ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் !

4 posters

Go down

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் ! Empty தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் !

Post by அகல் Wed 3 Apr 2013 - 21:12

வணக்கம் !

இந்திய இறையாண்மைக்கும், இந்திய நாட்டு நலனுக்கும் எதிராக செயல்படுபவர்கள் தமிழ் மக்கள் என்ற தவறான பிம்பத்தை வட இந்திய ஊடகங்கள் தொடர்ந்து மக்களிடையே புகுத்திக் கொண்டு வரும் நிலையில், தமிழக காங்கிரசைச் சார்ந்த சில பயங்கரவாதிகள் ஈழப் பிரச்சனை தமிழக மக்களிடையே ஒரு விஸ்பரூபம் அடைந்ததை தாங்கிக் கொள்ள இயலாமல், மாணவர்களை தாக்குவது, நடுநிலை ஊடகங்களை மிரட்டுவது போன்ற பல அத்துமீறல் நிறைந்த அடக்குமுறையை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

மீனவர் பிரச்சனை, கூடங்குளம் பிரச்சனை. ஈழத்தமிழர்களுக்கான வாழ்வாதார பிரச்சனை என அனைத்திலும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மத்திய அரசு, தமிழர்கள் இந்தியர்கள் அல்ல எனும் போக்கை கடைபிடித்து மாற்றான் தாய் மனப்பான்மையை காட்டுவதை யாவரும் அறிந்ததே. இந்த நிலைப்பாட்டையே ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் கொண்டுள்ளது என்பதே இன்றைய கால எதார்த்த நிலவரம். பெரும்பாலும் அதை வாய்திறந்து சொல்லாமல் செயலில் காட்டுவார்கள். ஆனால் வாய்திறந்தே ஒருவர் சொல்லிவிட்டார். அதைப்பற்றி சற்று ஆராய்வோம்.

சென்ற சனிக்கிழமை (30.3.13) அன்று புதியதலைமுறை தொலைக்கட்சியில் ஒளிபரப்பான அக்னிப் பரிச்சை நிகழ்ச்சியில் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு, தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள், காங்கிரசின் நிலைப்பாடுபற்றி பேட்டியளித்தார். அதில் தமிழர்களை இந்தியர்கள் அல்ல என்றும், தீவிரவாதிகள் என்றும் மறைமுகமாக சொல்லியதோடு, ஈழத்தைப் பற்றிய தனது அரை வேக்கட்டுத்து தனத்தையும் பதிவு செய்தார். காங்கிரசாருக்கு இது புதிதல்ல என்றாலும் அந்த நிகழ்வுகளைப் பதியாமல் விட எனக்கு மனம் வரவில்லை.

அவர் பேசிய அரை வேக்காட்டு வாசகங்களையும் அதன் மீதான எனது பார்வையையும் இங்கு பதிவிடுகிறேன்.

http://1.bp.blogspot.com/-kD8Yt0z1LHo/UVwZ60_kYgI/AAAAAAAABlo/btK-Z0_YAGg/s1600/0.jpg

1. ஈழத்தமிழர்களை காப்பதே காங்கிரசாரின் தலையாய கடமை என்பது போல் பேசிய அழகிரி, பேட்டி ஆரம்பித்தது முதல் முடியும் வரை இலங்கையில் வாழும் கோடிக்கான தமிழர்களை பாதுகாப்போம் வாழ்வுரிமைக்காகவும் தொடந்து போராடுவோம் என்று குறைந்தது நான்கு முறை கூக்குரல் இட்டார்.

இந்த வாசகம், அழகிரிக்கு ஈழத்தின் வரலாறும் அங்கு வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கையும், அவர்களின் வாழ்வியல் நிலையம் எந்த அளவிற்கு தெரியும் என்ற அடி முட்டாள் தனத்தையே காட்டுகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், கொழும்பு போன்ற தெற்குப்பகுதி, முஸ்லிம் தமிழர்கள், மலைவாழ் தமிழர்கள் என ஒட்டு மொத்தமாக கணக்கில் கொண்டாலும், 45-50 லட்சம் தமிழர்களுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. ஏன் நாடு கடந்த தமிழீழ மக்களை கணக்கில் கொண்டாலும், ஒரு கோடியை எட்டுவதே மிக அரிது என்பதே உண்மை.

2. இப்போது தமிழகத்தில் உருப் பெற்றிருக்கும் தனித்தமிழீழ நிலைப்பாடு தமிழர்களின் நிலைப்பாடே தவிர ஈழத்தமிழர்கள் தனித் தமிழீழம் கேட்கவில்லை என்றதோடு மட்டுமல்லாமல், நாடு கடந்த தமிழீழ மக்கள் வெளிநாடுகள் தரும் உதவித் தொகையோடு நன்றாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு தனி ஈழம் என்ற எண்ணமோ தாய்நாடு திரும்பவேண்டும் என்ற எண்ணமோ இல்லை என்னும் நோக்கில் மிகவும் கீத்தரமாக ஈழத்தமிழர்களை சித்தரித்தார்.

ஆரம்பம் முதல் புலிகள் தனித் தமிழீழம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், தமிழரின் சம உரிமை என்று போராடிய தந்தை செல்வாவே ஒரு காலகட்டத்தில் தனிதமிழ் ஈழம் என்ற நிலைபாட்டிற்கு வந்தார் என்பதை உலகம் அறியும். அதோடு மட்டுமல்லாமல், எந்த கருத்துக் கணிப்பின் அடிப்படையில் வாய்க்கு வந்தபடி இவர் உளறுகிறார் என்பது தெரியவில்லை. நாடு கடந்த தமிழீழ மக்களை கீழ்த்தரமாக சித்தரித்த இவரை வன்மையாக கண்டிக்கிறேன்.

3. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளை தீர்மானிக்கும்போது பலவற்றை கணக்கில் கொள்ளவேண்டும் என்று தொடர்ந்த அழகிரி, பாகிஸ்தானில் இந்தியர்கள் வாழ்கிறார்கள், பங்களாதேசத்தில் இந்தியர்கள் வாழ்கிறார்கள். சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று அவரது நிலைப்பாட்டை பதிவு செய்தார்.

நாம் சாதாரமாக பார்த்தால், இந்த வாசகத்தில் பெரிதாக ஏதும் தெரியாது. ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால், பாகிஸ்தானில், பங்களாதேசத்தில் வாழ்வோர் அனைவரும் இந்தியர் என்றும், சிங்கப்பூர் மலேசியாவில் வாழ்வோர் தமிழர் என்றும் கூறினால், தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று தானே பொருள் ? சிங்கப்பூர், மலேசியாவில் வாழ்வோரை தமிழர் என்று குறிப்பிடுவோர், மற்ற நாடுகளில் வாழ்வோரை ஏன் அவர்களின் மாநிலத்தைச் சொல்லி குறிப்பிடவில்லை ?

4. காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையைப் பற்றி பேசும்போது, காவிரிப் பிரச்சனை வந்தால் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனை வந்தால் கேரளா டீக்கடை நாயர்கள் தமிழக தீவிரவாதிகளால் தாக்கப்படுகிறார்கள் என்று குறிபிட்டார்.

தமிழ்நாட்டில், கர்நாடக மக்களோ, கேரளா மக்களோ தாக்கப்படுவது தவறு தான். நானும் அதை கண்டிக்கிறேன். ஆனால் இந்த அறிவு ஜீவி சொல்வதை கவனித்தீர்களானால், கர்நாடகாவில் தமிழனை தாக்குவோர், சாதாரண மனிதர் என்றும், தமிழகத்தில் மலையாளிகளைத் தாக்குவோர் தீவிரவாதி என்றும் முத்திரை குத்தி இருப்பார். மாணவர்களைத் தாக்குவது, ஊடகங்களை மிரட்டுவது என இந்த காங்கிரஸ் அயோக்கியர்கள் செய்யும் தீவிரவாதம் நாடறியும் என்பதை இந்த அறிவிலி அறியவில்லை போலும்.

இது மட்டுமல்லாது, 2009 போருக்குப் முன், இலங்கை அரசிற்கு எதிராக போரிட்ட புலிகள், போரில் தொடர்ந்து வெற்றி பெற்றதால் தமிழர்கள் சந்தோசப்பட்டர்கள். இப்போது தோற்றதால் கண்ணீர்விட்டு பெரிதாக்குகிறார்கள் என்ற லட்ச கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களை மறந்துவிட்டு தனது கேவலாமான எண்ணத்தைப் பதிவு செய்தார்.

எனது நேரத்தை செலவு செய்து, கீழ்த்தரமான காங்கிரஸ் அரசியல் வாதிகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அவர்களை விமர்சிப்பதில் எனக்கும் விருப்பமில்லை தான். ஆனால் ஈழத் தமிழர்களை கீழ்த்தரமாகவும், தமிழர்களை தீவிரவாதிகள், இந்தியர்கள் அல்ல என்ற பார்வையில் பேசியதையும் சுட்டிக் காட்டாமல் விட மனதில்லை. அரசியல் மற்றும் சுயநலத்திற்காக, தமிழ் மக்களைப் பழிவாங்கும், அப்பாவி மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்த அயோக்கியர்களை ஒழிக்கும்வரை தமிழர்களுக்கு விடிவு பிறக்காது.

காணொளி:

https://www.youtube.com/WATCH?FEATURE=PLAYER_DETAILPAGE&V=MIETX0W-DBU

நன்றி !

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/04/blog-post_3.html

அன்புடன்,
அகல்


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் ! Empty Re: தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் !

Post by ராஜு சரவணன் Wed 3 Apr 2013 - 23:10

இதுவே மற்ற மாநிலத்தில் அந்த மாநில மக்களை பற்றி யாரேனும் ஒரு மூடர் இது போல் பேசியிருந்தால் இந்நேரம் பல்லை கழட்டி கையில் கொடுத்திருப்பார்கள்.

நமக்குதான் அந்த தைரியம் இல்லையே, இருந்திருந்தால் இதுபோல் யாராவது பேசுவார்களா?.

பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள் இவர்கள். இவரை தேர்தெடுத்த அந்த வாக்காள பெருமக்களே இதற்கு பொறுப்பு.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் ! Empty Re: தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் !

Post by ஆரூரன் Thu 4 Apr 2013 - 15:18

ராஜு சரவணன் wrote:இதுவே மற்ற மாநிலத்தில் அந்த மாநில மக்களை பற்றி யாரேனும் ஒரு மூடர் இது போல் பேசியிருந்தால் இந்நேரம் பல்லை கழட்டி கையில் கொடுத்திருப்பார்கள்.

நமக்குதான் அந்த தைரியம் இல்லையே, இருந்திருந்தால் இதுபோல் யாராவது பேசுவார்களா?.

பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள் இவர்கள். இவரை தேர்தெடுத்த அந்த வாக்காள பெருமக்களே இதற்கு பொறுப்பு.


சூப்பருங்க
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் ! Empty Re: தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் !

Post by யினியவன் Thu 4 Apr 2013 - 16:33

வாக்கு மாற்றி பேசும் இவர்களுக்கு
வாக்களிக்கும் தமிழ் மக்கள் தான்
வாய்க்கரிசி போடவேண்டும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் ! Empty Re: தமிழர்கள் இந்தியர்கள் அல்ல, தீவிரவாதிகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum