புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
1 Post - 1%
mruthun
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழைக் காப்போம்! Poll_c10தமிழைக் காப்போம்! Poll_m10தமிழைக் காப்போம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைக் காப்போம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 27, 2013 4:21 pm

"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி' என்ற பெருமை தமிழ் குடிக்கு உண்டு. ஆனால், அந்த தமிழ் குடி இன்று தனித் தன்மையிழந்து, பழம்பெருமை மறந்து, தடுமாறி தள்ளாடி நிற்பது பரிதாபத்துக்குரியது.

இன்னும் சில நூற்றாண்டுகளில் தமிழ் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இது மிகைப்படுத்தப்படாத உண்மை. ஆங்கிலேயர், முகலாயர், பிரெஞ்சுக்காரர்கள் என பல்வேறு நாட்டினர் நம் மீது செலுத்திய ஆதிக்கத்தின் காரணமாக நம் மொழியில் பிற மொழிச் சொற்கள் கலந்து விட்டன.

அதிலும், குறிப்பாக அன்று ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தியதைவிட, இன்று ஆங்கிலம் நம்மை அடிமைப்படுத்தி விட்டது என்றே கூற வேண்டும். தூய தமிழில் நம்மால் பேச முடியா விட்டாலும் பரவாயில்லை, ஆங்கிலச் சொல் கலக்காமல் எளிய தமிழில் நம்மால் பேசவோ, எழுதவோ முடியுமா என்றால், கட்டாயமாக முடியாது. அந்த அளவுக்கு தாய்மொழியை மழுங்கடித்து, அன்னிய மொழி நம்மை ஆட்கொண்டுள்ளது.

தாயைக் காப்பது எப்படி ஒரு தனயனின் கடமையோ, அதேபோல் தாய் மொழியைக் காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை. ஆனால், நாம் என்ன செய்கிறோம், அன்னிய மொழி மீது கொண்ட மோகத்தினால், தேனென இனிக்கும் நம் தாய்மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு சாதாரண மொழிப் பாடமாகவும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் தமிழ்மொழியிலும் கற்பிக்கப்பட்டன. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ்.

தமிழ் என்பது சாதாரண மொழிப் பாடமாகிவிட்டது. ஆங்கிலம் உள்பட மற்ற பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படுகின்றன.

அதனால்தான் இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழைத் தவறின்றி வாசிக்கவோ, எழுதவோ தெரிவதில்லை. "என் குழந்தைக்கு இங்கிலீஷ் மாதிரி தமிழ் சரளமா வர மாட்டேங்குது' எனப் பெற்றோர்கள் பெருமையாகக் கூறுவது வெட்கப்பட வேண்டிய விஷயம். இதற்கு, புற்றீசலாய் பெருகிவிட்ட ஆங்கிலப் பள்ளிகளும் ஒரு முக்கியக் காரணமாகும்.

தமிழறிஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களைத் தவிர, தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர் கூட்டமும் தமிழை ஆர்வத்துடன் படித்து வந்தனர். இது தமிழ் மொழி மீது உள்ள காதலால் அல்ல, அரசுப் பணியில் சேர தேர்வாணையம் நடத்தும் தேர்வில் தமிழ்மொழி சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில் அளிக்கவே இந்த அக்கறை.

சரி அப்படியாவது தமிழ் படிக்கிறார்களே என மனதைத் தேற்றினால், அதிலும் இடி விழுந்தது போல், கடந்த வாரம் ஓர் அறிவிப்பு வந்து விழுந்தது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அரசுப் பணிகளில் சேருவதற்காக தேர்வெழுதும் மாணவர்களுக்கான முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத் திட்டத்தில் தமிழ் மொழியையே நீக்கி விட்டனர். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால் முடிவை நிறுத்திவைத்துள்ளனர்.

இனி தமிழ் என்பது மாணவர்களுக்கு மதிப்பெண் எடுத்து தேர்ச்சிபெற வேண்டிய ஒரு பாடம் என்றுதான் தோன்றுமே தவிர, அது ஓர் உயிர்ப்புள்ள, எழுச்சியான மொழி என்பது தெரியாது. இதே சூழ்நிலை தொடர்ந்தால் நாளடைவில் அனைவரும் தமிழை எழுதவும், படிக்கவும் மறந்து, பேச்சு மொழியாக மட்டுமே மாற்றி விடுவார்கள். இல்லையெனில் தமிழும், ஆங்கிலமும் கலந்து புதிய கலப்பு மொழி தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனியாவது நாம் விழித்துக் கொண்டு, தமிழைக் காக்கவும், வளர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(நன்றி-தினமணி)-ஆர்.பரணீதரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக