ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........

4 posters

Go down

ஈகரை பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........

Post by Muthumohamed Wed Mar 20, 2013 10:12 pm

பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... 230017_532060176844316_1947901997_n

பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........

இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் டெல்லி ஜன்பத் சாலையில் இந்தியப் பேரரசின் அமைச்சரவைக் கூட்டம் சில மிக முக்கியமான முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வரும் இந்தியா என்கிற
மண்டல வல்லரசின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய அளவிலான மாற்றங்களைக் கொண்டு
வரப் போகும் சில மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.

ஒன்பது வருடங்களாக ஒரு அரசின் மிக முக்கியமான அரசியல் கூட்டாளியாக இருந்த
திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒரே இரவில் வெகு
தொலைவு பயணப்பட வேண்டியிருக்கிறது. நடுநிலை வெங்காயங்களை தங்கள் வீட்டுத்
தோட்டங்களில் பயிரிட்டு வளர்த்த பல அரசியல் வணிக விவசாயிகள் வேறு வழியின்றி
இனப்படுகொலை என்கிற வயலில் களை பிடுங்க ஓடி வருகிறார்கள்.


தேசியக் கொடியைத் தங்கள் மகிழுந்துகளின் முன்புறத்தில் பறக்க விட்டுக்
கொண்டு ஆட்சி அதிகாரத்தில் திளைத்திருந்த பல கதர் வேட்டிக் கந்தசாமிகள்
அவற்றை அகற்றி விட்டு கற்களும் செருப்புகளும் இல்லாத ஒரு புதிய பாதையில்
பயணிக்கத் தலைப்பட்டார்கள்.

தமிழ் தேசியத்தைத் தங்கள்
வாய்ச்சவடால்களில் கட்டி அமைத்து, ஒலிபெருக்கிகளில் வெற்று முழக்கங்களை
எழுப்பிக் காற்றைக் களங்கம் செய்து கொண்டிருந்த சோழ இளவரசர்கள் விரைவாகப்
படுத்து உறங்கி, மெதுவாக எழுந்து கொள்ளப் பழகிக் கொண்டிருந்தார்கள்.

நூற்றாண்டு கால திராவிட அரசியலால் இம்மியளவும் நகர்த்த முடியாத இந்திய
தேசத்தின் கொள்கை வகுப்பாளர்கள் புதிய செயல் திட்டங்களை வகுப்பதற்கான
பயிற்சி வகுப்பில் "உள்ளேன் ஐயா" என்று வருகைப் பதிவு செய்யத்
தலைப்பட்டார்கள்.

வங்கத்தின் சிங்கங்கள் துவங்கி, முலாயம் சிங்க
வகையறாக்கள் வரையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று இந்திய
நாடாளுமன்றத்தில் இடித்துரைத்தார்கள். தங்கபாலுக்களும், சிதம்பரங்களும்
தாங்கள் தமிழர்கள் என்பதற்கான சான்றிதழ்களை ஒருமுறை சரிபார்த்துச் சத்தியம்
செய்தார்கள்.

இவற்றை எல்லாம் ஓரிரு இரவுகளில் நிகழ்த்திக்
காட்டிய எமது மதிப்புக்குரிய மாணவர்களோ பசியோடும், பட்டினியோடும்
தெருக்களில் படுத்திருந்தார்கள், அவர்களின் அடுத்த நாள் உணவு குறித்த எந்த
உறுதிப்பாடுகளும் இல்லையென்றாலும், தாங்கள் கையிலெடுத்த ஒரு தீரமிக்க
போராட்ட வரலாற்றின் பக்கக்களை அவர்கள் வெகு திண்ணமாக வரையறுத்துக்
கொண்டிருந்தார்கள்.

பயிலிடங்களின் உறைவிடங்களின் என்று எல்லா
வாயில்களும் தாழிடப்பட்டிருந்தன, ஆனாலும் அவர்களின் ஒளி படைத்த கண்களில்
ஒரு இனத்தின் வலி தேங்கிக் கிடந்தது. நூற்றாண்டு கால அரசியல் இயக்கங்கள்
செய்ய முடியாத மாற்றங்களை சில இரவுகளில் அவர்கள் வெகு இலகுவாக நிகழ்த்திக்
கொண்டிருந்தார்கள்.

"அப்படிச் செய்யாதே, இப்படிச் செய், இங்கே
போகாதே, அங்கே போ" என்று யானைப் பாகன்களைப் போல அங்குசம் பிடித்துக்
கொண்டிருந்த தந்தையரின் கைகளில் இருந்து மழுங்கிப் போயிருந்த அரசியல்
என்கிற மந்திரக் கோலை இவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள், பல
நூற்றாண்டுகளாய்த் அறத்தில் தோய்ந்திருந்த தங்கள் பண்டைத் தமிழ் வீரத்தை
அவர்கள் குறுவாளாய்த் தரித்திருந்தார்கள்.

களைத்துப் படுத்திருந்த
பத்துக் கோடித் தமிழர்களின் படுக்கைகளை ஒட்டு மொத்தமாய்ச் சுருட்டித்
தங்கள் அக்கினிக் குஞ்சுகளை அதற்குள் ஆடை காத்தார்கள். மடையர்கள் என்று
சொன்ன அறிவு ஜீவிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியபடி அவர்கள் ஊடகங்களில்
ருத்ர தாண்டவம் ஆடினார்கள். சீருடைகளை அணிந்து சிறுவர்களைப் போலிருந்த
அவர்களின் அரங்குகளில் அடிப்படை அரசியல் படிக்க அலைமோதியது அண்ணாச்சிகளின்
கூட்டம்.

எந்தப் பாடசாலையும் அவர்களுக்கு அரசியலைக் கற்றுக்
கொடுக்கவில்லை, எந்தக் கல்லூரியும் அவர்களுக்கு அறச் சீற்றம் குறித்து
சிறப்பு வகுப்புகள் எடுக்கவில்லை, ஆனாலும் அவர்கள் அறத்தின் பக்கத்தில்
தவறாது நின்றார்கள். சமூகம் குறித்து அவர்கள் அறிந்து கொண்டது எல்லாம்
பொய்யும் புரட்டும் பேசிய பரதேசி ஊடங்களில் இருந்து தான். பெரும்பாலான
அச்சு ஊடகங்கள் அவர்களுக்குக் காட்டியது எல்லாம் தொப்புள் கொடி உறவுகளின்
தாங்கொணாத துயரத்தை அல்ல, தொப்புள் அழகிகளின் துள்ளும் இடுப்பைத்தான்.

பெரும்பாலான காட்சி ஊடகங்கள் அவர்களுக்குக் காட்டியது எல்லாம் விடுதலைப்
போராட்டத்தின் சுவடுகளை அல்ல, திரைப்பட மூடர்களின் போலி முகங்களைத் தான்.
ஆனாலும், அவர்கள் கிடைத்த இடைவெளிகளில் உலகத்தைப் படித்திருக்கிறார்கள்,
கிடைக்காத வாய்ப்புகளில் குருதி தோய்ந்த அறுபதாண்டு கால அரசியல் வரலாற்றைப்
படித்திருக்கிறார்கள். ஒரே இரவில் ஒப்பற்ற வீரர்களாய், ஒரு இனத்தின்
விடுதலையை அடுத்த தளத்துக்கு நகர்த்தி இருக்கிரார்கள்.


காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஊர்தியொன்றில் அடைக்கப்பட்டிருந்த எமது
பெண் குழந்தை ஒன்றின் களைத்த முகம் ஊடக ஒலிபெருக்கியை நோக்கித் திரும்பி
இப்படிச் சொல்கிறது,

"எமது இனத்தின் அறுபதாண்டு காலப் போர்
அடங்கிப் போய்விட்டதென்று யாரும் கனவு கண்டு விடாதீர்கள், எமது மக்களின்
வலிக்கான நீதி எமக்கான தனித் தேசத்தை நாங்கள் உருவாக்குவதில் தான் அடங்கி
இருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்".

கடந்த
பத்தாண்டுகளில் இப்படி ஒரு தீரமிக்க போராட்டத்தில் பங்கெடுத்த, தெளிந்த
நீரோடையைப் போல முழக்கமிட்ட ஒரு ஆண் அரசியல்வாதியைக் கூட நாங்கள்
பார்த்ததில்லை. கண்கள் பனிக்க அந்தக் குழந்தையை நாங்கள் உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கிறோம், எந்த முறையான அரசியல் அறிவையும் கொடுக்காத எங்கள் குற்ற
உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாது தவிக்கிறோம் நாங்கள்.

ஆறு நாட்களாக உணவு ஏதுமின்றிக் கொண்ட இலக்குக்காக உயிரைப் பணயம் வைத்தபடி
படுத்திருக்கும் எனதருமைத் தம்பி ஒருத்தன் இப்படிச் சொல்கிறான்,


"கல்வி கற்கும் காலத்தில் இப்படிப் போராட்டங்களில் ஈடுபட்டு நாட்களை
வீணடிப்பது சரியா என்று எனைக் கேட்கிறார் எங்கள் பேராசிரியர், அவருக்குச்
சொல்லுங்கள், எமது மக்களின் அரசியல் உரிமைகளையும், எமது குழந்தைகளின்
வாழ்வுரிமைகளையும் வென்றெடுக்கும் அரசியலை வளர்த்தெடுக்கும் காலத்தில்
நீங்கள் சரியாக இருந்திருப்பீர்களே ஆனால், நாங்கள் இப்போது நீங்கள் சொல்கிற
படி கல்வியைக் கற்றுக் கொண்டிருந்திருப்போம்."

எத்தனை அறச்
சீற்றம், எத்தனை தெளிவான சிந்தனை, எமது மொழிக்கும், எமது இலக்கியத்துக்கும்
இருக்கிற பேராற்றல் அது, எமது பாட்டனும், பூட்டனும் காற்றில் விதைத்துப்
போன களங்கமற்ற நற்சிந்தனைகளின் வெளிப்பாடு தான் இங்கே பூத்திருக்கும் எமது
விடுதலைப் பூக்கள்.

இந்த அற்புதமான ஒரு காலத்தில் எமதருமை அரசியல்
நண்பர்களே, சான்றோர்களே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த விடுதலை
மலர்களுக்கு நீர் பாய்ச்சுவதும், உரமிடுவதும் தான்.

யார் என்ன
செய்தார்கள், யார் என்ன செய்யப் போகிறார்கள், யார் வெற்றி பெறுவார்கள்,
யார் தோல்வியைத் தழுவுவார்கள் என்பது குறித்தெல்லாம் இந்த இளம்
குருத்துக்களுக்கு அக்கறை இல்லை, அவர்கள் எமது பாரம்பரிய மிக்க மொழியும்,
இலக்கியமும் கற்றுக் கொடுத்த அறம் என்கிற ஒற்றைச் சொல்லை மட்டுமே உள்வாங்கி
இருக்கிறார்கள், உங்கள் குழாயடிச் சண்டைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,
இயன்ற வரையில் ஒருமித்த குரலில் அவர்களின் பின்னால் அணிவகுத்து
நில்லுங்கள்.

விடுதலை என்பது இன்னும் மேன்மையான ஒரு உலகத்தைப்
படைப்பதற்கான போராட்டம் தான் என்பதை எமது தம்பிகளும், தங்கைகளும் யாரும்
சொல்லிக் கொடுக்காமலேயே உணர்ந்து விட்டார்கள், இனி அவர்கள் அறம் சார்ந்த
ஒரு புற உலகைக் கட்டி அமைக்கும் வல்லமை பெறுவார்கள். ஒற்றைக் குரலில்
அவர்கள் உயர்த்திப் பிடிக்கும் அந்த முழக்கம் வெகு விரைவில் அவர்களிடம்
இருக்கும்.

வெல்லட்டும் எமது தம்பி, தங்கைகளின் புரட்சி. மலரட்டும் தனித் தமிழ் ஈழம்.

அறிவழகன் கைவல்யம்
பேஸ்புக்-பரண்



பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Mபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Uபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Tபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Hபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Uபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Mபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Oபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Hபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Aபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Mபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... Eபாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்.......... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........

Post by DERAR BABU Thu Mar 21, 2013 1:09 pm

நன்றி :வணக்கம்:


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஈகரை Re: பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........

Post by jeju Thu Mar 21, 2013 3:08 pm

சூப்பருங்க
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

ஈகரை Re: பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........

Post by mbalasaravanan Thu Mar 21, 2013 3:23 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஈகரை Re: பாரடா என்னுடன் பிறந்த பட்டாளம்..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum