புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
Kavithai:::Kavithai Poll_c10Kavithai:::Kavithai Poll_m10Kavithai:::Kavithai Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Kavithai:::Kavithai


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:23 pm

"தா... டீ "



அவலை நினைத்து
உரலை இடித்த
கதைப் போல,

உள்ளத்துள்
என்னை நினைத்து
ஏன்டி
விரலை கடித்த படி ?

.......

இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!

எதிர்வரும் என்...
'ம்... ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்' என
எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.

அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!

முதலில்
முழுமைப் பெறட்டும்
நம் காதல்.
பின்
செழுமைப் பெறட்டும்
நம் வாழ்வு!
..........................................................


விழாக்காலம்


அறிவிப்பது என்னவோ
அம்மனுக்குத் திருவிழா
என்று.
அம்மனுக்குத்தான் தெரியும்
விழா யாருக்கென்று!

'என்னை ஒருமுறைப்
பாரேன்' என்று
அம்மனும் கூட
கண் சிமிட்டாமல்
உன் கண்
பார்த்துக் கொண்டிருக்க,

ஒற்றைக் கண்ணை
உருட்டி சிமிட்டி
உதட்டில் சிறிதாய்ப்
புன்னகைத் திரட்டி
கட்டை விரலை
முத்தமிட்டு
கலவரம் மூட்டுகிறாய்
காதல் கள்ளி.

உன்
தோழியிடமாவது
சொல்லி விட்டாயா?
நான்
'தோழனாய்' இருந்து
'காதலன்'
ஆகிவிட்டேன் என்று!
..............................................................

வழித்துணை




என்
வாழ்வின் உயர்விற்குக்
காரணியாய் நீயிருந்தாய் .
வாழ்வின் பயணத்திற்கும்
வழித்துணையாய் நீ வருவாய்

எனத் திளைத்திருந்த
மணித்துளியில்...
என்ன நிகழ்ந்ததோ ,
நஞ்சு என அறிந்தே
கஞ்சி போல் குடித்து
என்னை ஏங்க விட்டுத்
தூங்கி விட்டாய்
நிரந்தரமாய்....

மண் உண்டுப் போயிருக்கும்
என்னை மறைத்து வைத்த
உன் இதயத்தை.
என்னச்சொல்லி நான் தேற்ற
உன்னைச் சுமக்கும்
என் இதயத்தை ...?

ஆன்மா உன்னைத்
தேடும்போதெல்லாம்
துறவியாய் - உன்
துயிலறை வருகிறேன்.

உன்
மடிமீது அமரும் நினைவில்
நீ படுத்துறங்கும்
மண்மேடு மீதமர்ந்து
மாண்டு மீள்கிறேன் ...

உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...
......... ...........!

இன்று ...நான்
இன்பமாய் வாழ்வதாய்
எல்லோரும் எண்ணுகிறார்கள்
என்றாலும்,

நான்
நடமாடும் கல்லறை
கண்ணே!

..........................................................

புரியாத புதிர்




கடவுள்
மனித உருவில்
எப்போதாவது ஒருமுறை
காட்சியளிப்பார்
எனச் சொல்லக்
கேட்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும்
வாரந்தவறாமல்
வெள்ளி தோறும்
காட்சியளிப்பது

ஏனென்றும் புரியவில்லை
எப்படியென்றும் தெரியவில்லை ...!?
................................................................

ஏன் ?



உன்னை நினைத்து
நான் அணைத்து
உறங்கும் தலையணை

என்னைப் பிரிந்து
தனித்திருக்க மறுத்து
உன்னைப்போன்றே
அடம்பிடிக்கிறதே
ஏன்?

................................................


உதிரும் மேகம்





மோதி
உடைந்து
ஒளிர்ந்து
கிளர்ந்து
மேகம்
உதிரத் தொடங்கியதும்,
வருடத்துவங்கி விடுகிறது

உன்
நினைவுகள் ...!


.............................................


மழை





பெரும் மழை என்றில்லை
தொடர்த்தூறல் என்றாலும்
உன்னை நினைவூட்டாமல்
பொழிந்து விட்டுப்போக
இன்னும்,
பழகிக் கொள்ளவில்லை

மழை ...!
...................................................


மீள்பார்வை




உலகம் சுழலும்
இத்தனை பரபரப்பிலும்
உனக்காக ஒதுக்கி
நான் தனித்திருக்கும்
தருணங்கள்

பின்னோக்கி
நிதானித்துச் சுழலும்
நினைவின் நொடிகளைத்
துரிதப்படுத்த
விரும்பவில்லை
மனம் ...!

..........................................


கனவு




எந்தத் தடயமும்
விட்டுச் செல்லாமல்
எப்படி முடிகிறது உன்னால் ...?

எந்தன்
இரவுகளுக்குள்
வந்துச் செல்ல...!

.................................................


காதலும் கல்யாணமும்



இனி ...
வருடாவருடம்
'கல்யாண நாள்' வரும்.
நீயும் கொண்டாடுவாய்
அவனுடன்.


இனியும்
வருடாவருடம்
'காதலர் தினமும்' வருமே!
நான் யாருடன்...?


..................................................


குழந்தைக் காதலி


உண்ணக் கொடுத்த
கஞ்சிக் கிண்ணத்தை
கவிழ்த்துக் கொட்டி

கண் காது மூக்கு
கை கால் வாயெனப் பூசி
விரல்களைச் சப்பி
விளையாடும்
குழந்தையைப் போல்

காதல் நிரம்பிய - என்
நெஞ்சக் கிண்ணத்தைக்
கவிழ்த்துக் கொட்டி
விளையாடுகிறாய்
நீ!

கேட்டால் ...
காதலில் இன்னும்
குழந்தை நான் என
குதித்தாடுகிறாய்...!

.................................................


என்ன இது?


உன் பெயரையும்
என் பெயரையும்
ஒன்றாக்கி எழுதியிருந்தேன்
நாட்குறிப்பில்.


விருந்துக்கு வந்த - என்
அத்தைமகள்
விபத்தாய் அதைப்
பார்த்துவிட்டு
பற்றவைத்து விட்டாள் - அவள்
அத்தையிடம். (என் அம்மா)

முதலில் அக்கா,
பின் அம்மா, அண்ணா
ஏன் தம்பியுங்கூட !

என்னைச் சுற்றி
அரண் போல் நின்று
அரம் போல் அறுத்தார்கள்

"என்ன இது ?" ,எனக் கேட்டு.

'என்ன அது' , என்று
உண்மையாகவா தெரிந்திருக்காது...?


.............................................



அமுத கனி





காதல் தோல்வி
கசப்பானதொரு
அனுபவம் தான்.

ஆனாலும்
சுகமானது.

உண்ணும்போது
சிறிதாய்க் கசந்தாலும்,
எண்ணும்போது
இனிக்கும்
நெல்லிக்கனி போல...!


...............................................


அவளுக்குத் திருமணம்


உனைச் சுமந்த
கருவறை
இனி என்னுள்
எதற்கு ?

உனைப்
பிரிதல் என்பதும்
இறப்பு தான்
எனக்கு.

உன்னால்
வேண்டுமானால் முடியலாம்
உள்ளே என்னையும்
கணவனாய் வேறொருவனையும்
சுமக்க .

என்னால் முடியாது
எடுத்துக் கொண்டுப் போ
உன்னை உன்னோடு .

..................................................



யாரேனும் சொல்லுங்கள் ...



எதிர்ப்பார்த்தே நிகழ்ந்ததுதான்
என்றாலும்,

விபத்தால் உறுப்பிழந்த
எனக்கு
இழப்பீடு தருவதுதானே
நியாயம்.?

அவளின் விழிகள்
வீசிய ஒளியால்
இழந்து தவிக்கிறேன்
இதயத்தை !

யாரேனும்
எடுத்துச் சொல்லுங்கள்
அவளிடம்.
நியாயத்தை !

...................................................


அந்த நாள் முதல்...


காற்றோடு பேசுகிறேன்
காற்றில் தேடுகிறேன்


இப்பொழுதெல்லாம்
புவிஈர்ப்பு விசைக்கு என்னை
பிடிப்பதில்லை
ஆகாச வானுக்கும்
அப்படித்தான் போலும்!

மரக்கிளையில் காகங்கள்
இலைமறைவில் குயில்கள்
அதனதன் மொழியில் - என்
அந்தரங்கம் பற்றியே
பேசுவது போல் ...

மாமர நிழலில்
நானிருந்தாலும்
தொலைதூரத் தென்னை
எனக்காய்
சாமரம் வீசுவது போல்...

உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...

எல்லாம்
காதல்
வந்த நாள் முதல்...!



...........................................
ஏன்?


"உறங்கும் போது
ஒளிந்து வந்து
முத்தமிட வேண்டாம்
ஒருநொடி பயந்து போகிறேன்
தெரியுமா ?", என்கிறாய்.

நான்
உன் வீட்டிற்குள்
புகுந்ததை உணர்ந்ததும்
படிப்பதை நிறுத்திவிட்டு
உறங்குவதைப் போல்

நீ
நடிப்பதை மட்டும்
ஏன் என்று
சொல்லிவிடு...!



.............................................
ஞாபகங்கள் ...

சிற்றிடையில்
சின்னதாய்ச்
சீண்டினேன்.

காதருகில் வந்து
நாயே என்றாய்.

அய்யய்யோ ...
நாயளவு நன்றியெல்லாம்
என்னிடம் இல்லை என்றேன்.

முறைத்துச்
சிரித்தாய்.

மூவிரண்டு ஆண்டுகள்
முடிந்த பின்னும்
மங்காத பிம்பங்களாய்
மனக்கண்ணில்...!



...................................................
என்ன இது ?




வெறும் நட்பென்று
ஒப்புக்கொள்ள மனமுமில்லை.

பெருங்காதல் என்று
சொல்லித்திரிய துணிவுமில்லை.

எதுவென்று புரியாமல்
ச்ச் ச்சே ...
என்ன அவஸ்தை இது..!?


.........................................................

நெடுங்காதல்


ஒதுக்கப்பட்ட நபர் போல்
ஊருக்கு வெளியே உள்ள
புங்க மரத்தடியில்
ஒற்றையாய் அமர்ந்திருந்தேன்.

சிறகு உதிர்ந்த
ஈசல் போல்
சிதறிக் கிடந்தது
புங்க மரத்துப் பூக்களும்

எப்போதோ
நாம்
சிரித்துப் பேசியச் சொற்களும் ...!



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 20, 2009 5:28 pm

இப்படி இருக்குமா?
அப்படி இருக்குமா?
எப்படியிருக்கும்...... ? என
கனவுகளாய் நானும்
எத்தனைக் காலம்
சுமந்துத் திரிவது
பாதி காதலை..!

எதிர்வரும் என்...
'ம்... ஊஹும்' ...சரியல்ல
நம்...சந்ததிக்கு
'எது காதல்' என
எடுத்துரைக்கும் கடமை
எனக்கிருக்கிறது.

அதற்காகவேனும்
தா...டீ..!
உன்னிடமுள்ள
மீதி காதலை...!

வலிகளை மிக உணர்ச்சி பூர்வமாக காட்டுகிறது. பதிவிற்கு நன்றி மீனு!



Kavithai:::Kavithai Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:35 pm

நன்றி பாடகன்



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 6:55 pm

உனைத் தனியாய்த்
தூங்கவிட்டு திரும்பி
நான் வருகையில்
எனக்குத் துணையாய்
உன் துயர நினைவுகள்...




உனைக்காண
காத்திருக்கும் நேரத்தில்
என் கடிகாரத்தின்
நொடிமுள் கூட
மணிமுள் வேகத்தில்
சுழல்வது போல்...


மீனு, இந்த கவிதைகள் அனைத்துமே வெகு சிறப்பு. நன்றி.
..........கா.ந.கல்யாண்

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 20, 2009 6:59 pm

மீனு. வாழ்த்துக்கள்....... இவ்வளவு அழகான கவிதையெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா அன்பு மலர்



Kavithai:::Kavithai Eegaraitkmkhan
Kavithai:::Kavithai Logo12
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 20, 2009 7:02 pm

Kavithai:::Kavithai 677196 Kavithai:::Kavithai 677196 Kavithai:::Kavithai 677196



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 10:35 pm

mdkhan wrote:மீனு. வாழ்த்துக்கள்....... இவ்வளவு அழகான கவிதையெல்லாம் உங்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா அன்பு மலர்

ஆமா..இவளவு அழகான கவிதைகளை..தேடு போயி ..அழகா சுடுவதால்..இவளவு அழகான கவிதைகள் கிடைக்கிறது கான் ஒன்னும் புரியல



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக