புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
7 Posts - 5%
viyasan
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_lcapதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_voting_barதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை...


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 21, 2013 12:48 pm

First topic message reminder :

இன்று தமிழ்...தமிழ் என்று பலர் (நம்மையும் சேர்த்து) முழக்கமிடுவதைக் காண்கிறோம். தமிழ் மொழி என்பது தெய்வமொழி. மற்ற எந்த ஒரு மொழிக்கும் இந்த அடைமொழி கிடையாது. சாத்தூர் சேகரன் என்ற மொழியியல் அறிஞர் கூற்றுப்படி உலகில் இரண்டே மொழிகள்தான். ஒன்று தமிழ். மற்றொன்று திரிந்த தமிழ்.

தனி ஒரு மனிதன் மாறும் போது சமுதாயமும் மாறுகிறது. பெரும் பான்மையான தனி மனிதர்களின் எண்ணமே நம் எதிரே சமுதாயத்தில் பிரதிபலிக்கிறது. நாம் சமுதாயம் மோசமாகிவிட்டது என்று சொல்கிறோம். உண்மையில் நாம்தான் மோசமாகி விட்டோம்.

தமிழ் வாழ்க என்று சொல்லும் தலைவர்கள், கவிஞர்கள், ஆர்வலர்கள்... உண்மையில் தமிழை வாழ வைக்கிறார்களா? அல்லது தமிழால் அவர்கள் வாழ்கிறார்களா?....தேவையில்லை இந்த வாதம் நமக்கு.

மொழி என்ன செய்தது நமக்கு என்பதை விட நாம் என்ன செய்தோம் நம் மொழிக்கு என்று பார்க்கலாம். இதற்காக மாநாடு, போராட்டம், பந்தா... இவையெல்லாம் செய்யவேண்டியதில்லை. சிறிய உத்திகளைக் கையாண்டாலே போதும். உறவுகளும் தங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள். தமிழை வளர்ப்போம். தலை நிமிர்ந்து நடப்போம்.

இதுவரை சொல்லிய உத்திகள் :-

1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள்.
ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.
உங்களது குழந்தைகளை இப்போதிலிருந்தே தமிழில் கையொப்பமிடுவதை கற்றுக்கொடுங்கள்.

2. உறவுகளை அழைக்கும்போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப்பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.

3. எதிராளி தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.

4. உங்களது VISITING CARD களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிராளியிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.

5. உங்கள் LETTER HEAD போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.

6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.

7. வங்கிச் சேவைகளில் தமிழ் மட்டுமே பயன்படுத்தவும்.
(எ.கா) ATM சேவையில் தமிழ் இருந்தால் தமிழைப் பயன்படுத்தவும். நீங்கள் பயன்படுத்தும் காசோலைகளில் தமிழில் மட்டுமே எழுதவும். படிவங்களில் தமிழில் எழுதவும்.

8. மற்ற அலுவலகங்களுக்குச் செல்லும்போது உள்ளே செல்லும்போது வருகையாளர் பதிவேடு (VISITOR’S LOGBOOK) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், உங்களது நிறுவனம், பார்க்கவேண்டிய நபர், நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

9. சொந்த வீட்டின் வெளியே உங்கள் பெயரை கல்லால் செதுக்கும்போது முகவரியையும் சேர்த்து தமிழில் எழுதுங்கள்.

10. வெளியூருக்குச் (தமிழ்நாட்டுக்குள்) சென்று விடுதிகளில் (LODGE) தங்கும்போது, பதிவேடு (GUEST REGISTER) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், முகவரி, வந்த நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

11. செல்பேசி (அ) தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் போது தமிழில் சொல்லுங்கள். அதாவது உங்கள் எண் 94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது... தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது...என்று தமிழில் சொல்லுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.

12. MARIO PUZO, SIDNEY SHELDON….போன்றவர்களின் புத்தகத்தை விடுத்து கையில் எப்போதும் நல்ல தமிழ்ப்புத்தகம் ஏதாவது ஒன்று வைத்திருங்கள். முக்கியமாக அட்டை போட்டு மறைத்துவிடாமல் மற்றவர்களுக்கு தெரிவது போல் எடுத்துச்செல்லுங்கள்.

13. கோயிலுக்குச் செல்லும்போது தேங்காய் பழத்தோடு அவரவர் சமய தமிழ்ப்புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். (எ.கா.) தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை.

14. வீடுகளில் மாட்டும் நாட்காட்டி மற்றும் சுயமுன்னேற்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தமிழில் இருந்தால் மட்டும் மாட்டுங்கள். இல்லாவிட்டால் சுவர் சும்மாவாவது இருக்கட்டும்.

15. குழந்தைகள் பெரியவர்கள் போடும் பனியன்களில் தமிழ் வாசகங்கள் இருந்தால் மட்டும் அணிவியுங்கள்...அணியுங்கள்.(ஆங்கிலத்தில் எழுதியுள்ள வாசகங்களை அணிந்துள்ளவர்களிடம் அதை தமிழில் சொல்லுங்கள் என்று கேளுங்கள். அந்த வாசகங்கள் எவ்வளவு ஆபாசமானது.. அர்த்தமற்றது என்பதை அவர்கள் உணர்வார்கள். ஒரு இளம்பெண் அணிந்திருந்த T SHIRTல் எழுதியிருந்த வாசகம்: THIS MUCH I EAT ).

16. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள் சொல்வதை (எ.கா: மோ...மை...எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்) நம்பாமல் தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள். (ஒரு நண்பர் தன்னுடைய மகனுக்கு தீட்ஷித் என்று பெயர் வைத்திருந்தார். அது வடநாட்டு சாதிப்பெயர் என்று தெரியாமல்!)

17. அரசாங்க தொடர்புடைய அலுவலகங்களுக்கு (எ.கா: மின்சார வாரியம்) அல்லது வங்கிக்கு கடிதம் எழுதும் போது தமிழில் மட்டுமே எழுதுங்கள்.

18. திருமணப்பரிசு அளிக்கும்போது நல்ல தமிழ்ப்புத்தகங்ககளை அளியுங்கள். எடுத்துக்காட்டு திருக்குறள் . திருக்குறளுக்கு உரையாசிரியர் மிகவும் முக்கியம். சார்பு உடையவர்கள் உரைகளை வாங்காமல் கா.சு.பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ..ராமலிங்கம் பிள்ளை, தேவநேயப்பாவாணர் உரைகளை வாங்கலாம். அதேபோல் திருக்குறளைப் போல் ஒன்றே முக்கால் அடி உரைகளை வாங்காதீர்கள்.. நல்ல விரிவான உரைகளை வாங்குங்கள்.

19. விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.

20. இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.

21. கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள்.
எ.கா: திருவள்ளுவராண்டு 2044 மீனம் (பங்குனி) 09 / ஆங்கில தேதி 22 மார்ச் 2013. திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.

22. தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)

23. எதெற்கெடுத்தாலும் ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்பதற்கு பதிலாக ‘மன்னிக்கவும்’...’மன்னிக்கனும்’...’மன்னிச்சுங்குங்க’... என்று சொல்லுங்கள். அதே போல் ‘ப்ளீஸ்’ என்பதற்கு பதிலாக ‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.

24. மகிழுந்துகளில் செல்லக்குழந்தைகளின் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள்.

25. மகிழுந்துகளில், இரு சக்கர வாகனங்களில் தங்களின் தொழிலை எழுதும் போது தமிழில் எழுதுங்கள். எ.கா: ஊடகம் (PRESS), மருத்துவர் (DOCTOR), வழக்கறிஞர் (ADVOCATE) இன்னும்பிற.

26. தமிழ்நாட்டில் குழந்தைகளை தமிழில் படிக்க வைக்க வசதி இல்லை (அரசாங்கப் பள்ளிகளைத் தவிர). குறைந்தபட்சம் மொழிப்பாடம் தேர்வு செய்யும் போதாவது தமிழ் மொழிப்பாடம் தேர்வு செய்யுங்கள். ஹிந்தி மொழி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று சொல்லுகிற புரூடாவையெல்லாம் நம்பாதீர்கள். இன்றைய தேதியில் ஹிந்தி நன்கு தெரிந்த (தாய் மொழியாக கொண்டவர்கள்தான்) தமிழ்நாட்டில் அதிகம் வேலைப் பார்க்கிறார்கள். மேலும் ஒரு மொழியைப்படிப்பதற்கு 3 மாதங்கள் போதும். எத்தனை மொழி வேண்டுமானாலும் பள்ளிக்கு வெளியே கற்றுக் கொடுங்கள்.

27. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழ் எழுத்துரு இல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அனுப்புங்கள். இதை TEMPLATE ல் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
எ.கா: I’LL CALL YOU LATER என்பதற்கு NAAN PIRAGU AZHAIKKIREN (நான் பிறகு அழைக்கிறேன்).

28. இப்பொழுதெல்லாம் தமிழில் மின்னஞ்சல் செய்வதில் GMAIL லில் எளிமையான பல வசதிகள் உள்ளன. மின்னஞ்சல் அனுப்புவதற்கு தமிழைப் பயன்படுத்துங்கள்.

29 அதேபோல் PASSWORD வார்த்தைகளுக்கும் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். (எ.கா) SAIVAM - சைவம்

30. ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு உள்ள படிவங்களை தமிழில் மட்டுமே பதிவு செய்யுங்கள். படிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது.

31. பேருந்துகளில் அல்லது தானிகளில் (ஆட்டோ) ஏறும்போது நிறுத்தங்களை தமிழில் மட்டுமே (வெட்கப்படாமல்) சொல்லுங்கள். எ.கா: ANNA NAGAR WEST DEPO - அண்ணாநகர் மேற்கு பணிமனை, GH / GENERAL HOSPITAL – அரசாங்க பொது மருத்துவமனை.

32. அதேபோல் எந்த ஓர் ஊரையும் சுருக்கி ஆங்கிலத்தில் சொல்லாதீர்கள் எ.கா: T NAGAR – தியாகராய நகர். KK NAGAR – கலைஞர் கருணாநிதி நகர். திருவரங்கத்தை ஸ்ரீரங்கம் என்று அழைக்காதீர்கள். திருப்பெரும்புதூரை ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்காதீர்கள்.

33. மேற்கூறிய செயல்களைச் செய்யும் அல்லது தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் (மிகச்சிறிய செயலாய் இருந்தாலும்) யாரைக் கண்டாலும் மனம் திறந்து பாராட்டுங்கள். நான்கு பேருக்குத் தெரியும்படி பாராட்டுங்கள்.

34. பேசும்போது எடுத்துக்காட்டாகச் சொல்லும்போது தமிழ் சாதனையாளர்களை மட்டும் சொல்லுங்கள். தமிழ் ஆட்கள் தெரியாவிட்டால் எடுத்துக்காட்டையே தவிருங்கள். (சாதனையில் தமிழனை மிஞ்சியவர் யாரும் இல்லை என்பதே உண்மை)
எ.கா: அழகிற்கு முருகன், கற்புக்கு கண்ணகி, நட்புக்கு கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார், வள்ளல்தன்மைக்கு கடையேழு வள்ளல்கள், வீரத்திற்கு தமிழ் மன்னர்கள், புரட்சிக்கு பிரபாகரன், கல்விக்கு முருகன்...இன்னும் பிற.

35. தமிழ் இலக்கணம் முறையாக தெரிந்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தமிழின் சிறப்பை முழுமையாக அறிந்து கொள்ள முடியும். பிறவிப் பயனை அடைய முடியும். வயதாகிவிட்டதே என கவலை கொள்ளாதீர்கள். கற்பதற்கு வயதே கிடையாது. முறையாக தெரிந்து கொள்ள ஓர் எளிய வழி: அஞ்சல் வழிக் கல்வியில் BA., B.Lit., M.A. (TAMIL) போன்ற பட்டப்படிப்புகளை படிக்கலாம்.


(தமிழ் வளரும்)


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 24, 2013 8:27 am

26. தமிழ்நாட்டில் குழந்தைகளை தமிழில் படிக்க வைக்க வசதி இல்லை (அரசாங்கப் பள்ளிகளைத் தவிர). குறைந்தபட்சம் மொழிப்பாடம் தேர்வு செய்யும் போதாவது தமிழ் மொழிப்பாடம் தேர்வு செய்யுங்கள். ஹிந்தி மொழி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று சொல்லுகிற புரூடாவையெல்லாம் நம்பாதீர்கள். இன்றைய தேதியில் ஹிந்தி நன்கு தெரிந்த (தாய் மொழியாக கொண்டவர்கள்தான்) தமிழ்நாட்டில் அதிகம் வேலைப் பார்க்கிறார்கள். மேலும் ஒரு மொழியைப்படிப்பதற்கு 3 மாதங்கள் போதும். எத்தனை மொழி வேண்டுமானாலும் பள்ளிக்கு வெளியே கற்றுக் கொடுங்கள்.

27. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழ் எழுத்துரு இல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அனுப்புங்கள். இதை TEMPLATE ல் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
எ.கா: I’LL CALL YOU LATER என்பதற்கு NAAN PIRAGU AZHAIKKIREN (நான் பிறகு அழைக்கிறேன்).

28. இப்பொழுதெல்லாம் தமிழில் மின்னஞ்சல் செய்வதில் GMAIL லில் எளிமையான பல வசதிகள் உள்ளன. மின்னஞ்சல் அனுப்புவதற்கு தமிழைப் பயன்படுத்துங்கள்.

29 அதேபோல் PASSWORD வார்த்தைகளுக்கும் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். (எ.கா) SAIVAM - சைவம்

30. ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு உள்ள படிவங்களை தமிழில் மட்டுமே பதிவு செய்யுங்கள். படிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது.
(தமிழ் வளரும்)

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Mar 25, 2013 10:21 am

நீங்கள் சொல்லும் அனைத்தும் கடைபிடிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
ஆனால் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என தயக்கம் வருகிறது.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 11:31 am

நானும் இப்பொழுது என் கையெழுத்தை தமிழிலே எழுதுகிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 25, 2013 11:36 am

தமிழ் தமிழன்னு கூவி அரசியல் வியாபாரம் செய்யும் இந்த போலிகளை ஆணியே புடுங்க வேண்டாம் என்று சொன்னால் தமிழ் தானே வளர்ந்துடும்.

நல்ல பகிர்வு சாமி.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 25, 2013 11:44 am

யினியவன் wrote:தமிழ் தமிழன்னு கூவி அரசியல் வியாபாரம் செய்யும் இந்த போலிகளை ஆணியே புடுங்க வேண்டாம் என்று சொன்னால் தமிழ் தானே வளர்ந்துடும்.

நல்ல பகிர்வு சாமி.

சும்மா நச்சுனு சொல்லீடீங்க போங்க இனியவரே




தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Mதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Uதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Tதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Hதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Uதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Mதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Oதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Hதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Aதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Mதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 Eதமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 25, 2013 9:45 pm

Kuzhali wrote:நீங்கள் சொல்லும் அனைத்தும் கடைபிடிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
ஆனால் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என தயக்கம் வருகிறது.

நம் மொழியில் பேச என்ன தயக்கம்?
நம் தாய் தந்தையை விட்டுக் கொடுப்போமா?
அவர்களைப் போலத்தானே நம் மொழியும்...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Mar 25, 2013 10:25 pm

Kuzhali wrote:நீங்கள் சொல்லும் அனைத்தும் கடைபிடிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
ஆனால் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என தயக்கம் வருகிறது.

இது தான் யதார்த்தம் மற்றும் நடைமுறை இதற்கு நாம் என்ன விளக்கம் கொடுக்க முடியும்.

இன்று நாம் தமிழை பேசுவதற்கும், படம் பார்பதற்கும், கதை படிப்பதற்கும் மட்டும் தான் பயன் படுத்துகிறோம்.

வேறு எந்த பயன்படுக்காக தமிழை பயன் படுத்துகிறோம் சொல்லுங்கள் எதுவுமே சொல்ல முடியாது. எல்லா பயன்பட்டிலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் தான் மேற்கண்டது போல் கேள்விகள் எழுகின்றனர்.

முதலில் தமிழை அணைத்து துறைகளிலும் பயன்படுத்தும் பொருட்டு சரியான கலை சொற்களை (புகை வண்டி, புண்ணாக்கு வண்டி இன்று இல்லாமல்) உருவாக்க வேண்டும். இன்று 12 ஆம் வகுப்பு மேல் தமிழில் பயில முடியாது என்ற நிலையை மற்ற வேண்டும். தமிழில் படித்தவனுக்கு வெளியில் முன்னுரிமை என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். 6 ஆம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் தான் பயில வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.

இது போன்ற மேலும் பல நடவடிக்கைகளால் தான் தமிழை வளர்க்க முடியுமோ தவிர, மக்களை இப்படி செய்யுங்கள், இப்படி பேசுங்கள் , இப்படி இருங்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் மார்க்கெட்டிங் செய்ய கூடாது.

சாமி என் பதிவு குறை கூருவதாக எண்ணினால் மனிக்கவும்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Mar 26, 2013 10:48 am

ராஜு சரவணன் wrote:
Kuzhali wrote:நீங்கள் சொல்லும் அனைத்தும் கடைபிடிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
ஆனால் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என தயக்கம் வருகிறது.

இது தான் யதார்த்தம் மற்றும் நடைமுறை இதற்கு நாம் என்ன விளக்கம் கொடுக்க முடியும்.

இன்று நாம் தமிழை பேசுவதற்கும், படம் பார்பதற்கும், கதை படிப்பதற்கும் மட்டும் தான் பயன் படுத்துகிறோம்.

வேறு எந்த பயன்படுக்காக தமிழை பயன் படுத்துகிறோம் சொல்லுங்கள் எதுவுமே சொல்ல முடியாது. எல்லா பயன்பட்டிலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் தான் மேற்கண்டது போல் கேள்விகள் எழுகின்றனர்.

முதலில் தமிழை அணைத்து துறைகளிலும் பயன்படுத்தும் பொருட்டு சரியான கலை சொற்களை (புகை வண்டி, புண்ணாக்கு வண்டி இன்று இல்லாமல்) உருவாக்க வேண்டும். இன்று 12 ஆம் வகுப்பு மேல் தமிழில் பயில முடியாது என்ற நிலையை மற்ற வேண்டும். தமிழில் படித்தவனுக்கு வெளியில் முன்னுரிமை என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். 6 ஆம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் தான் பயில வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.

இது போன்ற மேலும் பல நடவடிக்கைகளால் தான் தமிழை வளர்க்க முடியுமோ தவிர, மக்களை இப்படி செய்யுங்கள், இப்படி பேசுங்கள் , இப்படி இருங்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் மார்க்கெட்டிங் செய்ய கூடாது.

சாமி என் பதிவு குறை கூருவதாக எண்ணினால் மனிக்கவும்.

நண்பரே,

யதார்த்தம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறிய நிகழ்வு தான்..சுடிதார் என்ற உடை வரும் போது இது கழைக் கூத்தாடி உடை போல் இருக்கிறது என்ற விமர்சனமே நம்ம ஊர் பெண்களிடம் இருந்தது. ஒருவர் உடுத்த, மற்றொருவர் காப்பி அடிக்க இன்று அது தான் தமிழக பெண்களின் முழு நேர உடையாய் மாறிப் போனது. இந்தியாவில் கிரிக்கெடை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களை விட அடுத்தவர் பார்க்கிறார், ஆதலால் அதைப் பார்த்தால் தான் நாமும் அடுத்தவருடன் ஒத்துப் போவோம், நமக்கு நாளும் தெரியும் என்று காட்டிக்கொள்ள பெரும்பகுதியினர் பார்க்கின்றனர். ஒருவர் தங்கள் கருத்தில் தெளிவும் உறுதியும் இல்லாமல் இருக்கும் நிலையில் தான் அடுத்தவரை காப்பி அடிக்க முயலுவர், அல்லது அடுத்தவர் கேலி செய்யாத வகையில் தங்களின் சுயக் கருத்தையும் மாற்றி இருக்க முயற்சி செய்வர். தெளிவுடன் இருப்பவர் அடுத்தவரின் பயனற்ற விமர்சனத்தை மதிக்க மாட்டார். முதலில் நாம் யார் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.

இத்தெளிவு இல்லாததால் தான் இன்றைக்கு பிள்ளைகளின் பெயர் கீர்ஷ், பக்தீஷ், அம்ரிஷா என்ற பல வடிவங்களில் வெளி வருகிறது. பிள்ளைகளுக்கு என்ன பெயரை வைத்தாலும் குழந்தைகள் கிண்டல் செய்வர், அது அவர்களின் இயல்பு, ஆனால் நாம் ஏதோ புதுமை செய்வதாய் நினைத்து உலகில் இல்லாத பெயரைத் தேடி அலைகிறோம், அதிலும் கண்டிப்பாக தெளிவான தமிழ் பெயர் இருக்கக் கூடாது என்ற எண்ணம் இங்கு நிலவுகிறது.

ஒரு ஊரில் பெரும்பான்மையாக ஒரு மதம் இருப்பதாக வைத்துக் கொள்வோம், அங்குள்ள ஒரு பிள்ளை அடுத்தவரைப் பார்த்து அது நன்றாக இருக்கிறது, நானும் அதைச் செய்கிறேன் என்று சொன்னால் அப்படியே விட்டு விடுவோமா, அது போல் தான் தாய்மொழியும்,,,

நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெயர் வைக்க அரசாங்க கோட்பாடுகள் என்ன செய்ய இயலும். அது உங்கள் கையில் தான். நீங்கள் உங்கள் தாய்மொழியை விரும்பினால் அதை செய்யுங்கள், ,ஜப்பான்காரன் , சீனன், ஃபிரெஞ்சு, ஐரோப்பியர்களை அவர்களின் பெயரை வைத்து அடையாளம் காணலாம்.

மொழி என்பது விளம்பரம் அல்ல, அது தாய் போல் நம்முடன் இருக்க வேண்டிய உணர்வு. நான் படித்து விட்டேன், வேலை கிடைத்து விட்டது ஆததால் என் பெற்றோர் எனக்கு அவசியமில்லை என்று ஒருவர் முடிவு எடுப்பதும், என் தாய்மொழி அவசியமில்லை என்று முடிவு எடுப்பதும் ஒன்று தான்.

அனைத்திற்கும் அரசாங்கத்தை குறை சொல்லுவதை விடுத்து, நம்மால் இயன்ற அளவுக்கு தாய்மொழிக்கு நீர் ஊற்றுங்கள். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள சீன பள்ளிக் குழந்தைகள் பெரும்பகுதியினர் முழுக்க முழுக்க ஆங்கில தான் படிக்கின்றனர். ஆனால் தங்கள் தாய் மொழியை மறந்து விடவில்லை, ஆங்கிலத்தில் பெயர் வைப்பதில்லை.

நான் ஆரம்ப பள்ளிக்கூடம் முதல் ஆங்கில வழியில் படித்தவன் தான், ஆயினும் இது ஒருநாளும் என் தமிழ்மொழிக்குத் தடையாக இருந்ததில்லை.

இப்பதிவின் நோக்கம் ஒவ்வொருவரும், இச்செயலைச் செய்தால் நாளைக்கு அது இயல்பாய் மாறிவிடும், அப்போது அனைவரும் தயக்கமில்லாமல் இதைத் செய்யலாம், தெளிவில்லாதவரும் . முதலில் நம்மால் இயன்றதை செய்வோம். இங்கு குறிப்பிட்ட பல தகவல்களை செய்ய நாம் அரசாங்கத்தை நாட வேண்டியதில்லை. யாரும் நம் தலையை கொய்து விட மாட்டார்கள். இதை மார்கெட்டிங் செய்ய இது ஒன்றும் வியாபாரம் இல்லை. மொழிஉணர்வு.....அதைப் புரிந்து கொள்ளுங்கள்..

நீ திருந்து நாடே திருந்தும் என்ற வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.



சதாசிவம்
தமிழ் வளர்ச்சி பெற நாம் செய்ய வேண்டியவை... - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 26, 2013 11:13 am

அனைவருக்கும் பயனுள்ள அவசியமான பதிவு சாமி.

இங்கு சாமி கூறியுள்ள இந்த வழிகளை கடைபிடிப்பதில் எதார்த்த சிக்கல்கள் இருக்கின்றன என rajusaravanan கூறியுள்ளார். இந்த எதார்த்தம் என்பது எல்லாம் "அடுத்தவர் செய்வதை நாமும் செய்யவேண்டும் அதேபோல அடுத்தவர் செய்யாததை நானும் செய்யகூடாது அப்போ தான் நம்மையும் மதிப்பார்கள்" என்ற எண்ணம் தான் என்பது எனது கருத்தும்.
சாமி குறிப்பிட்டுள்ள வழிமுறைகளில் கீழ்கண்ட அனைத்தையும் இங்கு உள்ள அரபிகாரர்கள் அப்படியே பயன்படுத்துகிறார்கள்(தமிழ் என்பதற்கு பதில் அரபி என்று மாற்றிகொள்ளுங்கள்)

சாமி wrote:
1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள். ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும்.உங்களது குழந்தைகளை இப்போதிலிருந்தே தமிழில் கையொப்பமிடுவதை கற்றுக்கொடுங்கள்.

2. உறவுகளை அழைக்கும்போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப்பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள்.

3. எதிராளி தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும்.

4. உங்களது VISITING CARD களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிராளியிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும்.

5. உங்கள் LETTER HEAD போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள்.

6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள்.

7. வங்கிச் சேவைகளில் தமிழ் மட்டுமே பயன்படுத்தவும். (எ.கா) ATM சேவையில் தமிழ் இருந்தால் தமிழைப் பயன்படுத்தவும். நீங்கள் பயன்படுத்தும் காசோலைகளில் தமிழில் மட்டுமே எழுதவும். படிவங்களில் தமிழில் எழுதவும்.

8. மற்ற அலுவலகங்களுக்குச் செல்லும்போது உள்ளே செல்லும்போது வருகையாளர் பதிவேடு (VISITOR’S LOGBOOK) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், உங்களது நிறுவனம், பார்க்கவேண்டிய நபர், நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

9. சொந்த வீட்டின் வெளியே உங்கள் பெயரை கல்லால் செதுக்கும்போது முகவரியையும் சேர்த்து தமிழில் எழுதுங்கள்.

10. வெளியூருக்குச் (தமிழ்நாட்டுக்குள்) சென்று விடுதிகளில் (LODGE) தங்கும்போது, பதிவேடு (GUEST REGISTER) வைத்திருப்பார்கள். அதில் தமிழில் எழுதுங்கள். எடுத்துக்காட்டு: பெயர், முகவரி, வந்த நோக்கம், கையெழுத்து.. இன்னும் பிற.

11. செல்பேசி (அ) தொலைபேசி எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் போது தமிழில் சொல்லுங்கள். அதாவது உங்கள் எண் 94440 94440 என்று இருந்தால் தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது... தொண்ணூற்று நான்கு...நானூற்று நாற்பது...என்று தமிழில் சொல்லுங்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருக்கும். பிறகு பழகிவிடும்.

17. அரசாங்க தொடர்புடைய அலுவலகங்களுக்கு (எ.கா: மின்சார வாரியம்) அல்லது வங்கிக்கு கடிதம் எழுதும் போது தமிழில் மட்டுமே எழுதுங்கள்.

19. விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள்.

20. இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள்.

21. கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள்.
எ.கா: திருவள்ளுவராண்டு 2044 மீனம் (பங்குனி) 09 / ஆங்கில தேதி 22 மார்ச் 2013. திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு.

22. தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..)

26. தமிழ்நாட்டில் குழந்தைகளை தமிழில் படிக்க வைக்க வசதி இல்லை (அரசாங்கப் பள்ளிகளைத் தவிர). குறைந்தபட்சம் மொழிப்பாடம் தேர்வு செய்யும் போதாவது தமிழ் மொழிப்பாடம் தேர்வு செய்யுங்கள். ஹிந்தி மொழி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று சொல்லுகிற புரூடாவையெல்லாம் நம்பாதீர்கள். இன்றைய தேதியில் ஹிந்தி நன்கு தெரிந்த (தாய் மொழியாக கொண்டவர்கள்தான்) தமிழ்நாட்டில் அதிகம் வேலைப் பார்க்கிறார்கள். மேலும் ஒரு மொழியைப்படிப்பதற்கு 3 மாதங்கள் போதும். எத்தனை மொழி வேண்டுமானாலும் பள்ளிக்கு வெளியே கற்றுக் கொடுங்கள்.

27. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழ் எழுத்துரு இல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அனுப்புங்கள். இதை TEMPLATE ல் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
எ.கா: I’LL CALL YOU LATER என்பதற்கு NAAN PIRAGU AZHAIKKIREN (நான் பிறகு அழைக்கிறேன்).

28. இப்பொழுதெல்லாம் தமிழில் மின்னஞ்சல் செய்வதில் GMAIL லில் எளிமையான பல வசதிகள் உள்ளன. மின்னஞ்சல் அனுப்புவதற்கு தமிழைப் பயன்படுத்துங்கள்.

29 அதேபோல் PASSWORD வார்த்தைகளுக்கும் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். (எ.கா) SAIVAM - சைவம்


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 27, 2013 10:58 am

சதாசிவம் wrote:
ராஜு சரவணன் wrote:
Kuzhali wrote:நீங்கள் சொல்லும் அனைத்தும் கடைபிடிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
ஆனால் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என தயக்கம் வருகிறது.

இது தான் யதார்த்தம் மற்றும் நடைமுறை இதற்கு நாம் என்ன விளக்கம் கொடுக்க முடியும்.

இன்று நாம் தமிழை பேசுவதற்கும், படம் பார்பதற்கும், கதை படிப்பதற்கும் மட்டும் தான் பயன் படுத்துகிறோம்.

வேறு எந்த பயன்படுக்காக தமிழை பயன் படுத்துகிறோம் சொல்லுங்கள் எதுவுமே சொல்ல முடியாது. எல்லா பயன்பட்டிலும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் தான் மேற்கண்டது போல் கேள்விகள் எழுகின்றனர்.

முதலில் தமிழை அணைத்து துறைகளிலும் பயன்படுத்தும் பொருட்டு சரியான கலை சொற்களை (புகை வண்டி, புண்ணாக்கு வண்டி இன்று இல்லாமல்) உருவாக்க வேண்டும். இன்று 12 ஆம் வகுப்பு மேல் தமிழில் பயில முடியாது என்ற நிலையை மற்ற வேண்டும். தமிழில் படித்தவனுக்கு வெளியில் முன்னுரிமை என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். 6 ஆம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் தான் பயில வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.

இது போன்ற மேலும் பல நடவடிக்கைகளால் தான் தமிழை வளர்க்க முடியுமோ தவிர, மக்களை இப்படி செய்யுங்கள், இப்படி பேசுங்கள் , இப்படி இருங்கள் என்று தமிழ் ஆர்வலர்கள் மார்க்கெட்டிங் செய்ய கூடாது.

சாமி என் பதிவு குறை கூருவதாக எண்ணினால் மனிக்கவும்.

நண்பரே,

யதார்த்தம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறிய நிகழ்வு தான்..சுடிதார் என்ற உடை வரும் போது இது கழைக் கூத்தாடி உடை போல் இருக்கிறது என்ற விமர்சனமே நம்ம ஊர் பெண்களிடம் இருந்தது. ஒருவர் உடுத்த, மற்றொருவர் காப்பி அடிக்க இன்று அது தான் தமிழக பெண்களின் முழு நேர உடையாய் மாறிப் போனது. இந்தியாவில் கிரிக்கெடை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களை விட அடுத்தவர் பார்க்கிறார், ஆதலால் அதைப் பார்த்தால் தான் நாமும் அடுத்தவருடன் ஒத்துப் போவோம், நமக்கு நாளும் தெரியும் என்று காட்டிக்கொள்ள பெரும்பகுதியினர் பார்க்கின்றனர். ஒருவர் தங்கள் கருத்தில் தெளிவும் உறுதியும் இல்லாமல் இருக்கும் நிலையில் தான் அடுத்தவரை காப்பி அடிக்க முயலுவர், அல்லது அடுத்தவர் கேலி செய்யாத வகையில் தங்களின் சுயக் கருத்தையும் மாற்றி இருக்க முயற்சி செய்வர். தெளிவுடன் இருப்பவர் அடுத்தவரின் பயனற்ற விமர்சனத்தை மதிக்க மாட்டார். முதலில் நாம் யார் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.

இத்தெளிவு இல்லாததால் தான் இன்றைக்கு பிள்ளைகளின் பெயர் கீர்ஷ், பக்தீஷ், அம்ரிஷா என்ற பல வடிவங்களில் வெளி வருகிறது. பிள்ளைகளுக்கு என்ன பெயரை வைத்தாலும் குழந்தைகள் கிண்டல் செய்வர், அது அவர்களின் இயல்பு, ஆனால் நாம் ஏதோ புதுமை செய்வதாய் நினைத்து உலகில் இல்லாத பெயரைத் தேடி அலைகிறோம், அதிலும் கண்டிப்பாக தெளிவான தமிழ் பெயர் இருக்கக் கூடாது என்ற எண்ணம் இங்கு நிலவுகிறது.

ஒரு ஊரில் பெரும்பான்மையாக ஒரு மதம் இருப்பதாக வைத்துக் கொள்வோம், அங்குள்ள ஒரு பிள்ளை அடுத்தவரைப் பார்த்து அது நன்றாக இருக்கிறது, நானும் அதைச் செய்கிறேன் என்று சொன்னால் அப்படியே விட்டு விடுவோமா, அது போல் தான் தாய்மொழியும்,,,

நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு பெயர் வைக்க அரசாங்க கோட்பாடுகள் என்ன செய்ய இயலும். அது உங்கள் கையில் தான். நீங்கள் உங்கள் தாய்மொழியை விரும்பினால் அதை செய்யுங்கள், ,ஜப்பான்காரன் , சீனன், ஃபிரெஞ்சு, ஐரோப்பியர்களை அவர்களின் பெயரை வைத்து அடையாளம் காணலாம்.

மொழி என்பது விளம்பரம் அல்ல, அது தாய் போல் நம்முடன் இருக்க வேண்டிய உணர்வு. நான் படித்து விட்டேன், வேலை கிடைத்து விட்டது ஆததால் என் பெற்றோர் எனக்கு அவசியமில்லை என்று ஒருவர் முடிவு எடுப்பதும், என் தாய்மொழி அவசியமில்லை என்று முடிவு எடுப்பதும் ஒன்று தான்.

அனைத்திற்கும் அரசாங்கத்தை குறை சொல்லுவதை விடுத்து, நம்மால் இயன்ற அளவுக்கு தாய்மொழிக்கு நீர் ஊற்றுங்கள். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள சீன பள்ளிக் குழந்தைகள் பெரும்பகுதியினர் முழுக்க முழுக்க ஆங்கில தான் படிக்கின்றனர். ஆனால் தங்கள் தாய் மொழியை மறந்து விடவில்லை, ஆங்கிலத்தில் பெயர் வைப்பதில்லை.

நான் ஆரம்ப பள்ளிக்கூடம் முதல் ஆங்கில வழியில் படித்தவன் தான், ஆயினும் இது ஒருநாளும் என் தமிழ்மொழிக்குத் தடையாக இருந்ததில்லை.

இப்பதிவின் நோக்கம் ஒவ்வொருவரும், இச்செயலைச் செய்தால் நாளைக்கு அது இயல்பாய் மாறிவிடும், அப்போது அனைவரும் தயக்கமில்லாமல் இதைத் செய்யலாம், தெளிவில்லாதவரும் . முதலில் நம்மால் இயன்றதை செய்வோம். இங்கு குறிப்பிட்ட பல தகவல்களை செய்ய நாம் அரசாங்கத்தை நாட வேண்டியதில்லை. யாரும் நம் தலையை கொய்து விட மாட்டார்கள். இதை மார்கெட்டிங் செய்ய இது ஒன்றும் வியாபாரம் இல்லை. மொழிஉணர்வு.....அதைப் புரிந்து கொள்ளுங்கள்..

நீ திருந்து நாடே திருந்தும் என்ற வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நல்ல விளக்கம் ஐயா. மிக்க நன்றி !

Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக