ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்ப்பு ஞாயிறு (Easter)

+4
raja sekar.v
Muthumohamed
ராஜா
ஹர்ஷித்
8 posters

Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by ஹர்ஷித் Sun Mar 31, 2013 1:10 am

உயிர்ப்பு ஞாயிறு (Easter) 501px-The_resurrection_day

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Blue_arrow_up
, ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா (கிரேக்க மொழி:Πάσχα:கடந்து போதல்) இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இது கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணையில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்..

-----விக்கிப்பீடியாவில் இருந்து Smile




ஆண்டவர் இயேசு சாவை வென்று உயிர்த்தெழுந்தார். மனிதர் அனைவரும் சாவு என்பது முடிவு அல்ல என்று உணர்ந்துகொள்ள வேண்டும். இறைவ னின் திருவுளத்திற்கேற்ப வாழ்ந்தால் உயிர்த்தெழுதல் நிச்சயம். நொடிப் பொழுதில் முடிந்து விடும் இவ்வுலக வாழ்வு நிலை வாழ்விற்கான ஆயத்தம் ஆகும்.
“மானிட மகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டு கொலை செய் யப்படவும், மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்’’ ஆண்டவர் இயேசுவுக்குச் சிலுவைச் சாவு எதிர்பாராத நிகழ்வாக இருக்கவில்லை. அவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தநாள் முதல், இந்த நாளுக்காகவே தம்மை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்.

அவர் சாவை ஏற்கனவே முன்னறி வித்திருந்தார். கிறிஸ்தவ நம்பிக்கை, விசுவாசம், எதிர்நோக்கிற்கான அடிப்படை, இயேசுவின் உயிர்ப்புதான். திருத்தூதர் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளார். “கிறிஸ்து உயிருடன் எழுப்படவில்லை என்றால் நாங்கள் பறை சாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாய் இருக்கும். சாவு என்பது நிலை வாழ்விற்கான வாசலாகும். இவ்வுலக வாழ்வை சொர்க்கம் ஆக்க மனிதர் உண்மையான விண்ணக சொர்க்கத்தை மறந்து விடுகின்றனர்’’. “நாசரேத்து இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.

ஆனால், தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவருக்கு மரண தண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள். இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகின்றன. உலகிற்கு வர் ணிக்க இயலாத மகிழ்ச்சியையும் எதிர்நோக்கையும் அளித்த இருநிகழ்வுகள்தான் இயேசுவின் மனிதாவதாரமும், உயிர்ப்பும். மனிதரை அளவுக்கதிக மாக அன்பு செய்யும் இறைவன், அவர்களை மீட்க மனிதனாக வரலாற்றில் புகுந்தார். பாவம் எதுவும் இல்லாத தூயவரான அவர் சிலுவைச் சாவால் மனிதரின் பாவத்திற்குக் கழுவாய் ஆனார். இயேசுவின் சிலுவைச் சாவு அவருடைய சீடருக்குத் தாங்க முடியாத வேதனையாய் அமைந்தது. தங்களுடைய எதிர்நோக்கு அனைத்தும் அற்றுப் போனதாக அவர்கள் நினைத்தார்கள்.

தீமை நிறைந்த உலகில் வாழும் நமக்கு வாழ்க்கைப் புதுப்பிக்கப்படல் என்பது அன்றாடம் தொடர்ந்து நிகழ வேண்டிய காரியமாகும். ஒவ்வொரு ஆண் டும் பெரிய சனிக்கிழமையன்று நாம் நமது திருமுழுக்கிற்கான உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்கிறோம். இது நம்பிக்கை விசுவாசத்தில் வளர்வ தற்காகத்தான். வளர்ச்சிதான் வாழ்வின் அடையாளம். மண்ணுலகில் இறை அன்பிலும், சகோதர அன்பிலும் வாழ்பவர்களுக்கு விண்ணுலக வாழ்வு நிச்சயம். “உயிர்த்தெழச் செய்பவனும், வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்’’.

வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார். கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன், பேதுரு, மற்றும் பிற சீடரிடமும் வந்து, “ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத் துக்கொண்டு போய்விட்டனர். அவரை எங்கே வைத்தனரோ தெரியவில்லை!’’ என்றார். இதைக் கேட்ட பேதுருவும் மற்ற சீடரும் கல்லறைக்குப் புறப்பட் டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்ற சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால், உள்ளே நுழையவில்லை. அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார்.

நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்கு துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்ற சீடரும் உள்ளே சென்றார். கண்டார். நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறை நூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை. பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். மரியா கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்து பார்த்தார். அங்கே வெண்ணாடை அணிந்த இரு வானதூதரை அவர் கண்டார்.

இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலை மாட்டிலும், மற்றவர் கால் மாட்டிலுமாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மரியாவிடம், “அம்மா ஏன் அழுகிறீர்?’’ என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம் “என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அவரை எங்கே வைத்தனரோ என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் திரும்பிப் பார்த்தபோது இயேசு நிற்பதைக் கண்டார். ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவர் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவரிடம், ‘ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?’ என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து அவரிடம் “ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர்? எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்’’ என்றார்.

இயேசு அவரிடம், ‘மரியா’ என்றார். மரியா திரும்பிப் பார்த்து ‘போதகரே’ என்றார். இயேசு அவரிடம், “என்னை இப்ப டிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம் என் தந்தையும், உங்கள் தந்தையும், என் கடவுளும், உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன் எனச் சொல்’’ என்றார். மகதலா மரியா சீடரிடம் சென்று, “நான் ஆண்ட வரைக் கண்டேன்,’’ என்றார். தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார். (யோவான் 20: 1-18). இயேசுவின் உடல் புதியதொரு கல்லறையில் வைக்கப்பட்டது. பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கல்லறை அது. அதற்கு முன்பாக அன்னை மரியாளின் மடிமீது வைக்கப்பட்டு, அவளது தாய்மைக் கண்ணீரால் குளிப்பாட்டப்பட்டது.

ஏற்கனவே மகதலா மரியாளின் பரிமளத் தைலத்தால் பூசப்பட்டது அவர் பாதங்கள். இவ்வாறு அன்புச் செயல்களால் தயாரிக்கப்பட்டு கல்லறையில் வைக்கப்பட்ட உடல் அங்கு உயிரற்ற உடலாகத் தங்கியிருக்கவில்லை. அவரது இறை வல்லமை சாவை வென்றது. சாவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை. செவிக்கும் எட்டவில்லை. மனித உள்ளமும் அதை அறியவில்லை.
கல்லறையிலிருந்து இயேசு உயிர்த்தெழுந்தார். அவரது உயிர்ப்பின் மகிமை, மகிழ்ச்சி நமதாகும். ஆண்டவரைத் தேடுவோரை அவர் எதிர்கொண்டு வந்து ஆசி

வழங்குகின்றார். அவரைத் தேடுவோர் அவரைக் கண்டடைவர்.

நமது இறை ஏக்கங்களுக்கும் தாகத்திற்கும் கனிவுடன் பதில் தரக்கூடிய இரக்கத்தின் காலம் இது. இறை இயேசுவிடம் நம்பிக்கை வைத்தோர் அனைவருக்கும் அவரது உயிர்ப்பு சுலபமாகப் புரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது. காலம் கனிந்திருக்கும்போதே இறையரசை ஏற்று பறை சாற்றுவோம். “கல்லறை திறந்தது காரிருள் மறைந்தது. கிறிஸ்து உயிர்த்தார். அல்லேலுயா. வல்லமை துலங்க வாழ்வினை வழங்க மரணத்தை வென்றார். அல்லேலுயா. வாழ்வுக்குச் சாவில்லை, சாவுக்கு வாழ்வில்லை. மரணத்தை மீட்பர் வென்று விட்டார். வாழ்க்கை பிறந்தது மரணம் மறைந்தது. வாழ்வோம் கிறிஸ்துவில் புதுவாழ்வு,’’ என்று அக்களித்து ஆர்ப்பரித்துப் பாடி மகிழ்ந்திருப்போம்.

‘மணவைப்பிரியன்’ ஜெயதாஸ் பெர்னாண்டோ
தினகரன்.கம
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by ஹர்ஷித் Sun Mar 31, 2013 2:01 am

அனைவருக்கும் இனிய உயிர்ப்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by ராஜா Sun Mar 31, 2013 11:03 am

அனைவருக்கும் இனிய உயிர்ப்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by Muthumohamed Sun Mar 31, 2013 11:27 am

அனைவருக்கும் எனது Easter திருநாள் நாள் நல்வாழ்த்துக்கள்



உயிர்ப்பு ஞாயிறு (Easter) Mஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Uஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Tஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Hஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Uஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Mஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Oஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Hஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Aஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Mஉயிர்ப்பு ஞாயிறு (Easter) Eஉயிர்ப்பு ஞாயிறு (Easter) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by raja sekar.v Sun Mar 31, 2013 11:45 am

அனைவருக்கும் இனிய உயிர்ப்புப்பெருநாள் வாழ்த்துக்கள :suspect:
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by அருண் Sun Mar 31, 2013 3:07 pm

உறவுகளுக்கு உயிர்ப்புப்பெருநாள் வாழ்த்துக்க்கள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by balakarthik Sun Mar 31, 2013 5:08 pm

உறவுகளுக்கு உயிர்ப்புப்பெருநாள் வாழ்த்துக்க்கள்! சூப்பருங்க சூப்பருங்க :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் உயிர்ப்பு ஞாயிறு (Easter) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by யினியவன் Sun Mar 31, 2013 5:37 pm

வாழ்த்துகள் நண்பர்களுக்கு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by பூவன் Mon Apr 01, 2013 11:30 am

அனைவருக்கும் தாமதமான வாழ்த்துகள்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உயிர்ப்பு ஞாயிறு (Easter) Empty Re: உயிர்ப்பு ஞாயிறு (Easter)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum