் தம்பி.. அவங்கள படிக்க வைக்கணும், அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும். இந்த குடும்பம் மாதிரி இன்னொன்னு கெடைக்குமான்னு எனக்கு தெரில. ஜாதகப்பொருத்தம் அத்தனையும் அம்சமா இருக்கு. அதோட அப்பாவுக்கு எதாச்சும் ஆகறதுக்கு முன்னாடி உனக்கு நல்லது பண்ணி பாக்கனும்னு அடிக்கடி சொல்றாரு..."
என்று தன் நிலையைச் சொல்லி அவளை தேற்ற மட்டுமே முயற்சித்தாள் தேவி.
யாழினியின் அழுகை அடைமழையாய் தொடர்ந்தது..
தேவி அவளை அணைத்துக் கொண்டே சொன்னாள்..
"உனக்கு வேலைக்குதான போகணும்..? பையன் பெங்களூர்ல தான வேல பாக்குறாரு.. நீயும் கல்யாணத்துக்கப்பறம் அங்க போ.. வேல பாரு.. பணம் அனுப்பு.. யாரு வேண்டாம்னா" என்றாள் தேவி.. அவளை சாமாதனப்படுத்த..
யாழினிக்கு கல்யாண ஆசை இல்லை. அவளுக்கு அதில் சற்றும் ஈடுபடும் இல்லை என்றாலும், இந்த வார்த்தை யாழினியை கொஞ்சம் தேற்றுவதாய் இருந்தது.
மாலை 3 மணி...
இளைய மகளின் உதவியுடன் சமையல், பலகாரம் செய்துவிட்டு, தூசிகள் பறந்து கொண்டிருக்கும் ஹாலை சுத்தம் செய்து முடித்தாள் தேவி.
வராத கன்றுக் குட்டியை வம்படியாக இழுப்பதுபோல், புது சேலை, சில நகைகளை கட்டாயமாக உடுத்தி யாழினியை அறைக்குள் அலங்கரித்துக் கொண்டிருந்தாள் தேவி.
மாலை மணி நான்கு...
மணமகன் வீட்டார் ஐந்தாறு பேர், திறந்திருக்கும் வாசல் கதவைத் தட்டி உள்ளே நுழைந்தனர்.தேவியின் மகன் ஓடிப்போய் அவர்களின் வருகையை அம்மாவிடம் சொன்னான். நடக்க முடியாமல் தனியறையில் படுத்திருக்கும் தந்தையை அனைத்துப் பிடித்து அனைவர் முன்னும் கொண்டு அமர்த்தினான்.
அறையைவிட்டு வெளியே வந்தாள் தேவி...
"வாங்க வாங்க.. உக்காருங்க... எல்லாரும் சௌக்கியமா.. பாப்பாவ கொஞ்சம் ரெடி பண்ணிட்டு இருந்தேன். அதான்" என்றாள் தேவி..
"ஹ்ம்ம் பரவால்ல பரவால்ல.. பொறுமையா வாங்க... அவரசரமில்ல" என்று சிரித்தார் மாப்பிள்ளையின் தந்தை.
அவர்களின் குடும்ப வரலாற்றை பேசிக்கொண்டே நேரம் கடந்தது...
அனைவரும் டீ, பலகாரங்கள் கொடுத்துவிட்டு அனைவர் முன்னும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் யாழினி. மணமகன் லட்சணமாக இருந்தாலும், அவனை கடனுக்காகவே பார்த்துவிட்டுப் போனாள். யாழினியை பேருந்து நிலையத்தில் சுடிதாரில் பார்த்துவிட்டு இன்று சேலைக் கோலத்தில் பார்த்தது மணமகனுக்கு பூரிப்பாய் இருந்தது. அவனுக்கு முழு சம்மதம். இரட்டைச் சந்தோசம்.
பேச்சு வார்த்தை தொடந்தது. மணமகனின் தந்தை பேசினார்.
"பாருமா தங்கச்சி... எங்க குடும்பத்த பத்தி உனக்கே நல்லாத் தெரியும். வசதி வாய்ப்புக்கு எந்த குறையுமில்ல. இவன் போயி சம்பாதிச்சுதான் குடும்பம் நடத்தனும்னு ஒண்ணுமில்ல. ஆனா அவன் ஆசப்பட்டதால வேல பாக்குறான். எங்களுக்கு உங்கள்ட இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்ல." என்று சொன்னதை வழிமறித்து...
"என்னால முடிஞ்சத செய்றேன் அண்ணே" என்றாள் தேவி.
"பொம்பளையா, உறவுக்காரங்க உதவி கூட இல்லமா தனியா இருந்து எல்லாத்தையும் கர சேக்குறீல்ல, அந்த தைரியத்துல சொல்றே. அதுதாம்மா உன்ட எனக்கு ரொம்ப புடிச்சது. ரொம்ப சந்தோசமம்மா. நீ முடிஞ்சத செய் செய்யாம போ, அதெல்லாம் எனக்கு தேவையில்ல." என்ற அவரின் அசாதாரணமான வார்த்தைக்கு அனைவரும் சிரித்தனர்..
"ஆனா ஒரே ஒரு கண்டிசன்மா. பொண்ணுக்கு பெரிய கம்பனில வேல கெடச்சிருக்குனு கேள்விப்பட்டேன். சந்தோசம்.. ஆனா, எனக்கு இவன் ஒரே பையன். தாயில்லாம வளந்தவன். அதோட பொண்ணு போயி சம்பாதிச்சு தான் குடும்பம் நடத்தனும்ங்ற தேவையும் இல்ல. அதனால பொண்ணு வேலைக்கு போகாமா, இவனுக்கு மனைவியா மட்டுமில்ல தாயாவும் அன்பு காட்டணும்னு பையன் நெனைக்கிறான்." என்றார் எதார்த்தம் மீறாத ஒரு சராசரி தகப்பனாக.
இதைக் கேட்ட யாழினிக்கு தலையில் இடி விளுந்ததது போல் இருந்தது. மயக்கம் வருவதாய் உணர்ந்தாள். தன்னால் பேச முடியாமல், அம்மாவிடம் வேண்டாம் என்று சைகை காட்டினாள்.
யாழினியின் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு "அதெல்லாம் ஒன்னும் பிரச்சன இல்லண்ணே" என்று தனது கணவரின் நிலையையும், ஒரு பெண்ணாக தான் படும் கஷ்டத்தையும் மனதில் கொண்டு சொன்னாள் தேவி..
"அப்ப ரொம்ப சந்தோசம். சரிமா அப்ப ஒரு நல்ல நாள் பாத்துட்டு தகவல் சொல்றோம், கூடிய சீக்கிரத்துல கல்யாணத்த வச்சுக்குவோம்" என்று கூறிவிட்டு அனைவரும் கிளம்பினர்.
தனது மன நிலையை அம்மாவிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல் இரவு முழுதும் அழுதாள் யாழினி.
நடு இரவு நகர்ந்து வெகு நேரமானது..
ஹாலில் சட சட வென்று ஐந்து மணிக்கு சத்தம் கேட்டது.
யாழினி எழுந்தாள். குனிந்தே வேலை செய்து சற்று வளைந்துபோன முதுகுடன், வலது புறத்தில் துணியை குவியலாகப் போட்டுவிட்டு தையல் மெசினை ஓட்டிக் கொண்டிருக்கும் தன் தாயைப் ஏக்கத்தோடே பார்த்தாள்.
தையல் மெசினுக்கு ஓய்வு, அம்மாவிற்கு பட்டுப்புடவை, தம்பிக்கு கிரிக்கெட் பேட், தங்கைக்கு மொபைல், அப்பாவிற்கு வைத்தியம் என்று எதையுமே தனது கையால் செய்ய முடியாத இயலாமையையும், இந்த சபிக்கப்பட்ட சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் ஒரு சொட்டி கண்ணீர் விட்டு, ஒட்டுமொத்த வெறுப்பில் உள்ளூர சொல்லிக் கொண்டாள்.
"அடுத்த பிறவியிலாவது நான் ஒரு ஆண்பிள்ளையா பொறக்கணும்"
முற்றும்...
Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/04/blog-post_5.html
அன்புடன்,
அகல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
ரொம்ப ரொம்ப யதார்த்தமா நம் சமூகம் பெண்ணை அடிமைப் படுத்துவதை அழகிய வெளிப்பாடாய் வார்த்தைகளில் யாழினியின் கண்ணீராய் வடித்தது - படிக்கும் எனையும் கண்ணீரை வடிக்கவும் வைத்தது அதே சமயம் இதை எதிர்கொள்ள ஆனாய் பிறப்பதுதான் தீர்வாகுமான்னும் யோசிக்க வைக்கிறது.
அகல்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
மிக்க நன்றி அண்ணா...
// அதே சமயம் இதை எதிர்கொள்ள ஆனாய் பிறப்பதுதான் தீர்வாகுமான்னும் யோசிக்க வைக்கிறது. ///
கடைசி வரிகளைப் பார்த்தால், அவள் பெண்ணடிமைத் தனத்தை மறைமுகமாக எவ்வாறு எதிர்க்கிறாள் என்பதை மேற்கோள் காட்டியுள்ளேன்.
// இந்த சபிக்கப்பட்ட சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் ஒரு சொட்டி கண்ணீர் விட்டு, ஒட்டுமொத்த வெறுப்பில் உள்ளூர சொல்லிக் கொண்டாள்.//
இந்த சூழலுக்கு யார் காரணம், எதற்காக அவள் அப்படிச் சொன்னாள், சமூகத்தில் என்ன மாற்றம் வேண்டும் என்பது போன்ற விடையங்களை இந்த கதையைக் கடந்து சிந்திக்க வாசகரிடமே விட்டு விட்டேன்...
// அதே சமயம் இதை எதிர்கொள்ள ஆனாய் பிறப்பதுதான் தீர்வாகுமான்னும் யோசிக்க வைக்கிறது. ///
கடைசி வரிகளைப் பார்த்தால், அவள் பெண்ணடிமைத் தனத்தை மறைமுகமாக எவ்வாறு எதிர்க்கிறாள் என்பதை மேற்கோள் காட்டியுள்ளேன்.
// இந்த சபிக்கப்பட்ட சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் ஒரு சொட்டி கண்ணீர் விட்டு, ஒட்டுமொத்த வெறுப்பில் உள்ளூர சொல்லிக் கொண்டாள்.//
இந்த சூழலுக்கு யார் காரணம், எதற்காக அவள் அப்படிச் சொன்னாள், சமூகத்தில் என்ன மாற்றம் வேண்டும் என்பது போன்ற விடையங்களை இந்த கதையைக் கடந்து சிந்திக்க வாசகரிடமே விட்டு விட்டேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
நான் அந்த பாத்திரத்தின் மீதோ பாத்திர படைப்பின் மீதோ குறை சொல்லல அகல்.
சமூகத்தை தான் சொல்கிறேன் - சிந்திக்கட்டும் படிப்பவர்களே நீங்கள் சொன்னது போல்.
சமூகத்தை தான் சொல்கிறேன் - சிந்திக்கட்டும் படிப்பவர்களே நீங்கள் சொன்னது போல்.
Last edited by யினியவன் on Fri Apr 05, 2013 10:05 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
ஹ்ம்ம் சரிதான் அண்ணா... பார்ப்போம்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அடுத்த ஜன்மத்திலயாவது நாயா பொறக்கணும்..!!
» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
» தம்பி சதாசிவத்தின் அருமை மகள் யாழினியின் முதலாவது பிறந்தநாள் இன்று: வாழ்த்துவோம் வாருங்கள்
» அடுத்த வேளை....
» என் அடுத்த அடி -விஷால்!!
» யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
» தம்பி சதாசிவத்தின் அருமை மகள் யாழினியின் முதலாவது பிறந்தநாள் இன்று: வாழ்த்துவோம் வாருங்கள்
» அடுத்த வேளை....
» என் அடுத்த அடி -விஷால்!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|