Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை உத்திகள்
+3
raja sekar.v
mbalasaravanan
ரமணி
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
சிறுகதை உத்திகள்
First topic message reminder :
சிறுகதை உத்திகள்
இந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம்.
சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதையைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை இந்கு பதியுங்கள். ஒன்றிரண்டு பதிவுகள் ஆனதும் என் கருத்துக்களைப் பதிகிறேன்.
குழந்தைக்கு ஜுரம்
தி.ஜானகிராமன்
*****
சிறுகதை உத்திகள்
இந்த மன்றத்தில் சிறுகதை எழுதும் ஆர்வம் பலருக்கு அதிகம் இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன்: நான் ஏதோ பெரிய எழுத்தாளன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, உத்திகள் பற்றி என் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதே இந்த இழையின் நோக்கம்.
சிறுகதை எழுதும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த மாதிரி தி.ஜானகிராமன். முதல் காரியமாக அவரது இந்தக் கதையைப் படித்து, ஒரு கதாசிரியர் பார்வையில் உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை, எண்ணங்களை இந்கு பதியுங்கள். ஒன்றிரண்டு பதிவுகள் ஆனதும் என் கருத்துக்களைப் பதிகிறேன்.
குழந்தைக்கு ஜுரம்
தி.ஜானகிராமன்
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: சிறுகதை உத்திகள்
வேண்டுகோள்:
நேரடி இணைப்புகளை நீக்கிவிட்டு எங்கேயிருந்து என்று மட்டும் தெரிவிக்கவும் - நன்றி.
நேரடி இணைப்புகளை நீக்கிவிட்டு எங்கேயிருந்து என்று மட்டும் தெரிவிக்கவும் - நன்றி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிறுகதை உத்திகள்
வணக்கம்.
நீங்கள் சொல்வது சரியாகப் புரியவில்லை. நேரடி இணைப்புகள் என்றால் பிற வலைதளச் சுட்டிகளா? இவற்றைத் தராமல் சிறுகதைத் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் மட்டும் தந்தால் போதுமா?
உதாரணமாக,
’இணைப்பறவை’: ஆர்.சூடாமணி
என்பதில் சுட்டியை நீக்கிவிடவா? வேண்டுவது என்ன என்று விளக்கவும்.
அன்புடன்,
ரமணி
நீங்கள் சொல்வது சரியாகப் புரியவில்லை. நேரடி இணைப்புகள் என்றால் பிற வலைதளச் சுட்டிகளா? இவற்றைத் தராமல் சிறுகதைத் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் மட்டும் தந்தால் போதுமா?
உதாரணமாக,
’இணைப்பறவை’: ஆர்.சூடாமணி
என்பதில் சுட்டியை நீக்கிவிடவா? வேண்டுவது என்ன என்று விளக்கவும்.
அன்புடன்,
ரமணி
யினியவன் wrote:வேண்டுகோள்:
நேரடி இணைப்புகளை நீக்கிவிட்டு எங்கேயிருந்து என்று மட்டும் தெரிவிக்கவும் - நன்றி.
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: சிறுகதை உத்திகள்
அதே ரமணி - மற்ற தளங்களின் சுட்டிகளை நீக்கிவிட்டு, நீங்கள் சொல்லியதுபோல் செய்து விடுங்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சிறுகதை உத்திகள்
சிறுகதை உத்திகள்: கதை சொல்லும் உபாயங்கள்
ஒரு சிறுகதையின் கதையைப் பல உபாயங்கள் மூலம் சொல்லலாம். கதை சொல்ல உதவும் உபாயங்களில் சில: கதைச் சட்டம் (framing), நாட்குறிப்புகள் (diary entries), கடிதங்கள், கதைக்குள் கதை, திரட்டு (collage), நிரலில்லாக் கதை (non-linear plot), அரைகுறைக்கதை (anti-story), மற்றும் கவிதை வடிவக் கதை (lyricism).
நாவலில் இத்தகைய உபாயங்கள் பலவற்றை இணைத்து எழுதலாம். சிறுகதையில் அதன் வடிவமும் ஒருமையும் சரியாக வர ஒன்றிரண்டு உபாயங்களுக்கு மேல் பயன்படுத்த இயலாது.
1. கதைச் சட்டம்
சட்டம் போட்ட இயற்கை ஓவியப் படம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். காவி வண்ணத்தில் ஒரு பெரிய மலையின் பாறைச் சுவர். சுவரையொட்டி ஓடும் நீண்ட சாலை இருபுறமும் வளைந்து ஒரு கொடி போல மலையைப் பற்றி மேலேறுகிறது. சாலையின் திருப்பத்தில் வெள்ளிக் கோடாக இழியும் ஒரு சின்ன அருவியின் நீர்வீச்சில் சாலை அந்தப் பகுதியில் ஈரமாகத் தெரிகிறது. சாலையில் ஒரு கார் செயலிழந்து நின்றிருக்க அருகில் செய்வதறியாது நிற்கும் ஒரு பெண். கார்ச் சக்கரத்தின் அருகில் அமர்ந்து நோட்டமிடும் ஒரு ஆடவன். இவர்களைக் கண்டுகொள்ளாமல் ஒரு பேருந்து தாண்டிச் செல்கிறது. மலைச் சுவர் ஓரத்தில் வண்டி நின்றிருக்க எதிர்ப்புறம் அழகான பள்ளத்தாக்கை வெறித்தவண்ணம் அந்தப் பெண் நிற்கிறாள். பாறைச் சுவரில் சிறு செடிகள் முளைத்திருக்க, சாலையின் எதிர்ப்புறத்தில் காப்புத் தண்டவாளங்களுக்குக் கீழுள்ள நிலத்தில் வளர்ந்துள்ள காட்டுச் செடிகளில் பளீரென்று வெண்ணிறப் பூக்கள். சாலையும் சரிவும் முழுவதும் நிழலாகவும் பள்ளத்தாக்கில் இளம் வெய்யிலாகவும் இருப்பதில் அது ஒரு பின் மாலை நேரம் என்று தெரிகிறது.
மேலுள்ள படத்தில் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப் பறக்கக் கதைகள் தெரிகின்றனவா? சட்டம் போட்ட இந்தப் படத்துக்குள் எத்தனை படங்கள்! அவை யாவும் ஒன்றுக்கொன்று இயைந்தும் அதே சமயம் முரண்பட்டும் உள்ளது தெரிகிறதா? ஒவ்வொரு படத்தை வைத்தும் ஒரு கதை எழுதலாம் அல்லவா? மலையும் சாலையும் அழகாகத் இயைந்திருந்தாலும் மலையில் மனிதனின் கீறல் தானே அந்தச் சாலைகள்? இந்த ஆக்கிரமிப்பின் மெல்லிய எதிர்ப்பாகத் தான் அந்தக் கார் நின்றுவிட்டதோ? அந்தப் பெண் மலையை விடவும் அழகா? அல்லது ஆடவன் தான் மலையை விட வலிமையானவனா? காரில் செல்லும் பணக்கார மனிதர்களைப் பேருந்தில் செல்லும் நடுத்தர, ஏழை மக்கள் புறக்கணிப்பது வாழ்க்கையில் இயல்பா, முரணா? எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்த அருவி தன் வழியில் இழிந்து சாலையைக் கடந்து விழுகிறது. மலையோ காட்டுச் செடிகளோ ஒன்றையொன்று சார்ந்திருக்கிறதா? ஒன்றில்லாமல் ஒன்று இருக்க முடியாதா? இருந்தும் அந்தச் செடிகள் மலையின் காவியுடன் இயைந்து வெண்பூக்களில் தன்னியல்பாகச் சிரிக்கிறது. இறுதியாக, இந்தப் படங்கள் எல்லாம் காலம் எனும் சட்டத்துக்குள் அடக்கம் என்பதை நினைவுறுத்துவது போல் ஆதவன் தன் கிரணங்களால் ஒளியையும் நிழலையும் பொழிகிறான்.
இத்தனை படங்களில் எந்தப் படத்தைப் பற்றி உங்கள் கதை அமைந்தாலும் மற்றத் தனிப் படங்கள் யாவும் கதையின் ஒருமைக்கும் ஓட்டத்திற்கும் துணை நிற்க, எல்லாம் ஒரு சட்டத்துக்குள் அடங்குகிறது அல்லவா? அந்தக் கதிரவனும் காலமும் கூடக் கதையின் சட்டத்துக்குள் கட்டுப்பட்டே இயங்கும் அல்லவா?
ஒரு சிறுகதை சில கதைமாந்தர்களைப் பற்றிக்கொண்டு நகர்கிறது. கதையில் வருணணைகளும் நிகழ்ச்சிகளும் காலங்களும் விவரிக்கப் படுகின்றன. ஏதாவது ஒரு மாந்தரையோ நிகழ்ச்சியையோ வருணணையையோ அல்லது காலக் குறிப்பையோ தனியாகப் பார்த்தால் அவை தனித்தனிப் படங்களாக மனதில் விரியும். ஆயினும் இவற்றில் எந்தப் படமும் தனியாக முழுமை பெறுவதில்லை. இவையெல்லாம் ஆசிரியர் சிறுகதையாக அமைத்த சட்டத்துக்குள் பொருந்தி இசைந்திருக்கும் போதுதான் கதையின் பெரிய படம் கண்ணுக்குத் தெரிந்து நெஞ்சை நிறைக்கவோ நெகிழ்விக்கவோ செய்கிறது.
ஓர் ஓவியன் அளவான வண்ணக் கோவைகளில் தன் படத்தில் உள்ள உப-படங்களை வரைவது போலக் கதாசிரியர் தன் கதையில் கூறுகளாக விளங்கும் சொற்சித்திரங்களை இணைத்து இயைத்துக் கதையின் குரலை இசைக்கிறார். அந்தச் சொற்சித்திரங்களில் ஏதேனும் ஒன்று தூக்கலாக, நிரடாக இருந்தால் கதையின் ஸ்வரத்தில் பிசிறு தட்டிவிடுகிறது. கீழ்வரும் கதைகளின் கூறுகளை ஆராய்ந்து அவை எவ்வாறு கதையின் சட்டத்துக்குள் ஒரே படமாகப் பொருந்துகின்றன என்று அறிந்துகொள்ளவும்.
1. ந.பிச்சமூர்த்தி: பலூன் பைத்தியம்
இந்தக் கதையில் ஆசிரியர் ’குழந்தைகளுக்கு ஏன் திரும்பத் திரும்ப பலூன் மேல் ஆசை?’ என்ற கேள்வியை ஆராய்கிறார். பலூன்களின் வண்ணங்கள் என்றால் பூக்களில் கூட எத்தனை வண்ணங்கள் இருக்கின்றன? சூரியன் மறையும் மாலை வண்ண ஜாலத்துக்கு ஈடாக மனதை வேறொன்று நிறைக்க முடியுமா? பலூன்களின் மென்மை, வண்ணம், காற்றில் மிதக்கும் திறன் போன்ற வசீகரக் கூறுகளை ஆராய்ந்து ஆசிரியர் ஒரு முடிவுக்கு வருகிறார். முடிவைக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். கதையின் சட்டத்தில் தனிப் படங்களாக மனதில் வடிவெடுக்கும் குழந்தைகள், அவர்களது அன்னையர்கள், பலூன்கள், பூக்கள், சூரிய சந்திரன் போன்ற பிம்பங்கள் கதைச் சட்டத்துக்குள் எப்படி இணைந்து இசைகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
2. விந்தன்: மறுமணம்
சமீபத்தில் மனைவியை இழந்து வருந்தும் கணவன் - அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் - வயதான தாயார் - சமையற்காரர் - குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள மனைவியின் தோழியான எதிர்வீட்டுப் பெண், அவளது வயதான தாயார்...
இவர்களை வைத்து ஆசிரியர் விந்தன் ஓர் அழகான சிறுகதை பின்னி அதற்கு ஒரு முத்தாய்ப்பான முடிவையும் தருகிறார்.
மற்ற உபாயங்கள் பற்றி வரும் பதிவுகளில்...
*****
ஒரு சிறுகதையின் கதையைப் பல உபாயங்கள் மூலம் சொல்லலாம். கதை சொல்ல உதவும் உபாயங்களில் சில: கதைச் சட்டம் (framing), நாட்குறிப்புகள் (diary entries), கடிதங்கள், கதைக்குள் கதை, திரட்டு (collage), நிரலில்லாக் கதை (non-linear plot), அரைகுறைக்கதை (anti-story), மற்றும் கவிதை வடிவக் கதை (lyricism).
நாவலில் இத்தகைய உபாயங்கள் பலவற்றை இணைத்து எழுதலாம். சிறுகதையில் அதன் வடிவமும் ஒருமையும் சரியாக வர ஒன்றிரண்டு உபாயங்களுக்கு மேல் பயன்படுத்த இயலாது.
1. கதைச் சட்டம்
சட்டம் போட்ட இயற்கை ஓவியப் படம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். காவி வண்ணத்தில் ஒரு பெரிய மலையின் பாறைச் சுவர். சுவரையொட்டி ஓடும் நீண்ட சாலை இருபுறமும் வளைந்து ஒரு கொடி போல மலையைப் பற்றி மேலேறுகிறது. சாலையின் திருப்பத்தில் வெள்ளிக் கோடாக இழியும் ஒரு சின்ன அருவியின் நீர்வீச்சில் சாலை அந்தப் பகுதியில் ஈரமாகத் தெரிகிறது. சாலையில் ஒரு கார் செயலிழந்து நின்றிருக்க அருகில் செய்வதறியாது நிற்கும் ஒரு பெண். கார்ச் சக்கரத்தின் அருகில் அமர்ந்து நோட்டமிடும் ஒரு ஆடவன். இவர்களைக் கண்டுகொள்ளாமல் ஒரு பேருந்து தாண்டிச் செல்கிறது. மலைச் சுவர் ஓரத்தில் வண்டி நின்றிருக்க எதிர்ப்புறம் அழகான பள்ளத்தாக்கை வெறித்தவண்ணம் அந்தப் பெண் நிற்கிறாள். பாறைச் சுவரில் சிறு செடிகள் முளைத்திருக்க, சாலையின் எதிர்ப்புறத்தில் காப்புத் தண்டவாளங்களுக்குக் கீழுள்ள நிலத்தில் வளர்ந்துள்ள காட்டுச் செடிகளில் பளீரென்று வெண்ணிறப் பூக்கள். சாலையும் சரிவும் முழுவதும் நிழலாகவும் பள்ளத்தாக்கில் இளம் வெய்யிலாகவும் இருப்பதில் அது ஒரு பின் மாலை நேரம் என்று தெரிகிறது.
மேலுள்ள படத்தில் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப் பறக்கக் கதைகள் தெரிகின்றனவா? சட்டம் போட்ட இந்தப் படத்துக்குள் எத்தனை படங்கள்! அவை யாவும் ஒன்றுக்கொன்று இயைந்தும் அதே சமயம் முரண்பட்டும் உள்ளது தெரிகிறதா? ஒவ்வொரு படத்தை வைத்தும் ஒரு கதை எழுதலாம் அல்லவா? மலையும் சாலையும் அழகாகத் இயைந்திருந்தாலும் மலையில் மனிதனின் கீறல் தானே அந்தச் சாலைகள்? இந்த ஆக்கிரமிப்பின் மெல்லிய எதிர்ப்பாகத் தான் அந்தக் கார் நின்றுவிட்டதோ? அந்தப் பெண் மலையை விடவும் அழகா? அல்லது ஆடவன் தான் மலையை விட வலிமையானவனா? காரில் செல்லும் பணக்கார மனிதர்களைப் பேருந்தில் செல்லும் நடுத்தர, ஏழை மக்கள் புறக்கணிப்பது வாழ்க்கையில் இயல்பா, முரணா? எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்த அருவி தன் வழியில் இழிந்து சாலையைக் கடந்து விழுகிறது. மலையோ காட்டுச் செடிகளோ ஒன்றையொன்று சார்ந்திருக்கிறதா? ஒன்றில்லாமல் ஒன்று இருக்க முடியாதா? இருந்தும் அந்தச் செடிகள் மலையின் காவியுடன் இயைந்து வெண்பூக்களில் தன்னியல்பாகச் சிரிக்கிறது. இறுதியாக, இந்தப் படங்கள் எல்லாம் காலம் எனும் சட்டத்துக்குள் அடக்கம் என்பதை நினைவுறுத்துவது போல் ஆதவன் தன் கிரணங்களால் ஒளியையும் நிழலையும் பொழிகிறான்.
இத்தனை படங்களில் எந்தப் படத்தைப் பற்றி உங்கள் கதை அமைந்தாலும் மற்றத் தனிப் படங்கள் யாவும் கதையின் ஒருமைக்கும் ஓட்டத்திற்கும் துணை நிற்க, எல்லாம் ஒரு சட்டத்துக்குள் அடங்குகிறது அல்லவா? அந்தக் கதிரவனும் காலமும் கூடக் கதையின் சட்டத்துக்குள் கட்டுப்பட்டே இயங்கும் அல்லவா?
ஒரு சிறுகதை சில கதைமாந்தர்களைப் பற்றிக்கொண்டு நகர்கிறது. கதையில் வருணணைகளும் நிகழ்ச்சிகளும் காலங்களும் விவரிக்கப் படுகின்றன. ஏதாவது ஒரு மாந்தரையோ நிகழ்ச்சியையோ வருணணையையோ அல்லது காலக் குறிப்பையோ தனியாகப் பார்த்தால் அவை தனித்தனிப் படங்களாக மனதில் விரியும். ஆயினும் இவற்றில் எந்தப் படமும் தனியாக முழுமை பெறுவதில்லை. இவையெல்லாம் ஆசிரியர் சிறுகதையாக அமைத்த சட்டத்துக்குள் பொருந்தி இசைந்திருக்கும் போதுதான் கதையின் பெரிய படம் கண்ணுக்குத் தெரிந்து நெஞ்சை நிறைக்கவோ நெகிழ்விக்கவோ செய்கிறது.
ஓர் ஓவியன் அளவான வண்ணக் கோவைகளில் தன் படத்தில் உள்ள உப-படங்களை வரைவது போலக் கதாசிரியர் தன் கதையில் கூறுகளாக விளங்கும் சொற்சித்திரங்களை இணைத்து இயைத்துக் கதையின் குரலை இசைக்கிறார். அந்தச் சொற்சித்திரங்களில் ஏதேனும் ஒன்று தூக்கலாக, நிரடாக இருந்தால் கதையின் ஸ்வரத்தில் பிசிறு தட்டிவிடுகிறது. கீழ்வரும் கதைகளின் கூறுகளை ஆராய்ந்து அவை எவ்வாறு கதையின் சட்டத்துக்குள் ஒரே படமாகப் பொருந்துகின்றன என்று அறிந்துகொள்ளவும்.
1. ந.பிச்சமூர்த்தி: பலூன் பைத்தியம்
இந்தக் கதையில் ஆசிரியர் ’குழந்தைகளுக்கு ஏன் திரும்பத் திரும்ப பலூன் மேல் ஆசை?’ என்ற கேள்வியை ஆராய்கிறார். பலூன்களின் வண்ணங்கள் என்றால் பூக்களில் கூட எத்தனை வண்ணங்கள் இருக்கின்றன? சூரியன் மறையும் மாலை வண்ண ஜாலத்துக்கு ஈடாக மனதை வேறொன்று நிறைக்க முடியுமா? பலூன்களின் மென்மை, வண்ணம், காற்றில் மிதக்கும் திறன் போன்ற வசீகரக் கூறுகளை ஆராய்ந்து ஆசிரியர் ஒரு முடிவுக்கு வருகிறார். முடிவைக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். கதையின் சட்டத்தில் தனிப் படங்களாக மனதில் வடிவெடுக்கும் குழந்தைகள், அவர்களது அன்னையர்கள், பலூன்கள், பூக்கள், சூரிய சந்திரன் போன்ற பிம்பங்கள் கதைச் சட்டத்துக்குள் எப்படி இணைந்து இசைகின்றன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
2. விந்தன்: மறுமணம்
சமீபத்தில் மனைவியை இழந்து வருந்தும் கணவன் - அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் - வயதான தாயார் - சமையற்காரர் - குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள மனைவியின் தோழியான எதிர்வீட்டுப் பெண், அவளது வயதான தாயார்...
இவர்களை வைத்து ஆசிரியர் விந்தன் ஓர் அழகான சிறுகதை பின்னி அதற்கு ஒரு முத்தாய்ப்பான முடிவையும் தருகிறார்.
மற்ற உபாயங்கள் பற்றி வரும் பதிவுகளில்...
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: சிறுகதை உத்திகள்
சிறுதை உத்திகள்: கதை சொல்லும் உபாயங்கள்
2. நாட்குறிப்புகள்
நாட்குறிப்புகள் மூலம் கதை சொல்லும் போது எது உண்மையில் நடந்தது, எது கதைமாந்தர் மனதில் நடந்தது என்று வாசகர் தெளிவாக அறியும் படியாக எழுதுதல் வேண்டும். இதில் குழப்பம் இருக்குமானால் அது ஆசிரியர் வேண்டுமென்று அமைத்ததாக இருக்கவேண்டும்.
புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் நாட்குறிப்புகள் மூலம் கதை சொன்னதாக அவசரத் தேடலில் கிடைக்கவில்லை. அப்படி ஏதேனும் கதைகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடலாம்.
1. எனினும், உதகை சத்யன் என்பவர் எழுதிய "’குண்டு’ குமாரின் டயரி" என்னும் கதையில் இந்த உபாயம் பயன்படுத்தப் படுகிறது:
கதையிலிருந்து ஓரிரு மேற்கோள்கள் கீழே.
10-07-2010
இன்று பள்ளித் தொடக்க விழா. விழா முடிந்ததும் என் நண்பர்கள் என்னைச் சுற்றிக்கொண்டனர். ‘குண்டு… குண்டு… குண்டு குமார்் எனக் கை தட்டி என்னைச் சுற்றிக் கூத்தடித்தார்கள். ‘கத்திரிக்காய்,,, கத்திரிக்காய்,,, குண்டு கத்திரிக்கா,,,, எந்த கடையில நீ அரிசி வாங்கறே?் எனப் பாடி, என்னைக் கேலி செய்தார்கள், நான் அழுதுவிட்டேன்.
...
05-09-2010
அம்மாவைக் கட்டாயப்படுத்தி, இன்று டாக்டரிடம் சென்றேன். டாக்டர் என்னைப் பற்றி முழுதாக விசாரித்தார். என் பழக்க வழக்கங்கள், சாப்பிடும் உணவு… என்று பல்வேறு விவரங்களைக் கேட்டார். கடைசியாக அவர் எனக்கு எந்த மருந்தும் தேவையில்லை, தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி ஏதாவது செய் என்று சொன்னார். கட்டாயம் நான் தினமும் ஸ்நாக்சுக்குச் சாப்பிடும் பிசாவைத் தவிர்க்கச் சொன்னார்.
2. நாட்குறிப்புகளைக் கதையில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம். இந்தக் கதையில் வரும் நாட்குறிப்புகள் நிகழ்த்தும் மனமாற்றங்கள் அற்புதம்!
ஆலந்தூர் மன்னனின் ’யாதுமாகி...’ சிறுகதையில் ஒரு டயரியே கதையாகவும் கதையே டயரியாகவும் இணைந்து, இழைந்து இரும்பைப் பொன்னாக்குகிறது. கதைசொலல், காட்சிகள், கதைமாந்தர் குணங்கள், கதையின் நடை, களன், காலம் என்று எல்லாக் கூறுகளிலும் சிறந்ததாக விளங்கும் இந்தச் சிறுகதை, கதையெழுத விழையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒன்று.
கதையிலிருந்து ஒரு சின்ன ’சாம்பிள்’:
நான் ஒரு டிவி தொடர் தயாரிப்பாளர். எந்த டிவி என்பதைச் சொன்னால் இந்தக் கதையைப் படிப்பதை நீங்கள் நிறுத்திவிடக்கூடும். அதைவிட எந்தத் தொடர் என்று சொன்னால் சர்வ நிச்சயமாக நிறுத்திவிட்டு உடனடியாக ஆசிரியருக்கு நீங்கள் கடிதமும் எழுதக்கூடும் ’ஏன் இவனையெல்லாம் இங்கே அனுமதிக்கிறீர்கள்?’ என்று. சுருக்கமாக இந்தியா முழுக்க சாமியார்களைக் குறித்து, அவர்களைச் சுற்றி பின்னப்ப்ட்ட கதைகளின் பின்னால் இருக்கும் மர்மங்களை பகுத்தறிவுடன் அலசி அளிக்கும் தொடரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் நான் ஒரு முக்கியமான பாகம். நான்தான் சாமியார்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் குறித்த நம்பிக்கைகளை அலசுவேன். அதை எப்படிக் காட்டுவது என்பதைத் தீர்மானிப்பேன். பிறகு அந்த நம்பிக்கைகளை மெதுவாக உடைப்பேன். கஞ்சா அடிக்கும் சாமியார், பிணம் சாப்பிடும் சாமியார், தண்ணி அடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார் என்று வகை வகையான சாமியார்களையெல்லாம் நாங்கள் காட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்.
3. ரமணியின் ’அவன் அவள்’ சிறுகதையின் முடிவில் இந்த உத்தி கதைமாந்தரின் குணத்தைக் குறிப்பாகச் சொல்லப் பயன்படுகிறது.
அட! டயரிகூட எழுதுகிறாளா என்ன?
கீதாவின் டயரி அவள் ஊருக்குச் சென்ற சனிக்கிழமையுடன் நின்றிருந்தது. எடுத்துச்செல்ல மறந்துவிட்டாள், பாவம் என்றுணர்ந்து ஆவலுடன் பக்கங்களைப் புரட்டியபோது கண்கள் பனித்தன.
ஜனவரி 5, சனி.
அன்று நூலகத்தில் தூங்கியது தப்புத்தான். மிகவும் கோபித்துக் கொண்டார். தவறை உணர்ந்தாலும் மன்னிப்புக்கேட்க மனம் சண்டித்தனம் செய்கிறது. அவர்மீதும் தவறு இருக்கிறது. நான் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமோ?
ஜனவரி 6, ஞாயிறு.
வரவர எங்களுக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை மூள்கிறது. ஆஃபீஸிலிருந்து பெரும்பாலும் லேட்டாகவே வருகிறார். இன்றுகூட என்ன ஆஃபீஸ்? கேட்டால் கோபம் வருகிறது. லீவு நாட்களில் நண்பர்கள் படையெடுப்பு. எனக்கு எப்போதும் அடுப்புத்தான். இவருக்கு செஸ், புத்தகங்கள் இருந்தால்போதும், நான்கூட அப்புறம்தான். எனக்கோ அவர் சுவைகளில் நாட்டம் இல்லை. பொங்கல் கழிந்ததும் கொஞ்சம் ஊருக்குப் போய்வந்தால் தேவலாம்.
*****
2. நாட்குறிப்புகள்
நாட்குறிப்புகள் மூலம் கதை சொல்லும் போது எது உண்மையில் நடந்தது, எது கதைமாந்தர் மனதில் நடந்தது என்று வாசகர் தெளிவாக அறியும் படியாக எழுதுதல் வேண்டும். இதில் குழப்பம் இருக்குமானால் அது ஆசிரியர் வேண்டுமென்று அமைத்ததாக இருக்கவேண்டும்.
புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் நாட்குறிப்புகள் மூலம் கதை சொன்னதாக அவசரத் தேடலில் கிடைக்கவில்லை. அப்படி ஏதேனும் கதைகள் இருந்தால் வாசகர்கள் குறிப்பிடலாம்.
1. எனினும், உதகை சத்யன் என்பவர் எழுதிய "’குண்டு’ குமாரின் டயரி" என்னும் கதையில் இந்த உபாயம் பயன்படுத்தப் படுகிறது:
கதையிலிருந்து ஓரிரு மேற்கோள்கள் கீழே.
10-07-2010
இன்று பள்ளித் தொடக்க விழா. விழா முடிந்ததும் என் நண்பர்கள் என்னைச் சுற்றிக்கொண்டனர். ‘குண்டு… குண்டு… குண்டு குமார்் எனக் கை தட்டி என்னைச் சுற்றிக் கூத்தடித்தார்கள். ‘கத்திரிக்காய்,,, கத்திரிக்காய்,,, குண்டு கத்திரிக்கா,,,, எந்த கடையில நீ அரிசி வாங்கறே?் எனப் பாடி, என்னைக் கேலி செய்தார்கள், நான் அழுதுவிட்டேன்.
...
05-09-2010
அம்மாவைக் கட்டாயப்படுத்தி, இன்று டாக்டரிடம் சென்றேன். டாக்டர் என்னைப் பற்றி முழுதாக விசாரித்தார். என் பழக்க வழக்கங்கள், சாப்பிடும் உணவு… என்று பல்வேறு விவரங்களைக் கேட்டார். கடைசியாக அவர் எனக்கு எந்த மருந்தும் தேவையில்லை, தினமும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி ஏதாவது செய் என்று சொன்னார். கட்டாயம் நான் தினமும் ஸ்நாக்சுக்குச் சாப்பிடும் பிசாவைத் தவிர்க்கச் சொன்னார்.
2. நாட்குறிப்புகளைக் கதையில் ஒரு பகுதியாகப் பயன்படுத்தலாம். இந்தக் கதையில் வரும் நாட்குறிப்புகள் நிகழ்த்தும் மனமாற்றங்கள் அற்புதம்!
ஆலந்தூர் மன்னனின் ’யாதுமாகி...’ சிறுகதையில் ஒரு டயரியே கதையாகவும் கதையே டயரியாகவும் இணைந்து, இழைந்து இரும்பைப் பொன்னாக்குகிறது. கதைசொலல், காட்சிகள், கதைமாந்தர் குணங்கள், கதையின் நடை, களன், காலம் என்று எல்லாக் கூறுகளிலும் சிறந்ததாக விளங்கும் இந்தச் சிறுகதை, கதையெழுத விழையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒன்று.
கதையிலிருந்து ஒரு சின்ன ’சாம்பிள்’:
நான் ஒரு டிவி தொடர் தயாரிப்பாளர். எந்த டிவி என்பதைச் சொன்னால் இந்தக் கதையைப் படிப்பதை நீங்கள் நிறுத்திவிடக்கூடும். அதைவிட எந்தத் தொடர் என்று சொன்னால் சர்வ நிச்சயமாக நிறுத்திவிட்டு உடனடியாக ஆசிரியருக்கு நீங்கள் கடிதமும் எழுதக்கூடும் ’ஏன் இவனையெல்லாம் இங்கே அனுமதிக்கிறீர்கள்?’ என்று. சுருக்கமாக இந்தியா முழுக்க சாமியார்களைக் குறித்து, அவர்களைச் சுற்றி பின்னப்ப்ட்ட கதைகளின் பின்னால் இருக்கும் மர்மங்களை பகுத்தறிவுடன் அலசி அளிக்கும் தொடரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதில் நான் ஒரு முக்கியமான பாகம். நான்தான் சாமியார்களைக் கண்டுபிடிப்பேன். அவர்கள் குறித்த நம்பிக்கைகளை அலசுவேன். அதை எப்படிக் காட்டுவது என்பதைத் தீர்மானிப்பேன். பிறகு அந்த நம்பிக்கைகளை மெதுவாக உடைப்பேன். கஞ்சா அடிக்கும் சாமியார், பிணம் சாப்பிடும் சாமியார், தண்ணி அடித்துவிட்டு குறிசொல்லும் சாமியார் என்று வகை வகையான சாமியார்களையெல்லாம் நாங்கள் காட்டியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டில் ‘டண் டணா டண்’ இணைப்பு இல்லை என்று பொருள்.
3. ரமணியின் ’அவன் அவள்’ சிறுகதையின் முடிவில் இந்த உத்தி கதைமாந்தரின் குணத்தைக் குறிப்பாகச் சொல்லப் பயன்படுகிறது.
அட! டயரிகூட எழுதுகிறாளா என்ன?
கீதாவின் டயரி அவள் ஊருக்குச் சென்ற சனிக்கிழமையுடன் நின்றிருந்தது. எடுத்துச்செல்ல மறந்துவிட்டாள், பாவம் என்றுணர்ந்து ஆவலுடன் பக்கங்களைப் புரட்டியபோது கண்கள் பனித்தன.
ஜனவரி 5, சனி.
அன்று நூலகத்தில் தூங்கியது தப்புத்தான். மிகவும் கோபித்துக் கொண்டார். தவறை உணர்ந்தாலும் மன்னிப்புக்கேட்க மனம் சண்டித்தனம் செய்கிறது. அவர்மீதும் தவறு இருக்கிறது. நான் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாமோ?
ஜனவரி 6, ஞாயிறு.
வரவர எங்களுக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை மூள்கிறது. ஆஃபீஸிலிருந்து பெரும்பாலும் லேட்டாகவே வருகிறார். இன்றுகூட என்ன ஆஃபீஸ்? கேட்டால் கோபம் வருகிறது. லீவு நாட்களில் நண்பர்கள் படையெடுப்பு. எனக்கு எப்போதும் அடுப்புத்தான். இவருக்கு செஸ், புத்தகங்கள் இருந்தால்போதும், நான்கூட அப்புறம்தான். எனக்கோ அவர் சுவைகளில் நாட்டம் இல்லை. பொங்கல் கழிந்ததும் கொஞ்சம் ஊருக்குப் போய்வந்தால் தேவலாம்.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: சிறுகதை உத்திகள்
சிறுதை உத்திகள்
3. கதை சொல்லும் உபாயங்கள்: கடிதங்கள்
மின்-அஞ்சல், மின்-அரட்டை, அலைபேசிக் குறுஞ்செய்தி -- இன்று இவைதான் நம் உறவு, செய்தி மற்றும் கருத்தின் எழுத்துப் பரிமாற்றத்திற்கு இன்றியமையாக் கரணங்கள். இவற்றின் வசதியும் விரைவும் பரப்பும் பெருக்கமும் நம் எல்லார்க்கும் மிகவும் பயன்பட்டாலும், இவற்றின் குறுக்கம் நம் மொழியை, மனதைக் குறுக்கிவிட்டன என்று துணிந்து கூறலாம். முட்டாள்தனமான மின்-அஞ்சல் மொழிநடையே இன்று பலருக்கு இலக்கிய நடையாகிவிட்டது. குரலொலி எழுத்துக்கூறுகள் (phonetical alphabets) மூலம் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி இன்று நம் கவிதை கதை கடிதம் கருத்துகளைத் தட்டெழுதும்போது, கையெழுத்தில் மொழியின் இயல்பான வரிவடிவங்களில் எழுதும்போது வரமுடியாத பிழைகள் மலிந்துவிடுகின்றன. இன்றைய அவசர உலகில் நாளை நம் குழந்தைகள் கையெழுதி மொழி கற்பதை விடுத்துத் தட்டெழுதிக் கற்று எழுத்துகளின் வரிவடிவங்களையே மறந்துவிடுவார்களோ என்றுகூட அச்சம் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அன்றைய வாழ்வில் கையெழுத்துக் கடிதங்களின் பங்கினை இன்று நம்மில் பலர் அறியாதிருப்பது வியப்பல்ல. காகிதமும் மசியும் பேனாவும் கொண்டு எழுதிய கையெழுத்துக் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்குத் தான் அவற்றின் அருமையும் பெருமையும் இலக்கியமும் புரியும்.
கடிதங்களில் கதை சொல்லும் போது இருவரின் உரையாடலாக அமைத்து அவர்களின் குணத்தையும் கதையையும் விவரிக்கலாம். அல்லது ஒருவர் தன் மனதை வெளியிடுவதாக அமைத்துத் தன்மைப் பார்வையில் எழுதலாம். கடிதங்கள் கதையின் திருப்புமுனையாக அமையலாம், கதையை நகர்த்தலாம், முழுக்கதையையும் கூடச் சொல்லலாம்.
1. ஆர்.சூடாமணி அவர்கள் தன் கதை ’பூமாலையில்’ ஒரு கடிதம் மூலம் சிறுகதைக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறார். கதையை முன்னிலைப் பார்வையில் சொல்வது மட்டுமல்லாமல், கதையின் வரும் சம்பவங்களையும் செயற்கையாகத் தெரியாமல் அந்தக் கடிதத்திலேயே நுழைத்து விடுகிறார். கதையின் செய்தியும் முடிவும் அலாதி. கதையின் முடிவு பற்றி வாசகர்கள் அவசியம் பின்னூட்டம் இடுவார்களாக.
அன்புள்ள ரம்யா,
உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக.
கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ”எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ” என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை...
*****
2. குரு அரவிந்தன்: ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
மகளின் கடிதம் கண்டு தந்தை அவள் எதிர்காலம் குறித்து முக்கியமானதொரு முடிவினை எட்டுகிறார்.
மனைவிக்கும் அவருக்கும் மனத்தாபம் முற்றி மனைவி விவாகரத்துக் கோரும் போது கணவர் அவர்களது பெண்ணின் எதிர்காலம் குறித்துக் கேட்கிறார். மனைவியே அது அவர் பெண்ணல்ல என்று கூறி அதை நிரூபித்துக்காட்டுவதற்காக மகளை மரபணு (DNA) சோதனைக்கு உட்படுத்துகிறாள். வெளியூரில் படிக்கும் மகளிடம் இருந்து தந்தைக்கு ஒரு கடிதமும் அந்த மரபணு அறிக்கையும் ஒரே தபாலில் வருகிறது. தந்தை கடிதத்தை முதலில் பிரித்துப் படிக்கிறார்...
*****
3. புதுமைப்பித்தன்: கடிதம்
’பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்’ என்று அந்த எழுத்தாளர் கனவு காணவில்லை; அதே சமயம் பேனாவை வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கவும் அவர் நினைக்கவில்லை. நண்பர்கள் புகழ்ந்தாலும் சமூகத்தில் நூற்றில் ஒருவராக அவரை மதித்ததால் அவருக்கு எழுதுவதில் சலிப்பு ஏற்படுகிறது. நல்ல கதையை ரஸிக்க எவரும் இல்லையென்றால் ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வியால் அவரது இப்போதைய சிறுகதை பாதியில் நிற்கிறது. இந்த சமயத்தில் அவர் கதையொன்றைப் புகழ்ந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது...
*****
4. அண்ணாதுரை: மூன்று கடிதங்கள்
Typical தி.க. பிரசாரக் கதையாக இருந்தாலும் இந்தச் சிறுகதையில் உள்ள மூன்று கடிதங்கள் ஒரு சுவாரசியமான திருப்பத்தைத் தருகின்றன!
*****
5. சுஜாதா: மூன்று கடிதங்கள்
இலக்கியம் படைப்பதில் சுஜாதாவுக்குப் சில முகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. எனினும் மிகப் பெரும்பான்மையான அவரது சிறுகதைகளிலும் புதினங்களிலும் வணிக உத்தியே தலைதூக்கி நிற்கிறது. இந்தக் கதையில் வரும் மூன்று கடிதங்களும் இது போலத்தான். இதில் இவருக்கு ஒரு பெருமை வேறு!
*****
கதைக்குள் கதை உபாயம் பற்றி அடுத்த பதிவில்...
3. கதை சொல்லும் உபாயங்கள்: கடிதங்கள்
மின்-அஞ்சல், மின்-அரட்டை, அலைபேசிக் குறுஞ்செய்தி -- இன்று இவைதான் நம் உறவு, செய்தி மற்றும் கருத்தின் எழுத்துப் பரிமாற்றத்திற்கு இன்றியமையாக் கரணங்கள். இவற்றின் வசதியும் விரைவும் பரப்பும் பெருக்கமும் நம் எல்லார்க்கும் மிகவும் பயன்பட்டாலும், இவற்றின் குறுக்கம் நம் மொழியை, மனதைக் குறுக்கிவிட்டன என்று துணிந்து கூறலாம். முட்டாள்தனமான மின்-அஞ்சல் மொழிநடையே இன்று பலருக்கு இலக்கிய நடையாகிவிட்டது. குரலொலி எழுத்துக்கூறுகள் (phonetical alphabets) மூலம் ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி இன்று நம் கவிதை கதை கடிதம் கருத்துகளைத் தட்டெழுதும்போது, கையெழுத்தில் மொழியின் இயல்பான வரிவடிவங்களில் எழுதும்போது வரமுடியாத பிழைகள் மலிந்துவிடுகின்றன. இன்றைய அவசர உலகில் நாளை நம் குழந்தைகள் கையெழுதி மொழி கற்பதை விடுத்துத் தட்டெழுதிக் கற்று எழுத்துகளின் வரிவடிவங்களையே மறந்துவிடுவார்களோ என்றுகூட அச்சம் ஏற்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அன்றைய வாழ்வில் கையெழுத்துக் கடிதங்களின் பங்கினை இன்று நம்மில் பலர் அறியாதிருப்பது வியப்பல்ல. காகிதமும் மசியும் பேனாவும் கொண்டு எழுதிய கையெழுத்துக் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டவர்களுக்குத் தான் அவற்றின் அருமையும் பெருமையும் இலக்கியமும் புரியும்.
கடிதங்களில் கதை சொல்லும் போது இருவரின் உரையாடலாக அமைத்து அவர்களின் குணத்தையும் கதையையும் விவரிக்கலாம். அல்லது ஒருவர் தன் மனதை வெளியிடுவதாக அமைத்துத் தன்மைப் பார்வையில் எழுதலாம். கடிதங்கள் கதையின் திருப்புமுனையாக அமையலாம், கதையை நகர்த்தலாம், முழுக்கதையையும் கூடச் சொல்லலாம்.
1. ஆர்.சூடாமணி அவர்கள் தன் கதை ’பூமாலையில்’ ஒரு கடிதம் மூலம் சிறுகதைக்குப் புதிய பரிமாணத்தைத் தருகிறார். கதையை முன்னிலைப் பார்வையில் சொல்வது மட்டுமல்லாமல், கதையின் வரும் சம்பவங்களையும் செயற்கையாகத் தெரியாமல் அந்தக் கடிதத்திலேயே நுழைத்து விடுகிறார். கதையின் செய்தியும் முடிவும் அலாதி. கதையின் முடிவு பற்றி வாசகர்கள் அவசியம் பின்னூட்டம் இடுவார்களாக.
அன்புள்ள ரம்யா,
உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாயே என்பதற்காக இல்லை. இப்படி இருக்கிறாயே என்பதற்காக.
கடைசியில் உன் துக்கம்தான் என்ன? சிறு வயதில் உன் சித்தி உன்னைக் கொடுமைப்படுத்தினாள். உன் அப்பா தனியாய் உன்னிடம் வந்து ”எனக்காகப் பொறுத்துக்கோம்மா ரமி! அப்பாவுக்கு உன்கிட்ட கொள்ளைப் பிரியம். ஆனா சித்தியை நான் கண்டிக்க முடியாது. அப்புறம் வீட்ல பிரளயம் தான் வரும். எனக்காகப் பொறுத்துக்கோ” என்று சொல்வாரே தவிர உன்னைச் சித்தியின் கொடுமையிலிருந்து காப்பாற்ற எதுவும் செய்யவில்லை...
*****
2. குரு அரவிந்தன்: ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
மகளின் கடிதம் கண்டு தந்தை அவள் எதிர்காலம் குறித்து முக்கியமானதொரு முடிவினை எட்டுகிறார்.
மனைவிக்கும் அவருக்கும் மனத்தாபம் முற்றி மனைவி விவாகரத்துக் கோரும் போது கணவர் அவர்களது பெண்ணின் எதிர்காலம் குறித்துக் கேட்கிறார். மனைவியே அது அவர் பெண்ணல்ல என்று கூறி அதை நிரூபித்துக்காட்டுவதற்காக மகளை மரபணு (DNA) சோதனைக்கு உட்படுத்துகிறாள். வெளியூரில் படிக்கும் மகளிடம் இருந்து தந்தைக்கு ஒரு கடிதமும் அந்த மரபணு அறிக்கையும் ஒரே தபாலில் வருகிறது. தந்தை கடிதத்தை முதலில் பிரித்துப் படிக்கிறார்...
*****
3. புதுமைப்பித்தன்: கடிதம்
’பேனாவை வைத்துக்கொண்டு கோனாகிவிடுவோம்’ என்று அந்த எழுத்தாளர் கனவு காணவில்லை; அதே சமயம் பேனாவை வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கவும் அவர் நினைக்கவில்லை. நண்பர்கள் புகழ்ந்தாலும் சமூகத்தில் நூற்றில் ஒருவராக அவரை மதித்ததால் அவருக்கு எழுதுவதில் சலிப்பு ஏற்படுகிறது. நல்ல கதையை ரஸிக்க எவரும் இல்லையென்றால் ஏன் எழுதவேண்டும் என்ற கேள்வியால் அவரது இப்போதைய சிறுகதை பாதியில் நிற்கிறது. இந்த சமயத்தில் அவர் கதையொன்றைப் புகழ்ந்து அவருக்கு ஒரு கடிதம் வருகிறது...
*****
4. அண்ணாதுரை: மூன்று கடிதங்கள்
Typical தி.க. பிரசாரக் கதையாக இருந்தாலும் இந்தச் சிறுகதையில் உள்ள மூன்று கடிதங்கள் ஒரு சுவாரசியமான திருப்பத்தைத் தருகின்றன!
*****
5. சுஜாதா: மூன்று கடிதங்கள்
இலக்கியம் படைப்பதில் சுஜாதாவுக்குப் சில முகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. எனினும் மிகப் பெரும்பான்மையான அவரது சிறுகதைகளிலும் புதினங்களிலும் வணிக உத்தியே தலைதூக்கி நிற்கிறது. இந்தக் கதையில் வரும் மூன்று கடிதங்களும் இது போலத்தான். இதில் இவருக்கு ஒரு பெருமை வேறு!
*****
கதைக்குள் கதை உபாயம் பற்றி அடுத்த பதிவில்...
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: சிறுகதை உத்திகள்
சிறுதை உத்திகள்
4. கதை சொல்லும் உபாயங்கள்: கதைக்குள் கதை
கதைக்குள் கதை என்னும் உபாயம் நம் பஞ்சதந்திரம், புராணங்கள், ராமாயண-மகாபாரத இதிகாசங்கள் போன்ற பழமையான நூல்களில் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படும் உத்தியாகும். கதைக்குள் அமையும் கதை ஒரு துணைக்கதையாகவோ, கிளைக்கதையாகவோ நிகழ்ந்து, மூலக்கதையின் செய்தியை வலியுறுத்துவது, மூலக்கதை மாந்தர் ஒருவரின் தற்போதய நிலையின் பின்னுள்ள கருமவினைகளைக் காட்டுவது, அல்லது வெறுமனே களிப்பூட்டுவது போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றன. இரண்டு கதைகளுக்கும் இடையே ஓர் இணையான போக்கு காணப்பட்டு, துணைக்கதையில் சொல்லும் பொருள் மூலக்கதையில் மறைபொருளாள உள்ள உண்மைகளை வெளிக்கொணரப் பயன்படும்.
சிறுகதையின் வடிவம், ஒருமை போன்ற கூறுகள் சிதைவுறாமல் கதைக்குள் கதை அமைப்பது கடினம். எனினும் இந்த உத்தியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இல்லாமல் இல்லை. நட்ட நடுவில், முடிவுக்குச் சமீபத்தில் ஆரம்பமாகும் சிறுகதையில் ஒரு வெட்டாக முன்கதையை விவரிப்பது வழக்கம். இந்த முன்கதை தன்னளவில் ஓர் தனிக்கதை அல்ல என்பதால் கதைக்குள் கதை ஆகாது என்பதைப் புரிந்துகொள்வோம்.
1. புதுமைப்பித்தன்: கட்டிலை விட்டிறங்காக் கதை
விக்கிரமாதித்த மன்னனின் சிம்மாசனப் படிகளில் வீற்றிருந்த பொம்மைகளில் ஒன்று உரைக்கும் கதைக்குள் கதையாக நையாண்டியுடன் ஆசிரியர் சொல்லும் கதையில் மூட்டைப் பூச்சிகள் கதைமாந்தர்கள்!
2. ரமணி: பெண்மையின் அவலங்கள்
http://www.eegarai.net/887698
கதையின் நாயகியே தன் கதையை ஒரு சிறுகதையாக எழுதும்போது எழுகின்ற கதைக்குள் கதை விழைந்ததும் நிகழ்ந்ததும் விவரிக்கிறது.
3. ரமணி: சார்பு எழுத்துகள்
http://www.eegarai.net/963562
வாழ்வின் யதார்ததைச் சரியாக ஆராயாமல் துணையிழந்த இரண்டு பெற்றோர்கள் ஒன்றை முனைய, அவர்களின் குழந்தைகள் இயல்பான வேறொன்றை முனைகிறார்கள். இரண்டு கதைகள் சந்திக்கும் போது உண்மைகள் புலப்பட்டுப் பார்வை தெளிவடைகிறது.
*****
4. கதை சொல்லும் உபாயங்கள்: கதைக்குள் கதை
கதைக்குள் கதை என்னும் உபாயம் நம் பஞ்சதந்திரம், புராணங்கள், ராமாயண-மகாபாரத இதிகாசங்கள் போன்ற பழமையான நூல்களில் திரும்பத்திரும்பப் பயன்படுத்தப்படும் உத்தியாகும். கதைக்குள் அமையும் கதை ஒரு துணைக்கதையாகவோ, கிளைக்கதையாகவோ நிகழ்ந்து, மூலக்கதையின் செய்தியை வலியுறுத்துவது, மூலக்கதை மாந்தர் ஒருவரின் தற்போதய நிலையின் பின்னுள்ள கருமவினைகளைக் காட்டுவது, அல்லது வெறுமனே களிப்பூட்டுவது போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றன. இரண்டு கதைகளுக்கும் இடையே ஓர் இணையான போக்கு காணப்பட்டு, துணைக்கதையில் சொல்லும் பொருள் மூலக்கதையில் மறைபொருளாள உள்ள உண்மைகளை வெளிக்கொணரப் பயன்படும்.
சிறுகதையின் வடிவம், ஒருமை போன்ற கூறுகள் சிதைவுறாமல் கதைக்குள் கதை அமைப்பது கடினம். எனினும் இந்த உத்தியில் எழுதப்பட்ட சிறுகதைகள் இல்லாமல் இல்லை. நட்ட நடுவில், முடிவுக்குச் சமீபத்தில் ஆரம்பமாகும் சிறுகதையில் ஒரு வெட்டாக முன்கதையை விவரிப்பது வழக்கம். இந்த முன்கதை தன்னளவில் ஓர் தனிக்கதை அல்ல என்பதால் கதைக்குள் கதை ஆகாது என்பதைப் புரிந்துகொள்வோம்.
1. புதுமைப்பித்தன்: கட்டிலை விட்டிறங்காக் கதை
விக்கிரமாதித்த மன்னனின் சிம்மாசனப் படிகளில் வீற்றிருந்த பொம்மைகளில் ஒன்று உரைக்கும் கதைக்குள் கதையாக நையாண்டியுடன் ஆசிரியர் சொல்லும் கதையில் மூட்டைப் பூச்சிகள் கதைமாந்தர்கள்!
2. ரமணி: பெண்மையின் அவலங்கள்
http://www.eegarai.net/887698
கதையின் நாயகியே தன் கதையை ஒரு சிறுகதையாக எழுதும்போது எழுகின்ற கதைக்குள் கதை விழைந்ததும் நிகழ்ந்ததும் விவரிக்கிறது.
3. ரமணி: சார்பு எழுத்துகள்
http://www.eegarai.net/963562
வாழ்வின் யதார்ததைச் சரியாக ஆராயாமல் துணையிழந்த இரண்டு பெற்றோர்கள் ஒன்றை முனைய, அவர்களின் குழந்தைகள் இயல்பான வேறொன்றை முனைகிறார்கள். இரண்டு கதைகள் சந்திக்கும் போது உண்மைகள் புலப்பட்டுப் பார்வை தெளிவடைகிறது.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: சிறுகதை உத்திகள்
ஆறு சொற்களில் ஒரு கதை
புகழ்பெற்ற கதையெழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு முறை ஆறு சொற்களில்
அமையுமாறு தம்மால் ஒரு கதை எழுத முடியும் என்று பந்தயம் கட்டி ஜெயித்தார்.
அந்தக் கதை உலகின் மிகச் சிறிய கதைகளின் முன்னோடி யாகியது:
For sale: baby shoes, never worn
இன்று அறுசொற் கதைகளுக்கென்றே ஒரு வலைதளம் உள்ளது!
http://www.sixwordstories.net/
இந்த வலை தளத்தில் கண்ட சில சுவாரஸ்யமான ’கதைகள்’ கீழே.
01. We’re lying in bed. She’s lying.
02. "Joining the President is his husband..."
03, Strangers. Friends. Best friends. Lovers. Strangers.
04. Torched the haystack. Found the needle.
05. Sorry soldier, shoes sold in pairs.
06. Unwanted boy grows into wanted man.
07. Free rent. Three squares. Maximum Security.
08. The smallest coffins are the heaviest.
07. Smoking my very last cigarette. Again.
08. Should’ve. Could’ve. Would’ve. Didn’t. Didn’t. Didn’t.
09. I’m beside myself; cloning machine works.
10. Underwater collector. Bad lover. Lone shark.
11. Alzheimer’s Advantage: new friends every day!
12. Painfully, he changed 'is' to 'was'.
13. Ex-wife, ex-husband are fine. Kids aren’t.
14. Five armed vampires enter blood bank.
15. Murderous rooster slaughters hens: foul play!
தமிழில் இதுபோல் நான் முயன்றதில் உதித்த சில ’கதைகள்’.
1. மன்னனின் வேட்டையில் சிக்கியது மான். திருமணம் செய்துகொண்டான்.
2. தலைவனும் தலைவியும் ஊடிப் பிரிந்தனர். தோழியைக் காணவில்லை!
3. புலவர் மன்னனைக் கடிந்து பாடினார். மன்னன் பரிசளித்தான்.
4. அண்ணன் செத்தால் திண்ணை காலி. தம்பி முந்திக்கொண்டான்.
5. வைக்கோலை எரித்துத் தேடினர். அரசியின் தங்க ஊசி!
நீங்களும் முயன்று பாருங்களேன்! ஒரே ஒரு நிபந்தனை, ஆறு சொற்களில் ஒரு கதை இருக்கவேண்டும்,
கவிதை அல்ல.
ரமணி, 27/08/2014
*****
புகழ்பெற்ற கதையெழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே ஒரு முறை ஆறு சொற்களில்
அமையுமாறு தம்மால் ஒரு கதை எழுத முடியும் என்று பந்தயம் கட்டி ஜெயித்தார்.
அந்தக் கதை உலகின் மிகச் சிறிய கதைகளின் முன்னோடி யாகியது:
For sale: baby shoes, never worn
இன்று அறுசொற் கதைகளுக்கென்றே ஒரு வலைதளம் உள்ளது!
http://www.sixwordstories.net/
இந்த வலை தளத்தில் கண்ட சில சுவாரஸ்யமான ’கதைகள்’ கீழே.
01. We’re lying in bed. She’s lying.
02. "Joining the President is his husband..."
03, Strangers. Friends. Best friends. Lovers. Strangers.
04. Torched the haystack. Found the needle.
05. Sorry soldier, shoes sold in pairs.
06. Unwanted boy grows into wanted man.
07. Free rent. Three squares. Maximum Security.
08. The smallest coffins are the heaviest.
07. Smoking my very last cigarette. Again.
08. Should’ve. Could’ve. Would’ve. Didn’t. Didn’t. Didn’t.
09. I’m beside myself; cloning machine works.
10. Underwater collector. Bad lover. Lone shark.
11. Alzheimer’s Advantage: new friends every day!
12. Painfully, he changed 'is' to 'was'.
13. Ex-wife, ex-husband are fine. Kids aren’t.
14. Five armed vampires enter blood bank.
15. Murderous rooster slaughters hens: foul play!
தமிழில் இதுபோல் நான் முயன்றதில் உதித்த சில ’கதைகள்’.
1. மன்னனின் வேட்டையில் சிக்கியது மான். திருமணம் செய்துகொண்டான்.
2. தலைவனும் தலைவியும் ஊடிப் பிரிந்தனர். தோழியைக் காணவில்லை!
3. புலவர் மன்னனைக் கடிந்து பாடினார். மன்னன் பரிசளித்தான்.
4. அண்ணன் செத்தால் திண்ணை காலி. தம்பி முந்திக்கொண்டான்.
5. வைக்கோலை எரித்துத் தேடினர். அரசியின் தங்க ஊசி!
நீங்களும் முயன்று பாருங்களேன்! ஒரே ஒரு நிபந்தனை, ஆறு சொற்களில் ஒரு கதை இருக்கவேண்டும்,
கவிதை அல்ல.
ரமணி, 27/08/2014
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Re: சிறுகதை உத்திகள்
பத்திரிகையில் வரும் சிறுகதைகள் அளவில் சுருங்கிவிட்ட இன்னாளில் இது போன்ற கதைகளை
ஆர்வலர்கள் மாதிரியாகக் கொள்ளலாம்.
https://kgjawarlal.wordpress.com/2011/12/14/வந்துவிட்டாள்-ஓடு/
-ரமணி
ஆர்வலர்கள் மாதிரியாகக் கொள்ளலாம்.
https://kgjawarlal.wordpress.com/2011/12/14/வந்துவிட்டாள்-ஓடு/
-ரமணி
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|