புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jan 02, 2013 11:19 am

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் ! கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில் இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !

அசை போடுகிறேன் ! கவிஞர் இரா .இரவி .

நீயும் நானும்
பேசிய நிமிடங்களும்
சந்தித்த நாட்களும்
மிகவும் குறைவுதான் !
மூச்சு இருக்கும் வரை
நினைவு இருக்கும் !
பசுமையான நினைவுகள் அவை !
மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை!

சொல்வதில்லை ! கவிஞர் இரா .இரவி

பிரிந்து வருடங்கள்
பல கடந்தும்
மனதில் , நினைவில்
வருடி விட்டு செல்கிறாள் !
தனிமையான நேரங்களில்
நினைவில் வந்து செல்கிறாள் !
மறக்க நினைத்தாலும்
மறக்க முடிவதில்லை !
மூளையின் மூலையில் இருந்து
மூ்ழ்கடிக்கிறாள் !
மறந்து விட்டதாக
உதடுகள் சொன்னபோதும்
உள்ளம் ஒருபோதும்
சொல்வதில்லை !

மன்னிக்கட்டும் கலாம் ! கவிஞர் இரா .இரவி .

தூங்கும்போது காண்பதல்ல கனவு !
தூங்கவிடாமல் செய்வதே கனவு !
படித்தேன் கலாம் வாசகம் !
தூங்கும்போது காணும் கனவில் அவள் !
தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள் !
கலாம் என்னை மன்னிக்கட்டும் !

இனிமை ! இளமை ! கவிஞர் இரா .இரவி .

உனக்கும் எனக்குமான
நட்பு காதலாகி
அடுத்தக் கட்டம்
அடைந்தபோது
சின்னச் சின்ன
தீண்டல் தொடங்கியது !
தீயாய் எரிந்தது !
எண்ணிக்கையில் குறைவு என்றாலும்
எண்ணங்களில் மிக நிறைவு !

உண்மை ! கவிஞர் இரா .இரவி .

பார்த்தும் காதலா ?என்று
பார்த்தவர்களிடம் கேலி பேசியவன் !
உன்னைப் பார்த்ததும் காதல் வந்தது
உன்னிடம் தாமதமாகத்தான் சொன்னேன் !
காதலை ஏற்றுக் கொண்ட நீயும் சொன்னாய் !
பார்த்த அன்றே காதல் மலர்ந்த உண்மையை !

நம்பிக்கை ! கவிஞர் இரா .இரவி .

தூக்குத் தண்டனை கைதியிடம்
நிறைவேறாத ஆசை என்ன ?
என்பார்கள் !
முடிந்தால் நிறைவேற்றுகள் !
நானும் தூக்குத் தண்டனை கைதியாக
விரும்புகின்றேன் !
உன்னை ஒரு முறை பார்க்க ஆசை
நிறைவேற்றுங்கள் என்பேன் !
உன்னை அழைத்து வந்து
என்னிடம் காடு்வார்கள் !
இறக்கும் முன் ஒரு முறை
உன்னை பார்த்து விடலாம் !

என்னவள் ! கவிஞர் இரா .இரவி .

அங்கிருந்து என்னை
இங்கு இயக்குகின்றாள் !
எங்கிருந்தபோதும்
என்னுள் இருக்கின்றாள் !
எழுச்சி தருகின்றாள் !
மனக்கவலை வரும்போது
மனத்தெம்பு தருகின்றாள் !
சோர்வு வரும்போது
சுறுசுறுப்பு தருகின்றாள் !
துன்பம் வரும்போது
இன்பம் தருகின்றாள் !
தடுக்கி விழும்போது
திரும்ப எழ வைக்கிறாள் !
விரக்தி வரும்போது
சக்தி தருகின்றாள் !
என்னுள் என் நினைவுள்
கலந்த இனியவள் !
அவள் என்னவள் !

பிடிக்காத புத்தர் கவிஞர் இரா .இரவி .

புத்தரை எல்லோருக்கும் பிடிக்கும் !
ஆனால் எனக்குப் புத்தரைப் பிடிக்காது !
என்னவளே உன் மீது அளவற்ற
ஆசை வைத்திருக்கும் எனக்கு
"ஆசையை அறவே அழி " என்ற
புத்தர் போதனை பிடிக்கவில்லை .அதனால்
புத்தரையும் பிடிக்கவில்லை !

இதமான மனசு ! கவிஞர் இரா .இரவி .

பேசும் போது உன் விரல் பட்டு
என் கண்கள் கலங்கியது !
உடன் நீ உன் கைக்குட்டை எடுத்து
உன் வாயில் வைத்து ஊதி விட்டு
என் கண்ணில் ஒத்தினாய் !
இதமானது கண் மட்டுமல்ல
என் மனசும்தான் !
இப்படி ஒரு சுகத்திற்காக
எத்தனை முறையும்
விரல்கள் விழிகளில் படலாம் !
கல்வெட்டாகத் பதிந்தது
இந்த நிகழ்வும் நம் உறவும் !

கண்டுபிடித்தாள் கள்ளி ! கவிஞர் இரா .இரவி .

சேலை ஒன்று என்னவளுக்கு
வாங்கித் தந்தேன் !
எனக்காக வாங்கியதா ? என்றாள் !
உனக்காக நெய்தது ! என்றேன் !
கைத்தறிச்சேலை என்பதை
உயர்வாகச் சொல்கிறாய் !என்றாள் !
கைத்தறி உயர்வானதுதான் !என்றேன் !
பட்டுச்சேலை வாங்கப் பணம்
இல்லை என்பது தெரியும் !என்றாள் !
மனதிற்குள் ! கண்டுபிடித்தாள் கள்ளி !
என்பதை நினைத்துக் கொண்டு
பட்டுச்சேலையை விட
கைத்தறிச்சேலைதான்
உனக்கு அழகு என்றேன் !
பட்டுக்கு எதற்கடி பட்டு
என்றேன் !
பட்டென சிவந்து நின்றாள் !

தண்ணீர் குடிப்பாயாக ! கவிஞர் இரா .இரவி .

நான் சாப்பிடும் போது
பொறை ஏறியது !
என் அம்மா உடன்
தலையில் தட்டி
யாரோ நினைக்கிறார்கள்
என்றார்கள் !
நினைப்பது நீ என்பது
எனக்குத் தெரியும் !
உடன் நான் உன்னை நினைத்தேன் !
உனக்கும் பொறை ஏறி இருக்கும் !
இங்கு நான் தண்ணீர் குடித்து விட்டேன்
அங்கு நீயும் தண்ணீர் குடிப்பாயாக

விழிப்படம் ! கவிஞர் இரா .இரவி

இருவரும் சேர்ந்து
ஒரே ஒரு திரைப்படம்தான்
பார்த்தோம் !
திரைப்படம் பார்த்த நேரத்தை விட
அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும்தான்
அதிகம் !
இதழ்களை விட
விழிகள்தான் அடிக்கடி பேசிக் கொண்டன !
காதலர்கள் ஏன் ?
திரைப்படம் செல்கிறார்கள் என்பது
அன்றுதான் விளங்கியது எனக்கு !

விலைமதிப்பற்ற பரிசு ! கவிஞர் இரா .இரவி .

அவளிடம் பல முறை
பரிசு வாங்கி இருக்கிறேன் !
நானும் அவளுக்கு பல முறை
பரிசு வழங்கி இருக்கிறேன் !
உருவம் இல்லாத பரிசு !
உணர்ச்சி மிகுந்த பரிசு !
நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும் பரிசு !
சகாராவில் பாய்ந்த
நயாகராவாக
அவள் முத்தம்தான்
விலைமதிப்பற்ற பரிசு !

அறிவாளி அவள் !கவிஞர் இரா .இரவி .

என்னவள் அழகை விட
அறிவில் சிறந்தவள் ! என்றேன் .
நண்பன் இருக்காதே ! என்றான் .
அறிவில் சிறந்தவள் எப்படியடா
உன்னை காதலிப்பாள் !என்றான் .
பொறாமையில் பேசும் நண்பனை
பொருட்படுத்தவில்லை நான் !
என்னவள் அழகி என்பதை விட
அறிவாளி என்பதால்தான்
எனக்குப் பிடித்தது அவளை !


*நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி*

*www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
**http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
**http://www.noolulagam.com/product/?pid=6802#response*

*இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !*








அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Jan 02, 2013 11:23 am

அருமைய இருந்துச்சு சூப்பருங்க அருமையிருக்கு



காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Jan 03, 2013 1:59 am

சூப்பருங்க



காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Paard105xzகாதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Paard105xzகாதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Paard105xzகாதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 12:56 pm

eraeravi wrote:காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் ! கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில் இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !


கண்டுபிடித்தாள் கள்ளி ! கவிஞர் இரா .இரவி .

சேலை ஒன்று என்னவளுக்கு
வாங்கித் தந்தேன் !
எனக்காக வாங்கியதா ? என்றாள் !
உனக்காக நெய்தது ! என்றேன் !
கைத்தறிச்சேலை என்பதை
உயர்வாகச் சொல்கிறாய் !என்றாள் !
கைத்தறி உயர்வானதுதான் !என்றேன் !
பட்டுச்சேலை வாங்கப் பணம்
இல்லை என்பது தெரியும் !என்றாள் !
மனதிற்குள் ! கண்டுபிடித்தாள் கள்ளி !
என்பதை நினைத்துக் கொண்டு
பட்டுச்சேலையை விட
கைத்தறிச்சேலைதான்
உனக்கு அழகு என்றேன் !
பட்டுக்கு எதற்கடி பட்டு
என்றேன் !
பட்டென சிவந்து நின்றாள் !

இவ்விரு கவிதைகளின் இனிமையை இரசித்தேன். சூப்பருங்க அருமையிருக்கு

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 1:22 pm

//மன்னிக்கட்டும் கலாம் ! கவிஞர் இரா .இரவி .

தூங்கும்போது காண்பதல்ல கனவு !
தூங்கவிடாமல் செய்வதே கனவு !
படித்தேன் கலாம் வாசகம் !
தூங்கும்போது காணும் கனவில் அவள் !
தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள் !
கலாம் என்னை மன்னிக்கட்டும் !//

கலாம் உங்களை மன்னிப்பது இருக்கட்டும். காலம் உங்களை மன்னிக்கும்படி கனவு கண்டால் சரி. ஏனெனில், இச்சைக் கனவுகள் காண்பதில் எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் அவை நம் இலட்சியக் கனவுகளுக்கான நேரத்தைக் களவாடிவிடக் கூடாது. உங்கள் கனவுகளை வெறும் கவிதையாக மட்டும் பார்க்கும்போது அழகாகவே இருக்கிறது! பாராட்டுகள். மகிழ்ச்சி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 6:01 pm

eraeravi wrote:காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் ! கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில் இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !

அசை போடுகிறேன் ! கவிஞர் இரா .இரவி .

நீயும் நானும்
பேசிய நிமிடங்களும்
சந்தித்த நாட்களும்
மிகவும் குறைவுதான் !
மூச்சு இருக்கும் வரை
நினைவு இருக்கும் !
பசுமையான நினைவுகள் அவை !
மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை!

சொல்வதில்லை ! கவிஞர் இரா .இரவி

பிரிந்து வருடங்கள்
பல கடந்தும்
மனதில் , நினைவில்
வருடி விட்டு செல்கிறாள் !
தனிமையான நேரங்களில்
நினைவில் வந்து செல்கிறாள் !
மறக்க நினைத்தாலும்
மறக்க முடிவதில்லை !
மூளையின் மூலையில் இருந்து
மூ்ழ்கடிக்கிறாள் !
மறந்து விட்டதாக
உதடுகள் சொன்னபோதும்
உள்ளம் ஒருபோதும்
சொல்வதில்லை !

மன்னிக்கட்டும் கலாம் ! கவிஞர் இரா .இரவி .

தூங்கும்போது காண்பதல்ல கனவு !
தூங்கவிடாமல் செய்வதே கனவு !
படித்தேன் கலாம் வாசகம் !
தூங்கும்போது காணும் கனவில் அவள் !
தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள் !
கலாம் என்னை மன்னிக்கட்டும் !

இனிமை ! இளமை ! கவிஞர் இரா .இரவி .

உனக்கும் எனக்குமான
நட்பு காதலாகி
அடுத்தக் கட்டம்
அடைந்தபோது
சின்னச் சின்ன
தீண்டல் தொடங்கியது !
தீயாய் எரிந்தது !
எண்ணிக்கையில் குறைவு என்றாலும்
எண்ணங்களில் மிக நிறைவு !

உண்மை ! கவிஞர் இரா .இரவி .

பார்த்தும் காதலா ?என்று
பார்த்தவர்களிடம் கேலி பேசியவன் !
உன்னைப் பார்த்ததும் காதல் வந்தது
உன்னிடம் தாமதமாகத்தான் சொன்னேன் !
காதலை ஏற்றுக் கொண்ட நீயும் சொன்னாய் !
பார்த்த அன்றே காதல் மலர்ந்த உண்மையை !

நம்பிக்கை ! கவிஞர் இரா .இரவி .

தூக்குத் தண்டனை கைதியிடம்
நிறைவேறாத ஆசை என்ன ?
என்பார்கள் !
முடிந்தால் நிறைவேற்றுகள் !
நானும் தூக்குத் தண்டனை கைதியாக
விரும்புகின்றேன் !
உன்னை ஒரு முறை பார்க்க ஆசை
நிறைவேற்றுங்கள் என்பேன் !
உன்னை அழைத்து வந்து
என்னிடம் காடு்வார்கள் !
இறக்கும் முன் ஒரு முறை
உன்னை பார்த்து விடலாம் !

என்னவள் ! கவிஞர் இரா .இரவி .

அங்கிருந்து என்னை
இங்கு இயக்குகின்றாள் !
எங்கிருந்தபோதும்
என்னுள் இருக்கின்றாள் !
எழுச்சி தருகின்றாள் !
மனக்கவலை வரும்போது
மனத்தெம்பு தருகின்றாள் !
சோர்வு வரும்போது
சுறுசுறுப்பு தருகின்றாள் !
துன்பம் வரும்போது
இன்பம் தருகின்றாள் !
தடுக்கி விழும்போது
திரும்ப எழ வைக்கிறாள் !
விரக்தி வரும்போது
சக்தி தருகின்றாள் !
என்னுள் என் நினைவுள்
கலந்த இனியவள் !
அவள் என்னவள் !

பிடிக்காத புத்தர் கவிஞர் இரா .இரவி .

புத்தரை எல்லோருக்கும் பிடிக்கும் !
ஆனால் எனக்குப் புத்தரைப் பிடிக்காது !
என்னவளே உன் மீது அளவற்ற
ஆசை வைத்திருக்கும் எனக்கு
"ஆசையை அறவே அழி " என்ற
புத்தர் போதனை பிடிக்கவில்லை .அதனால்
புத்தரையும் பிடிக்கவில்லை !

இதமான மனசு ! கவிஞர் இரா .இரவி .

பேசும் போது உன் விரல் பட்டு
என் கண்கள் கலங்கியது !
உடன் நீ உன் கைக்குட்டை எடுத்து
உன் வாயில் வைத்து ஊதி விட்டு
என் கண்ணில் ஒத்தினாய் !
இதமானது கண் மட்டுமல்ல
என் மனசும்தான் !
இப்படி ஒரு சுகத்திற்காக
எத்தனை முறையும்
விரல்கள் விழிகளில் படலாம் !
கல்வெட்டாகத் பதிந்தது
இந்த நிகழ்வும் நம் உறவும் !

கண்டுபிடித்தாள் கள்ளி ! கவிஞர் இரா .இரவி .

சேலை ஒன்று என்னவளுக்கு
வாங்கித் தந்தேன் !
எனக்காக வாங்கியதா ? என்றாள் !
உனக்காக நெய்தது ! என்றேன் !
கைத்தறிச்சேலை என்பதை
உயர்வாகச் சொல்கிறாய் !என்றாள் !
கைத்தறி உயர்வானதுதான் !என்றேன் !
பட்டுச்சேலை வாங்கப் பணம்
இல்லை என்பது தெரியும் !என்றாள் !
மனதிற்குள் ! கண்டுபிடித்தாள் கள்ளி !
என்பதை நினைத்துக் கொண்டு
பட்டுச்சேலையை விட
கைத்தறிச்சேலைதான்
உனக்கு அழகு என்றேன் !
பட்டுக்கு எதற்கடி பட்டு
என்றேன் !
பட்டென சிவந்து நின்றாள் !

தண்ணீர் குடிப்பாயாக ! கவிஞர் இரா .இரவி .

நான் சாப்பிடும் போது
பொறை ஏறியது !
என் அம்மா உடன்
தலையில் தட்டி
யாரோ நினைக்கிறார்கள்
என்றார்கள் !
நினைப்பது நீ என்பது
எனக்குத் தெரியும் !
உடன் நான் உன்னை நினைத்தேன் !
உனக்கும் பொறை ஏறி இருக்கும் !
இங்கு நான் தண்ணீர் குடித்து விட்டேன்
அங்கு நீயும் தண்ணீர் குடிப்பாயாக

விழிப்படம் ! கவிஞர் இரா .இரவி

இருவரும் சேர்ந்து
ஒரே ஒரு திரைப்படம்தான்
பார்த்தோம் !
திரைப்படம் பார்த்த நேரத்தை விட
அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும்தான்
அதிகம் !
இதழ்களை விட
விழிகள்தான் அடிக்கடி பேசிக் கொண்டன !
காதலர்கள் ஏன் ?
திரைப்படம் செல்கிறார்கள் என்பது
அன்றுதான் விளங்கியது எனக்கு !

விலைமதிப்பற்ற பரிசு ! கவிஞர் இரா .இரவி .

அவளிடம் பல முறை
பரிசு வாங்கி இருக்கிறேன் !
நானும் அவளுக்கு பல முறை
பரிசு வழங்கி இருக்கிறேன் !
உருவம் இல்லாத பரிசு !
உணர்ச்சி மிகுந்த பரிசு !
நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும் பரிசு !
சகாராவில் பாய்ந்த
நயாகராவாக
அவள் முத்தம்தான்
விலைமதிப்பற்ற பரிசு !

அறிவாளி அவள் !கவிஞர் இரா .இரவி .

என்னவள் அழகை விட
அறிவில் சிறந்தவள் ! என்றேன் .
நண்பன் இருக்காதே ! என்றான் .
அறிவில் சிறந்தவள் எப்படியடா
உன்னை காதலிப்பாள் !என்றான் .
பொறாமையில் பேசும் நண்பனை
பொருட்படுத்தவில்லை நான் !
என்னவள் அழகி என்பதை விட
அறிவாளி என்பதால்தான்
எனக்குப் பிடித்தது அவளை !


*நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி*

*www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
**http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
**http://www.noolulagam.com/product/?pid=6802#response*

*இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !*






சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Mar 10, 2013 12:26 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக