ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்குறள்!

3 posters

Go down

குட்டிக்குறள்! Empty குட்டிக்குறள்!

Post by சாமி Sun Mar 24, 2013 11:09 pm

திருக்குறள் ஒன்றே முக்கால் அடிகளில் ஏழு சீர்களில் அமைக்கப்பட்டுள்ளது. ""எல்லோரும் திருக்குறளை குறுகியது என எண்ணினர், அறிஞர் சுகவனம் சிவப்பிரகாசனாரின் உள்ளம் மட்டுமே, அதைப் "பெரியது' என எண்ணியது. அதன் விளைவே குட்டிக்குறள்'' என்று தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் பாராட்டியுள்ளார். திருக்குறளைக் குட்டிக் குறளாக வழங்கியவர் "கிளிக்காட்டு இறை ஒளியினார்' என்று வழங்கப்பட்ட "சுகவனம்' சிவப்பிரகாசனாராவார்.

÷சேலத்திற்கு "சுகவனம்' என்ற பெயருண்டு. சேலத்தில் வசித்த சிவப்பிரகாசர் தன் பெயருக்கு முன்பாக "சுகவனம்' என்பதை சேர்த்து "சுகவனம் சிவப்பிரகாசர்' என்று அழைக்கப்பட்டார். சிறுவர் முதல் முதியோர் வரை எளிதில் உணரும் வகையில், ஒரே வரியில் திருக்குறட் கருத்துகளை வெளியிட விரும்பிய சிவப்பிரகாசனார், ஏழு சீர்களில் இரண்டு வரிகளில் அமைந்துள்ள பாவினை சுருக்கி, நான்கு சீர்களுடன் ஒரே வரியில் கருத்துகள் சிதையா வண்ணம் எழுதி, தமிழ் உலகுக்கு வழங்கியுள்ளார்.

÷சிவப்பிரகாசனாரின் வாழ்நாள் சாதனையாக அவர் வழங்கிய நூல் திருக்குறள் - நூற்பா. திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் அவற்றின் கருத்துகள் எளிதில் பரவும் வகையில் 1330 குட்டிக்குறள்களாக அமைந்ததே இந்நூல். பழத்தைச் சாறு பிழிந்து கொடுப்பதுபோல், திருக்குறள் பழத்தைப் பிழிந்து, குட்டிக்குறளாகிய பழச்சாற்றை வழங்கியுள்ளார்.

÷சென்னையிலிருந்து வெளிவரும் "செந்தமிழ்ச் செல்வி' என்ற இலக்கிய இதழில், குட்டிக்குறளை, 1925-ஆம் ஆண்டில் படித்து மகிழ்ந்த தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், சிவப்பிரகாசனாரைத் தேடிச் சென்று அறிமுகம் செய்து கொண்டார். சிவப்பிரகாசனார் எழுதிய குட்டிக்குறளின் முதல் நூறு பாக்களுக்கு உரையும் எழுதி சிறப்பித்துள்ளார் என்றால், இந்நூலின் மேன்மை எளிதில் விளங்கும். கி.வா.ஜ.வின் உரையைத் தொடர்ந்து, சிவப்பிரகாசனாரின் மகன் மாசிலாமணி, பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக விளங்கிய காலத்திலேயே அறத்துப்பால் முழுவதற்கும் உரை எழுதி நிறைவு செய்து, "அறநூல்' என்ற பெயரில் நூலாக 1958-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இதை, ""மதிப்பிற்கு அப்பாற்பட்ட பொக்கிஷம்'' என்று மனம் நிறைந்து பாராட்டியுள்ளார் மூதறிஞர் ராஜாஜி.

""அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது''

என்ற திருக்குறளை, ""பிற வாழி நீத்தற்கு அறவாழி சேர்'' என்ற குட்டிக் குறளாகச் சுருக்கி எழுதியுள்ளார்.

""குழலும் யாழும் மழலை முன் குழைவ''
என்ற ஓர் அடியின் திறத்தாலேயே,

""குழலினிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்''

என்ற திருக்குறளை விளங்க வைத்துள்ளார்.

÷இவ்விதம் திருக்குறளின் சாரமாக ஒவ்வொரு குறளுக்கும் உயர்ந்த வகையில் "குட்டிக்குறளை' வடித்துள்ளார் சிவப்பிரகாசர்.

÷குருகுலம் நிறுவி, அழகரடிகளாராகத் திகழ்ந்த இளவழகனார், இந்நூலின் முதல் நூற்பாவிற்கு மட்டும் தனி விளக்கம் எழுதிப் பேருரையாக வழங்கியுள்ளார். இவரைத் திரு.வி.க. பாராட்டியதன் காரணமாக "இளந்திருவள்ளுவர்' என்ற புதுபெயர் இவருக்குத் தோன்றியது.

÷1961-இல் இந்தக் குட்டிக்குறள் சேலம் செவ்வைத் திருக்குறட் கழக வெளியீடாக வெளிவந்தது. இதன் ஒரு பிரதிகூடக் கிடைக்காத நிலையில், கோவை கம்பன் கழகத் தலைவர் ஜி.கே.சுந்தரம் 1992-ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பித்து இலவச வெளியீடாக வெளியிட்டார். தமிழ் இலக்கிய உலகிற்குத் தோன்றாத் துணையாக நின்ற சுகவனம் சிவப்பிரகாசனார் குட்டிக்குறளைப் படிப்போம்; திருக்குறளைப் போற்றுவோம்.

புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி nandri -dinamani


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குட்டிக்குறள்! Empty Re: குட்டிக்குறள்!

Post by mbalasaravanan Mon Mar 25, 2013 12:25 pm

நல்ல பகிர்வு நண்பரே
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

குட்டிக்குறள்! Empty Re: குட்டிக்குறள்!

Post by Muthumohamed Mon Mar 25, 2013 12:30 pm

குட்டி குறள் விளக்கம் சூப்பருங்க



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குட்டிக்குறள்! Empty Re: குட்டிக்குறள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum