புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
366 Posts - 49%
heezulia
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
25 Posts - 3%
prajai
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_m10முருகா! முருகா! முருகா!” என்று ஓது! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகா! முருகா! முருகா!” என்று ஓது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 27, 2013 11:36 pm

அறநெறி வழுவாத ஓரரசன் வேட்டையாடினான். விலங்கின் மீது விட்டகணை குறிதவறி ஒரு புறம் தவம் செய்து கொண்டிருந்த ஓரு முனிவரைக் கொன்று விட்டது. அந்தப் பிரமகத்தி தோசம் அரசனை தொடர்ந்து அல்லற்படுத்தியது. நின்றாலும் சென்றாலும் அரசனை விடாது நிழல் போல் நெருங்கி நிலை கலங்க வைத்தது. மன்னன் வாடினான். அந்த அல்லல் அகலும் சாதனத்தை நாடினான். ஒரு தவ முனிவருடைய ஆசிரமத்தை அடைந்தான்.

அரசன் அடைந்த அந்தச் சமயத்தில் அருந்தவ முனிவர் இல்லை. வெளியே சென்றிருந்தார். வெளியே சென்றிருந்தார்.
ஆசிரமத்தின் வாசலில் மாதவ முனிவருடைய மைந்தன் இருந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறைகளை ஓதிக் கொண்டிருந்தான். சிறுவன் அரசனை வரவேற்று இன்சொல் இயம்பினான்.

“குழந்தாய்! நான் இந்த நாட்டையாளும் மன்னன்”

“அரசே உன்னைக் கண்டவுடன் அரசன் என்று உணர்ந்தேன்”

“குழந்தாய், மிகுந்த வேதனையுடன் இங்கு வந்தேன்”

“வேந்தே, நீ வேதனையுடன் வந்தாய் என்பதை உன் வாடிய முகமே உணர்த்துகின்றது”

“மகனே, தவமுனிவர் எங்கே? அவரிடம் குறையைக் கூறிப் பரிகாரம் தேட வேண்டும்”

“அரசே, அப்பா வெளியே சென்றனர். என்னை சிறுகுழந்தையென்று எண்ணாதே. உனக்கு என்ன துன்பம் சொல். அதற்குப் பரிகாரம் நான் கூறுவேன்.”

‘மகனே, நான் அபுத்திபூர்வமாக ஒரு முனிவரைக் கொன்றுவிட்டேன். பிரம்மகத்தி என்னைத் தொடர்ந்து துயரந்தருகின்றது. அப்பாவத்தைப் போக்கும் சாதனையைக் கேட்க வந்தேன்”

“அரசர் பெருமானே, வருந்தாதே. இவ்வளவுதானே? இதற்கென்ன பெரிய ஆராய்ச்சி? சிறுபிள்ளையென்று என்னைக் கருதாதே. நான் சொல்கின்றபடி செய்; பிரம்மகத்தி நீங்கும். இதோ இந்த நதியில் நீராடி, நீறாடி, முருக வேளை உள்ளக்கண்ணால் நோக்கி, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, முருகா! முருகா! முருகா!” என்று ஓது. பிரம்மகத்தி நீங்கும்.”

அரசன் அவ்வாறு அன்புடன் அகமகிழ்ந்து ஓதி பிரம்மகத்தி நீங்கப்பெற்றான். முனிமைந்தனைத் தலையால் வணங்கி விடைபெற்றிச் சென்றான்.

பின்னர், முனிவர் பெருமான் ஆசிரமத்தை வந்தடைந்தார். தேர்ச்சக்கரங்களின் சுவட்டினைக் கண்டார்.
“மகனே, இங்கு வந்தவர் யார்?”

“அப்பா, இந்த நாட்டினை ஆளும் மன்னவர் வந்தார்.”

“கண்ணே, மன்னர் எதன்பொருட்டு வந்தார்?”

“தந்தையே, அவரைத் தொடரும் பிரம்மகத்தி தீர வழி கேட்டார். அதற்குப் பரிகாரத்தை நான் பகர்ந்தேன். துயரந்தீர்ந்து மகிழ்ந்து சென்றார்.”

முனிவர் பெருமகிழ்ச்சியடைந்தார். “கண்ணே, மன்னவரை நீ வரவேற்று இன்னுரை கூறிக் கவலை தீர்த்து அனுப்பியதுபற்றி நான் பெரிதும் மகிழ்கின்றேன். நல்லது நீ என்ன பரிகாரத்தைக் கூறினாய்?”

“தந்தையே! பிரம்மகத்தி நீங்க முருக மந்திரத்தை மும்முறை கூறுமாறு உபதேசித்தேன்”

முனிவரின் விழிகள் சிவந்தன.புருவங்கள் துடித்தன; உடல் கொதித்தது.
“மூடனே! நீ என் மைந்தனா? உனக்கு ஏன் இந்தப் புத்தி உண்டாயிற்று?
(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 28, 2013 10:22 am

“மூடனே! நீ என் மைந்தனா? உனக்கு ஏன் இந்தப் புத்தி உண்டாயிற்று? உனக்கு சிறிதும் முருக பக்தியில்லையே, பெருந்தவறு செய்துவிட்டாயே, பேதையே! என்பால் தமிழ்வேதம் ஓதிய உனக்கு உறுதியில்லையே?”

மைந்தன் நடுநடுங்கினான், தந்தையின் தாள் மீது விழுந்தான். பலகாலும் பணிந்தான். பதைபதைத்தான்.

“அப்பா! நான் என்ன பிழை செய்தேன்? நம் குலதெய்வம் முருகக் கடவுள். அந்தக் கதாநாயகன் திருமந்திரத்தைத்தானே ஓதச் சொன்னேன்! இது பிழையாகுமா?”

“மகனே! ஒரு மாத்திரை தந்தால் தீரக்கூடிய நோய்க்கு மூன்று மாத்திரைகள் தரலாமா? ஒருமுறை முருகா என்றால் கோடி பிரம்மகத்திகள் தீருமே! நீ மூன்றுமுறை சொல்லச்சொன்னாயே, நீ முருகமந்திரத்தின் அருமை பெருமைகளை அறிந்தாயில்லை.!” என்றார்.

அம்மைந்தன் அருந்தவ முனிவரின் அடிமலர் மீது வீழ்ந்து பிழை பொருத்தருளுமாறு பலகாலும் வேண்டினான். முனிவர் தண்ணருள் புரிந்தார்.


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Feb 28, 2013 10:47 am

பிரமகத்தி தோசம்
விளக்குங்களேன்




அன்புடன்
சின்னவன்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 01, 2013 12:42 pm

chinnavan wrote:
பிரமகத்தி தோசம்
விளக்குங்களேன்

பரம்பொருள் சிவபெருமான் உயிர்கள் பொருட்டு செய்யும் தொழில்கள் ஐந்து.
அவை
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்(ஒடுக்குதல்),
மறைத்தல்,
அருளல்

என்பனவாகும். இந்த 5 தொழில்களைச் செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 பேர். அவர்கள் செய்யும் தொழில்கள்
நான்முகன்(பிரம்மா) – படைத்தல்
திருமால் (விஷ்ணு) – காத்தல்
உருத்திரன் – ஒடுக்குதல்
மகேசுவரன் – மறைத்தல்
சதாசிவன் – அருளல்


உலகில் உள்ள உயிர்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு இந்த ‘பிரம்மகத்தி’ தோசம் சூழும் என்பார்கள். மாற்றான் மனைவியை கவர்தலுக்கும் அறம் அல்லாதன செய்தவர்களுக்கு இந்த பாவம் ஏற்படும் என்பார்கள். இந்த பாவத்தைப் போக்குதற்கு பரம்பொருளை விட்டால் வேறு ஆள் கிடையாது. பரம்பொருள் ஒருவரே. அவர் சிவபெருமான். சிவபெருமானே தனக்கு மகனாக முருகனாக வந்தார் என கந்தபுராணம் கூறுகிறது.

ஆக பாவம் நீங்க பரம்பொருளை விட்டால் வேறு ஆள் கிடையாது. பிறந்து பிறந்து இறக்கும் மேம்பட்ட உயிர்களான திருமாலும், நான்முகனும் மற்ற சிறு தெய்வங்களும் இதைச் செய்யமுடியாது. இவர்களை வணங்கி வேண்டும்போது இந்த சிறு தெய்வங்கள் தங்களை நம்பும் பக்தர்களுக்காக பரம்பொருளை அணுகி இந்த காரியத்தைச் செய்துதருமாறு வேண்டும். பரம்பொருள் இந்தச் சிறு தெய்வங்களுக்காக இதனை அருளுவார்.

இந்த ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்னும் கொள்கை தமிழருடையது.


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Fri Mar 01, 2013 12:48 pm

ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்னும் கொள்கை தமிழருடையது. சூப்பருங்க
விளக்கம் அருமை தொடருங்கள்




அன்புடன்
சின்னவன்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Mar 01, 2013 12:54 pm

தங்களுக்கு நன்றி சாமி . தொடரட்டும் தங்கள் பதிவுகள் .



செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Mar 01, 2013 2:06 pm

சாமி wrote:
chinnavan wrote:
பிரமகத்தி தோசம்
விளக்குங்களேன்

பரம்பொருள் சிவபெருமான் உயிர்கள் பொருட்டு செய்யும் தொழில்கள் ஐந்து.
அவை
படைத்தல்,
காத்தல்,
அழித்தல்(ஒடுக்குதல்),
மறைத்தல்,
அருளல்

என்பனவாகும். இந்த 5 தொழில்களைச் செய்ய நியமிக்கப்பட்ட பணியாளர்கள் 5 பேர். அவர்கள் செய்யும் தொழில்கள்
நான்முகன்(பிரம்மா) – படைத்தல்
திருமால் (விஷ்ணு) – காத்தல்
உருத்திரன் – ஒடுக்குதல்
மகேசுவரன் – மறைத்தல்
சதாசிவன் – அருளல்


உலகில் உள்ள உயிர்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு இந்த ‘பிரம்மகத்தி’ தோசம் சூழும் என்பார்கள். மாற்றான் மனைவியை கவர்தலுக்கும் அறம் அல்லாதன செய்தவர்களுக்கு இந்த பாவம் ஏற்படும் என்பார்கள். இந்த பாவத்தைப் போக்குதற்கு பரம்பொருளை விட்டால் வேறு ஆள் கிடையாது. பரம்பொருள் ஒருவரே. அவர் சிவபெருமான். சிவபெருமானே தனக்கு மகனாக முருகனாக வந்தார் என கந்தபுராணம் கூறுகிறது.

ஆக பாவம் நீங்க பரம்பொருளை விட்டால் வேறு ஆள் கிடையாது. பிறந்து பிறந்து இறக்கும் மேம்பட்ட உயிர்களான திருமாலும், நான்முகனும் மற்ற சிறு தெய்வங்களும் இதைச் செய்யமுடியாது. இவர்களை வணங்கி வேண்டும்போது இந்த சிறு தெய்வங்கள் தங்களை நம்பும் பக்தர்களுக்காக பரம்பொருளை அணுகி இந்த காரியத்தைச் செய்துதருமாறு வேண்டும். பரம்பொருள் இந்தச் சிறு தெய்வங்களுக்காக இதனை அருளுவார்.

இந்த ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்னும் கொள்கை தமிழருடையது.
உண்மைதான் பிரம்மன் படைத்த ஒரு உயிரை காலக் கெடு முடிவதற்குள் துன்புறுத்தவோ கொல்வதற்கோ எவருக்கும் உரிமை இல்லை அவ்வாறு துன்புறுத்தினால் அவருக்கு பிரம்மனால் கேடு விளையும்
ஆனால் அவர் முருக பக்தராக இருந்தால் அதில் விதிவிலக்கு உண்டு ஏனென்றால்,.............
'பிரணவ மந்திரத்தை பிரம்மன் மறந்த கதை' நாம் அனைவருக்கும் தெரியும் தானே



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sun Mar 03, 2013 1:28 pm

முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!
முருகா! முருகா! முருகா!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக