ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!

2 posters

Go down

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Empty வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!

Post by Powenraj Sat Mar 16, 2013 12:36 pm

http://1.bp.blogspot.com/-lF3tGTOrbw4/UUPf4ovvFdI/AAAAAAAABwg/i5x3PGhD-_k/s1600/land_img.jpg
பல டிவி சேனல்களில் இப்போதெல்லாம் அடிக்கடி தென்படும் விளம்பரங்கள் இவை...
இருபதே அடியில் சுவையான குடிநீர்...
காற்றோட்டமான மனைப்பிரிவு... (அதுசரி... அக்கம்பக்கத்தில எதுவுமேயில்லாத காட்டுக்குள் காற்றோட்டத்துக்கு என்ன குறைச்சல்?!!!)
உடனே புக் செய்பவர்களுக்கு பத்திரப்பதிவு, பட்டா, EC முற்றிலும் இலவசம்...
மனைக்கு அருகிலேயே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, கோவில், மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள்...
முழுவதும் கம்பிவேலி அமைக்கப்பட்டது...
நேஷனல் ஹைவேஸிலிருந்து மிக அருகில்...
சென்னை கோயம்பேடுக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வசதி...
உடனே வீடு கட்டி குடியேறலாம்...
இன்றைய சிறு முதலீட்டில் நீங்கள் நாளைய கோடீஸ்வரர்...
பலநேரங்களில் இந்த விளம்பரங்களைப்பார்த்து நான்கூட யோசித்திருக்கிறேன் அங்கெல்லாம் சில மனைகள் வாங்கிப்போடலாம் என்று...
தவறில்லை... ஆனால் இதில் நூறு சதவீதம் நம்புவதற்குமில்லை... இது போன்ற பிஸினெசில் ஏமாற்றுக்காரர்களும் கலந்திருப்பது நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லை. அதிலும் மிகவும் குறைந்தவிலையில் எங்கோ ஆள்நடமாட்டமில்லாத காட்டுக்குள் விற்கப்படும் மனைகளுக்கு பெரும்பாலும் ஏழைகளும், பாமர மக்களும்தான் பலிகடா என்பதால் ஏஜெண்டுகளுக்கு கொண்டாட்டம்தான்.
சரி, மனைவாங்கும்போது கவனிக்கவேண்டியவைகளும், எதிர்கொள்ளவிருக்கும் ரிஸ்க்குகளும் என்னென்ன?...
* சில மனைப்பிரிவுகளில் ஒரே இடம் நாலைந்துபேருக்கு பதிவுசெய்யப்படுவது ஒருவழியான ஏமாற்றுவேலை. பெரும்பாலான மனைப்பிரிவுகள் ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் இருப்பதால் வாங்கியவர்கள் அதில் வீடு கட்ட பலஆண்டுகள் ஆகும் என்பதால் இந்தவிதமான பிரச்சினைகள் வெளியில்வர பல ஆண்டுகள் ஆகும். ஆதலால் கூடியமட்டும் உடனடியாக வீடுகட்டி குடியேறும் வகையில் உள்ள மனைப்பிரிவுகளிலேயே இடம் வாங்குவது நல்லது.
* மனைப்பிரிவை கண்டிப்பாக பார்வையிட்டு சுற்றியிருக்கும் நிலஅமைப்புகளை கவனித்து அதன்பின்னர் மனைவாங்குவதுகுறித்து முடிவெடுங்கள். ஏனென்றால் பெரும்பாலான மனைப்பிரிவுகள் விவசாயநிலங்கள் என்பதால் தாழ்வான மற்றும் நீர்தேங்கும் வகையிலான நிலப்பகுதியாக இருக்கலாம்.மனைகளை வாங்கும்போது மழைக்காலமாக இருந்தால் அதன் நீர்தேங்கும் நிலை குறித்து நமக்கே தெரிந்துவிடும். ஆனால் நல்ல வெயில் காலத்தில் மனைகளை பார்வையிட்டு வாங்கும்போது அதன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து அறிந்துகொள்வதுநல்லது.
* சிலமனைப்பிரிவுகள் விவசாயநிலம் என்ற நிலையிலிருந்து கன்வெர்ஷன் செய்யப்படாமல்இருக்கலாம். பலபேருக்கு இந்த கன்வெர்ஷன் என்ற விஷயம் தெரியாது. ஆகவே நிலம் வாங்கும் முன் பத்திரப்பதிவு அலுவலகத்திலோ அல்லது லோக்கல் பஞ்சாயத்து அலுவலகத்திலோ நீங்கள் வாங்க இருக்கும் மனைப்பிரிவு குறித்து விவசாயநிலமா?, வீடு கட்ட முடியுமா?, பஞ்சாயத்து / ஊராட்சி மற்றும் இன்னபிற அலுவலகங்களால் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவா என்பதையும் விசாரித்துக்கொள்வது நல்லது. ஏற்கனவே ஏஜெண்டுகளால் சரிகட்டப்பட்டிருப்பார்கள் என்றாலும்கூட ஒருமுறை லோக்கல் வி.ஏ.ஓ மற்றும் சர்வேயர்களிடம் விசாரிப்பதும் நல்லதுதான்.
* அதுபோலவே இருபதே அடியில்சுவையான குடிநீர், நாற்பதேஅடியில் சுவையான குடிநீர் என்பதெல்லாம் பெரும்பாலும் டூபாக்கூர்தான். ஒருமுறை எனது புராஜெக்ட் ஒன்றில் போர்வெல் பாயிண்ட் மார்க்கிங்க்குகாக வாட்டர் டிவைனர் ஒருவரை அழைத்திருந்தேன். அவர் கூறிய சில செய்திகள் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியளித்த ரகம். அவரது ரிலேஷன் ஒருவர் ரியல் எஸ்டேட் பிஸினெசில் இருக்கிறாராம். அவரது மனைப்பிரிவில் கிணறுபோல பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்தில் பள்ளம் அமைத்துக்கொள்வாராம். பெரும்பாலான மனைப்பிரிவு விசிட்டுகள் ஏஜெண்டுகளாலேயே இலவசவிசிட் என்று குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே நடத்தப்படுவதால் அந்த விசிட்டுகளுக்கு முந்தைய நாட்கள் அல்லது அந்த நாளின் காலையில் லாரியில் மினரல் வாட்டர் கொண்டுவந்து போர்வெல் அல்லது கிணறு போன்ற அமைப்புகளை நிரப்பிவிடுவார்களாம். மனைப்பிரிவை பார்வையிட வருவோர்கள் இந்தத்தண்ணீரைகுடித்துப்பார்த்துவிட்டுஅசந்துபோவது நடக்குமாம். ஆகவே அவர்கள் விசிட்களில் முதல்முறை செல்லும்போதே மனையின் வழிகளை மனதில் நிறுத்திக்கொண்டு மற்றுமொரு சாதாநாளில் நாமே தனியே சென்று மனைப்பிரிவை பார்வையிடுவது கண்டிப்பாகசெய்யவேண்டிய ஒன்று என்பதை மனதில் கொள்ளுங்கள். அவ்வாறு நாம்தனியே சென்று ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் மனைப்பிரிவை பார்வையிடுவது பல்வேறு ரகசியங்களை வெளிக்கொண்டுவந்து நம்மை உஷார்படுத்தலாம்.
* மனைவாங்கும்முன் அதன் டாக்குமெண்ட் நகல்கள் அனைத்தையும் கேட்டுவாங்கிஒருமுறையாவது உங்களுக்குத்தெரிந்த ஏதாவதொரு வக்கீலிடம் காண்பித்து லீகல் ஒப்பீனியன் எனப்படும் டாக்குமெண்ட் சரிபார்த்தலை செய்வது மிக அவசியம். டாக்குமெண்ட்டுகள் வாசிக்கும்போது நமது பார்வை வேறு, லாயர்களின் பார்வை வேறு என்பதால் இதன்மூலம் பல எதிர்கால வில்லகங்களை நிச்சயம் தவிர்க்கலாம்.
* செங்கல்பட்டும் சென்னைதான்... அரக்கோணமும் சென்னைதான்... என்ற கவர்ச்சியான விளம்பரங்களைநம்பி எங்கோ வெகுதூரத்தில் மனைவாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடனே வீடு கட்ட முடியாதவர்கள் மனை வாங்கும்போது முடிந்தளவு அடிக்கடி சென்று பார்த்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுமளவுக்கு உள்ள இடத்திலேயே மனை வாங்குவது நல்லது. அதேப்போல கண்ட கழுதைகள் எல்லாம் டி.வி.யில் தோன்றி விளம்பரப்படுத்துவதை மட்டும் நம்பாமல் நமது சுயபரிசோதனையில் மனையை வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுத்து வாங்குவதே சிறந்தது.


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Empty Re: வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!

Post by Powenraj Sat Mar 16, 2013 12:49 pm

* தனிப்பட்ட மனைகளை வாங்கும்போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த மனை பற்றியும் அந்த ஏரியா பற்றியும் விசாரித்து வாங்குவது நல்லது. ஏனெனில்நீங்கள் வாங்கப்போகும் மனையில் டாக்குமெண்ட்டிற்கு அப்பாற்பட்டு ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா என்பதும், அந்தப்பகுதியில் எதிர்காலஅரசாங்கத்திட்டங்கள் எதாவது வரவிருக்கிறதா என்பதும் இதுபோன்ற அக்கம்பக்கத்து விசாரணையின் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
* இது எல்லாவற்றுக்கும் மேலாக சிட்டியில் மனை வாங்குபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கம். ஒரு மனைக்கு நீங்கள் EC போட்டுப்பார்க்கும்போது அதில் ஒரு விஷயம் இருக்கும். இந்த EC அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்கள் எதற்கும் கட்டுப்படாதது என்று. இது சாதாரண விஷயமல்ல. மனை வாங்குபவர்கள் மிகமுக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமிது. நில உச்சவரம்பு சட்டம் என்று ஒன்றிருப்பது நம்மில் பலபேருக்குத்தெரியாது. Land Ceiling Act என்ற அந்த சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருந்த பலரது நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டிருக்கும். இதில் கொடுமை என்னவென்றால் நாம் போட்டுப்பார்க்கும் EC யில் இந்த விஷயங்கள் வராது. அதேப்போல் பத்திரப்பதிவு அலுவலகத்திலும் சீலிங் லேண்டு என்பதற்கான எந்தத்தகவலும் லின்க் செய்யப்படாததால் அவர்களும் அந்த நிலத்தை உங்கள் பெயரில் பதிவு செய்துகொடுப்பார்கள். உங்களிடம் பேரண்ட் டாக்குமெண்டிலிருந்து நீங்கள் உங்கள் பெயரில் பதிவு செய்தது வரையிலான அனைத்து டாக்குமெண்ட்டுகளும் இருந்தும் அந்த நிலத்திற்கு ஓனர் நீங்களல்ல. அது அரசு நிலம் என்பது எவ்வளவு கொடுமை?... நீங்கள் உச்சநீதிமன்றம்வரை சென்றாலும் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வராது. எப்போது நினைத்தாலும் அரசு நிலத்தை நீங்கள் ஆக்கிரமித்ததாகக்கூறி உங்கள் இடத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து வாங்கிய நிலம், எல்லா டாக்குமெண்ட்டுகளும் உங்கள் பெயரில் இருந்தும் உங்களுக்குச்சொந்தமில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம். இது பெரும்பாலான வக்கீல்கள்கூட மாட்டியிருக்கும் விஷயம் என்பது இதற்கான மனுகொடுக்கும் அலுவலகத்தில் குவிந்திருக்கும் மனுக்களை பார்க்கும்போதுதான் தெரிகிறது. சரி… இதில் ஏமாறாமல் இருப்பது எப்படி?... நிலம் வாங்கும் முன் EC, லீகல் ஒப்பீனியன்,லொட்டு லொசுக்கு இப்படி எல்லாவற்றையும் பார்க்கும் நாம் கையோடு சம்பந்தப்பட்ட நிலத்தின் சர்வே எண், தனிப்பட்டா ஆகியவற்றை அந்த ஏரியா வி.ஏ.ஓ மற்றும் சர்வேயர் ஆகியோரிடம் உறுதி செய்து அந்த இடம் சீலிங் இல்லை என்பதையும், எதிர்கால அரசாங்க புராஜெக்ட்டுகள் எதுவும் அந்த இடத்தில் வரவில்லை என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.
எல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் ஏமாற்றுக்காரர்களும் அல்ல.எல்லா ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் நம்பி வாங்குமளவுக்கு நல்லவர்களும் அல்ல. அதேப்போல வீடு கட்டுவதற்கென்று சிறுக சிறுக சேமித்து நிலம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கத்தான் இந்த முன்னெச்சரிக்கை பதிவே தவிர மற்றபடி எல்லோரும் கெட்டவர்கள், எல்லோரையும் சந்தேகப்படுங்கள் என்பதல்ல இந்தப்பதிவின் நோக்கம். அதேப்போல மேற்கூறிய விஷயங்கள் மட்டுமின்றி இதில் சொல்ல விட்டுப்போன இன்னும் பல விஷயங்கள்கூட இருக்கலாம்.
கவர்ச்சியான விளம்பரங்களையும், எதிர்காலத்திற்கான முதலீடு என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக்கொண்டும் தீர ஆராயாமல் உங்கள் சேமிப்பை கண்ட மனைகளின் மீது கொட்டாமல்... மனை வாங்கும்போது நன்றாக ஆராய்ந்து, யோசித்து உங்கள் முதலீட்டை சரியான வகையில் நிர்வகித்து பயன்பெறுங்கள் மக்களே.
ஆல் தி பெஸ்ட்...!
http://jeevanathigal.blogspot.com/2013/03/blog-post_16.html


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Empty Re: வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!

Post by Muthumohamed Sat Mar 16, 2013 9:51 pm

இன்றைய காலத்திற்கேற்ற பயனுள்ள பதிவு பகிர்வுக்கு மிக்க நன்றி



வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Mவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Uவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Tவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Hவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Uவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Mவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Oவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Hவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Aவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Mவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Eவீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே! Empty Re: வீட்டு மனை வாங்கப்போறீங்களா?... உஷார் மக்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உஷார் மக்களே.. உஷார்.. - மோசடிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம்!
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» தமிழக மக்களே உஷார்...! - வெளுத்து வாங்கப் போகும் கனமழை!
» உஷார் மக்களே: மளிகை, பெட்டிக் கடைகளில் 25 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு...
» சதுரங்க வேட்டை மோசடிகள் - உஷார் தமிழா உஷார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum