ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

+2
Muthumohamed
சிவா
6 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Tue Apr 02, 2013 5:25 pm

First topic message reminder :


"காவி" - பிச்சைக்காரர்களின் உடை!

1891 பிப்ரவரியில் ஆல்வார் ரயில் நிலையத்தில் இறங்கினார் சுவாமிஜி. அங்கிருந்து கால்போன திசையில் மெதுவாக நடக்கலானார். இரு பக்கங்களிலும் பூத்துக் குலுங்கிய மலர்ச் சோலைகள், பரந்து விரிந்த வயல்வெளிகள், வரிசை வரிசையாக வீடுகள் என்று மாறிமாறி வந்த அழகிய காட்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்தவாறு நடந்து அரசு மருத்துவமனையை அடைந்தார். அங்குள்ள டாக்டரான குரு சரண்லஸ்கர் வெளியே நின்றிருந்தார். சுவாமிஜியின் தோற்றம் அவரை மிகவும் கவர்ந்தது. சுவாமிஜி நேராக அவரிடம் சென்று, 'துறவிகள் தங்குவதற்கு இங்கு ஏதாவது இடம் இருக்கிறதா?' என்று கேட்டார். குரு சரண் அங்குள்ள கடைத்தெரு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். ஒரு கடையின் மாடியில் துறவிகள் தங்குவதற்கென்று ஓர் அறை இருந்தது. அதனை சுவாமிஜிக்குக் காட்டி, அங்கே அவரைத் தங்கச் செய்து வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்.

சுவாமிஜியிடம் அறிமுகக் கடிதங்கள் எதுவும் இல்லை. எனவே உணவிற்கோ தங்கவோ வேறு ஏற்பாடுகள் இல்லை. அப்போது அந்தக் கடைக்கு அருகில் வாழ்ந்த முதிய பெண்மணி ஒருத்தி சுவாமிஜியிடம் ஈடுபாடு கொண்டாள். அவள் அவரை 'லாலா' (குழந்தாய்!)என்று அன்புடன் அழைப்பாள். தன் கையாலேயே சப்பாத்தி செய்து தினமும் கொண்டுவந்து சுவாமிஜிக்கு ஊட்டுவாள். சிலவேளைகளில் ராமஸ்னேஹி என்ற வைணவத் துறவியும் சுவாமிஜியுமாகப் பிச்சைக்குச் செல்வார்கள். கோதுமை மாவு பெற்று வருவார்கள். ராமஸ்னேஹி சப்பாத்தி செய்வார். இருவருமாகச் சாப்பிடுவார்கள். இவ்வாறு சுவாமிஜியின் நாட்கள் கழிந்தன.

சுவாமிஜியை ஆரம்பத்தில் அங்கே பெரிதாக மக்கள் அறியவில்லை. பின்னர் படிப்படியாகக் கூட்டம் வரத் தொடங்கியது. காலை மாலை வேளைகளில் சுவாமிஜி பாடுவார். அதைக் கேட்கவே கூட்டம் திரளும். ஒருநாள் அவர்களில் ஒருவர் 'சுவாமிஜி, நீங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்?' என்று கேட்டார். 'காயஸ்தர்' என்றார் சுவாமிஜி. மற்றொருவர், 'நீங்கள் ஏன் காவி அணிந்துள்ளீர்கள்?' என்று கேட்டார். 'ஏனெனில் அது பிச்சைக்காரர்களின் உடை' என்றார் சுவாமிஜி.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Fri Jun 21, 2013 7:21 am


சுவாமிஜியின் தாய்ப்பாசம்!

பெற்ற தாயையும் பிறந்த வீட்டையும் உற்ற சகோதர சகோதரிகளையும் சுவாமிஜி பிரிந்து வந்து நீண்ட காலம் ஆயிற்றுஆனால் அவர்களைப் பற்றிய நினைவு, அவர்ககளது நன்மைக்கான பிரார்த்தனைகள் அனைத்தும் அவரது வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்தது. தாயின் நினைவு அவரிடமிருந்து நீங்கவே இல்லை. தாம் வாழ்நாளில் பெற்ற அனைத்து பெருமைகளும் தமது தாய்க்கே உரியவை என்று அவர் பலமுறை குறிப்பிட்டதும் உண்டு. எத்தனையோ காலம் பிரிந்திருந்தும், இறுதிவேளையில் ஓடோடி வந்த தாயின் ஈமக்கடன்களைத் தனியொருவராகவே செய்த ஆதிசங்கரரும், உன்னத நிலைத் துறவியாக இருந்தும் தாய் கேட்டுக் கொண்டாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளது காலம்வரை ஊர் எல்லையைத் தாண்டாமல் வாழ்ந்த பட்டினத்தாரும் வந்த துறவியர் பரம்பரையில் தோன்றியவர் அல்லவா சுவாமிஜி!

திடீரென ஒருநாள் அவர் கண்ட கனவு அவரை நிலைகுலையச் செய்தது. தம் தாய் இறந்துவிட்டதாகக் கண்டார் சுவாமிஜி. அவரது மனம் விவரிக்க இயலாத வேதனையில் ஆழ்ந்தது. அது ஒரு பக்கம்! அவரை மேலை நாடு செல்லுமாறு அன்பர்கள் வற்புறுத்துவது மறுபக்கம். இரண்டிற்கும் இடையில் ஊசலாடியது சுவாமிஜியின் உள்ளம். தமது உள்ளத்தை மன்மதரிடம் வெளியிட்டார் சுவாமிஜி. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள வலங்கைமான் என்ற ஊரில் வாழ்ந்த குறிசொல்பவர் ஒருவரைக் காணலாம் என்று ஆலோசனை கூறினார் மன்மதர். அவரது பெயர் கோவிந்தசெட்டி. அவரது கிராமத் தமிழை அளசிங்கர் சுவாமிஜிக்காக மொழிபெயர்த்தார். பிறகு அவர் பென்சிலால் சில படங்களை வரைந்தார். சிறிது நேரத்தில் அவரது மனம் ஆடாமல் அசையாமல் ஒருமுகப்பட்டு நின்றதை சுவாமிஜி கவனித்தார். அப்படியே சிறிதுநேரம் கழிந்தபிறகு அவர் சுவாமிஜியின் பெயர், பரம்பரையிலுள்ள முன்னோர்களின் பெயர்கள் போன்ற விவரங்களை தங்குதடையின்றி கூறினார். அத்தனையும் சரியாக இருந்தன. இறுதியாக ஸ்ரீராம கிருஷ்ணர் சுவாமிஜியைக் காத்து வருவதைத் தெரிவித்தார். 'நீங்கள் நாடெங்கும் சுற்றித் திரிந்தபோது, ஒவ்வொரு கட்டத்திலும் அவர் உங்களுடனேயே இருந்தார். உங்கள் தாயைப்பற்றிய செய்தி தவறானது. நீங்கள் கலங்க வேண்டாம். அதுமட்டுமல்ல, ஆன்மீகத்தைப் போதிப்பதற்காக நீங்கள் விரைவில் தொலைதூர நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும்' என்றும் கூறினார் அவர்.

சுவாமிஜியின் மனச்சுமை அகன்றது. அனைவரும் அங்கிருந்து சென்னைக்குத் திரும்பினர். அந்தக் குறி சொல்பவர் கூறியதை மெய்ப்பிப்பதுபோல், அந்த வேளையில் கல்கத்தாவிலிருந்து தந்தியும் வந்தது. சுவாமிஜியின் தாயார் நலமாகவே இருந்தார்.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Fri Jun 21, 2013 8:04 am


அற்புதங்கள் நிகழ்த்தும் யோகி

அசாதாரண ஆற்றல்களில் வல்லவரான யோகி ஒருவரை சுவாமிஜி ஐதராபாத்தில் சந்தித்தார். எந்தப் பொருளை வேண்டுமானாலும் வரவழைக்கும் வல்லமை பெற்றவர் அவர். அன்பர்கள் சிலருடன் சுவாமிஜி அவரைக் காணச் சென்றார். அப்போது அந்தயோகிக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. சுவாமிஜி அவரிடம் சென்று அவரது ஆற்றல்களைக் காட்டுமாறு கூறியதும் அந்த யோகி' கட்டாயமாகக் காட்டுகிறேன். ஆனால் அதற்கு முன்பு நீங்கள் என் தலையில் கைவைத்து ஆசீர்வதியுங்கள். எனது காய்ச்சல் குணமாகட்டும்' என்றார்.

சுவாமிஜியும் அதுபோல் கை வைத்தார். பிறகு அந்த யோகி அவர்களிடம், "நீங்கள் உள்களுக்குத் தேவையானவற்றை ஒரு காகிதத்தில் எழுதி என்னிடம் கொடுங்கள்' என்றார். அந்தப் பகுதியில் கிடைக்காத திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களின் பெயர்களையெல்லாம் எழுதி அவரிடம் கொடுத்தார்கள். ஒரு கௌபீனம் மட்டுமே உடுத்திருந்த அவருக்கு சுவாமிஜி ஒரு சால்வையைக் கொடுத்தார். அதை அவர் போர்த்திக் கொண்டார். அதனுள்ளிருந்து குலைகுலையாகத் திராட்சை, ஆரஞ்சுப் பழங்கள் என்று அவர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்தார். ஆவி பறக்கும் சூடான அரிசி சாதம்கூட வரவழைத்தாராம்! அவற்றை உண்ணுமாறு சுவாமிஜியிடம் கூறினார். அது ஏதோ மனவசிய வேலையாக இருக்கும் என்று கருதிய அன்பர்கள் சுவாமிஜியைத் தடுத்தனர். ஆனால் அந்த யோகியே அதை உண்ண ஆரம்பித்ததும் எல்லோரும் சாப்பிட்டார்கள். எல்லாம் நன்றாகவேஇருந்தன. சடைசியாக, அற்புதமான ரோஜா மலர்களை வரவழைத்தார். இதழ்கள் சற்றும் வாடாமல் வதங்காமல் பனித்துளிகளுடன் புத்தம் புதியவையாக அவை இருந்தன. ஒன்றிரண்டல்ல, ஏராளம் மலர்கள்! 'அது எப்படி? என்று சுவாமிஜி கேட்டபோது, 'எல்லாம் கைவித்தை' என்றார் அந்த யோகி.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Fri Jun 21, 2013 9:57 am

இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள்

சென்னையில் தங்கியிருந்த சுவாமிஜியிடம் சில இளைஞர்கள் கேள்விகளை எழுப்பினர்.

சுவாமிஜி, இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள் எவை?' என்று கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கேட்டார். 'கடவுள் நம்பிக்கை, வேதங்களில் நம்பிக்கை, கர்ம நியதி, மறுபிறவிக் கொள்கை. இந்து மதத்திற்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன தெரியுமா? மனிதன் தவறிலிருந்து உண்மைக்குப் பயணம் செய்கிறான் என்று மற்ற மதங்கள் கூறுகின்றன. அவன் உண்மையிலிருந்து உண்மைக்கு, தாழ்ந்த உண்மையிலிருந்து உயர்ந்த உண்மைக்குப் போகிறான் என்கிறது இந்துமதம். வேதங்களை ஆழ்ந்து படித்தால் அங்கே சமரக் கருத்துதான் காணப்படுகிறது. பரிணாமக் கருத்தின் கோணத்தில் பேதங்களைப் படிக்க வேண்டும்.'

ஒரு நாள் மொத்தப் படித்தவர்கள் சிலர் அவரைக் காண வந்தனர். சுவாமிஜி தம்மை அத்வைதி என்று கருதுபவர். அத்வைதம் அறுதி உண்மைபற்றி பேசுகிறது. 'உயிர், உலகம், அறுதி உண்மை என்று பிரிவுகள் கிடையாது. இருப்பது ஒன்றே, அதுவே நான்' என்பது அதன் கருத்து. வந்தவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஒரு சவால் விடுவது போலவே சுவாமி4யிடம், 'நீங்களும் கடவுளும் ஒன்றே என்று கூறுகிறீர்கள். இதன்மூலம் உங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட்டீர்கள். நீங்கள் தவறு செய்தால் தடுப்பது யார்? சரியான பாதையிலிருந்து விலகினால் திருத்துவது யார்?' என்று கேட்டனர். அதே அழுத்தத்துடன் சுவாமிஜி கூறினார். 'நான் கடவுளுடன் ஒன்றுபட்டிருப்பதாக உண்மையிலே உணர்ந்திருந்தால் தீய வழியில் செல்ல மாட்டேன். என்னைத் திருத்தவோ, தடுக்கவோ யாரும் தேவையிருக்காது.'

சுவாமிஜி ராமராதபுரம் அரண்மனையில் இருந்த போதும் இத்தகைய விவாதம் ஒன்று எழுந்தது. அறிய முடியாததாகிய அறுதி உண்மையைக் காண இயலாது என்று ஒருவர் ஏளனமே செய்யத் தொடங்கினார். சிறிது நேரம் பொறுமையாக இருந்த சுவாமிஜி தீர்க்கமான குரலில், 'அறிய முடியாததை நான் கண்டிருக்கிறேன்' என்று கூறினார்.


விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by கரூர் கவியன்பன் Fri Jun 21, 2013 12:20 pm

சிறந்த தகவல்களுக்கு நன்றி அண்ணா
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:47 am

சென்னையில் நிரந்தர அமைப்பு

சுவாமிஜியின் பணி என்பது சாதாரண மானிட உடம்பு தாக்குப் பிடிக்கத்தக்க பணியா? உடல் ரீதியாக மட்டும் சிந்தித்தால் கூட திகைப்பாக இருக்கிறது! சாதாரணமாகப் பேசுவதிலேயே அதிக ஆற்றல் வீணாகிறது. அதிலும், ஒலி பெருக்கி இல்லாத காலத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒலி பெருக்கி இல்லாத காலத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்ற கூட்டத்தில் அனைவரும் கேட்கும்படிப் பேசுவது, எத்தனை ஆற்றலைச் செலவிட வேண்டிய ஒரு செயல்! இப்படி சொற்பொழிவுகள் எத்தனை? ஒன்றா, இரண்டா? இத்தனையையும் ஏற்றுக்கொண்டு அவர் வாழ்ந்தாரே அதுதான் ஆச்சரியம், நாம் செய்த பாக்கியம்! சுவாமிஜியை 'பிரேம மூர்த்தி' அதாவது அன்பின் வடிவம் என்று போற்றுகிறது துதிப் பாடல் ஒன்று. நமக்காக, நாட்டிற்காக, தமது உடல்நிலை உட்பட அனைத்தையும் தியாகம் செய்த அன்பு வடிவம் அவர்!

சுவாமிஜி சில நாட்கள் தங்களுடன் இருப்பார், பிறகு போய்விடுவார் என்பது சென்னை அன்பர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆனாலும் உண்மை அதுதான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அவரது செய்தியைத் தக்க வைத்துக் கொள்வது அவரையே தங்களுடன் வைத்துக் கொள்வது போல்தான். இன்றும் சொல்லப்போனால், சுவாமிஜிக்கும் அதுவே விருப்பமானதாக இருக்கும் என்பதை உணர்ந்திருந்த சென்னை அன்பர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். சென்னையிலிருந்து சுவாமிஜி புறப்படுவதற்கு முந்தின நாள் அவரிடம் சென்னையில் நிரந்தர அமைப்பு ஒன்று ஏற்படுத்துவது பற்றி பேசினார்கள். சுவாமிஜி வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து அதனை உரிய வழியில் நடத்திச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நிரந்தர அமைப்பு ஒன்று வேண்டும் என்ற வரையில் சுவாமிஜி அவர்களது விருப்பத்திற்கு இசைந்தார். ஆனால் தாம் வருவதுபற்றி அவர் எதுவும் கூறவில்லை. மாறாக, 'நான் உங்களுக்காக என் சகோதரத் துறவி ஒரு வரை அனுப்புகிறேன். இஙஙகே உள்ள வைதீகர்களுக்கெல்லாம் வைதீகராக இருக்கின்ற ஒருவர் அவர்' என்று தெரிவித்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:48 am

தமிழர்களிடம் நம்பிக்கை

பிப்.,14ம் தேதியன்று ஹார்ம்ஸ்டன் சார்க்கஸ் வளாகத்தில் சுவாமிஜியின் கடைசி பொதுச் சொற்பொழிவு நடைபெற்றது. சுமார் 3000 பேர் வந்திருந்தனர். தலைப்பு 'இந்தியாவின் எதிர்காலம், 'சுவாமிஜியின் சொல்லாற்றல் அன்று உச்சத்தில் இருந்தது. மேடையில் அங்குமிங்குமாக நடந்த வண்ணம் அவர் சொற்பொழிவு ஆற்றியது ஒரு சிங்கம் தனிமையில் உலவியபடி கர்ஜிப்பதுபோல் இருந்தது. அவரது குரல் எங்கும் எதிரொலித்து, கேட்பவர் இதயங்களில் ஊடுருவியது போல் இருந்தது' என்று சுந்தரராம ஐயர் எழுதுகிறார்.

இந்தச் சொற்பொழிவில்தான் சுவாமிஜி தமிழ் மக்களின் மீது தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். சென்னை இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்குச் செவி சாய்ப்பீர்களா? இது தமது தமிழ் மக்களிடம் அத்தகையதொரு பேரன்பை வெளிப்படுத்தினார். அவரது சொற்பொழிவு முடிந்தபோது கை தட்டல்களும், வாழ்த்தொலிகளுமாக முடிந்த போது கைதட்டல்களும், வாழ்த்தொலிகளுமாக எங்கும் பேரொலி பரந்தது. 'இனி சுவாமிஜி ஒவ்வொரு வருடமும் சென்னைக்கு வருவார். 'இனி சுவாமிஜி ஒவ்வொரு வருடமும் சென்னைக்கு வருவார்' என்று அன்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இறைவனின் திருவுளம் என்னவோ அதுவாக இருக்கவில்லை!

சுவாமிஜி தங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற ஆவல் யாருக்குத்தான் இருக்காது? ஆனால் சென்னையுடன் நின்றுவிடுவதல்லவே அவரது பணி. அவர் தொடர்ந்து சென்றாக வேண்டும், இன்றும் எத்தனை எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதல் அளித்தாக வேண்டும், இன்றும் எத்தனையோ பணிகளுக்கு உருவம் கொடுத்தாக வேண்டும். எனவே அவர் 15ம் தேதி புறப்படுவதென்று முடிவாயிற்று. இன்னும் ஒன்று. சுவாமிஜியே கூறியதுபோல் 'துறவிகளுக்கும் உடம்பு என்ற ஒன்று இருக்கிறது'. தொடர்ந்த இந்தப் பயணமும் அலைச்சல்களும் அவரது உடம்பை வெகுவாகப் பாதித்திருந்தன. 'சிறிது ஓய்வாவது கிடைக்காவிட்டார் நான் இன்னும் 6 மாதம் உயிரோடு இருப்பேனா என்றே தெரியவில்லை' என்று மிசஸ் சாராவிற்கு எழுதுகிறார் அவர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:49 am

சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்லும் வழி

பிப்.,13ம் தேதியன்று 3ம் பொதுச் சொற்பொழிவு பச்சையப்பா ஹாலில் வேதாந்தமும் இந்திய வாழ்க்கையும் என்ற தலைப்பில் நடைபெற்றது. அன்று மேடையில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் இருந்தார். சொற்பொழிவின் இடையில் சுவாமிஜி இளைஞர்களுக்கு அறைகூவுகின்ற பகுதி வந்தது. முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும் நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து ஆடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும்... உங்கள் கை, கால் தசைகளில் இன்றும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும் என்று பேசினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணிய ஐயர் அருகிலிருந்தவரிடம் தமிழில், 'இதைத்தான் நானும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கெசாள்ளவில்லை. இப்போது சுவாமிகள் கூறுகிறார், எல்லோரும் ஆர்ப்பரிக்கிறார்கள்' என்றாராம்.

சொற்பொழிவை நிறைவு செய்துவிட்டு சுவாமிஜி ராயப்பேட்டை பேட்டர்சன் தோட்டத்திலுள்ள எல்.கோவிந்தாஸ் என்பவரின் வீட்டிற்குச் சென்றார். ஐரோப்பியர்கள் பலர் அங்கே திரண்டிருந்தனர். சுவாமிஜிக்கு வரவேற்புரை அளிக்கப்பட்டது. வீணை மற்றும் கிடார் கச்சேரிகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிஜிக்கு ஆரஞ்சு வண்ண சில்க் துணிகள் வழக்கப்பட்டன, மாலை மரியாதைகள் செய்யப்பட்டன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:49 am

உயர்நிலைப் பள்ளியில் சுவாமிஜியின் உரை

பிப்.,12ம் தேதியன்று கேஸில் கெர்னனின் தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் இருந்தன. மாலை 4.30க்கு சுவாமிஜி இந்து தியாலஜிக்கல் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு அவருக்கு இண்டு வரவேற்புரைகள் அளிக்கப்பட்டன. சுவாமிஜி அவற்றை ஏற்றுக் கொண்டு பதிலுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பெரம்பூர் அன்னதான சமாஜத்தின் 6ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி பச்சையப்பா ஹாலில் நடைபெற்றது. அங்கும் சுவாமிஜி சொற்பொழிவு ஆற்றினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:50 am

விக்டோரியா ஹாலில் சுவாமிஜி ஆற்றிய சொற்பொழிவு

பிப்.,11ம் தேதியன்று காலையில் சுவாமிஜி லஸ் சர்ச் ரோடில் அமைந்துள்ள நீதிபதி சுப்பிரமணிய ஐயர் வீட்டிற்கு அழைப்பின் பேரில் சென்றார். லட்டு, காப்பி ஆகியவை சுவாமிஜிக்கு அளிக்கப்பட்டன. அவற்றை அவர் சிறிது சுவைத்தார். அன்று பேராசிரியர் சுந்தரம் ஐயரும் உடன் இருந்தார். திருவனந்தபுரத்திலும் அவர் சுவாமிஜியுடன் நெருக்கமாகப்பப் பழகியவர். சாப்பாட்டு விஷயத்தில் சுவாமிஜி பெரிய ஈடுபாடு காட்டியதில்லை என்கிறார் அவர். அன்று நீதிபதியிடம் சுவாமிஜி தமது முஸ்ஸிம், கிறிஸ்தவர், பௌத்தர் அனைவரையும் சகோதர உணர்வுடன் அந்தக் கோயிலின் கீழ் திரளச் செய்ய இயலும். அந்தக் கோயிலின் அமைப்பே புதுமையாக இருக்கும். எல்லா மதத்தின் தீர்க்கதரிசிகளின் சிலைகள் அதில் இருக்கும். அந்தக் கோயிலுக்குப் பின்னால் திறந்த வெளியில் ஒரு தூணில் 'ஓம்' என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருக்கும்.

அன்று விக்டோரியா ஹாலில் சுவாமிஜி ',இந்திய ரிஷிகள்' என்ற தலைப்பில் இரண்டாவது பொதுச் சொற்பொழிவு ஆற்றினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by சிவா Wed Nov 13, 2013 11:51 am

இந்து சமுதாயச் சீர்திருத்த சங்கத்தில் சுவாமிஜி

பிப்.,10ம் தேதியன்று சுவாமிஜி இந்து சமுதாயச் சீர்திருத்த சங்கத்தில் விருந்தினராக அழைக்கப்பட்டார். சீர்திருத்தம்' 'சீர்திருத்தவாதி' போன்றவை பற்றி தாம் கூறிய கருத்துக்களை இங்கே சுவாமிஜி விளக்கினார். அதுபற்றி பல அன்பர்கள் எழுப்பிய சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். நிகழ்ச்சி முடிந்து, சுவாமிஜி அங்கிருந்து புறப்படும்போது அந்தச் சங்கத்தினர் ஓர் அழகிய விசிறியை சுவாமிஜிக்கு அன்பளிப்பாகத் தந்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்! - Page 5 Empty Re: விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum