புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
21 Posts - 66%
heezulia
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
63 Posts - 64%
heezulia
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_m10‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 03, 2013 8:25 am



ஜெனீவா: ‘நோ பயர் ஸோன்' என்ற போர்க்குற்ற ஆவணப்படம் இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் முன்பு நேற்று திரையிடப்பட்டது.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக திங்களன்று முக்கிய விவாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், இறுதிக்கட்ட போரின் போது போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்து, இனப்படுகொலை செய்தது.

இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக ஐ.நா. வல்லுனர் குழு, அறிக்கை அளித்தது. உயிருக்கு பயந்து போர் இல்லாத மண்டலங்களில் தஞ்சம் புகுந்தபோது, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது உலக நாடுகளை எல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மனித உரிமை மீறல்கள், தமிழர்கள் நிர்வாண நிலையில், கைகள் கட்டப்பட்டு கூட்டம், கூட்டமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை வெளியிட்டு இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து இலங்கையில் தேசிய செயல் திட்டம் என்ற ஒன்றை அதிபர் ராஜபக்சே ஏட்டளவில் கொண்டு வந்தார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை அரங்கேற்றிய இலங்கை ராணுவத்தைக் கொண்டே போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றங்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக இலங்கை ராணுவம், பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டது.

இப்போது மீண்டும் சேனல்-4 தொலைக்காட்சி, ‘ நோ பயர் ஸோன்' என்ற தலைப்பில், இயக்குனர் கல்லம் மெக்ரேயைக் கொண்டு போர்க்குற்ற ஆவணப்படம் ஒன்றை மீண்டும் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, பதுங்குகுழியில் 2 அடி தூரத்தில் நிற்க வைத்து சிங்கள ராணுவம் சுட்டுக்கொன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சுவிஸ் நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் கடந்த 27-ந் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இந்தத் தீர்மானத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் 2 தினங்களுக்கு முன் பேசிய இலங்கை அமைச்சர் சமரசிங்கே, இலங்கைக்கு எதிரான எந்த ஒரு விவாதத்துக்கும், தீர்மானத்துக்கும் அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தினார். சேனல்-4 ஆவணப்படத்துக்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலை காட்சி இடம் பெற்றுள்ள நோ பயர் ஸோன் ஆவணப்படம், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நேற்று திரையிடப்பட்டது. இதைக் கண்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

‘‘போர்க் குற்றங்களால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் தன்மானத்துடன் வாழ உலக நாடுகள் உதவ வேண்டும்'' என்று இந்த ஆவணப்படத்தை எடுத்த இயக்குனர் கல்லம் மெக்ரே உருக்கமுடன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வரும் திங்கட்கிழமை தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பேரில் விவாதம் நடைபெறும். விவாதத்தை தொடர்ந்து ஓட்டெடுப்பு நடைபெறும். இந்த தீர்மான விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீர்மானத்தில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டெல்லி ராஜ்ய சபாவில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த தீர்மானத்தின் மீதான தன் நிலைப்பாட்டைக்கூட அது அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்



‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Mar 03, 2013 10:18 am

அண்ணா நல்ல தீர்வு பிறக்குமா
தமிழன் வாழ்வு சிறக்குமா
அகதியெனும் சொல் இறக்குமா
புதிய கதவு திறக்குமா அழுகை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 03, 2013 10:25 am

ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து தமிழ்நாடில் மட்டும் தான் அரசியல் நடத்தலாம் என்ற நிலை மாறி இன்று இப்பிரச்சினையை வைத்து உலக நாடுகளும் அரசியல் நடத்தலாம் என்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளேதே தவிர பயனுள்ள முன்னேற்றம் இதனால் ஏதும் இருக்காது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 03, 2013 12:08 pm

இந்த தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று சர்வதேச தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியும், இது தொடர்பாக டெல்லி ராஜ்ய சபாவில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த தீர்மானத்தின் மீதான தன் நிலைப்பாட்டைக்கூட அது அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எப்படி கருத்து சொல்லும் , தன்னுடைய மிகப்பெரும் தலைவனை கொன்ற இனமல்லவா அதனால் உலகிலே தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழித்து விட்டு தான் மறுவேலை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Mar 03, 2013 12:35 pm

ராஜு சரவணன் wrote:ஈழ தமிழர் பிரச்சனையை வைத்து தமிழ்நாடில் மட்டும் தான் அரசியல் நடத்தலாம் என்ற நிலை மாறி இன்று இப்பிரச்சினையை வைத்து உலக நாடுகளும் அரசியல் நடத்தலாம் என்ற முன்னேற்றம் ஏற்பட்டுள்ளேதே தவிர பயனுள்ள முன்னேற்றம் இதனால் ஏதும் இருக்காது

இதுத்தான் என் எண்ணமும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ‘நோ பயர் ஸோன்’ ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் திரையிடப்பட்டது! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Sun Mar 03, 2013 7:20 pm

இந்தியாவிற்கு எதிராக இலங்கை காஷ்மீர் பிரச்சினையை எடுத்து மிரட்டியுள்ளது. இந்திய அரசு இலங்கையின் மிரட்டலுக்கு பயப்படாமல் தமிழர்களுக்கு ஆதரவாக முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் காங்கிரசிற்கு செல்வாக்கில்லை. தமிழக அரசியல்வாதிகள் காங்கிரசை திட்டுவதால் எந்த பிரயோஜனுமுமில்லை. மத்திய அரசை வழிக்கு கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Mar 03, 2013 8:14 pm

காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவது ஒன்று தான் ஒரே வழி . கொள்ளியை உறுவினால் கொதிக்கும். உலை தானே அடங்கும்.

மேலும் மத்தியில் இனி அமையும அரசின் குடுமி தமிழகத்தின கையில் இருக்கும் வகையில் உண்மையாக தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள ள கட்சிக்கு (திமுக ஆதிமுக இல்லாத கட்சி) வாக்களித்து 40 க்கு 40 என்று பெரும்பான்மை எண்ணிக்கையொடு தமிழக தயவில் ஆட சி அமைந்தால் ஏதோ ஓராளவிற்கு சாத்தியப்படும் நம் ஈழ கனவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக