புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_m10ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 11:37 am

ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்


ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Siththa maruththuvam
ஒரு காலத்தில் கிராமத்து கோவில் பூசாரிகளே பெரும்பாலும் வைத்தியர்களாக இருந்திருக்கிறார்கள்.

உடல் நிலை சரியில்லை என்றால் திருநீறு மந்திரித்து கொடுப்பதில் இருந்து,
பாடம் போடுவது, காஷாயம் கொடுப்பது எல்லாம் பெரும்பாலும் இவர்களே. பின்
ஒவ்வொரு ஊரிலும் நாட்டு வைத்தியர் என்பவர் இருந்தார்.

மூலிகைகளை கொண்டு மருந்து தயாரித்து நோய்களுக்கு ஏற்ப வைத்தியம் செய்வார். பல வகையான ஆற்றல் மிக்க மூலிகைகள் இருந்தன.

வெட்டிய கைகளை கூட ஓட்ட வைத்துவிடும் மூலிகைகள் இருந்தன என்று படித்திருக்கிறோம்.

பண்டைய காலத்தில் வைத்திய துறையில் இந்தியர்கள் மிகவும் சிறப்பான இடத்தில் இருந்திருக்கின்றனர்.

அறுவை சிகிச்சை, அவயமாற்று சிகிச்சை என்கின்ற பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை இந்திய சித்த வைத்தியர்கள் செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் சித்தர்கள் என்று அழைக்கப்பட்ட அனைவரும் இந்த வைத்திய சாஸ்திரம் தெரிந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

தன்வந்திரி, போகர், தேரையர் போன்ற சித்தர்களை பற்றியும், சுஷ்ருதா, சர்க்கா
போன்ற வைத்தியர்கள் பற்றியும், அவர்களின் நூல்கள் பற்றியும் இன்று நாம்
அறிந்து வைத்திருக்கிறோம்.

இவ்வுலகில் அதிக அளவில் மக்கள் மடிந்து விழுந்தது நாடுகளுக்கு இடையே
ஏற்பட்ட போரினால் அல்ல. கிராமம் கிராமாக லட்ச்சக்கணக்கான மக்கள் மடிந்து
மறைந்தது அவர்களை தாக்கிய நோய்களாலேயே என்று கூறுகிறது வரலாறு.



ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  1
அம்மை, பேதி, கொள்ளை போன்ற நோய்களினால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்திருக்கின்றனர்.

சுமார் 12,000 வருட காலத்திற்கு முன் ஒரு மனிதனுக்கு நோய் வந்தால் அவனை
பேய் பிடித்திருக்கிறது என்று மக்கள் நம்பினார்களாம். அவன் மண்டை ஓட்டை
துளை செய்து ஓட்டை போட்டால் பேய் ஓடிவிடும் என்று கூர்மையான ஆயுதத்தால்
ஓட்டை போடுவார்களாம்.

நோயாளி ரத்தம் வழிந்து செத்து போவாராம். உலகின் பெரும்பான்மையான
நோயாளிகளுக்கு மிகவும் மோசமான, கடுமையான சிகிச்சை முறைகளே நடந்து
வந்திருக்கிறது.

கிருஸ்து பிறப்பதற்கு சுமார் நானூரு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹிப்போ
கிராட்டஸ் என்பவர்தான் நோய் நொடிகளுக்கு பேய் பிசாசுகளின் மேல் காரணத்தை
போடுவது முட்டாள்த்தனம் என்று சுட்டிக் காட்டிய மருத்துவர்.

இறந்த உடல்களை அறுத்துப் பார்த்து எதனால் அவர்கள் இறந்தார்கள் என்பதை
கண்டுபிடிக்க அந்த காலத்தில் வழியில்லை. அப்படி செய்தால் மதத்துரோகம் என்று
சொல்லப்பட்டதால் மதத்தலைவர்களை எதிர்க்கும் துணிவு யாருக்கும் வரவில்லை.

துருக்கியை சேர்ந்த கேலன் என்ற மருத்துவர்தான், நம் உடலில் ரத்தம்,
பித்தநீர், சளி என்ற திரவங்கள் இருக்கின்றன. இவை குறைந்தாலோ, கூடுவதாலோ
நோய்கள் உருவாகின்றன என்றார்.

கிட்டத்தட்ட இவரது கூற்று நம் சித்தர்கள் உடலில் நோய் ஏற்படுவதற்கு வாதம்
பித்தம் சிலேத்துமம் என்ற நாடிகளின் துடிப்புகள் குறைவதும், கூடுவதும்தான்
என்று சொன்னதை போலவே இருக்கிறது.

உடம்பில் இருக்கும் கார அமில தன்மை கொண்ட திரவங்களின் ஏற்ற இறக்கங்களே
நோய்களுக்கு காரணம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. கேலன் அறிவாளி என்ற
நம்பிக்கை மக்களிடையே இருந்ததால் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள்.

மதத்தலைவர்களின் அதிகாரங்கள் சரியாய் ஆரம்பித்த காலத்திற்கு பின்தான்
இறந்து போன உடலை வைத்து உடல் கூறுகளை பற்றி (அனாடமி) படிக்க வழி பிறந்தது.

அக்காலத்தில் வைத்தியர்கள் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போதும், அறுவை சிகிச்சை செய்யும் போதும் மிக கடுமையான முறைகளை கையாண்டனர்.

நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டால் சத்தம் வெளியில்
கேட்காதவாறு அமைக்கப்பட்ட அறையில், அந்த நோயாளியை படுக்க வைத்து, மருத்துவ
மனையின் ஊழியர்கள் ஒன்றாய் சேர்ந்து நோயாளி முண்டி திமிர முடியாமல் இறுக
பிடித்துக் கொள்வார்களாம். அதன் பின் மருத்துவர் அறுவை சிகிச்சையை
ஆரம்பிப்பாராம்.

1791இல் லண்டன் மருத்துவமனையில் இந்த முறைதான் பின்பற்றபட்டு வந்தது. பல நாடுகளிலும் இதே முறைதான்.

அதன் பிறகு மூலிகையை பயன்படுத்தி முகர செய்து மயக்கமடைய செய்து அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர்.

1591இல் எடின்பர்க் நகரில் கியுபொன் மேக் அயனே என்ற அம்மையார் பிரசவ
காலத்தில் வலி தாங்க முடியாமல், எனக்கு வலிக்காமல் இருக்க
மருந்து கொடுங்கள் என்று கேட்டாராம்.

ஆனால் மதவெறியர்கள்...... கடவுள் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்த தண்டனைதான்
வலி. அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் தண்டனை தருவோம் என்று கூறி,
அப்பெண்ணை இழுத்து வந்து உயிரோடு புதைத்து விட்டார்களாம்.

பிற்காலத்தில் முதலாம் எலிசபத் அரசி தன் பிரசவத்தின் போது மயக்க மருந்து
தாருங்கள் என்று கேட்டாராம். கிரேக்க நாட்டு ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர்
டயோஸ் கார்டிஸ் என்பவர்தான் மயக்க மருந்து என்ற வார்த்தையை முதலில்
பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.

1275இல் ரேமான்ட் லல்லியஸ் என்பவர் சலப்பூரிக் ஆசிட்டில் ஆல்கஹாலை கலந்து ஒரு மருந்து கண்டுபிடித்தார்.

இதனை 1695இல் பாரா செல்சஸ் என்ற சுவிஸ் நாட்டு மருத்துவர் வலிநிவாரணியாக பயன்படுத்தி சிகிச்சை செய்திருக்கிறார்.

1772இல் இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் பிரிஷ்டிலே என்பவர் நைட்ரஸ் ஆக்ஷ்சைடு என்ற மயக்க மருந்தை கண்டுபிடித்து பயன்படுத்திருக்கிறார்.

இவர்தான் பிராணவாயு, கரியமில வாயுவை கண்டுபிடித்தவர். இவர் மத துரோகம்
செய்ததாக புகார் கூறப்பட்டதால் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து விட்டார்.

1815 இல் ஜியார் சியாவில் பிறந்த கிராம்போர்ட் லாங் என்ற மருத்துவர் தன்
26ஆவது வயதில் அறுவைசிகிச்சைக்கு முதன் முதல் மயக்க மருந்தை உபயோகித்தார்.

ஈதர் மயக்க மருந்தை மூக்கில் முகர வைத்து மயக்கம் பெற வைத்து அதன் பின்
அறுவை சிகிச்சை செய்தார். பிரசவத்திற்கும் மயக்க மருந்தை உபயோக்கிய
ஆரம்பித்தவர் இவர்தான்.

ரத்தம் இதயத்தில் சுத்தகரிக்கப் பட்டு ரத்த குழாய் மூலம் உடல் முழுவதும்
செல்கிறது என்பதை எல்லாம் அக்காலத்தில் யாரும் நம்பவில்லை. ரத்தம் உடலில்
தேங்கி இருக்கிறது என்றே நினைத்தனர்.

1628 இல் வில்லியம் ஹார்வி என்ற அறிவியல் மேதை தான் ரத்த ஓட்டம் பற்றியும்
அதனால் ஏற்ப்படும் இதய துடிப்பை பற்றியும் உலகிற்கு அறிவித்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூச்ச சுபாவம் கொண்ட ரேனே என்ற பிரஞ்சு
மருத்துவர் பெண்களின் மார்பில் காதை வைத்து அவர்களின் இதய துடிப்பை கேட்க
மிகவும் கூச்சப்பட்டார். தனது சௌகரியர்த்தாக இவர் கண்டுபிடித்ததுதான்
ஸ்டெதாஸ்கோப்.

பிறகு ராண்ட்ஜன் என்பவர் எக்ஸ்ரேயை கண்டுபிடித்தார். 1928இல் ஸ்காட்லாந்தை
சேர்ந்த அலக்ஸ்சான்டர் பிளமிங் என்ற மருத்துவர் பென்சிலின் மருந்தை
கண்டுபிடித்தார். அது கிரிமி கொல்லியாக செயல்படுவதை அறிந்தார்.

தொடர்ந்து இன்னும் சில மருந்துவர்களும் இதில் தொடர்ந்து ஆய்வினை
மேற்கொண்டனர். முடிவில் நோய்களுக்கு எதிராக போர்புரிய மனிதனுக்கு
பென்சிலின் என்ற ஆயுதம் கிடைத்தது.

இன்று மருத்துவ துறை அபாரமான வளர்ச்சியை பெற்று திகழ்கிறது. கிட்னி, இதயம்
போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டு செலலிழந்து போனவர்களும் மாற்று
உறுப்புகளை, இறந்து போனவர்களிடம் இருந்து சில மணி நேரங்களுக்குள் எடுத்து
பொருத்தி நோயாளிகளின் உயிர்களை காத்து விடுகின்றனர்.

இப்போது செயற்கை ரத்தத்தை உருவாக்கி விட்டோம் என்று அறிவித்துள்ளனர். எதிர்
காலத்தில் செயற்கை இதயம், செயற்கை கிட்னி போன்றவைகளும் கிடைக்கலாம்.

அறிவியல் முன்னேறி கொண்டிருந்தாலும் புது புது நோய்களும் உருவாகிக் கொண்டே
இருக்கின்றன. ஆய்வாளர்களும் அதற்க்கான மருந்தினை காணும் முயற்ச்சியில்
ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனாலும் மருந்துகள் கண்டுபிடிப்பதற்குள் சில ஆயிரம் உயிர்கள் காப்பாற்றபடாமல் போகின்றன.

-மதிவாணன்
jothida sudaroli





ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Mஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Uஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Tஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Hஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Uஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Mஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Oஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Hஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Aஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Mஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Eஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 20, 2013 12:35 pm

அருமையிருக்கு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Mar 20, 2013 5:42 pm

அருமையான தகவல்கள்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 20, 2013 9:07 pm

வெட்டிய கைகளை கூட ஓட்ட வைத்துவிடும் மூலிகைகள் இருந்தன என்று படித்திருக்கிறோம்.

வேடர்கள் வேட்டைக்கு சென்று தாங்கள் வேட்டையாடிய மிருகங்களை (முயல், மான்) வெட்டி பங்குகளாகப் பிரித்து அருகிலுள்ள ஒரு செடியிலுள்ள சிறு கிளைகளை ஒடித்து அதில் தங்களது மாமிசங்களைக் கட்டிக் கொண்டு வீட்டிற்குச் சென்றனர். சில மணி நேரங்கள் கழித்து அவற்றைப் பிரித்தால் வெட்டப்பட்ட மாமிசங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிசயித்தனர். அந்த செடியின் இலைகளைப் பறித்து அரைத்து கை, கால் முறிந்தவர்களுக்கு கட்டுப் போட்டனர். ஆச்சரியத்தக்க வகையில் குணமடைந்தது.

அவர்கள் தான் தமிழகத்தின் பிரபலமான புத்தூர் எலும்பு முறிவு வைத்தியசாலையாகும். இவர்கள் எக்ஸ்ரே எடுத்து மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதில்லை. ஆனால் மருத்துவர்கள் இதைக் காரணம் காட்டி இவர்கள் மருத்துவம் தவறு எனக் கூறுகின்றனர்.

இவர்கள் இந்த மூலிகையை பொதுமக்களும் அறியும் வகையில் செய்திருந்தால் அது மிகப் பயனுள்ளதாக இருந்திருக்கும். சித்த மருத்துவம் அழிந்ததற்குக் காரணம் மருத்துவர்கள் அவர்கள் பயன்படுத்தும் மூலிகைகளை ரகசியமாக வைத்திருந்ததுதான்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Mar 20, 2013 10:19 pm

சிவா wrote:

இவர்கள் இந்த மூலிகையை பொதுமக்களும் அறியும் வகையில் செய்திருந்தால் அது மிகப் பயனுள்ளதாக இருந்திருக்கும். சித்த மருத்துவம் அழிந்ததற்குக் காரணம் மருத்துவர்கள் அவர்கள் பயன்படுத்தும் மூலிகைகளை ரகசியமாக வைத்திருந்ததுதான்!

உண்மை உண்மை உண்மை தகவலுக்கு நன்றி அண்ணா




ஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Mஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Uஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Tஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Hஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Uஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Mஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Oஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Hஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Aஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Mஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  Eஆதிகால மருத்துவர்கள் ஒரு அறிமுகம்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக