Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
+5
ராஜு சரவணன்
ரா.ரமேஷ்குமார்
பூவன்
சிவா
eraeravi
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
பரதேசி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
இயக்கம் பாலா .
பாலா படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு அதனால் முதல் நாளே திரையரங்கம் சென்று பார்த்தேன் .இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு காட்சிகளில் நேர்த்தி வைப்பவர் இயக்குனர் பாலா .சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ,தேயிலைத் தோட்டத்திற்கு கொத்தடிமையாக மக்களை கங்காணி மூலம் கடத்தி வந்து மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கி இன்னல் படுத்தும் கதை .முதல் பாதி சிறு சிறு நகைச்சுவையுடன் படம் செல்கின்றது .சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வசனம் கிராமிய மணம் கலந்து படத்திற்கு சுவை கூட்டி உள்ளது .இசை ஜி வி .பிரகாஷ் பின்னணி இசை மிக நன்று. .படம் தொடங்கும் போது கிராமத்தை காட்டும் போது ஒருவர் கூட பார்க்காமல் அவரவர் அவர் வேலையை பார்பதுப்போல படம் பிடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார் .பாலா .மிகச் சிறப்பான ஒளிப்பதிவு .
கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா மிக நன்றாக நடித்துள்ளார் ".புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்ற பொன்மொழியை மெய்ப்படுத்தும் விதமாக அவரது தந்தை முரளியை மிஞ்சும் விதமாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது உறுதி .ஊர் மக்களுக்கு தமுக்கு அடித்து செய்தி சொல்லும் அதர்வா.தேயிலைத் தோட்டத்து கொத்தடிமையாக பின் போகிறார் .தேயிலைத் தோட்டத்து கொடுமையில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டதும் தண்டனையாக குதிங்கால்
நரம்பை விட்டி விடும் காட்சி மிகவும் கொடுமை .மிக நன்றாக நடித்துள்ளார் .
அதர்வாவை ஊர் அழைக்கும் பெயர் ஒட்டுப்பொறுக்கி ஆனால் அவர் வைத்துக் கொண்ட பெயர் ராசா .ஊருக்கு உழைக்கும் அப்பாவியாக வருகிறார் .மெல்லிய காதல் .காதலியின்
அம்மா எதிர்ப்பு .என் மகளை மறந்து விட்டேன் நினைக்க மாட்டேன் என்று ஊர் முன்னிலையில் சூடம் அணைத்து சத்தியம் கேட்கும் போது ,உடன் அதர்வா பாட்டி வந்து சூடம் அணைத்து பேரனை காப்பாற்றுகிறார் .பாட்டி பாத்திரம் மிக நன்று .தாடி வைத்து பெரியப்பாவாக வருபவர் .ஊர் மக்கள் ,தேயிலைத் தோட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவராக நடிப்பவர் .கங்காணி மற்றும் ஆங்லேயர்கள் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளனர் .அனைவரிடம் பாலா நன்கு வேலை வாங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
படம் முடிந்து வெளியே வரும்போது இனம் புரியாத சோகம் மனதை தொற்றிக் கொள்கிறது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு .நடந்த உண்மை கதையை இப்போது படம் எடுக்க துணிவு வேண்டும் .படம் முழுவதும் கதை நடந்த காலத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர் .பழைய காலத்து கார் ,பழைய காலத்து முறையில் தலைமுடி ஊர் மக்கள் அனைவருக்கும் உள்ளது .படம் முழுவதும் படம் பார்ப்பதுபோல இல்லாமல் கண் முன்னே நிஜ நிகழ்வை பார்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் பாலா வெற்றி பெறுகின்றார் .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .
அன்று நம் மக்கள் வெள்ளையர்களிடம் எப்படி அடிமைப்பட்டு இருந்தனர் என்பதை விளக்கி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் .இந்தப்படம் வேறு மாதிரி .புது மாதிரி .
கதாநாயகியும் மிக நன்றாக நடித்து உள்ளார் .பிம்பங்களை உடைத்து பாத்திரமாகவே அனைவரும் மாறி உள்ளனர் .
இயக்குனர் பாலாவின் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெரும் .கதையே இன்றி நடிகையின் சதையையும் ,நடிகரின் நம்ப முடியாத சண்டையையும் மட்டும் நம்பி படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம் .
உலகத் தரத்தில் வந்துள்ளது .உலகப்பட விழாவில் இடம் பெற்றால் வெற்றி பெறும் .உண்மை நிகழ்வுகளின் வலியை வெண்திரையில் உணர்த்தும் படம் .
தினம் பல முறை தேநீர் அருந்துகிறோம் .ஆனால் தேயிலைத்தோட்டது தொழிலாளர்களின் உழைப்பை உணர வைக்கும் படம் .
அன்று நமை ஆண்ட வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற முறையில், விலங்கு போல நடந்து கொண்ட முறையையும் .,ஆதிக்க மனப்பான்மையும் நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாலா .அன்று இருந்த வெள்ளையர் ஆதிக்கம் ஒழிக்கப்படாலும் .இன்று வேறு வடிவில் வெள்ளையர் ஆதிக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது .என்பதை உணர முடிந்தது .
மூட நம்பிக்கைகள் மிகுந்த தமிழ்த் திரைப்படத்துறையில் பரதேசி என்று பெயர் வைத்த பாலாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
இயக்கம் பாலா .
பாலா படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு அதனால் முதல் நாளே திரையரங்கம் சென்று பார்த்தேன் .இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு பிறகு காட்சிகளில் நேர்த்தி வைப்பவர் இயக்குனர் பாலா .சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ,தேயிலைத் தோட்டத்திற்கு கொத்தடிமையாக மக்களை கங்காணி மூலம் கடத்தி வந்து மனிதாபிமானமற்ற முறையில் வேலை வாங்கி இன்னல் படுத்தும் கதை .முதல் பாதி சிறு சிறு நகைச்சுவையுடன் படம் செல்கின்றது .சாகித்ய அகதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வசனம் கிராமிய மணம் கலந்து படத்திற்கு சுவை கூட்டி உள்ளது .இசை ஜி வி .பிரகாஷ் பின்னணி இசை மிக நன்று. .படம் தொடங்கும் போது கிராமத்தை காட்டும் போது ஒருவர் கூட பார்க்காமல் அவரவர் அவர் வேலையை பார்பதுப்போல படம் பிடித்து படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி விடுகிறார் .பாலா .மிகச் சிறப்பான ஒளிப்பதிவு .
கதாநாயகனாக நடித்துள்ள அதர்வா மிக நன்றாக நடித்துள்ளார் ".புலிக்குப் பிறந்தது பூனையாகாது" என்ற பொன்மொழியை மெய்ப்படுத்தும் விதமாக அவரது தந்தை முரளியை மிஞ்சும் விதமாக மிகச் சிறப்பாக நடித்துள்ளார் .தேசிய விருது உறுதி .ஊர் மக்களுக்கு தமுக்கு அடித்து செய்தி சொல்லும் அதர்வா.தேயிலைத் தோட்டத்து கொத்தடிமையாக பின் போகிறார் .தேயிலைத் தோட்டத்து கொடுமையில் இருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது காவலர்களிடம் பிடிபட்டதும் தண்டனையாக குதிங்கால்
நரம்பை விட்டி விடும் காட்சி மிகவும் கொடுமை .மிக நன்றாக நடித்துள்ளார் .
அதர்வாவை ஊர் அழைக்கும் பெயர் ஒட்டுப்பொறுக்கி ஆனால் அவர் வைத்துக் கொண்ட பெயர் ராசா .ஊருக்கு உழைக்கும் அப்பாவியாக வருகிறார் .மெல்லிய காதல் .காதலியின்
அம்மா எதிர்ப்பு .என் மகளை மறந்து விட்டேன் நினைக்க மாட்டேன் என்று ஊர் முன்னிலையில் சூடம் அணைத்து சத்தியம் கேட்கும் போது ,உடன் அதர்வா பாட்டி வந்து சூடம் அணைத்து பேரனை காப்பாற்றுகிறார் .பாட்டி பாத்திரம் மிக நன்று .தாடி வைத்து பெரியப்பாவாக வருபவர் .ஊர் மக்கள் ,தேயிலைத் தோட்டத்தில் மருத்துவம் படிக்காமல் மருத்துவராக நடிப்பவர் .கங்காணி மற்றும் ஆங்லேயர்கள் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்துள்ளனர் .அனைவரிடம் பாலா நன்கு வேலை வாங்கி உள்ளார் .பாராட்டுக்கள் .
படம் முடிந்து வெளியே வரும்போது இனம் புரியாத சோகம் மனதை தொற்றிக் கொள்கிறது சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு .நடந்த உண்மை கதையை இப்போது படம் எடுக்க துணிவு வேண்டும் .படம் முழுவதும் கதை நடந்த காலத்தை கடை பிடிக்க மிகவும் சிரமப்பட்டுள்ளனர் .பழைய காலத்து கார் ,பழைய காலத்து முறையில் தலைமுடி ஊர் மக்கள் அனைவருக்கும் உள்ளது .படம் முழுவதும் படம் பார்ப்பதுபோல இல்லாமல் கண் முன்னே நிஜ நிகழ்வை பார்பதுப்போன்ற உணர்வை ஏற்படுத்தி இயக்குனர் பாலா வெற்றி பெறுகின்றார் .
.
தேயிலைத் தொழிலாளர்களின் வேதனையை சிரமத்தை நன்கு படமாக்கி உள்ளார் .பாலாவின் வெற்றிக்குக் காரணம் அவரது படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் .இந்தப் படத்திலும் மிக இயல்பு உள்ளது .வழக்கமான திரைப்படங்களில் கோழையாக இருக்கும் கதாநாயகன் வீரனாக மாறி வில்லனை கதை முடிப்பான் .ஆனால் இந்தப்படத்தில் வில்லன் சாக வில்லை வழக்கமான முடிவு இல்லை .மசாலாப்படம் பார்த்து வளர்ந்த ரசிகர்களை மற்றொரு உயர்ந்த தளத்திற்கு அழைத்து செல்லும் முயற்சி இது .
அன்று நம் மக்கள் வெள்ளையர்களிடம் எப்படி அடிமைப்பட்டு இருந்தனர் என்பதை விளக்கி எத்தனையோ படங்கள் வந்து இருந்தாலும் .இந்தப்படம் வேறு மாதிரி .புது மாதிரி .
கதாநாயகியும் மிக நன்றாக நடித்து உள்ளார் .பிம்பங்களை உடைத்து பாத்திரமாகவே அனைவரும் மாறி உள்ளனர் .
இயக்குனர் பாலாவின் வெற்றிப்பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெரும் .கதையே இன்றி நடிகையின் சதையையும் ,நடிகரின் நம்ப முடியாத சண்டையையும் மட்டும் நம்பி படம் எடுக்கும் மசாலா இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய நல்ல படம் .
உலகத் தரத்தில் வந்துள்ளது .உலகப்பட விழாவில் இடம் பெற்றால் வெற்றி பெறும் .உண்மை நிகழ்வுகளின் வலியை வெண்திரையில் உணர்த்தும் படம் .
தினம் பல முறை தேநீர் அருந்துகிறோம் .ஆனால் தேயிலைத்தோட்டது தொழிலாளர்களின் உழைப்பை உணர வைக்கும் படம் .
அன்று நமை ஆண்ட வெள்ளையர்கள் மனிதாபிமானமற்ற முறையில், விலங்கு போல நடந்து கொண்ட முறையையும் .,ஆதிக்க மனப்பான்மையும் நன்கு காட்சிப்படுத்தி உள்ளார் .பாலா .அன்று இருந்த வெள்ளையர் ஆதிக்கம் ஒழிக்கப்படாலும் .இன்று வேறு வடிவில் வெள்ளையர் ஆதிக்கம் வந்துகொண்டுதான் இருக்கிறது .என்பதை உணர முடிந்தது .
மூட நம்பிக்கைகள் மிகுந்த தமிழ்த் திரைப்படத்துறையில் பரதேசி என்று பெயர் வைத்த பாலாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Last edited by eraeravi on Sat Mar 16, 2013 3:38 pm; edited 1 time in total
Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டார் பாலா .
இதுதான் அனைவரின் கருத்தாகவும் உள்ளது. படம் பார்த்துத்தான் உண்மை நிலவரம் அறிய முடியும். விமர்சனத்திற்கு நன்றி அண்ணா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா . Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
விமர்சனம் அருமை , படம் பார்க்க தூண்டுகிறது
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
நேற்று தான் பார்தேன் நல்ல படம் . என்னை பொறுத்தவரை இப்படத்திற்கு 100 க்கு 70 மதிப்பெண்கள் தரலாம்.
Re: பரதேசி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . இயக்கம் பாலா .
இன்னும் பார்க்கவில்லை, விமர்சனத்தைப் பார்த்தால் அருமையாக இருக்கும்போல் தெரிகிறது.
நன்றிகள்.
நன்றிகள்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குற்றம் கடிதல் ! இயக்கம் பிரம்மா ! திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» மதுபானக் கடை இயக்கம் திரு .கமலக்கண்ணன் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி இயக்கம் : திரு. ஏ.எல். விஜய்
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|