ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

+5
M.Jagadeesan
nikky
Aathira
பூவன்
ராஜு சரவணன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by ராஜு சரவணன் Wed Apr 03, 2013 2:57 pm

[You must be registered and logged in to see this link.]

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா! யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?

அந்த பெருமைக்குரியவர், அவரது மனைவி வாசுகி தான்.அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.

தன் கணவர் சாப்பிடும் போது, ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம். அது ஏன்னு அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம். ஆனாலும், கணவரிடம் காரணத்தை எப்படி கெட்பதுன்னு அமைதியா இருப்பாராம்.

இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே அவை இரண்டும் என்றாராம். நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை. அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சியாக சொன்னாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.

அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

“நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும் பெருமை படைத்து இவ்வுலகு” என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

"அடியிற்கினியாளே அன்புடையாளே படிசொல் தவறாத பாவாய்- அடிவருடிபின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்- இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு"

என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

ஒரு மணவிழாவில தந்த புத்தகத்தில் இருந்தது. அதை உங்கள் பார்வைக்கு....

மின்னஞ்சல்


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by பூவன் Wed Apr 03, 2013 2:58 pm

[You must be registered and logged in to see this link.] இந்த பதிவு உள்ளது நண்பரே


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by ராஜு சரவணன் Wed Apr 03, 2013 3:05 pm

ஈகரை தேடுபொறியில் தேடிய பின்பு தான் பதிவு செய்தேன்.

இருந்தாலும் ஏற்கனவே இந்த பதிவு இருந்தால் இப்பதிவை நீக்கிவிடவும்.


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by பூவன் Wed Apr 03, 2013 3:07 pm

ராஜு சரவணன் wrote:ஈகரை தேடுபொறியில் தேடிய பின்பு தான் பதிவு செய்தேன்.

இருந்தாலும் ஏற்கனவே இந்த பதிவு இருந்தால் இப்பதிவை நீக்கிவிடவும்.

வேண்டாம் விடுங்கள் இணைத்து விடலாம்


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by Aathira Wed Apr 03, 2013 3:18 pm

ராஜு சரவணன் wrote:[You must be registered and logged in to see this link.]

இன்று, சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட,நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்தசம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

மின்னஞ்சல்
இருக்கட்டும் பரவாயில்லை.

ஆனால் ஆணாதிக்கக் காலத்தில் இது சாத்தியம். அப்போது மனையுறை பெண்டிராக பெண்கள் இருந்தனர். இப்போது எல்லாம் சமத்துவம் என்று வந்த நிலையில் கண்டிப்பாக வாய்ப்பே இல்லை.

இப்போது ஆறிய சோற்றுக்குக் கணவன் விசிறச் சொன்னால் சிந்தித்துப் பாருங்கள்.. அவளது நிலையை.... அவனை(ரை) என்ன என்று நினைத்து உடன் குடும்பம் நடத்த இயலும்.

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன். மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்” - பாரதி

பாரதிக்கே இதில் உடன்பாடு இல்லை.


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by nikky Wed Apr 03, 2013 3:29 pm

ஆச்சர்யமான தகவல் ..... ஓரக்கண் பார்வை
nikky
nikky
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/02/2013

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by M.Jagadeesan Sun May 10, 2015 6:44 pm

' அடிசிற் கினியாளே !அன்புடை  யாளே !
படிசொல் தவறாதபாவாய் ! -- அடிவருடிப்
பின்தூங்கி முன்னெழூஉம் பேதையே ! போதியோ ?
என் தூங்கும் கண் இரா .'

வள்ளுவர்  இந்தப் பாடலைப் பாடியதாகச் சொல்வது  வெறும் கட்டுக்கதை.  இந்த வெண்பாவில் உள்ள  " பின் தூங்கி "  " என் தூங்கும் " என்ற சொற்களைக் கவனித்தாலே இந்தப் பாடலை வள்ளுவர் இயற்றவில்லை  என்பது புலப்படும்.

வள்ளுவர், " தூங்குதல் "  என்ற சொல்லைக் " காலம் தாழ்த்துதல் "  என்ற  பொருளிலேயே  பயன்படுத்துகிறார்.

தூங்காமை  கல்வி துணிவுடைமை  இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவற்கு. (  இறைமாட்சி -383 )

பொருள் :
========
நிலவுலகை ஆளுகின்ற அரசனுக்குக்  காலம் கடத்தாது விரைந்து செய்யும் ஆற்றலும், நல்ல கல்வியும்,  துணிவும் ஆகிய மூன்று குணங்களும் நீங்காது இருக்கவேண்டும்.

இக்காலத்தில்  " தூக்கம் "  என்ற சொல் தன் உண்மைப் பொருளை  இழந்து   கண் மூடித் துயில்வதைக் குறிக்கும் சொல்லாக  அமைந்து விட்டது.

" தூங்காதே ! தம்பி தூங்காதே ! "  என்ற திரைப்படப் பாடலிலும் " தூங்குதல் " என்ற சொல் கண் மூடித் துயில்வதையே  குறிக்கிறது.

கண் மூடித் துயில்வதை  வள்ளுவர் " உறக்கம் " என்ற சொல்லால்  குறிப்பிடுவார்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு . ( நிலையாமை- 339 )

பொருள் :
=========
சாதலாவது உறக்கம் வருதலோடு ஒக்கும்; பிறப்பாவது உறங்கினவன் விழித்தலோடு ஒக்கும்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun May 10, 2015 7:08 pm

வள்ளுவர் பெயரில் வேறு யாரோ எழுதியுள்ளார் என்பது தெளிவாகுகிறது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by ayyasamy ram Mon May 11, 2015 7:15 am

வள்ளுவர் வாசுகியிடம்,
"சோறு சூடாக இருக்கிறது. விசிறு,'' என்றார்.
"பழைய சோறு எப்படி சுடும்?' அந்த அம்மையார்
கேள்வியே கேட்கவில்லை.
விசிற ஆரம்பித்து விட்டார்.
-
என்னே பதிபக்தி..!
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by சரவணன் Mon May 11, 2015 6:23 pm

எனக்கு என்னமோ திருவள்ளுவருக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று சொல்வதும், அவர் மனைவி பற்றி சொல்வதும் உண்மை என்பர் தோன்றவில்லை.
.
.
.
.
.
திருவள்ளுவருக்கு திருமணம் ஆயிருந்தால் இப்படி ஒரு நூலை (திருக்குறளை) அவர் எழுதியிருப்பாரா?
இல்ல எழுததான் விட்டுடுவாங்களா அவர் வீட்டுக்கார அம்மா.... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல் Empty Re: திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum