ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

3 posters

Go down

விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Empty விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

Post by சிவா Sat Mar 16, 2013 10:52 am



அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் 1893 செப்டம்பர் 11 ஆம் நாள் நடைபெற்ற “சர்வ சமயப் பேரவை’யில் விவேகானந்தர் நிகழ்த்திய இந்த சொற்பொழிவு, அவரது விவேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே!

இதயம் கனிந்த உங்கள் வரவேற்புக்கு பதிலளிப்பதற்கு, இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன்.

என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதை வெளியிடுவதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை. உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த சந்நியாசிகள் பரம்பரையின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

அனைத்து மதங்களின் தாய் மதமாகிய இந்துமதத்தின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் எனக்கு முன்பு சொற்பொழிவாளர்கள் பேசினார்கள். அவர்களில் சிலர், கிழக்கு நாடுகளிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மற்ற மதங்களை வெறுக்காத பண்பைப் பல நாடுகளுக்கும் எடுத்துச் சென்ற பெருமை தொலைவில் உள்ள நாடுகளிலிருந்து வந்திருக்கும் இவர்களையே சேரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள், அவர்களுக்கும் என் நன்றி.

பிற மதக்கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரண்டு பண்புகளை உலகத்திற்கு வழங்கிய ஒரு மதத்தைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.

“எந்த மதத்தையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும்’ என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, “எல்லா மதங்களும் உண்மை’ என்றும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

உலகிலுள்ள எல்லா நாடுகளாலும் எல்லா மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தங்கள் நாட்டைவிட்டு துரத்தப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.

ரோமானிய மக்களின் கொடுமையால், இஸ்ரேல் மக்களின் திருக்கோயில் சிதைந்து சீரழிந்தது. அப்போது எஞ்சியிருந்த இஸ்ரேல் மக்கள், அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்தார்கள். அவ்விதம் எங்களிடம் தஞ்சமடைந்த இஸ்ரேல் மக்களை, மனதார ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன்.

பெருமை மிக்க ஜொராஷ்டிரிய மதத்தைச் சேர்ந்தவர்களில் எஞ்சியிருந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்து, இன்றும் பாதுகாத்து வருகிற ஒரு மதத்தைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.

என் சகோதரர்களே! கோடிக்கணக்கான இந்திய மக்கள் நாள் தோறும், இன்றும் தொடர்ந்து ஒரு துதிப்பாடலைச் சொல்லி வருகிறார்கள். நான் என் சிறுவயதிலிருந்து சொல்லி வரும் அந்தத் துதிப்பாடலின் சில வரிகளை, இங்கு உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்:

“பல்வேறு ஆறுகள், பல்வேறு இடங்களில் தோன்றினாலும் முடிவில் அவை ஒரே கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல், பலவிதமான மனப்பான்மை கொண்டவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் நேரானவையாகவும் குறுகலானவையாகவும் தோற்றம் அளித்தாலும் இறைவா, முடிவில் அவை உன்னிடமே அழைத்துச் செல்கின்றன.’

இந்தப் பேரவை, இது வரையில் நடந்த மாநாடுகளில் மிகவும் சிறந்தது. இந்த மாநாடு கீதையில் சொல்லப்பட்டிருக்கும் பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்திருக்கிறது:

“யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன். மனிதர்கள் எப்போதும் என்னுடைய வழியையே பின்பற்றுகிறார்கள்.’

மத வேறுபாடுகளாலும், மதக்கொள்கைகளில் அளவுக்கு மீறிய பிடிவாதத்தாலும் ஏற்பட்ட மதவெறி, இந்த அழகான இறுக்கிப் பிடித்திருக்கிறது. அவை இந்தப் பூமியை வன்முறையால் நிரப்பியிருக்கிறது.

இது போன்ற வன்முறைகள் உலகத்தை இரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. அது நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டது. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாமல் இருந்திருந்தால் மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பல மடங்கு உயர்ந்த நிலை அடைந்திருக்கும்.

இத்தகைய கொடிய செயல்களுக்கு இப்போது அழிவு காலம் வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிடுவதற்கு மணியோசை முழங்கியது. அந்த மணியோசை எல்லா மதவெறிகளுக்கும் வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும் மக்களிடம் நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சுவாமி கமலாத்மானந்தர்


விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Empty Re: விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

Post by பாலாஜி Sat Mar 16, 2013 12:36 pm

விவேகானந்தர் நிகழ்த்திய இந்த சொற்பொழிவு சிறப்பாக உள்ளது
யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன். மனிதர்கள் எப்போதும் என்னுடைய வழியையே பின்பற்றுகிறார்கள்.’


சூப்பருங்க


சுவாமி கமலாத்மானந்தர் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Empty Re: விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

Post by mbalasaravanan Sat Mar 16, 2013 12:41 pm

மகிழ்ச்சி சூப்பருங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Empty Re: விவேகானந்தரின் சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum