புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
48 Posts - 41%
prajai
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
4 Posts - 3%
Jenila
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
2 Posts - 2%
kargan86
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
1 Post - 1%
jairam
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
8 Posts - 5%
prajai
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
1 Post - 1%
jairam
புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_m10புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 19, 2013 10:34 am

அன்றும் இன்றும்!

அரண்மனையை விட்டு வெளியேறிய சித்தார்த்தன், உலகை உய்விக்க வந்த புத்தராகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது சொந்த ஊரான கபிலவஸ்த்துவுக்கு வருகிறார். அப்போது சித்தார்த்தனின் மனைவி யசோதரையும் மகன் ராகுலனும் புத்தரைச் சந்திக்கிறார்கள்.

"நள்ளிரவில் அரண்மனையைவிட்டுப் போனீர்களே, எங்களை எழுப்பிச் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?''

"எழுப்பிச் சொல்லியிருந்தால் நானும் ராகுலும் அழுது உங்கள் பயணத்தைத் தடுத்துவிடுவோம் என்று நினைத்தீர்களா?''

"கட்டிய மனைவியையும் குழந்தையையும் விட்டுவிட்டு நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் அரண்மனையைவிட்டுப் போன உங்களை "கெüதம புத்தர்' என்று கொண்டாடுகிறார்களே, நான் உங்களையும் குழந்தையையும் விட்டுவிட்டு நீங்கள் செய்ததுபோல யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நள்ளிரவில் அரண்மனையை விட்டுப் போயிருந்தால் இந்த உலகம் என்னை என்ன சொல்லியிருக்கும்?''


சித்தார்த்தனின் மனைவி யசோதரை இப்படிக் கேட்டிருந்தால் புத்தர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை.

ஆனால், தமிழ் இலக்கியத்தில் இதேபோல சந்தர்ப்பங்களும் அதற்கான பதிலும் காணப்படுகிறது. அப்படி ஒரு பெண்ணை "மணிமேகலை' என்று தமிழ் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் இரட்டைக் காப்பியங்களும் அந்தப் புத்தத் துறவியைப் போற்றுகின்றன.

இப்போதும் மணிமேகலை என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நாம் இடித்துக் கொண்டாலும் வாசல்நிலை இடித்துவிட்டது என்று சொல்கிறோம்; வழியில் தடுக்கி விழுந்தாலும் கல் தடுக்கிவிட்டது என்று காரணம் சொல்கிறோம்; குழந்தை வளர்ந்ததைச் சொல்லாமல் சட்டை சிறிதாகிவிட்டது என்கிறோம். மற்றவற்றின் மீது காரணத்தைச் சுமத்தித் தப்பித்துக் கொள்கிறோம்.

சுமத்துவதும் தப்பிப்பதும் சுயநலத்தின் பலவீனம்; நடந்ததற்கு வருந்துவது நல்ல மனதின் அடையாளம்; மன்னிப்புக் கேட்பது பெருந்தன்மையின் வெளிப்பாடு; தண்டனைக்கு உட்படுவது பண்பாட்டின் உச்சம்.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமும், மனதைக் கொள்ளை கொள்ளும் மணிமேகலையும் பண்பாட்டின் உச்சமாக வெளிப்படுகின்றன...

சிலப்பதிகாரக் கானல்வரியில்,
திங்கள் மாலை வெண்குடையான்,
சென்னிச் செங்கோல் - அது ஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி!''

என்று கோவலன் பாடுகிறான்.

"சோழனுக்குக் காவிரி மனைவியாக இருந்தபோதும் கங்கையைச் சேர்த்துக்கொள்கிறான். அதற்காக ஊடல் கொள்ளாத காவிரி வாழ்க' என்று கோவலன் பாடியதும், மாதவி பதில் பாட்டுப் பாடுகிறாள்,

தம்முடைய தண்ணளியும், தாமும் தன்மான்தேரும்;
எம்மை நினையாது; விட்டாரோ? விட்டகல்க,
அம்மென் இரை அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்!''


தமது அன்பினை மறந்து வேறொரு மங்கையிடம் அவன் மனம் விரும்பிப் போகிறது என்று நினைத்த மாதவி, காவிரியைப்போல் ஊடல் கொள்ளாமல் இருக்க நான் தயாரில்லை என்பதை அறிவிக்கிறாள்.

"எனது அன்பை நினைக்காமல் என்னை விட்டுப்போக நினைத்தால் போகட்டும்; என்னைவிட்டு அகல்க'' என்று பாடுகிறாள்.

கோபம்கொண்டு புறப்பட்டுப் போகிற கோவலன், மாதவியை, ""மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்; சலம் புணர்க்கொள்கை சலதி'' என்றெல்லாம் திட்டுகிறான்.

கோவலன் கண்ணகியோடு பூம்புகாரை விட்டுப்போனது அறிந்த மாதவி மனம் வருந்தி ஒரு கடிதம் எழுதிக் கோசிகனிடம் கொடுத்து அனுப்புகிறாள். கடிதத்தைக் கோவலன் படிக்கிறான்.

அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனம்கொளல் வேண்டும்;
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பாட்டியோடு;
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது;
கையறு நெஞ்சம் கடிதல் வேண்டும்;
பொய்தீர்க் காட்சிப் புரையோய், போற்றி!'

இரவில், கண்ணகியோடு பூம்புகாரைவிட்டுப் புறப்பட்டுப் போனதற்கு நான் காரணமாகிவிட்டேனே என்று செய்யாத குற்றத்திற்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கிறாள் மாதவி.

கடிதத்தைப் படித்த கோவலன், மாதவி தவறு செய்யவில்லை; நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று, ""தன்தீதிலள் எனத் தளர்ச்சி நீங்கி என்தீது என்றே எய்தியது'' உணர்ந்து வருத்தம் தெரிவிக்கிறான்.

கோவலன் கொலை செய்யப்பட்டதும் கண்ணகி, பொங்கி எழுந்து, பாண்டியன் அரண்மனைக்குச் சென்று வழக்குரைக்கிறாள். பாண்டியன் தவறு நடந்துவிட்டதை உணர்கிறான். ""பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன்'' என்று கூறி உயிர்விடுகிறான். இவ்வளவுக்கும், என் தேவியின் கால் சிலம்பு ""கன்றிய கள்வன் கையதாகில் கொன்று அச்சிலம்பு கொணர்க'' என்றுதான் சொல்லி இருக்கிறான்.

அரசியின் காற்சிலம்பு அவன் கையில் இருந்தால்தான் கொல்லச் சொல்லி இருக்கிறான். சிலம்பு அரசியுடையதுதானா என்பதை உறுதி செய்யாமலேயே, கோவலன் கொல்லப்படுகிறான். ஆனாலும் கூட, பாண்டியன், கோவலன் கொல்லப்பட்டதற்குத் தான் பொறுப்பில்லை என்று கூறித் தப்பிக்க முயற்சி செய்யாமல் தனது ஆட்சியில் நடந்துவிட்ட தவறுக்குத் தானே பொறுப்பேற்று உயிர்விடுகிறான்.

கண்ணகியின் கோபம் தணியவில்லை. ""பட்டாங்குயானுமோர் பத்தினியேயாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்'' என்று வஞ்சினம் கூறி ஊரையும் மக்களையும் எரிக்கிறாள்.

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் எழுப்பிய பின்னர், புத்தமதத் துறவி மணிமேகலை, கண்ணகியையும் கோவலனையும் பார்க்க, பத்தினிக் கோட்டம் வருகிறாள். வணங்குகிறாள்.

மனதில் நெருடிக் கொண்டிருக்கும் கேள்வியோடு தெய்வச் சிலையாக இருக்கும் கண்ணகியைப் பார்க்கிறாள். சிலையோடும் உரையாடும் ஆற்றல் மணிமேகலைக்கு இருந்திருக்கிறது. கேள்வி அவளை விடவில்லை; கேட்டு விடுகிறாள்.

அன்புக் கடன் நில்லாது நற்றவம்படராது
கற்புக் கடன் பூண்டு நும்கடன்
முடித்தது அருளல் வேண்டும்''


என்று அழுது முன்நிற்கிறாள்.

அன்பு காட்டாமல் நல்ல நெறியில் நடக்காமல் ஊரையும் மக்களையும் எரித்தது ஏன் என்று கேட்கிறாள்.

தவறு செய்தது பாண்டிய மன்னரின் காவலர்கள். பாண்டியனும் தவறுக்குப் பொறுப்பேற்று உயிர் துறக்கிறான். பிறகும் ஏன் வெஞ்சினம் கொண்டு அப்பாவி மக்களை, மதுரை மாநகரைக் கண்ணகி தீக்கிரையாக்க வேண்டும்?

"ஆம் மகளே! தவறு செய்துவிட்டேன். கோபத்தில் செழுமையான நகரை எரித்துச் சிதைத்து விட்டேன். அந்தப் பாவம் என்னைவிடாது. எப்படியும் அதற்கான தண்டனையைப் பெறத்தான் போகிறேன்.'' என்று தான் செய்தது தவறுதான் என்பதை ஏற்றுக் கொள்கிறாள் கண்ணகி.

"சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்.....அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது!''

தண்டனைக்கு உட்படத்தான் போகிறேன் என்று கண்ணகி கூறியதாக மணிமேகலைக் காப்பியம் சொல்கிறது. மற்றவர்களே காரணம் என்று பழி சுமத்தாமல் தாமே உணர்ந்து வருந்துவதையும், ஆட்சியில் இருந்ததால் பொறுப்பேற்று உயிர்விடுவதையும், தப்பிக்க நினைக்காமல் தண்டனைக்கு உட்படுவதையும் சிலம்பும் மணிமேகலையும் காட்டுகின்றன. இவை மானுடப் பண்பாட்டின் சிகரங்கள்.

கண்ணகி எரித்த இடத்தில் மதுரை இப்போதும் இருக்கிறது. ஆனாலும் மாநகர்கள் தொடர்ந்து எரிக்கப்படுகின்றன. மக்கள் கொல்லப்படுகிறார்கள்; குழந்தைகளும் சிறுவர்களும் கூடக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

கேள்வி கேட்கத்தான் மணிமேகலை போல புத்தமதத் துறவிகள் இல்லை. ஆனாலும் கேள்வி இருக்கிறது. மணிமேகலை என்கிற புத்தமதத் துறவியின் கேள்வியை இப்போது உலகம் கேட்கிறது!

ம. இராசேந்திரன் - கட்டுரையாளர்: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்.-நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 19, 2013 10:49 am

என்ன சொல்லியிருப்பார் என்று தெரியல, ஆனா அப்பாவி தமிழர்களை கொன்று குவியுங்கள் என்று மட்டும் சொல்லியிருக்கமாட்டார் என நினைக்கிறேன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:28 pm

தெரிந்த காப்பியங்கள் தெரியாத விஷயங்கள் நன்றி paகிர்வுக்கு

mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Tue Mar 26, 2013 2:23 pm

பகிர்வுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக