ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

+2
Muthumohamed
சிவா
6 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 5:25 pm

First topic message reminder :


"காவி" - பிச்சைக்காரர்களின் உடை!

1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.

சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:51 am

வெற்றிக்குக் காரணம் இறைவனே!

பிப்ரவரி 9ம் தேதியன்று சுவாமிஜி இரண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார். அளசிங்கர் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்திற்கு சுவாமிஜியை அழைத்திருந்தார். அங்கே சுவாமிஜி 'நம் முன் உள்ள பணி' என்ற தலைப்பில் பேசினார். அன்று மாலையில் விக்டோரியா ஹாலில் சுவாமிஜியின் முதல் பொதுச் சொற்பொழிவு நடைபெற்றது. இதன் தலைப்பு 'எனது போர் முறை' சுவாமிஜியின் வெற்றிக்குச் சிலர் தாங்களே காரணம் என்பது போல் பிரச்சாரம் செய்திருந்தனர். அவற்றை மறுத்து உண்மை நிலை என்ன என்பதை இந்தச் சொற்பொழிவின் மூலம் எடுத்துக் கூறினார் சுவாமிஜி.

அந்தச் சொற்பொழிவில் பலருடைய உண்மை நிலையை அவர் வெளிக்கொணர வேண்டியதாயிற்று. தியாசபிக் சொசைட்டியினர், பிரம்ம சமாஜத்தினர், பாதிரிகள் ஆகியோர் உண்மையில் அவருக்கு உதவவில்லை. மாறாக, அவருக்கு எவ்வளவு தடைகளை உண்டாக்க வேண்டுமோ அதையே செய்தனர் என்பதைத் துறவியான அவர் எந்தத் தயக்கமுமின்றி, துணிச்சலாகப் பேசினார். சுவாமிஜியின் நேரடியான தாக்குதல் பலருக்கும் பிடிக்கவில்லை.

சுவாமிஜியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், சென்னை வரவேற்பு கமிட்டியின் தலைவராக இருந்தவருமாக நீதிபதி சுப்பிரமணிய ஐயர் சுவாமிஜியிடம் தமது நெருக்கமான தொடர்பை விட்டுவிட்டார். ஏஎனனில் அவர் தியாபிகல் சொசைட்டியில் முக்கிய அங்கத்தினர். ஆனால் இதுபோன்ற எந்தப் பிரிச்சினைகளும் சுவாமிஜியைப் பாதிக்கவில்லை. தமது நிலைபற்றி அவர் சுவாமிஜியைப் பாதிக்கவில்லை. தமது நிலை பற்றி அவர் பிரம்மானந்தருக்கு எழுதினார். 'தியாசபிக் சொசைட்டியினரும் பிறரும் என்னைப் பயமுறுத்த விரும்பினர். ஆதலால் நான் என் மனத்தில் உள்ளதைச் சிறிது அவர்களுக்குச் சொல்ல வேண்டியதாயிற்று. நான் அவர்களுடன் சேராததால் அவர்கள் என்னை எப்போதும் அமெரிக்காவில் நெருக்கிக் கொண்டே இருந்தனர் என்பது உனக்குத் தெரியும்...நீ பயப்பட வேண்டாம். நான் தனியாக வேலை செய்யவில்லை. இறைவன் எப்போதும் என்னுடன் உள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:52 am

சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு!

பிப்ரவரி 8ம் தேதி அன்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த நாள். அன்றுதான் மாலை 4.30 மணிக்கு சுவாமிஜிக்கு விக்டோரியா ஹாலில் பொது வரவேற்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விக்டோரியா ஹாலின் அருகில், செல்லும் வழிகளில், ரோட்டில் என்று கூட்டம் அலை மோதியது. சுவாமிஜி வந்து சேரும் முன்னரே ஹால் நிரம்பி வழிந்தது. குறைந்தது பத்தாயிரம் பேராவது வெளியில் நின்றார்கள். சுவாமிஜி வந்து சேரும் முன்னரே ஹால் நிரம்பி வழிந்தது. குறைந்தது பத்தாயிரம் பேராவது வெளியில் நின்றார்கள். சுவாமிஜி கூட்டத்தில் மிகவும் சிரமப்பட்டே மேடையை அடைய முடிந்தது. பிரமுகர்கள் பலர் ஏற்கனவே மேடையில் அமர்ந்திருந்தனர். சென்னை வரவேற்புக் குழு, வைதீக வித்வத் கதாபிரசங்க சபா, சென்னை சமூக சீர்திருத்த சங்கம் ஆகியவை வரவேற்புரைகளை அளித்தன. கேத்ரி மன்னர் அனுப்பிய வரவேற்புரை படிக்கப்பட்டது. இவை தவிர சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இருபது வரவேற்புரைகள் படிக்கப்பட்டன.

இதற்குள் வெளியில் நின்றிருந்த கூட்டம் கட்டுக்கடங்காததாக ஆகியது. சுவாமிஜி வந்து திறந்த வெளியில் பேச வேண்டும் என்று குரல்கள் எழத் தொடங்கின. அதன்பிறகு சுவாமிஜியால் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. அங்கிருந்து விருட்டென்று எழுந்து, 'நான் மக்களுக்காக வந்தவன். வெளியில் இருப்போரையும் சந்தித்தாக வேண்டும்' என்று கூறிவிட்டு வெளியில் வந்தார். அவருக்காகக் காத்திருந்த 'கோச்' வண்டியின் மீது ஏறி நின்றார். அங்கே பெரும் திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. அந்தக் கூட்டத்தில்பேச வேண்டும், அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். என்று பேச ஆரம்பித்தார்.

'நாம் ஒன்று நினைக்கிறோம், தெய்வம் மற்றொன்று நினைக்கிறது. இந்த வரவேற்பும் சொற்பொழிவும் ஆங்கில முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடவுளோ அதனை வேறு வகையில் நடத்தத் திருவுள்ளம் கொண்டுள்ளார் சிதறிக் கிடக்கின்ற இந்த மக்கள் கூட்டத்தில் இதோ இந்த ரதத்திலிருந்து கீதை பாணியின் பேசுகிறேன்.' என்று தொடங்கி சில நிமிடங்கள் பேசியிருப்பார். அதற்குள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போயிற்று. எனவே உங்கள் மீது வருத்தம் எல்லையற்ற திருப்தியையே அளிக்கிறது. அளவு கடந்த இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள், நண்பர்களே இப்போதைக்கு விடைபெற்றுக் கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கேட்கக்கூடிய வகையில் பேச முடியாது. எனவே இன்றைக்கு என்னைப் பார்த்தவரையில் திருப்தியடையுங்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவேன். உற்சாகம் மிக்க உங்கள் வரவேற்புக்கு நன்றி' என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:53 am

சுவாமிஜியிடம் கேட்கப்பட்ட கேள்வி!

பிப்ரவரி 7ல் நடைபெற்ற கேள்வி-பதில், காலையில் சுமார் 200 பேர் கேஸில் கெர்னனுக்கு முன்னால் போடப்பட்டிருந்த பந்தலில் கூடினார்கள். அன்று கேள்ளி-பதில் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. மனத்திற்கும் ஜடப்பொருகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன, கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. சுவாமிஜி அனைத்திற்கும் பொறுமையாக, தெளிவாகப் பதில் அளித்தார். காலை ஒன்பது மணியளவில் நிகழ்ச்சி நிறுப்பத்தூரிலிருந்து சைவர்கள் சிலர் வந்திருந்தனர். அத்வைத நெறி சம்பந்தமாக ஒரு கேள்வித்தாளுடன் வந்தனர். சுவாமிஜி அவர்களுக்குப் பதில் அளிக்கத் தயாரானார்.

கேள்வி: 'வெளிப்படாமல் இருக்கின்ற பரம்பொருளிலிருந்து, வெளிப்பட்டுத் தோன்றுகின்றன இந்த உலகம் எப்படித் தோன்றியது?'

பளிச்சென்று வந்தது சுவாமிஜியின் பதில்.

சுவாமிஜி: 'எப்படி, ஏன், எங்கிருந்து போன்ற கேள்விகள் உலகத்தைச் சார்ந்தவை. பரம்பொருளோ உலகத்தைக் கடந்தவர். மாற்றங்கள், காரிய - காரண நியதி போன்றவற்றைக் கடந்தவர். எனவே உங்கள் கேள்வி சரியானதல்ல. சரியான கேள்வியைக் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.'

இவ்வாறு அவர்கள் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தகுந்த பதில் தாமதமின்றி வந்தது. கேள்விகள் கேட்டு இவரைத் திணறடித்துவிடலாம், மடக்கிவிடலாம் என்றெல்லாம் யாராவது நினைத்திருந்தார் அது தவறென்று அப்போது நிரூபணமாயிற்று. கேள்வி கேட்டவர்கள் அமைதியாயினர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:54 am

வைகானஸரின் அவதாரம்!

சுவாமிஜி சென்னையில் ஒன்பது நாட்கள் தங்கினார். அது சென்னை மக்களுக்கு ஒரு நவராத்திரிதான். ஒவ்வொரு நாளும் சுவாமிஜியின் சொற்பொழிவு, பேட்டி என்று கேஸில் கெர்னன் ஓர் ஆனந்தச் சந்தையாக மாறிவிட்டிருந்தது. அந்தத் தெய்வ மனிதருடன் வாழும் பேற்றைப் பெற்ற ஒவ்வொருவரும் ஆனந்தத்தில் மிதந்தார்கள். குறிப்பிட்ட சிலநேரம்தான் சுவாமிஜியைச் சந்திக்க இயலும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடந்தது வேறு. காலையிலிருந்து மதாலை வரை, அதுபோல் இரவிலும் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் வந்து சுவாமிஜியைத் தரிசித்த வண்ணம் இருந்தனர். சுவாமிஜி திருஞான சம்பந்தரின் அவதாரம் என்ற கருத்து வேறு பரவத் தொடங்கியதால் கூட்டம் இன்றும் அதிகமாயிற்று.

தினமும் பல பெண்கள் வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் மலரிட்டு வழிபட்டனர். திருப்பதியிலிருந்து வந்த முதியவர் ஒருவர் சுவாமிஜியின் பாதங்களில் பணிந்து, மலர் மாலைகள் அணிவித்து, 'நீங்கள் வைகானஸரின் அவதாரமே' என்று கூறி, கண்களில் கண்ணீருடன் விடை பெற்றார்.

வந்தவர்கள்அனைவரும் சுவாமிஜியை வரவேற்பதற்கும் வழிபடுவதற்கும் மட்டுமே வந்தார்கள் என்பதில்லை. அவருடன் வாதிட்டு, அவரைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று சிலர்; அவரது அறிவுத் திறமையைச் சோதிப்பதற்காகச் சிலர்; அவரையே சோதிப்பதற்காகச் சிலர் என்று பலதரப்பட்டவர்கள் அங்கே கூடினர். இவை ஒன்றும் சுவாமிஜிக்குப் புதியவை அல்ல. எல்லா சூழ்நிலைகளையும் அதற்கேற்ப எதிர்கொண்டு, வெற்றி வீரராகத் திகழ்ந்தார் சுவாமிஜி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:54 am

சுவாமிஜியின் வரவேற்பு ஊர்வலம்!

சுவாமிஜியின் ஊர்வலம் சிந்தாதிரிப்பேட்டை, நேப்பியர் பார்க், மௌண்ட் ரோடு, வாலாஜா ரோடு, சேப்பாக்கம், பைக்ராப்ட்ஸ் ரோடு, கடற்கரை சாலை வழியாகச் சென்றது. சிந்தாதிரிப்பேட்டையிலும் வேறு பல இடங்களிலும் பெண்கள் சுவாமிஜிக்கு கற்பூர ஆரதி காட்டினர். தெய்வ விக்கிரகங்களை வீதி உலாவிற்காக வெளியே கொண்டு செல்லும் போது என்னென்ன மரியாதைகளும் வழிபாடுகளும் செய்யப்படுமோ அத்தனையும் சுவாமிஜிக்குச் செய்யப்பட்டது.

ஊர்வலம் சேப்பாக்கத்தை அடைந்த போது பஜனைக் குழு ஒன்று இணைந்து கொண்டது. அங்கே ராஜா ஈஸ்வரதாஸ் பகதூர் எழுப்பிய அழகிய அலங்கார வளைவு ஒன்று இருந்தது. ஊர்வலம் அதைக் கடந்தபோது பான்ட் குழு ஒன்று சேர்ந்து கொண்டது. கேஸில் கெர்னன் வரை இந்தக் குழு வாத்தியக் கருவிகளை இசைத்தபடி வந்தது.

கடைசியாக ஊர்வலம் கடற்கரைச் சாலையை அடைந்தது. அங்கும் ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் இணைந்தார்கள். இவர்களில் மாணவர்கள் மிக அதிகமாக இருந்தார்கள். இந்த மாணவர்கள், சுவாமிஜி எவ்வளவோ தடுத்தும், குதிரைகளை அவிழ்த்துவிட்டுவிட்டு, தாங்களே சுவாமிஜியின் வண்டியை இழுக்க ஆரம்பித்தார்கள். கேஸில் கெர்னன் வர மாணவர்களே இழுத்தார்கள். அற்புதக் காட்சி அல்லவா அது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:55 am

சம்பந்தரின் அவதாரம்!

சுவாமிஜியின் வரவேற்பைக் காண்பதற்காக அவரது முதற் சீடரான சதானந்தர் அங்கே வந்திருந்தார். கூட்டத்தில் நிற்காமல் வழியில் ஓரிடத்தில் ஓதுங்கி நின்று தமது குருவைத் தமிழ்நாடு போற்றி வணங்குவதைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தார். அந்த வழியாகச் செல்லும்போது சுவாமியின் கண்கள் அவர்மீது பட்டன. அன்பு கரையுரண்டோட, 'மகனே, சுதானந்தா, இங்கே வா' என்று கூவினார் சுவாமிஜி. வண்டியை நிறுத்தி தம் அன்பு மகனை அருகில் அழைத்து தம் அருகில் அமர்த்திக் கொண்டார்.

வழியில் ஓரிடத்தில் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு மூதாட்டி ஒருத்தி வந்து சுவாமிஜியைப் பணிந்தாள். இலங்கையில் ஆரம்பித்த கருத்து இங்கேயும் பரவியிருந்தது. அந்த மூதாட்டி சுவாமிஜியைத் திருஞான சம்பந்தரின் அவதாரம் என்றே கருதினாள். அவ்வாறே கூறி சுவாமிஜியை வணங்கிய அவள், ஞான சம்பந்த மூர்த்தியின் அவதாரமான சுவாமிகளை வணங்கி தான் தன் பாவங்களிலிருந்து கடைத் தேறுவதாகத் தெரிவித்தாள்.

ஊர்வலம் 'ஆந்திர ப்ரகாசிகா' அலுவலகத்திற்கு எதிரில் வந்தபோது சற்று நிறுத்தப்பட்டது. அங்கே பந்தல் இடப்பட்டிருந்தது. சென்னை வாழ் தெலுங்கு மக்களின் சார்பில் அங்கே சுவாமிஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று வசந்த பஞ்சமி நாள். மன்மதன் அல்லது மதனனைப் போற்றும் நாள் அது. அழகுக்குத் தலைவன் மன்மதன். அந்த வரவேற்பில் மன்மதனையும் சுவாமிஜியையும் ஒப்புமைப்படுத்தி பேசப்பட்டிருந்தது. 'மன்மதன் மலர் அம்பினால் வெல்கிறான். நீங்களே உங்கள் தெய்வீக ஆற்றலால்' உங்கள் குரலால், உங்கள் சொல்லாவ‘ற்றலால் வென்றீர்கள்' என்று அவர்கள் அந்த வரவேற்பில் கூறியிருந்தார்கள். மற்றோர் இடத்தில் சம்ஸ்கிருத வரவேற்புரை அளிக்கப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:56 am


சென்னையில் சுவாமிஜிக்கு வரவேற்பு!


எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கேஸில் கெர்னன் வரை அலங்கார வளைவுகள், தோரணங்கள் முதலியவை அமைப்பதென்று ஏற்பாடாயிற்று. கேஸில் கெர்னனுக்கு முன்பாக ஒரு பந்தல் எழுப்பப்பட்டது. சுவாமிஜி தங்குவதற்காகவும், அவரது வரவேற்பு ஏற்பாடுகளுக்காகவும் கர்னல் ஆல்காட் ஒரு பங்களாவையும் ஒரு ஹாலையும் அளித்திருந்தார். ஆயினும் சுவாமிஜி கேஸில் கெர்னனில் தங்குவதென்று முடிவாயிற்று. சுவாமிஜி வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் சென்னை நகருக்கு வரத் தொடங்கினர். அவர்களுள் இளைஞர்களும் மாணவர்களும் அதிகமாக இருந்தனர். வெளியூரில் இருந்து தேர்வுகள் எழுதுவதற்காக வந்த மாணவர்கள் பலர் தேர்வுகள் முடிந்த பிறகும் சுவாமிஜியைத் தரிசிப்பதற்காக சென்னையிலேயே தங்கினர். விடுதி வாடகை அதிகரிப்பதையும், உடனடியாக வருமாறு பெற்றோர் வற்புறுத்துவதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் சுவாமிஜிக்காக காத்திருந்தனர. நாட்கட்ள நெருங்க நெருங்க ‘சுவாமிஜி எப்போது வருகிறார்?' என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுந்து நின்றது.

சென்னைக்கு அருகில் ஒரு ரயில் நிலையத்தில் சுவாமிஜியைத் தரிசிப்பதற்காக மக்கள் தண்டவாளகத்தில் படுக்க நேர்ந்தது பற்றி ஏற்கனவே கண்டோம். அந்தக் கூட்டத்தில் இருந்தார் சூரஜ்ராவ் என்ற இளைஞர். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இவர் சுவாமிஜி தாயகம் திரும்பியதைக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்திருந்தார். ரயில் நிலையத்தில் அவரைக் கண்ட பிறகு சென்னைக்கு வர எண்ணினார் அவர். ஆனால், அவரிடம் பயணத்திற்கான பணம் இல்லை. எனவே அவர் கடற்கரை வழியாக நடக்கத் தொடங்கினார். வழியில் மீனவர் குடிசைகள் இருந்தன. எல்லா குடிசைகளிலும் வரிசை வரிசையாக விளக்குகள் ஏற்றப்பட்டு அந்தப் பகுதி ஒளிமயமாகக் காட்சி அளித்தது. காரணம் புரியாத சூரஜ்ராவ் அங்கே ஒருவரிடம் அதுபற்றி கேட்டார். `ஏன், உங்களுக்குத் தெரியாதா? சென்னைக்கு ஜகத்குரு வருகிறார்' என்று பதில் வந்தது. சுவாமிஜியின் வரவு பற்றி ஏழை மீனவர்களும் அறிந்திருப்பது அவருக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:56 am

சென்னை இளைஞர்களை நம்புகிறேன்

சுவாமி விவேகானந்தரைக் கண்டுபிடித்தது தமிழ்நாடு என்று தாராளமாக உரிமை கொண்டாட முடியும். இதனால் தானோ என்னவோ சுவாமிஜியும் தமிழ் நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை வைந்திருந்தார். அவரது தமிழ்நாட்டுச் சொற்பொழிவுகளில் இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் மிகத் தெளிவாகக் காண முடியும். 'சென்னை இளைஞர்களே, உங்கள் மீதே என் நம்பிக்கை உள்ளது என்று சுவாமிஜியும் அதனால்தான் தமது கடிதங்களில் குறிப்பிடுகிறார். அது மட்டுமின்றி, அவரது அறைகூவலுக்கு முதன்முதலில் செவி சாய்த்து, ஒரு நிலையான ஆன்மீக மையம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று சென்னை மக்களே அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

தான் கண்டுபிடித்த ஒரு துறவி மேலைநாட்டில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டு, தாயகம் திரும்பும்போது தமிழ்நாடு, குறிப்பாக சென்னை எவ்வளவு குதூகலித்திருக்கும்! அவருக்குக் கொடுத்த வரவேற்பு போல் அதுவரை எந்த அரசியல் தலைவருக்கோ, வேறு எந்தத் தலைவருக்கோ கொடுக்கப்படவில்லை என்று The Hindu முதலான தினசரிகள் எழுதின.

சுவாமிஜியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் 1896 டிசம்பர் இறுதியில் துவக்கப்பட்டன. டிசம்பர் 21ம் நாள் அளசிங்கரும் பிறரும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கேஸில் கெர்னன் என்ற கட்டிடத்தில் கூடி வரவேற்புக் குழு ஒன்றை அமைத்தனர். சுவாமிஜியின் சீடர்களான அளசிங்கர், பாலாஜி ராவ், பி.சிங்கார வேலு முதலியார் ஆகியோருடன் சென்னையின் முக்கியப் பிரமுகர்களான வி.பாஷ்யம் ஜயங்கார், வி.கிருஷ்ண சுவாமி ஐயர், வி.சி சேஷாச்சாரியார், பேராசிரியர் எம்.ரங்காச்சாரியார், பேராசிரியர் கே.சுந்தரராம ஜயர், டாக்டர் நஞ்சுண்டராவ், பி.ஆர்.சுந்தர ஐயர் ஆகியோரும் இதில் பங்கு வகித்தனர். நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைவராக நியமிக்கப்பட்டார். தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட்டும், இந்தியாவின் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த டாக்டர் பரோசும் இந்த வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by ayyasamy ram Wed Nov 13, 2013 12:20 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Dec 31, 2013 4:26 pm

ஒழுக்கம்

ஒழுக்க நெறியில் நில். வீரனாக இரு. முழு மனதுடன் வேலை செய். பிறழாத ஒழுக்கம் உடையவனாக இரு. எல்லையற்ற துணிவு உடையவனாக இரு. மதத்தின் கொள்கையைப் பற்றி உன் மூளையைக் குழப்பிக் கொள்ளாதே. ஒவ்வொருவரையும் நேசிக்க முயற்சி செய். வஞ்சனையால் பெரும் பணி எதையும் செய்ய இயலாது. அன்பாலும் உண்மையாலும் தான் பெரும் செயல்கள் நிறைவேற்றப்படுகின்றன.

– விவேகானந்தர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 6 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum