புதிய பதிவுகள்
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
31 Posts - 48%
heezulia
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
29 Posts - 45%
Rathinavelu
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 2%
mini
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 2%
balki1949
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
388 Posts - 58%
heezulia
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
20 Posts - 3%
prajai
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
4 Posts - 1%
mini
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_m10இனிமேலாவது திருநீறு பூசுங்க! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேலாவது திருநீறு பூசுங்க!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 30, 2013 4:53 pm

சிவசின்னங்களான திருநீறு, ருத்ராட்சத்தை அணிவது மட்டுமின்றி பார்த்தாலே புண்ணியம். இதனை விளக்குவதற்காக வாரியார் கூறும் கதை இது.

சிதம்பரத்தில் நெசவாளி ஒருவன் இருந்தான். சைவனாகப் பிறந்தும், விபூதி அணிய மாட்டான். தானுண்டு தன் வேலையுண்டு என துணி நெய்தபடி இருப்பான். ஒருநாள் மகான் ஒருவர் கோயிலில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.

நெசவாளியின் மனைவி, தன் கணவரையும் அவரிடம் ஆசி பெற வருமாறு அழைத்தாள். அவன் மனைவியிடம், ""ஏழைகளுக்கு பூஜை செய்ய நேரமேது? இருந்தால் எல்லாம் செய்யலாம். நாம் நெய்தால்தான் அடுப்பு எரியும். எனக்கு விபூதி பூசக் கூட நேரம் கிடையாது,'' என்றான்.

அவளோ, "இந்த உடம்புக்காகப் பாடுபடும் நீங்கள், உயிருக்காகவும் பாடுபடவேண்டாமா?.'' என கேட்டாள்.
நெசவாளிக்கு கோபம் வந்து விட்டது. ""அடியே! வேலையை கெடுக்காதே! நீ போய் சிவபூஜை செய். நீ செய்யும் பூஜையில் எனக்கும் பங்கு கிடைக்கும், போ...போ...'' என விரட்டினான்.

அவள் விடாக்கண்டி.
""நான் சாப்பிட்டால் உங்கள் வயிறு நிரம்புமா?,'' என்று எதிர்க்கேள்வி கேட்டாள்.

நெசவாளி அதை காதில் வாங்கவே இல்லை. அவன் அவளுடன் செல்ல மறுத்துவிட்டான்.

அப்போது, நெசவாளியின் வீட்டு வழியாகவே, அந்த மகான் வந்து கொண்டிருந்தார். நெசவாளியின் மனைவி ஓடிச்சென்று அவரிடம் ஆசி பெற்றாள். நெசவாளியோ தறியை விட்டு இறங்கவில்லை. மகான் அவனருகே வந்தார்.

""தம்பி! மனிதப்பிறவி மிக அரியது. அதை வழிபாடு செய்து பயனுடையதாக்கிக் கொள். சிவசின்னமான திருநீறு தரித்துக் கொள்,'' என்றார்.

""சுவாமீ! எனக்கு திருநீறு மீது வெறுப்பு கிடையாது. ஏழையான எனக்கு நெய்வதற்கே நேரம் போதவில்லை, இதில் வழிபாட்டுக்கு ஏது நேரம்?'' பதிலளித்தான்.

""மகனே! நீ திருநீறு பூசவேண்டாம். திருநீறு அணிந்த யாராவது ஒருவரை பார்த்தபின் தினமும் சாப்பிடு,'' என்றார்.

நெசவாளி தலையசைத்தான்.

பக்கத்து வீட்டில், தினமும் திருநீறு பூசும் பழக்கமுள்ள மண்பாண்டத் தொழிலாளியை பார்க்க முடிவெடுத்தான்.
அவர், நெசவாளியிடம் மூக்குப்பொடி கேட்பதற்காக வருவார். ஜன்னல் வழியே கையை நீட்டுவார். அப்போது பொடி கொடுத்தபடி அவரது முகத்தைப் பார்ப்பான்.

""கொண்டா சாப்பாடு'' என மனைவியை அழைப்பான். அவள் கூழைக் கொடுத்ததும் "கடகட' என குடித்துவிட்டு நெய்ய ஆரம்பிப்பான்.

ஒருநாள் குயவர் வரவில்லை. நேரமானதால் நெசவாளிக்கு பசித்தது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டு வேலை செய்தான். பசி தாளவில்லை. தறியை விட்டு இறங்கி, குயவரைத் தேடிப் போனான். அவர் மண்ணெடுக்க ஆற்றுக்குச் சென்றிருந்தார்.

இவனும் அங்கு சென்றான். அங்கு குயவர் மண்வெட்டியால் பள்ளம் தோண்டிக் கொண்டு இருந்தார். அப்போது "டங் டங் ' என சத்தம் கேட்டது. அந்த இடத்தில்செப்புக்குடத்தில் தங்கக்காசுகள் புதையலாக இருந்தது. ஆச்சரியத்துடன் அக்குடத்தை எடுத்த மண்பாண்டத் தொழிலாளி நிமிர்ந்து பார்த்தார். நெசவாளி நின்றார். குயவரின் திருநீறு பூசிய முகத்தைப் பார்த்தவுடனேயே வீட்டுக்கு திரும்பி விட்டார்.

நெசவாளி, தான் புதையல் எடுத்ததைப் பார்த்துவிட்டு ஓடுவதாக நினைத்த, பாண்டத்தொழிலாளி புதைய<லுடன் அவசரமாக வீட்டுக்கு வந்தார். நெசவாளியின் வீட்டுக்குச் சென்று, பாதி தங்கக்காசுகளை நெசவாளி மனைவியிடம் ஒப்படைத்தார். அவள் கணவரிடம் விஷயத்தை தெரிவித்தாள்.

நெசவாளியிடம் அவள்,"" நீறணிந்த நெற்றியைப் பார்த்ததற்கே இவ்வளவு நன்மை என்றால், பூசினால் எவ்வளவு நல்லது! இனிமேலாவது திருநீறு பூசுங்க!,'' என்று வேண்டிக் கொண்டாள்.

அவனும் மகானிடம் தீட்சை பெற்று சிவபூஜை செய்யத் தொடங்கினான்.
(நன்றி - தினமலர்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக