புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_c1060 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_m1060 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_c1060 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_m1060 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_c1060 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_m1060 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_c1060 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_m1060 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :( Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் :(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 11, 2013 7:24 pm

காலம் தப்பிய மழை; காவிரியில் தண்ணீர் இல்லை; ஏரி, குளங்கள் வற்றி விட்டன... "என்னடா சோதனை இது?' என எண்ணும் வேளையில், பேராசிரியர் ஒருவர் சொல்கிறார்... 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இப்படி பஞ்சம் வரும் என்று! ஹிஸ்ட்டிரி ரிபீட்ஸ் - வரலாறு திரும்பும் என்கிற கோட்பாடு உண்மையானது... இன்று, பூமியின் மேற்பரப்பில் லட்சக்கணக்கான ஆழ் குழாய் கிணறுகளின் துளைகள்! நிலத்தடி நீர் மட்டம் கானல் நீரானது! தாறுமாறான தட்பவெப்ப நிலை. பருவ மழை பொய்த்தது; கடும் வறட்சி. விவசாயம் பாதிப்பு; விளைச்சல் இல்லை...
தென்னை மரங்கள் சரசரவென சாய்கின்றன; குடிநீருக்கு விலை; கால்நடைத் தீவனத்திற்குத் தட்டுப்பாடு; அணைகள் வறண்டன; மின் பற்றாக்குறை... இப்படி சங்கிலித் தொடர் நிகழ்ச்சிகளால், தமிழகம் எங்கும் சோகம் காண்கிறோம்.
பாண்டிய நாடு பன்னீராண்டு வற்கடம் சென்றது என்பது வரலாறு; இது நிகழ்ந்தது சங்க காலத்தில்!
ஒரு கொடிய பஞ்சம் 1876 - 78களில் ஏற்பட்டது. இதை, "தாது - ஈசு வருடப் பஞ்சம்!' என்று வரலாறு குறிப்பிடுகிறது. இப்பஞ்சத்தின் போது, மக்கள் பட்டினியால் வாடினர்; பட்டினிச் சாவுகளும் நிகழ்ந்தன.
உண்ண உணவின்றி இலை, தழைகள், வேர் கிழங்குகளை உண்டு, மக்கள் பசியைப் போக்கினர். நோய் நொடிகளுக்கு இலக்காகி, மடிந்தனர். நீதிபதி வேதநாயகம் பிள்ளை போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்கள், கஞ்சித் தொட்டிகள் தொடங்கி, மக்கள் பசிப் பிணியை அகற்றினர்.
இரண்டாவதாக, 1939 - 40களில், "கல் தட்டிப் பஞ்சம்' ஏற்பட்டது. இது, "வெகு தான்ய வருடப் பஞ்சம்' என்று சொல்லப்பட்டது. ஆடு, மாடுகளுக்குத் தீனி இல்லை. ரோடு போட, ஓடக்கல்லைத் தட்டி கூலி பெற்றனர் மக்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். மியான்மர் (பர்மா) குருணை அரிசி பெற்று, மக்கள் பசி தீர்த்துக் கொண்டனர். அப்போதும் கஞ்சித் தொட்டி தொடங்கி உணவளித்ததை நான் நேரில் கண்டுள்ளேன்.
மூன்றாவதாக, 2001 - 2002ல் பஞ்சம் ஏற்பட்டது. சித்ரபானு ஆண்டில் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், கால்நடைகளுக்குத் தீனி இல்லாத நிலைமை, தென்னை மரங்கள் சாய்ந்தன; சாய்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் காரணமாக, தற்போது சோற்றுப் பஞ்சமில்லை.
இம்மூன்று பஞ்சங்களுக்கிடையே ஒரு பொதுவான தொடர்புள்ளதைப் பார்க்கலாம். அதாவது, ஒரு பஞ்சத்திற்கும் அடுத்த பஞ்சத்திற்கும் உள்ள இடைவெளி, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள். 1876க்கும் 1939க்கு மிடையே, 63 ஆண்டுகள், 1939க்கும் 2002க்கு மிடையே, 63 ஆண்டுகள். எனவே, 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை புவியில் மாற்றம் நிகழும் என்பது புலனாகிறது.
வரலாற்றில் மாதம் மும்மாரி பொழிந்த காலமுண்டு; அது வெறும் கற்பனை அன்று. முன்பு இயற்கைச் சூழலில் சமச்சீர் நிலவியது.
தற்போதைய நிலைமையே வேறு... மனிதனின் பேராசையும், விவேகமின்மையும் இயற்கை வளங்களை தீர்ப்பதன் மூலம், இயற்கைச் சமச்சீர் தொலைந்து விட்டது; தொலைக்கப்பட்டு விட்டது. எனவே, தாறுமாறான தட்ப வெப்ப நிலையும் சுற்றுச் சூழலில் சீர்கேடுகளும் நிலவுவதைக் காண்கிறோம். ஆகையால், மாதம் மும்மாரி பெய்த காலம் மலை ஏறி விட்டது.

thodarum .....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 11, 2013 7:25 pm

இயற்கையின் சமநிலை கெடுவதற்குக் காரணங்களாக, வானிலை ஆய்வாளர்கள் கூறுவது, ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள பொத்தல், எல்னினோ, வானினா, குளோபல் வார்மிங் போன்ற அசாதாரண நிகழ்ச்சிகளாகும். இந்நிலை தொடர்ந்தால், ஒரு கால கட்டத்தில், இயற்கையான சுற்றுச் சூழல் மனித வாழ்க்கைக்குச் சாதகமாக இருப்பதற்கு பதிலாக, பாதகமாக அமையும்.
மக்கள் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால், காற்று, நீர், மண் மூன்றும் மாசுபட்டு விட்டன. இதுவரை இலவசமாகக் கிடைத்து வரும் தூய காற்றும், எதிர்காலத்தில் விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்; உருவாகிக் கொண்டிருக்கிறது.
தற்போதைய மானிட சமுதாயம் எதிர்கால சந்ததியினரைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் காலத்தில் சுகபோகமாக வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகிறது. இயற்கையில் பயனுள்ள பலவற்றிலும் மழை மிகச் சிறந்தது. எனவே தான், அய்யன் வள்ளுவப் பெருந்தகை, தன் திருக்குறளில், வான் சிறப்பை கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக அமைத்துள்ளார்.
மழை இல்லையானால் மண்வளம் சுருங்கும், மக்கள் மன வளமும் சுருங்கும், தானமிருக்காது; தவமிருக்காது. தற்போது அந்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
நாகரிகத்தின் உச்சகட்டத்தை தொட்டுள்ள மனித சமுதாயம், சென்ற நூற்றாண்டுகளில் பல்வேறு மாறுதல்களைக் கண்டுள்ளது; இப்போதும் கண்டு கொண்டிருக்கிறது; எதிர்காலத்திலும் காணப் போகிறது. சுற்றுச் சூழலும், உயிரினமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒட்டி உறவாடுகின்றன. இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல் செயல்படுகின்றன. எனவே, சுற்றுச் சூழலுக்கும், உயிரினத்திற்குமிடையே எப்போதும் சமநிலை நிலவு கிறது. இந்த சமநிலை பாதிப்படைந்தால், பல்வேறு விளைவுகள் இயற்கையில் நிகழும்; மனித வாழ்வே ஆபத்திற்கு உள்ளாகும்.
இயற்கைச் சூழலுக்கும், மனித சமுதாயத்திற்குமிடையே ஓயாத பெரும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போட்டியில், இயற்கை தான் வெல்லும் என்பது நியதி. இயற்கையுடன் நமக்குள்ள தாய் - சேய் உறவைக் காப்பாற்ற வேண்டும். சங்க கால இலக்கியமான அக நானூற்றுப் பாடல் ஒன்று இயற்கைச் சூழலைச் சிதைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது...
— இவ்வாறு கூறுகிறார் பேராசிரியர். எப்படி தாக்குப் பிடிக்க போகிறோமோ!

நன்றி : வார மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 11, 2013 8:32 pm

வறட்சியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது...வயல்வெளிகள் கூட வறண்ட நிலங்களாகவே காட்சியளிக்கிறது... சோகம்
ரா.ரமேஷ்குமார்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 11, 2013 8:56 pm

ஆமாம் ரமேஷ் சோகம் என்ன ஆகப்போகிறதோ..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக