ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா!

3 posters

Go down

இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா! Empty இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா!

Post by சிவா Tue Mar 19, 2013 1:50 am



சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது சென்னை சி.ஐ.டி., காலனி இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகிய மூவரும் நேற்று மாலை இரண்டரை மணி நேரம் சந்தித்து பேசினர். நீண்ட நேரம் பேசியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் நடந்த இந்த, "டிராமா' இலங்கை தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை தேவை என்ற, இரு கோரிக்கைகளை, பார்லிமென்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என, கருணாநிதி நேற்று திடீரென புதுக் கோரிக்கையையும் விடுத்தார். "இந்த கோரிக்கையை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தெரிவித்து முடிவு எடுக்கப்படும்' என, குலாம்நபிஆசாத் கூறி விட்டு, டில்லிக்கு பறந்ததால், இந்த சந்திப்பு, "புஸ்ஸ்' ஆகிவிட்டது. இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க்குற்றம், இனப்படுகொலை என, அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.நா. மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தனித்தனியாக தி.மு.க., தலைவர் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.

இலங்கைக்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்தில் மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐ.மு., கூட்டணியில் தி.மு.க., நீடிப்பது சந்தேகம் என, கருணாநிதி மிரட்டல் விடுத்தார். மேலும், தன்னை சமரசம் செய்வதற்கு, டில்லி மேலிடம் சாபில் தூதர் யாரும் வரவில்லை என்பதால், கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, சோனியா சார்பாக, கருணாநிதியை சமரசம் செய்து, ஐ.மு., கூட்டணியில் தி.மு.க., வை நீடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே. அந்தோணி, குலாம்நபிஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் வந்தனர். கருணாநிதியுடன், மத்திய அமைச்சர்கள் மூவரும், இரண்டரை மணி நேரம் சந்தித்து பேசினர்.

அவர்களின் சந்திப்பு முடிந்த பின் வெளியே வந்த குலாம்நபிஆசாத், நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர், சோனியாவுக்கு கருணாநிதி, இரு கடிதங்களை எழுதினார். அந்தக் கடிதங்களில் உள்ள விவரங்கள் குறித்து கருணாநிதியிடம் விவாதித்தோம். தீர்மானங்களில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி முன் வைத்தார். அவரது கோரிக்கையை பிரதமர், சோனியாவிடம் எடுத்துச்சொல்லுவோம். அவர்கள் இது குறித்த முடிவை அறிவிப்பர், என்றார்.

கருணாநிதி கூறியதாவது:
இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக பிரகடனப்படுத்த வேண்டும். இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றி, சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை தேவை ஆகிய, இரு கோரிக்கைகளை பார்லிமென்டில் உடனடியாக தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்தோம். அதற்கு அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்களுடைய ஒப்புதல் நிறைவேற்றினால் தான் காங்கிரசுக்கும், தி.மு.க., வுக்கும் உள்ள இறுக்கம் குறையும், என்றார்.

மத்திய அரசு முடிவு எப்போது? "இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் இறுதி வரைவு தீர்மானத்தை படித்த பின், இந்த விஷயத்தில், மத்திய அரசு, தன் முடிவை அறிவிக்கும்' என, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறினார். அவர் தெரிவித்ததாவது: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியா என்ன நிலை எடுக்கும் என்பதை, தற்போது தெரிவிக்க முடியாது. தீர்மானத்தின் நகல், இன்று கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக, ஐ.நா.,வின் இந்திய பிரதிநிதி, திலீப் சின்காவுக்கு, டில்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளிடம், அவர் விளக்குவார். இதன்பின், அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து, முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு, அந்த அதிகாரி கூறினார்.

அரசுக்கு ஆபத்து இல்லையாம்: ""அமைச்சரவையிலிருந்து விலகுவோம் என்ற, தி.மு.க.,வின் அச்சுறுத்தலால், மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. அரசு நிலையாக உள்ளது. ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக முடிக்கும்,'' என, காங்., தகவல் தொடர்பாளர், ரஷீத் ஆல்வி நேற்று கூறினார். டில்லியில் அவர் மேலும் கூறுகையில், ""தி.மு.க.,வுடன் எந்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது தீர்க்கப்படும் என, நம்புகிறோம். இலங்கைக்கு எதிரான, தீர்மான விவகாரத்தில், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டே, மத்திய அரசு முடிவெடுக்கும்,'' என்றார். இதற்கிடையில், இலங்கை தமிழர் விவகாரம், தமிழகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து உள்ளதால், இலங்கையுடனான, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான, செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை, வரும், 25ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

தினமலர்


இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா! Empty Re: இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா!

Post by ராஜு சரவணன் Tue Mar 19, 2013 7:13 am

இந்த ஆளால ஒரு புள்ள கூட ஆட்ட முடியாது. அப்பறம் எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்.

இவர் இப்படியே இலங்கை பிரச்சனையை வைத்து மத்திய அரசை பிளாக்மெயில் பண்ணி பண்ணி தமது உறவினர்களின் 2G உழல் பிரச்சனைகளை ஒன்றும் இல்லாமல் ஆக்குவது இவரின் குறிக்கோள்.

உங்களுக்கே தெரியுமே என்ன ஆச்சு 2G வழக்கு அவ்வளவு தான்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா! Empty Re: இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா!

Post by mbalasaravanan Tue Mar 19, 2013 1:42 pm

அவர் நடிப்புக்கு ஆஸ்கார் கூட கம்மி தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா! Empty Re: இலங்கை விவகாரத்தில், பேச்சு வார்த்தை என்ற பெயரில் கலைஞர் நடத்திய டிராமா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum